உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள சக்ரதாவில் நடந்த சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகம் சுட்டுரையில் விடுத்துள்ள தகவலில் கூறியிருப்பதாவது:
உத்தரகாண்ட் மாநிலத்தில் சக்ரதாவில் நடந்த சாலை விபத்து மிகவும் சோகமானது. நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் அரசு மற்றும் உள்ளூர் நிர்வாகம் ஈடுபட்டுள்ளன. இந்த விபத்தில்
உறவினர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடையவும், நலமுடன் இருக்கவும் பிரார்த்திக்கிறேன்: பிரதமர் மோடி’’
கருத்துகள்