குழந்தைகள் தினம் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 132-வது பிறந்தநாள் நாடு முழுவதும் அவரது உருவப்படத்திற்கு பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்துவதாகவும். பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளில் பிரதமர் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்
டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளில் புகழஞ்சலி." மேலும்
டெல்லி சாந்திவான் பகுதியிலுள்ள ஜவஹர்லால் நேருவின் நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், “பண்டித நேரு நமது தேசத்தின் ஒற்றுமைக்கும், நமது தேசத்தின் பன்முகத்தன்மைக்கும், நமது தேசத்தின் செழுமைக்கும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை வழங்கியவர்.
அவரது ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு தியாகமும் உண்மையான தேசியத்தை எடுத்துக்காட்டுகிறது” என்று பதிவிடப்பட்டுள்ளது.
கருத்துகள்