முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஷார்ஜாவில் நடைபெறும் 40வது சர்வதேச புத்தக கண்காட்சியில் மத்திய அரசின் வெளியீடுகள் பிரிவு பங்கேற்பு.

ஷார்ஜாவில் நடைபெறும் 40வது சர்வதேச புத்தக கண்காட்சியில் மத்திய அரசின் வெளியீடுகள் பிரிவு பங்கேற்பு.


ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஷார்ஜா நகரில் உள்ள கண்காட்சி அரங்கில் 40வது சர்வதேச புத்தக கண்காட்சி நவம்பர் 3ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த பிரம்மாண்ட கண்காட்சியில் மத்திய அரசின் முன்னணி வெளியீட்டு நிறுவனமான வெளியீடுகள் பிரிவு தனது  வெளியீடுகளைக் காட்சிக்கு வைத்துள்ளது.


ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில், வெளியீடுகள் பிரிவு அரங்கத்தின் துவக்க நிகழ்ச்சியில்,  துபாயில் உள்ள இந்திய துணை தூதர் டாக்டர் அமல் பூரி பாராட்டு குறிப்பை எழுதினார்.  ‘‘பல பிரிவுகளில் உயர்தரமான புத்தகங்களை வெளியிடுவதில் வெளியீடுகள் பிரிவு, குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கிறது’’ என அவர் குறிப்பிட்டார். 


‘ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சி 2021’-ல்,  1566 வெளியீடு நிறுவனங்கள் தங்கள் புத்தகங்களை காட்சிக்கு வைத்துள்ளன. 87 வெளியீடு நிறுவனங்களுடன், இந்த புத்தக கண்காட்சியில் இந்தியா முன்னணி வகிக்கிறது.  இந்த புத்தக கண்காட்சியில் அமித்தவ் கோஷ், சேத்தன் பகத் மற்றும் அமெரிக்காவின் குழந்தை மேதை கீதாஞ்சலி ராவ் உட்பட பல பிரபல எழுத்தாளர்களின் புத்தங்கள் ஒரே இடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.


விடுதலையின் அம்ரித் மகோத்ஸவ கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக, வெளியீடுகள் பிரிவு, இந்திய சுதந்திர போராட்டத்தின் வரலாறு பற்றிய 150-க்கும் மேற்பட்ட புத்தகங்களை இந்த கண்காட்சியில் வாசகர்களுக்கு வழங்குகிறது.  கலை மற்றும் கலாச்சாரம், இந்திய வரலாறு, பிரபல தலைவர்கள், மொழி மற்றும் இலக்கியம், காந்திய இலக்கியம், மதம் மற்றும் தத்துவம், குழந்தைகளுக்கான இலக்கியம், ராஷ்டிரபதி பவன் பற்றிய புத்தகங்கள், பிரதமரின் உரைகள் போன்றவற்றில் பல்வேறு இந்திய மொழிகளில் வெளியீடுகள் பிரிவு பிரத்யேகமாக வெளியிட்ட புத்தகங்களையும் வாசகர்கள் பார்வையிடுவர். 


உலகின் மிக பிரபல புத்தக கண்காட்சியில் ஒன்றான, 40வது ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில், மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் வெளியீடுகள் பிரிவு பங்கேற்கிறது. இந்த 11 நாள் சர்வதேச புத்தக கண்காட்சியை ஷார்ஜா புத்தக ஆணையம் நடத்துகிறது.  இதில் 2021ம் ஆண்டு இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற தான்சானியா நாவல் ஆசிரியர்  அப்துல்ரசாக் குர்னஹ் மற்றும் நெட்பிலிக்ஸ் ‘மணி ஹீஸ்ட்’ தொடரில் வரும் திரைக்கதை எழுத்தாளர்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள இலக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். ‘சரியான புத்தகம் எப்போதும் உண்டு’ என்பதுதான் இந்தாண்டு புத்தக கண்காட்சியின் கருப்பொருள்,


இதில் பிரபல எழுத்தாளர்கள் பங்கேற்கும் இலக்கிய விவாதங்கள், பயிலரங்குகள், மாநாடுகள், கருத்தரங்குகள், கலாச்சார நிகழ்ச்சிகள், கச்சேரிகள், நாடகங்கள் என பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. உணவு பிரியர்களுக்கும், இந்த புத்தக கண்காட்சியில் பலவித உணவுகளை ருசி பார்க்கலாம்.  பிரபல சமையற் கலைஞர் குணால் கபூர் உட்பட பலரை இந்த சர்வதேச புத்தக கண்காட்சியின் உணவு விடுதிகளில் வாசகர்கள் சந்திக்கலாம்

ஷார்ஜா கண்காட்சி மையத்தின் 7ம் எண் அரங்கத்தில், கூடம் எண் இசட் ஏ 5-ல், மத்திய அரசின் வெளியீடுகள் பிரிவு, தனது வெளியீடுகளை காட்சிக்கு வைத்துள்ளது.

வாசகர்களின் நம்பகத்தன்மையை பெற்றுள்ள வெளியீடுகள் பிரிவு, நியாயமான விலையில் தனது வெளியீடுகளை விற்பனை செய்கிறது. இதில் வெளியீட்டு பிரிவின் முன்னணி வெளியீடுகளான பிரபல மாத இதழ்கள் யோஜனா, குருஷேத்ரா மற்றும் ஆஜ்கல் மற்றும் வாராந்திர ‘எம்பிளாய்மென்ட் நியூஸ்’ மற்றும் ‘ரோஜர் சமாச்சார்’, ஆண்டு வெளியீடான ‘இந்தியா இயர் புக்’ ஆகியவற்றையும் இந்த கண்காட்சியில் வாங்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...