தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் திண்டுக்கல் சுரேஷ் (வயது 44). சமையல் தொழில் நடத்தி வருபவரது மனைவி செல்வி,
ஆண்டிபட்டி அரசினர் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிகிறார். சுரேஷ் மகன், மற்றும் மகளுடன் திண்டுக்கல்லில் குடியேறினார். செல்வி மட்டும் பாப்பம்மாள்புரத்தில் தனியாக வசித்தார். சுரேஷ், அவரது மனைவி செல்வியை செல்போனில் தொடர்பு கொண்டபோது. சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது.அவருடைய உறவினர்களிடம் தெரிவித்து வீட்டிற்குச் சென்று பார்க்கச் சொல்லியுள்ளார். வீடு பூட்டியிருந்த நிலையில், நீண்ட நேரத்திற்குப் பிறகு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது
உறவினர்கள் சென்று பார்த்தபோது வீட்டில் பூஜை அறையில் முகம் மற்றும் தலையில் பலத்த காயங்களுடன் செல்வி இறந்து கிடந்ததால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ஆண்டிபட்டி காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். காவல்துறை தரப்பில் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். இதில், தலை மற்றும் முகத்தில் பலமாக தாக்கப்பட்டதால் செல்வி உயிரிழந்தது தெரிந்தது. அருகிலுள்ள வீடுகளில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினர். ஆண்டிபட்டி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து பல கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர். மேலும்,
சம்பவம் நடந்த இடத்திற்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர். பிரவீன் உமேஷ் டோங்ரே நேரில் சென்று விசாரணை நடத்தினார். தடயவியல் நிபுணர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் காவல்துறையினர் விசாரணை செய்தனர். மேலும், காவல் துணை கண்காணிப்பாளர். தங்ககிருஷ்ணன் மற்றும் காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.
...
கருத்துகள்