முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மணிப்பூரில் ராணி கைதின்லியு பழங்குடியின விடுதலைப் போராட்ட வீரர்கள் அருங்காட்சியகத்திற்கு பூமி பூஜை

மணிப்பூரில் ராணி கைதின்லியு பழங்குடியின விடுதலைப் போராட்ட வீரர்கள் அருங்காட்சியகத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா காணொலி மூலம் பூமி பூஜை நடத்தினார்


மணிப்பூரில் ஒரு காலத்தில் ஆயுதக்கும்பல்கள் தீவிரவாதத்தை பரப்பியது போது, அப்போதைய அரசுகளும் இதில் ஈடுபட்டன.  ஆனால் திரு பைரன்சிங் தலைமையின் கீழான அரசு சட்டம், ஒழுங்கு மிகப் பெரிய முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த ஐந்தாண்டுகளாக  திரு நரேந்திர மோடி மற்றும் பைரன் சிங் மேற்கொண்ட வளர்ச்சிப் பணிகள் மணிப்பூரின் முன்னேற்றத்தில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும். மணிப்பூரில் பெருமளவுக்கு உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மத்திய, மாநில அரசுகள் தங்கள் மீது கவனம் செலுத்தி வருவதாக மலைக்கிராம மக்கள் முதல் முறையாக உணரத் தொடங்கி உள்ளனர். 


மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா, ராணி கைதின்லியு பழங்குடியின விடுதலைப் போராட்ட வீரர்கள் அருங்காட்சியகத்திற்கு இன்று காணொலி மூலம் பூமி பூஜை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் மணிப்பூர்  முதலமைச்சர் திரு என் பைரன் சிங், மத்திய பழங்குடியின நலத்துறை அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர், ராணி அன்னை கைதின்லியு, பழங்குடியின விடுதலைப் போராட்ட வீரர்கள் அருங்காட்சியகத்திற்கு பூமி பூஜை நடத்தும் வாய்ப்பை பெற்றதாகக் கூறினார்.  நமது  விடுதலைப் போராட்ட வீரர்களின் தேசப்பக்தி, புனிதப் பணிகள் ஆகியவற்றை வருங்கால சந்ததியினருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.  மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பல விடுதலைப் போராட்ட வீரர்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக போராடி நாட்டைப் பெருமைப்படுத்தியதாக திரு அமித் ஷா தெரிவித்தார். மணிப்பூரில் மகாராஜா குல்சந்திர சிங், மற்றும் அவரது தோழர்கள், அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள மவுண்ட் ஹாரியட் என்னுமிடத்தில் சிறை வைக்கப்பட்டதாக தெரிவித்தார். மகாராஜா குல்சந்திர சிங் தீரத்துடன் வடகிழக்குப் பகுதியில் பிரிட்டிஷாரை எதிர்த்தார். அவரது நினைவைப் போற்றும் வகையில் மவுண்ட் ஹாரியட்டுக்கு மணிப்பூர் மவுண்ட் என்று பெயர் சூட்டியுள்ளோம்.  அமையவிருக்கும் அருங்காட்சியகம் மணிப்பூருக்கு மட்டுமில்லாமல் வடகிழக்கு மாநிலங்கள் முழுவதையும் கவரும் மையமாக திகழும் என்று கூறிய அமைச்சர், விடுதலைப் போராட்டத்துக்காக யாராவது உண்மையிலேயே தியாகம் செய்ததாக கருதப்பட்டால் அவர்கள் பழங்குடியின விடுதலைப் போராட்ட வீரர்கள் தான் என்று தெரிவித்தார்.

ராணி கைதின்லியு குறித்துநினைவு கூர்ந்த திரு அமித் ஷா, அவருக்கு புகழாரம் சூட்டினார். அவர் பிறப்பில் ராணியாக இல்லாவிட்டாலும், ராணி என்று யாரும் பெயர் சூட்டாவிட்டாலும், விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் இன்று நாடே அவருக்கு மரியாதை செலுத்துகிறது. அரசு சூட்டும் பெயர்களை சில ஆண்டுகளில் மறந்துவிடுவது உண்டு. ஆனால் மக்கள் சூட்டும் பெயர்கள் காலகாலத்திற்கும் நிலைத்து நிற்கும். நாட்டின் விடுதலைக்காக முதன் முதலில் குரல் எழுப்பிய பழங்குடியினத் தலைவர் பகவன் பிர்சா முண்டாவின் பெயரை எவ்வாறு மறக்க முடியும்.

ராணி கைதின்லியு மணிப்பூரின் ஒரு கிராமத்தில் பிறந்தார்.  13 வயதில் அவர் ஜடோநாங்கின் விடுதலை இயக்கத்தில் சேர்ந்த பிரிட்டிஷாருக்கு எதிராக போராடினார். ஜடோநாங்கின் உயிர்த் தியாகத்திற்கு பின்னர் அந்த இயக்கத்திற்கு தலைமை தாங்கிய அவர், விடுதலை இயக்கத்தை தீவிரமாக நடத்தினார். வடகிழக்குப் பகுதியின் தொலை தூர மலைப்பகுதிகளில் வசித்த ஒரு சிறு பெண் உலகின் பெரிய சாம்ராஜ்ஜியத்துக்கு எதிராக சவால் விடுத்தார். இன்று அவரை நாடு நினைவு கூர்கிறது. அவரது பிறந்த நாள் நூற்றாண்டையொட்டி  பிரதமர் 5 ரூபாய் மற்றும் 100 ரூபாய் நாணயங்களை வெளியிட்டார். அவருக்கு பத்மபூஷன் விருதும் வழங்கப்பட்டது. 2016-ஆம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி அவரது பெயரில் ஒரு  ரோந்துப் படகுக்கு இந்திய கடலோரக் காவல் படை சூட்டியது. மணிப்பூரில் அமைய உள்ள அருங்காட்சியகம் ரூ.15 கோடி செலவில் கட்டப்பட உள்ளது. வடகிழக்கு பழங்குடியினப் பகுதிகளின் தேசபக்தியை இந்த அருங்காட்சியகம் மீண்டும் ஒரு முறை தட்டி எழுப்பும் என்பது நிச்சயம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...