மணிப்பூரில் அசாம் ரைஃபில்ஸ் வாகனங்கள் மீது நடைபெற்ற தாக்குதலுக்கு பிரதமர் கண்டனம்
மணிப்பூரில் அசாம் ரைஃபில்ஸ் வாகனங்கள் மீது நடைபெற்ற தாக்குதலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று வீர மரணமடைந்த வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு அவர் மரியாதை செலுத்தினார்.
“மணிப்பூரில் அசாம் ரைஃபில்ஸ் வாகன அணிவகுப்பு மீது நடைபெற்ற தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இன்று வீர மரணமடைந்த வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மரியாதைச் செலுத்துகிறேன்.
அவர்களது தியாகம் என்றைக்கும் மறக்கப்படாது. இந்த துயரமான நேரத்தில் எனது ஆழ்ந்த இரங்கல்களை உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்,
” என்று தமது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.
கருத்துகள்