தென்னக இரயில்வே பொது மேலாளர் - இரயில்வே நாடாளுமன்றக் குழு உறுப்பினர் கூட்டம் மதுரையில் (18.11.2021) இன்று நடைபெற்றது.(நாடாளுமன்ற உறுப்பினரும் மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ சார்பில் கோரிக்கை வைத்தார் அதில் அருப்புக்கோட்டை தொகுதி சாத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட உப்பத்தூர் கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலையில் உயர் மின்னழுத்த தொடர்வண்டி பாதை அமைந்துள்ளது. உப்பத்தூர் மற்றும் அதையொட்டி உள்ள முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்தத் தொடர் வண்டி பாதையை கடந்து தான் தினமும் சென்று வருகிறார்கள்.
மேலும், மதுரை - திருநெல்வேலி, மதுரை - தூத்துக்குடி ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் முக்கிய இணைப்புச் சாலையாகவும் இந்தப் பகுதி இருக்கிறது.
உப்பத்தூர் செல்லும் சாலையில், இந்த தொடர் வண்டி பாதைக்கு நடுவே சுரங்க நடைபாதை அமைப்பதற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.
சுரங்க நடைபாதை அமைத்தால் மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும். இதனால் உள்ளூர்வாசிகள், பொதுமக்கள், தொழிற்சாலைகளுக்கு செல்பவர்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் இந்த சுரங்க நடைபாதையை கடந்து வெளியில் சென்றுவர முடியாத நிலை ஏற்படும். மக்கள் அன்றாடம் பயன்படுத்தி வரும் தரைவழி போக்குவரத்து மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகும். ஆகவே, சுரங்க நடைபாதை அமைக்கும் முயற்சியை கைவிட்டு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளதால்.
இது தொடர்பாக, மறுமலர்ச்சி தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ எம்பி.,
தென்னக இரயில்வே பொதுமேலாளர் - இரயில்வே பாராளுமன்றக் குழு உறுப்பினர் கூட்டத்தில் பங்கேற்று தனது கருத்தை எடுத்துரைத்தார்.
பொதுமக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று, தொடர்வண்டி பாதைக்கு நடுவே சுரங்கப்பாதை அமைக்கும் முயற்சியைக் கைவிட்டுவிட்டு இரயில்வே மேம்பாலம் அமைக்கவும், சுரங்கப்பாதை உள்ள இடங்களில் மழைக் காலங்களில் பொதுமக்களின் அன்றாட போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில், தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கையை இரயில்வே நிர்வாகம் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார்தென்னக இரயில்வே ஆலோசனைக்குழு கூட்டம் பல திட்டங்களுக்கு ஒப்புதல்
கோட்ட துணைப் பொது மேலாளர் கோபிநாத் மாலய்யா கலந்து கொண்டார். புதிய இரயில்கள், ரயில் தட மேம்பாடு, ரயில் நிலையங்களின் மேம்பாடு, பயணிகள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து விவாதித்த பின்னர் பல கோரிக்கைகள் ஏற்கப்பட்டது
தேஜஸ் ரயில் சென்னை செல்லும் போதும், திரும்பும் போதும் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என வலியுறுத்தினர் அந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டு ஒப்புதலுக்காக இரயில்வே வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மதுரை - திருவனந்தபுரம் ஒட்டன்சத்திரம் வழியாக செல்லும் அமிர்தா விரைவு இரயிலை காய்கறி, பழ விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் ஒட்டன்சத்திரத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கக் கோரிய கோரிக்கை ஏற்கப்பட்டு பரிந்துரையைச் செய்துள்ளது தென்னக இரயில்வே.
மதுரை- போடி- தேனி- வழியாக சென்னை செல்லும் வகையில் ரயில்வே தடம் நீட்டிக்கப்பட வேண்டும் என்ற அந்த கோரிக்கை ஏற்பு . 20601 / 20602 எண் கொண்ட வாரத்திற்கு மூன்றுமுறை இயங்கும் ரயிலுக்கான கோரிக்கை ஏற்கப்பட்டு ஒப்புதலுக்காக ரயில்வே வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல்.
மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் புதிய பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை ரயில் சந்திப்பிற்கும் பெரியார் பேருந்து நிலையத்திற்கும் பொதுமக்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் மதுரை ரயில் சந்திப்பின் முதலாவது நடைமேடையிலிருந்து கீழ்தளச் சுரங்கப்பாதை அமைக்க சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வுகள் நடைபெற்றிருப்பதாகவும் அதற்கான துவக்கநிலை முயற்சியாக மதுரை மாநகராட்சி நிர்வாகத்தோடு இணைந்த கூட்டமும் நடைபெற்றுள்ளதாகவும்.
மதுரை இரயில் நிலையச் சந்திப்பில் மீன் சின்னத்தை நிறுவ வேண்டும் எனவும். வலியுறுத்தப்பட்டது இன்று அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான சீசன் வழங்கிட நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை. மீண்டும் சீசன் டிக்கெட்டுகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
மதுரை - மேலூர் - காரைக்குடி வழித்தடத்தில் புதிய இரயில் திட்டத்தினை அறிவிக்கக் கோரிக்கை வைத்தனர் அதற்கு பதில் அளித்த இரயில்வே அந்த திட்டத்திற்கான புதிய வழித்தடம் 85.7 கி.மீ என ஆய்வு செய்யப்பட்டு அதற்கான திட்டமதிப்பாக ரூ.649.5 கோடியாக கணக்கிட்டு 27/11/2014 அன்றே இரயில்வே வாரியத்திற்கு அனுப்பியுள்ளது. ஆனால் அந்தத் திட்டம் குறித்து எந்த முன்னேற்றமும் இல்லாமல் இன்னும் ரயில்வே வாரியம் நிலுவையில் வைத்துள்ளது.
அதே போல காரைக்குடி - திண்டுக்கல் - நத்தம் வழியிலான புதிய வழித்தடமும் ஆய்வு செய்யப்பட்டு திட்டமதிப்பாக ரூ1314.29 கோடி கணக்கிடப்பட்டு கடந்த 06/07/2015 அன்றே ரயில்வே வாரியத்திற்கு அனுப்பப்பட்டு அதுவும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இவையெல்லாம் மதுரை மக்களுக்கு மிகவும் அவசியமான திட்டங்கள்.
இந்தத் திட்டங்களை துவங்கிட வேண்டுமென மீண்டும் வலியுறுத்தினர் அதேபோல ரயில்வே குறித்து இன்னும் பல கோரிக்கைகளையும், மதுரையை மையமாக கொண்ட பல திட்டங்களையும் செயல்படுத்திட தொடர்ந்து வலியுறுத்திய வைகோ மற்றும் வெங்கடேசன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயல் பாராட்டுக்குரியது.
கருத்துகள்