மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் பெரியார் பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகளை தமிழ் நாடு நகர்புறவளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, ஆய்வு செய்தார்
அப்போது உடன் தமிழகத்தின் வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோருடன் தமிழகத்தின் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் கே.என்.நேரு பதில் கூறினார்
. அதில் அவர் மதுரை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக உள்ள சு.வெங்கடேசன் குறித்து ஒருமையில் தெரிவித்த கருத்து சர்ச்சையான நிலையில்
தற்போது அமைச்சர் வருத்தம் தெரிவித்து அவரது முகநூலில் பதிவு செய்துள்ளார். அது குறித்து விபரம் வருமாறு. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக ஒரு கேள்வியை அமைச்சர் கே.என்நேருவிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு,
"இந்தக் கேள்வியை சம்பந்தப்பட்டவர்களிடம் கேளுங்கள். மதுரையில் வெங்கடேசன்னு ஒரு ஆள் இருக்கான். அந்த ஆள் கிட்ட கேளு.." என்று நேரு தடாலடியாக பேசியிருக்கிறார். இந்தக் காணொளி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது தொடர்பாக, மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலர் கணேசன், மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக, மதுரை விமான நிலையத்தில், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் நேருவிடம் நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, அவர் முறையாகப் பதில் அளிக்கவில்லை. மாறாக, 'சம்பந்தப்பட்டவர்களை விட்டு என்னிடம் வந்து கேட்கிறீர்கள். மதுரையில் வெங்கடேசன் என்ற எம்.பி. ஒருவன் இருக்கிறான், அவனிடம் கேளுங்கள்' என, நேரு பதில் அளித்துள்ளார்.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட, கூட்டணிக் கட்சியின் எம்பியை, ஆளுங்கட்சி அமைச்சர் பொது வெளியில் இவ்வாறு பேசியுள்ளது கண்டனத்திற்கு உரியது. முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்".இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் தற்போது அமைச்சர் கே.என.நேரு தனது முகநூல் தளத்தில் வருத்தம் தெரிவித்து பதிவு செய்துள்ளார்.
கருத்துகள்