தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுக்கான நிதியுதவித் திட்டத்தின் கீழ் இந்திய பாராலிம்பிக் கமிட்டி 2017-18 முதல் 2021-22 வரை ரூ.32 கோடிக்கும் அதிகமாக ஒதுக்கீடு செய்துள்ளது: திருஅனுராக் தாக்கூர்
முக்கிய அம்சங்கள்:
இதர விளையாட்டு வீரர்களுக்கு இணையாக பாராலிம்பிக் தடகள வீரர்களுக்கும் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குவதற்காக இந்திய பாராலிம்பிக் கமிட்டிக்கு அரசு நிதி / மானியம் ஒதுக்கீடு செய்கிறது.
பாரா தடகள வீரர்களுக்காக Tops திட்டத்தின் கீழ் கடந்த பாராலிம்பிக் சுழற்சியின் போது, கூடுதலாக ரூ.10.50 கோடி செலவிடப்பட்டது.
அரசின் நிதியுதவி வழங்குவதற்கான பிரிவில், பாரா விளையாட்டுகள், ‘முன்னுரிமை’ பட்டியலில் வைக்கப்பட்டிருப்பதுடன்,
பாரா தடகள வீரர்களுக்கான பயிற்சி மற்றும் அவர்களது போட்டித் திறமையை வெளிப்படுத்துவதற்காக தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதாக மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர், மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்