புதுக்கோட்டை கட்டிட இடிப்பு விபத்து ஒப்பந்ததார் உள்ளிட்ட மூன்று நபர்கள் மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு
புதுக்கோட்டை கீழராஜ வீதி வாழைமரத்து ஜவுளிக்கடை கட்டிடத்தை இடித்த நிலையில் மழை நீர் ஊறிய சுவர் இடிந்து விழுந்த இடிபாடுகளில் சிக்கிய ஏழு பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டையில் கீழ ராஜ வீதி, தெற்கு ராஜ வீதி சந்திப்பில் வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதியாகும். இங்கு பொதுமக்கள் நடமாட்டமும் அதிகம். இந் நிலையில் தெற்கு மூன்றாவது வீதியில் ஜவுளிக்கடை கட்டிடம் கடந்த 10 தினங்களுக்கு முன்பு விற்பனைசெய்யப்பட்டதை மருத்துவர் செந்தில்குமார் என்பவர் வாங்கியுள்ளார். தற்போது அந்தப் பழைய கட்டிடத்தை புதுக்கோட்டை மற்றும் பல பகுதிகளைச் சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இடித்தபோது எதிர்பராமல் இடிந்து விழுந்து ஏழு பேர் இந்த இடிபாடுகளில் சிக்கிய நிலையில் தீயணைப்பு துறையினர் வந்து 2 பெண்கள் உள்பட 7 பேரையும் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இந்த இடிபாடுகளில் மேலும் ஜேசிபி உள்ளிட்ட இயந்திரங்களின் மூலம் இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்றது.
மழைக்காலங்களில் இந்த கட்டிடங்களை இடிக்கும் பணி நடைபெற்றதாலேயே தற்போது விபத்து ஏற்பட்டதாகவும், மேலும் கட்டிடத்தை மேலிருந்து இடித்து வராமல், கீழிருந்து கட்டிட பணியாளர்களைக் கொண்டு இடித்ததாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாகவும் இப்பகுதியை சேர்ந்த மக்கள் குற்றம் சாட்டும் நிலையில் இடத்தை வாங்கியவர் காலி இடம் என்று பத்திரப்பதிவு துறையினர் உதவியில் பதிவு செய்துள்ளதாகவும், யாரேனும் ஆய்வுக்கு வந்தால் மாட்டிக்கொள்வோம் என்ற அச்சம் காரணமாக அவசர அவசரமாக கட்டிட இடிப்பு பணி நடைபெற்றதாகவும் இந்த பகுதியை சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
வாட்டாங்குட்டையைச் சேர்ந்த அரங்குலவன் என்ற ஒப்பந்ததாரர் கட்டிடத்தை இடிக்கும் பணியைச் செய்துள்ளார். தற்போது இந்த இடிபாடு பணி நகராட்சி அனுமதி வாங்காமல் கட்டிடடத்தை இடித்தவர்கள் மீது வழக்குபதிவு செய்யவும், கட்டிடம் மறைத்து காலி இடம் என பத்திரப் பதிவு செய்தவர் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும், நகராட்சி அனுமதி யில்லாமல் பணி செய்த நிலையில்
கையூட்டு காரணமாக இடிப்பதைத் தடுக்காத நகராட்சி மீதும் வழக்குப் பதியவேண்டும் எனவும் புதுக்கோட்டையில் பத்திரப் பதிவுகள் பழைய கட்டிடம் இருந்த நிலையில் காலிமனை எனப் பத்திரபதிவுகள் செய்த அரசுக்கு சேர வேண்டிய பலலட்சத்தை லஞ்சப் பணமாக பதிவுதுறைஅதிகாரிகள் பெற்ற காரணமாக இந்த விபத்துக்கு காரணம் என மக்கள் குற்றம் சாட்டும் நிலையில்
மாவட்ட ஆட்சியர் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க சமுக ஆர்வலர்கள் கோரியிருந்த நிலையில் புதுக்கோட்டை கீழ இரண்டாம் வீதியில் அனுமதி இல்லாமல் கட்டிடம் இடித்த விவகாரம் தொடர்பாக நகராட்சி அதிகாரி ஜெய்சங்கர் தற்போது புகார் அளித்தார் அதன் பேரில் கட்டிட உரிமையாளர் மருத்துவர் செந்தில்குமார், ஒப்பந்ததார் அரங்குளவன் உள்ளிட்ட மூன்று நபர்கள் மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கருத்துகள்