பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் மூலம் ‘நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை உள்ளூர் மயமாக்கல்’ (எஸ்டிஜி) குறித்த அறிக்கையை மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு கிரிராஜ் சிங் வெளியிட்டார்
பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் மூலம் “நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை உள்ளூர் மயமாக்கல்” (எஸ்டிஜி) குறித்த அறிக்கையை பஞ்சாயத்துராஜ் இணையமைச்சர் திரு கபில் மோரேஷ்வர் பாட்டீல் முன்னிலையில் மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு கிரிராஜ் சிங் 07.12.2021 அன்று வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் கிராம பஞ்சாயத்து மேம்பாட்டுத் திட்டம் மற்றும் இதன் முன்னேற்றத்தை கண்காணிப்பதற்கான டிஜிட்டல் தகவல் பலகை, பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் திறன் கட்டமைப்பு மற்றும் பயிற்சிக்கான பயிற்சி நிர்வாக இணைய பக்கம் ஆகிய இரண்டு டிஜிட்டல் தகவல் பலகைகளை அமைச்சர் தொடங்கி வைத்தார். பயிற்சி நிர்வாக இணைய பக்கம் குறித்த கையேடும் வெளியிடப்பட்டது.
எஸ்டிஜியை அடைவதை நோக்கிய செயல்திட்டத்திற்கு உதவும் தகவல்களைக் கொண்ட இந்த அறிக்கையை வெளிக்கொண்டு வருவதில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் முயற்சிகளை திரு கிரிராஜ் சிங் பாராட்டினார். 2030-க்குள் எஸ்டிஜியை அடைவதற்கு இந்தியா உறுதிபூண்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். எஸ்டிஜியை அடைவது ஒரு சவால் என கருதி அடித்தள நிலையில் கவனத்தோடும், ஒருங்கிணைந்த முறையிலும் பணிகளைத் தொடங்க வேண்டும் என்று பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 32 லட்சம் பிரதிநிதிகளை கேட்டுக் கொண்டார்.
முழுமையான வளர்ச்சியை உறுதி செய்ய ஊட்டச்சத்து குறைபாட்டின் அனைத்து வடிவிலான பிரச்சினைகளுக்கும் தீர்வு காணுதல், சுகாதாரம், கல்வி, வாழ்க்கையை எளிதாக்குதல், வாழ்வாதார வாய்ப்புகள் போன்றவற்றில் கவனம் செலுத்துமாறு பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அமைச்சர் அழைப்பு விடுத்தார். ஊரகப் பகுதிகளில் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், குடியிருப்போருக்கு துப்புரவு ஆகியவற்றை உறுதி செய்ய பஞ்சாயத்துகள் கவனம் செலுத்துவது அவசியமாகும் என்று திரு கிரிராஜ் சிங் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சக செயலாளர் திரு சுனில் குமார், தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி ஜெயஸ்ரீ ரகுநந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளை வலுப்படுத்துதல்
நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு, பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் நிர்வாகத் திறமைகளை மேம்படுத்துவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு, 2018-19 நிதியாண்டிலிருந்து மத்திய நிதியுதவித் திட்டமான தேசிய கிராம சுயராஜ்ய திட்டத்தை (ஆர்ஜிஎஸ்ஏ) பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் அமல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு திறன் கட்டமைப்பு மற்றும் பயிற்சி, பயிற்சிக்கான உள்கட்டமைப்பு மற்றும் மனித வளம், கிராம சபைகளை வலுப்படுத்துதல், இணைய தளம் வழியாக கற்றல் வசதி, புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆதரவு, பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு தொழில்நுட்ப உதவி, நிதித் தரவுகள் மற்றும் ஆய்வுப் பிரிவு, பஞ்சாயத்து கட்டிடங்கள், பொருளாதார மேம்பாடு மற்றும் வருவாய் அதிகரிப்புக்கு திட்ட அடிப்படையிலான நிதியுதவி, ஊரக உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்த தகவல், கல்வி, தகவல் தொடர்பு, திட்ட நிர்வாகம் ஆகியவற்றுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.
ஆர்ஜிஎஸ்ஏ மூலம் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் (2021-22) தற்போதைய நிலவரப்படி தமிழ்நாட்டுக்கு 39.8922 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் இன்று மத்திய பஞ்சாயத்துராஜ் இணையமைச்சர் திரு கபில் மோரேஷ்வர் பாட்டீல் எழுத்துமூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்