முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் மூலம் உள்ளூர் மயமாக்கல் அறிக்கையை இணையமைச்சர் வெளியிட்டார்

பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் மூலம் ‘நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை உள்ளூர் மயமாக்கல்’ (எஸ்டிஜி) குறித்த அறிக்கையை மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு கிரிராஜ் சிங் வெளியிட்டார்


பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் மூலம் “நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை உள்ளூர் மயமாக்கல்” (எஸ்டிஜி) குறித்த அறிக்கையை பஞ்சாயத்துராஜ் இணையமைச்சர் திரு கபில் மோரேஷ்வர் பாட்டீல் முன்னிலையில் மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர்  திரு கிரிராஜ் சிங் 07.12.2021 அன்று வெளியிட்டார்.


இந்த நிகழ்ச்சியில் கிராம பஞ்சாயத்து மேம்பாட்டுத் திட்டம் மற்றும் இதன் முன்னேற்றத்தை கண்காணிப்பதற்கான டிஜிட்டல் தகவல் பலகை, பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் திறன் கட்டமைப்பு மற்றும் பயிற்சிக்கான பயிற்சி நிர்வாக இணைய பக்கம் ஆகிய இரண்டு டிஜிட்டல் தகவல் பலகைகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.  பயிற்சி நிர்வாக இணைய பக்கம் குறித்த கையேடும் வெளியிடப்பட்டது. 


எஸ்டிஜியை அடைவதை நோக்கிய செயல்திட்டத்திற்கு உதவும் தகவல்களைக் கொண்ட இந்த அறிக்கையை வெளிக்கொண்டு வருவதில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் முயற்சிகளை திரு கிரிராஜ் சிங் பாராட்டினார். 2030-க்குள் எஸ்டிஜியை அடைவதற்கு இந்தியா உறுதிபூண்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.  எஸ்டிஜியை அடைவது ஒரு சவால் என கருதி அடித்தள நிலையில்  கவனத்தோடும், ஒருங்கிணைந்த முறையிலும் பணிகளைத் தொடங்க வேண்டும் என்று பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 32 லட்சம் பிரதிநிதிகளை கேட்டுக் கொண்டார். 


முழுமையான வளர்ச்சியை உறுதி செய்ய ஊட்டச்சத்து குறைபாட்டின் அனைத்து வடிவிலான பிரச்சினைகளுக்கும் தீர்வு காணுதல், சுகாதாரம், கல்வி, வாழ்க்கையை எளிதாக்குதல், வாழ்வாதார வாய்ப்புகள் போன்றவற்றில் கவனம் செலுத்துமாறு பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அமைச்சர் அழைப்பு விடுத்தார்.   ஊரகப் பகுதிகளில் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், குடியிருப்போருக்கு துப்புரவு ஆகியவற்றை உறுதி செய்ய பஞ்சாயத்துகள் கவனம் செலுத்துவது அவசியமாகும் என்று திரு கிரிராஜ் சிங் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சக செயலாளர் திரு சுனில் குமார், தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி ஜெயஸ்ரீ ரகுநந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.      பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளை வலுப்படுத்துதல்

நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு, பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் நிர்வாகத் திறமைகளை மேம்படுத்துவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு, 2018-19 நிதியாண்டிலிருந்து மத்திய நிதியுதவித் திட்டமான தேசிய கிராம சுயராஜ்ய திட்டத்தை (ஆர்ஜிஎஸ்ஏ) பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் அமல்படுத்தி வருகிறது.  இந்தத் திட்டத்தின்கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு திறன் கட்டமைப்பு மற்றும் பயிற்சி, பயிற்சிக்கான உள்கட்டமைப்பு மற்றும் மனித வளம், கிராம சபைகளை வலுப்படுத்துதல், இணைய தளம் வழியாக கற்றல் வசதி,  புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆதரவு, பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு தொழில்நுட்ப உதவி, நிதித் தரவுகள் மற்றும் ஆய்வுப் பிரிவு, பஞ்சாயத்து கட்டிடங்கள், பொருளாதார மேம்பாடு மற்றும் வருவாய் அதிகரிப்புக்கு திட்ட அடிப்படையிலான நிதியுதவி, ஊரக உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்த தகவல், கல்வி, தகவல் தொடர்பு, திட்ட நிர்வாகம் ஆகியவற்றுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.

ஆர்ஜிஎஸ்ஏ மூலம் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும்  நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.  நடப்பு நிதியாண்டில் (2021-22) தற்போதைய நிலவரப்படி தமிழ்நாட்டுக்கு 39.8922 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் இன்று மத்திய பஞ்சாயத்துராஜ் இணையமைச்சர் திரு கபில் மோரேஷ்வர் பாட்டீல் எழுத்துமூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...