முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் மூலம் உள்ளூர் மயமாக்கல் அறிக்கையை இணையமைச்சர் வெளியிட்டார்

பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் மூலம் ‘நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை உள்ளூர் மயமாக்கல்’ (எஸ்டிஜி) குறித்த அறிக்கையை மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு கிரிராஜ் சிங் வெளியிட்டார்


பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் மூலம் “நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை உள்ளூர் மயமாக்கல்” (எஸ்டிஜி) குறித்த அறிக்கையை பஞ்சாயத்துராஜ் இணையமைச்சர் திரு கபில் மோரேஷ்வர் பாட்டீல் முன்னிலையில் மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர்  திரு கிரிராஜ் சிங் 07.12.2021 அன்று வெளியிட்டார்.


இந்த நிகழ்ச்சியில் கிராம பஞ்சாயத்து மேம்பாட்டுத் திட்டம் மற்றும் இதன் முன்னேற்றத்தை கண்காணிப்பதற்கான டிஜிட்டல் தகவல் பலகை, பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் திறன் கட்டமைப்பு மற்றும் பயிற்சிக்கான பயிற்சி நிர்வாக இணைய பக்கம் ஆகிய இரண்டு டிஜிட்டல் தகவல் பலகைகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.  பயிற்சி நிர்வாக இணைய பக்கம் குறித்த கையேடும் வெளியிடப்பட்டது. 


எஸ்டிஜியை அடைவதை நோக்கிய செயல்திட்டத்திற்கு உதவும் தகவல்களைக் கொண்ட இந்த அறிக்கையை வெளிக்கொண்டு வருவதில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் முயற்சிகளை திரு கிரிராஜ் சிங் பாராட்டினார். 2030-க்குள் எஸ்டிஜியை அடைவதற்கு இந்தியா உறுதிபூண்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.  எஸ்டிஜியை அடைவது ஒரு சவால் என கருதி அடித்தள நிலையில்  கவனத்தோடும், ஒருங்கிணைந்த முறையிலும் பணிகளைத் தொடங்க வேண்டும் என்று பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 32 லட்சம் பிரதிநிதிகளை கேட்டுக் கொண்டார். 


முழுமையான வளர்ச்சியை உறுதி செய்ய ஊட்டச்சத்து குறைபாட்டின் அனைத்து வடிவிலான பிரச்சினைகளுக்கும் தீர்வு காணுதல், சுகாதாரம், கல்வி, வாழ்க்கையை எளிதாக்குதல், வாழ்வாதார வாய்ப்புகள் போன்றவற்றில் கவனம் செலுத்துமாறு பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அமைச்சர் அழைப்பு விடுத்தார்.   ஊரகப் பகுதிகளில் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், குடியிருப்போருக்கு துப்புரவு ஆகியவற்றை உறுதி செய்ய பஞ்சாயத்துகள் கவனம் செலுத்துவது அவசியமாகும் என்று திரு கிரிராஜ் சிங் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சக செயலாளர் திரு சுனில் குமார், தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி ஜெயஸ்ரீ ரகுநந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.      பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளை வலுப்படுத்துதல்

நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு, பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் நிர்வாகத் திறமைகளை மேம்படுத்துவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு, 2018-19 நிதியாண்டிலிருந்து மத்திய நிதியுதவித் திட்டமான தேசிய கிராம சுயராஜ்ய திட்டத்தை (ஆர்ஜிஎஸ்ஏ) பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் அமல்படுத்தி வருகிறது.  இந்தத் திட்டத்தின்கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு திறன் கட்டமைப்பு மற்றும் பயிற்சி, பயிற்சிக்கான உள்கட்டமைப்பு மற்றும் மனித வளம், கிராம சபைகளை வலுப்படுத்துதல், இணைய தளம் வழியாக கற்றல் வசதி,  புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆதரவு, பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு தொழில்நுட்ப உதவி, நிதித் தரவுகள் மற்றும் ஆய்வுப் பிரிவு, பஞ்சாயத்து கட்டிடங்கள், பொருளாதார மேம்பாடு மற்றும் வருவாய் அதிகரிப்புக்கு திட்ட அடிப்படையிலான நிதியுதவி, ஊரக உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்த தகவல், கல்வி, தகவல் தொடர்பு, திட்ட நிர்வாகம் ஆகியவற்றுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.

ஆர்ஜிஎஸ்ஏ மூலம் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும்  நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.  நடப்பு நிதியாண்டில் (2021-22) தற்போதைய நிலவரப்படி தமிழ்நாட்டுக்கு 39.8922 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் இன்று மத்திய பஞ்சாயத்துராஜ் இணையமைச்சர் திரு கபில் மோரேஷ்வர் பாட்டீல் எழுத்துமூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த