முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அதிமுக ஆட்சியின் கொள்கை முடிவென்பதால் மேல்முறையீடு போயஸ் தோட்ட வேதா நிலையம் வழக்கில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் மனு

தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் காலம்சென்ற முனைவர் கா.காளிமுத்து அவர்களின் மேடைப்பேச்சுக்களில்; 1980 முதல் 87 காலகட்டத்தில்  பெரிதாய் வார்த்தைகளால் தாக்கப்பட்டது பால்கனி தான் அந்த பால்கனி இருக்கும் நபர்களைப் பொருத்தே மதிப்பு பெறுகிறது அந்த வகையில்


எந்தப் பால்கனியை விமர்சித்தாரோ ! அதே பால்கனி இருக்கும் திசை நோக்கி, அவர் பிற்காலத்தில்  கும்பிட்டது தான் அந்த வரலாறு. அண்ணன் மூத்த பத்திரிகையாளர் பொன்மதி அவர்கள் கூற்றுப்படி. அதுவே அப்போதய நிலையில் உண்மையும் கூட. குடகுமலை 'ஷேப்'  பில் பலர் குனிந்து பழகியதின் கோனார் தமிழ் விளக்க உரைக் குறிப்பேடு அவர் தான் !

முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளருமான (இந்த வார்த்தைக்குத்தான் ஆம் எத்தனை வலிமை - பொ.செ.வே இல்லாமல் ஆகி விட்டது) செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் இறந்த பின்னர், இரண்டு தலைவர்களால் மூன்று பால்கனிகள்; அதிமுகவில் காட்சிப் படுத்தப் பட்டிருக்கிறது.



வி.கே. சசிகலா நடராஜன் , ‘நான் இருக்கிறேன்’ என்பது போல, அவ்வை சண்முகம் சாலையிலுள்ள அதிமுக தலைமை நிலைய பால்கனியில் நின்று பலமுறை தொண்டர்களுக்கு ஆறுதல் அளித்திருக்கிறார். 

அதற்கு முன்னதாக ஒருநாள் இரவு, போயஸ் கார்டன் இல்ல பால்கனியில் தொண்டர்களைப் பார்த்து கை ஆட்டி ஆறுதல் படுத்தியிருக்கிறார்.


செல்வி ஜெ.ஜெயலலிதாவின் பிறந்த நாளான 2017 பிப்ரவரி 24 - அன்று, ”எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை"  என்ற கட்சியைத் தொடங்கி விட்டதாக திருமதி. ஜெ.தீபா அறிவித்த பின் சென்னை தி.நகரில் உள்ள வீட்டில்; பிரஸ் மீட் அளித்தார். பிரஸ் மீட்டுக்கு முன்னதாக, அந்த வீட்டு போர்டிகோவுக்கு இடதுபக்க மாடியில்; வெளிமுகம் பார்த்தது போல் அமைந்த; பத்து மீட்டர் நீள பால்கனியில் நின்று; தொண்டர்களைப் பார்த்து கைகளை ஆட்டினார். 


போயஸ்கார்டன் பால்கனியோ, அதிமுக தலைமைக் கழகப் பால்கனியோ இப்போதைக்கு கிடைக்காமல் போகலாம்;  இருக்கும் பால்கனியைப் பயன்படுத்தி பால்கனிக்கான ஃபவரை வெளிப்படுத்துவோம் என்று நினைத்திருக்கக்கூடும்.


இப்போது போயஸ் கார்டன் பால்கனியே, நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மூலம் அவர் கைக்கு வந்திருக்கிறது. முன்னர் ஜெ.தீபா , கையில் வைத்திருந்த கட்சியான; எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் தற்போதைய நிலை குறித்து இன்னும் ஜெ. தீபா ஏதும் அறியப்படவில்லை அல்லது சொல்லவில்லை. 

அதேபோல் அந்தக் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த தீபாவின் கார் டிரைவர் ராஜா திடீரென அப்போது அந்தக் கட்சியின் பொறுப்பிலிருந்து விலக்கப் பட்டிருந்தார். தீபாவின் கணவரான மாதவனும் அதேபோல் ஒருநாள், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே நீக்கி வைக்கப்பட்டார்.

இந்த நிலையை அல்லது சரிவை சரிசெய்ய பேட்ரிக் எனும் மாதவன் தன்  பங்கிற்கு தனியாக ஒரு கட்சியை 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ஆம் தேதியில் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் சமாதியில் வைத்து ஆரம்பித்தார். 

ஜெ. தீபா கட்சியைத் தொடங்கிய இரண்டே மாதத்தில், இது தான் நடந்தது !

 மெரினா கடற்கரையில் முன்னால் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் சமாதியில் வைத்து முக்கிய அறிவிப்பு ஒன்றை  வெளியிடப் போவதாக ஊடகங்களுக்கு முதல்நாள் இரவில். மாதவன் அனுப்பிய தகவலால் நூற்றுக்கணக்கில் அன்றைய தேதியில் பல கேமராக்கள் கூடி விட்டன. 

இன்னொரு பக்கம் ஜெ.தீபா, மற்றும் அதிமுக புதிய ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரின் எதிர்க் கருத்துகளைக் கேட்கவும் அந்தந்தப் பக்கங்களில் கேமராக்களும் பேனா - பேடுகளுமாய் பல மீடியாக்கள் நிரம்பி விட்டது.

சொன்னபடி காலையில் மெரீனாவுக்கு வந்த  மாதவன், ஜெயலலிதா அவர்கள் சமாதியை 3 முறை சுற்றி வந்து, வணங்கிவிட்டு

’எம்.ஜி.ஆர். ஜெயலலிதா திராவிட முன்னேற்ற கழகம்’ என்று கட்சியை ஆரம்பித்து இருப்பதாகவும், கட்சியை வளப்படுத்த தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்யப் போவதாகவும் தெரிவித்தார்.

அப்போது ஒரு செய்தியாளர், ‘  எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை கட்சியின் நிறுவனர் ஜெ.தீபா அவர்களும் கட்சியை பலப்படுத்த டூர் போகப் போவதாகச் சொல்லி இருக்கிறார்கள், உங்கள் பயணம் இணைந்து இருக்குமா; தனித்தனியாக இருக்குமா?’ என்றே கேட்ட ஒரு மூத்த செய்தியாளருக்கு 

”இரட்டை இலையை மீட்பதுதான் என்னுடைய முதல் வேலை. மற்றவற்றைப் பற்றி பிறகு பேசுவோம், போனில் வாங்களேன்” என்றே பதில் தந்தார் மாதவன். 

அதுவும் உண்மைதான். போனில் எப்போது - எதைப் பேசினாலும், எது குறித்து கேட்டாலும்; பதில் சொல்கிற நபராகத்தான் அவர் இருந்தார். அரசியலில் ஜொலிப்பதற்கு இது தேவைப்படாத ஒரு தகுதி என்பதை அடுத்த முறை சந்திக்கும் போது, தெரிந்து கொண்டிருப்பார்  முதலில் போயஸ் கார்டன் வேதா இல்லத்தின் பால்கனியில் சகோதரருடன் காட்சி தந்த பின்னர் செய்தியாளர் முன்பு

 ‘இந்த வீட்டுக்குள் நுழைய விடாமல் என்னை தடுத்து வெளியில் நிறுத்தி வைத்து...’ என்று  பேட்டியில் ஜெ.தீபா சொல்லியிருப்பதைப் பார்த்தால், பல கேள்விகள் எழுகிறது !

ஜெ.தீபாவின் இப்போதைய பலமாக பார்ப்பது வழக்கறிஞர்  ஏ.சுப்பிரமணியைத்தான் 

வடசென்னை திருவொற்றியூரில் குறைந்த விலையில் மருத்துவ சேவை (சில நேரங்களில் அடித்தட்டு ஏழைகளுக்கு இலவச சேவையும் - சுப்பிரமணியத்தின் மனைவி மருத்துவராக இருக்கிறார்), இலவச சட்ட ஆலோசனை,  மருத்துவ முகாம்கள், சட்ட உதவி முகாம்கள் என எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கக் கூடியவர். 

ஜெ.தீபாவுடன் நம்பிக்கையான தொண்டனாக சில ஆண்டுகள் கூடவே பயணிக்கிறவர், அரசியல் அனுபவம் உள்ளவர் என்பதால், ஏதேனும் ‘சிறப்பு’ முன்னெடுப்புகள் இருக்கலாம் என்று தோணுகிறது !


இவ்வளவு நிலைமைக்கு மத்தியில் முன்னால் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அனுமதியளிக்கக் கோரி, அதிமுகவின் முன்னாள் சட்ட அமைச்சரான சி.வி.சண்முகம் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இன்று காலை வழக்கு விசாரணையின் போது அதிமுகவுக்கும், போயஸ் கார்டனுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதென்றும், இது கடந்த அதிமுக ஆட்சியின் கொள்கை முடிவென்பதால் மேல்முறையீடு செய்வதாகவும், எனவே தனி நீதிபதியின் உத்தரவுக்கெதிராக மேல்முறையீடு செய்ய அனுமதியளிக்க வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கபட்டதையடுத்து , முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்கியதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அதிமுகவுக்கு அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக சார்பில் உடனடியாக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு டிசம்பர் 20 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுமெனத் தெரிகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த