முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அதிமுக ஆட்சியின் கொள்கை முடிவென்பதால் மேல்முறையீடு போயஸ் தோட்ட வேதா நிலையம் வழக்கில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் மனு

தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் காலம்சென்ற முனைவர் கா.காளிமுத்து அவர்களின் மேடைப்பேச்சுக்களில்; 1980 முதல் 87 காலகட்டத்தில்  பெரிதாய் வார்த்தைகளால் தாக்கப்பட்டது பால்கனி தான் அந்த பால்கனி இருக்கும் நபர்களைப் பொருத்தே மதிப்பு பெறுகிறது அந்த வகையில்


எந்தப் பால்கனியை விமர்சித்தாரோ ! அதே பால்கனி இருக்கும் திசை நோக்கி, அவர் பிற்காலத்தில்  கும்பிட்டது தான் அந்த வரலாறு. அண்ணன் மூத்த பத்திரிகையாளர் பொன்மதி அவர்கள் கூற்றுப்படி. அதுவே அப்போதய நிலையில் உண்மையும் கூட. குடகுமலை 'ஷேப்'  பில் பலர் குனிந்து பழகியதின் கோனார் தமிழ் விளக்க உரைக் குறிப்பேடு அவர் தான் !

முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளருமான (இந்த வார்த்தைக்குத்தான் ஆம் எத்தனை வலிமை - பொ.செ.வே இல்லாமல் ஆகி விட்டது) செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் இறந்த பின்னர், இரண்டு தலைவர்களால் மூன்று பால்கனிகள்; அதிமுகவில் காட்சிப் படுத்தப் பட்டிருக்கிறது.



வி.கே. சசிகலா நடராஜன் , ‘நான் இருக்கிறேன்’ என்பது போல, அவ்வை சண்முகம் சாலையிலுள்ள அதிமுக தலைமை நிலைய பால்கனியில் நின்று பலமுறை தொண்டர்களுக்கு ஆறுதல் அளித்திருக்கிறார். 

அதற்கு முன்னதாக ஒருநாள் இரவு, போயஸ் கார்டன் இல்ல பால்கனியில் தொண்டர்களைப் பார்த்து கை ஆட்டி ஆறுதல் படுத்தியிருக்கிறார்.


செல்வி ஜெ.ஜெயலலிதாவின் பிறந்த நாளான 2017 பிப்ரவரி 24 - அன்று, ”எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை"  என்ற கட்சியைத் தொடங்கி விட்டதாக திருமதி. ஜெ.தீபா அறிவித்த பின் சென்னை தி.நகரில் உள்ள வீட்டில்; பிரஸ் மீட் அளித்தார். பிரஸ் மீட்டுக்கு முன்னதாக, அந்த வீட்டு போர்டிகோவுக்கு இடதுபக்க மாடியில்; வெளிமுகம் பார்த்தது போல் அமைந்த; பத்து மீட்டர் நீள பால்கனியில் நின்று; தொண்டர்களைப் பார்த்து கைகளை ஆட்டினார். 


போயஸ்கார்டன் பால்கனியோ, அதிமுக தலைமைக் கழகப் பால்கனியோ இப்போதைக்கு கிடைக்காமல் போகலாம்;  இருக்கும் பால்கனியைப் பயன்படுத்தி பால்கனிக்கான ஃபவரை வெளிப்படுத்துவோம் என்று நினைத்திருக்கக்கூடும்.


இப்போது போயஸ் கார்டன் பால்கனியே, நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மூலம் அவர் கைக்கு வந்திருக்கிறது. முன்னர் ஜெ.தீபா , கையில் வைத்திருந்த கட்சியான; எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் தற்போதைய நிலை குறித்து இன்னும் ஜெ. தீபா ஏதும் அறியப்படவில்லை அல்லது சொல்லவில்லை. 

அதேபோல் அந்தக் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த தீபாவின் கார் டிரைவர் ராஜா திடீரென அப்போது அந்தக் கட்சியின் பொறுப்பிலிருந்து விலக்கப் பட்டிருந்தார். தீபாவின் கணவரான மாதவனும் அதேபோல் ஒருநாள், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே நீக்கி வைக்கப்பட்டார்.

இந்த நிலையை அல்லது சரிவை சரிசெய்ய பேட்ரிக் எனும் மாதவன் தன்  பங்கிற்கு தனியாக ஒரு கட்சியை 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ஆம் தேதியில் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் சமாதியில் வைத்து ஆரம்பித்தார். 

ஜெ. தீபா கட்சியைத் தொடங்கிய இரண்டே மாதத்தில், இது தான் நடந்தது !

 மெரினா கடற்கரையில் முன்னால் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் சமாதியில் வைத்து முக்கிய அறிவிப்பு ஒன்றை  வெளியிடப் போவதாக ஊடகங்களுக்கு முதல்நாள் இரவில். மாதவன் அனுப்பிய தகவலால் நூற்றுக்கணக்கில் அன்றைய தேதியில் பல கேமராக்கள் கூடி விட்டன. 

இன்னொரு பக்கம் ஜெ.தீபா, மற்றும் அதிமுக புதிய ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரின் எதிர்க் கருத்துகளைக் கேட்கவும் அந்தந்தப் பக்கங்களில் கேமராக்களும் பேனா - பேடுகளுமாய் பல மீடியாக்கள் நிரம்பி விட்டது.

சொன்னபடி காலையில் மெரீனாவுக்கு வந்த  மாதவன், ஜெயலலிதா அவர்கள் சமாதியை 3 முறை சுற்றி வந்து, வணங்கிவிட்டு

’எம்.ஜி.ஆர். ஜெயலலிதா திராவிட முன்னேற்ற கழகம்’ என்று கட்சியை ஆரம்பித்து இருப்பதாகவும், கட்சியை வளப்படுத்த தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்யப் போவதாகவும் தெரிவித்தார்.

அப்போது ஒரு செய்தியாளர், ‘  எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை கட்சியின் நிறுவனர் ஜெ.தீபா அவர்களும் கட்சியை பலப்படுத்த டூர் போகப் போவதாகச் சொல்லி இருக்கிறார்கள், உங்கள் பயணம் இணைந்து இருக்குமா; தனித்தனியாக இருக்குமா?’ என்றே கேட்ட ஒரு மூத்த செய்தியாளருக்கு 

”இரட்டை இலையை மீட்பதுதான் என்னுடைய முதல் வேலை. மற்றவற்றைப் பற்றி பிறகு பேசுவோம், போனில் வாங்களேன்” என்றே பதில் தந்தார் மாதவன். 

அதுவும் உண்மைதான். போனில் எப்போது - எதைப் பேசினாலும், எது குறித்து கேட்டாலும்; பதில் சொல்கிற நபராகத்தான் அவர் இருந்தார். அரசியலில் ஜொலிப்பதற்கு இது தேவைப்படாத ஒரு தகுதி என்பதை அடுத்த முறை சந்திக்கும் போது, தெரிந்து கொண்டிருப்பார்  முதலில் போயஸ் கார்டன் வேதா இல்லத்தின் பால்கனியில் சகோதரருடன் காட்சி தந்த பின்னர் செய்தியாளர் முன்பு

 ‘இந்த வீட்டுக்குள் நுழைய விடாமல் என்னை தடுத்து வெளியில் நிறுத்தி வைத்து...’ என்று  பேட்டியில் ஜெ.தீபா சொல்லியிருப்பதைப் பார்த்தால், பல கேள்விகள் எழுகிறது !

ஜெ.தீபாவின் இப்போதைய பலமாக பார்ப்பது வழக்கறிஞர்  ஏ.சுப்பிரமணியைத்தான் 

வடசென்னை திருவொற்றியூரில் குறைந்த விலையில் மருத்துவ சேவை (சில நேரங்களில் அடித்தட்டு ஏழைகளுக்கு இலவச சேவையும் - சுப்பிரமணியத்தின் மனைவி மருத்துவராக இருக்கிறார்), இலவச சட்ட ஆலோசனை,  மருத்துவ முகாம்கள், சட்ட உதவி முகாம்கள் என எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கக் கூடியவர். 

ஜெ.தீபாவுடன் நம்பிக்கையான தொண்டனாக சில ஆண்டுகள் கூடவே பயணிக்கிறவர், அரசியல் அனுபவம் உள்ளவர் என்பதால், ஏதேனும் ‘சிறப்பு’ முன்னெடுப்புகள் இருக்கலாம் என்று தோணுகிறது !


இவ்வளவு நிலைமைக்கு மத்தியில் முன்னால் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அனுமதியளிக்கக் கோரி, அதிமுகவின் முன்னாள் சட்ட அமைச்சரான சி.வி.சண்முகம் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இன்று காலை வழக்கு விசாரணையின் போது அதிமுகவுக்கும், போயஸ் கார்டனுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதென்றும், இது கடந்த அதிமுக ஆட்சியின் கொள்கை முடிவென்பதால் மேல்முறையீடு செய்வதாகவும், எனவே தனி நீதிபதியின் உத்தரவுக்கெதிராக மேல்முறையீடு செய்ய அனுமதியளிக்க வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கபட்டதையடுத்து , முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்கியதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அதிமுகவுக்கு அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக சார்பில் உடனடியாக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு டிசம்பர் 20 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுமெனத் தெரிகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...