முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிறுபான்மையினருக்கு இலவச பயிற்சி மற்றும் ஹஜ் யாத்திரைக்கான பதிவு அமைச்சர் தகவல்

சிறுபான்மையினருக்கு இலவச பயிற்சி

நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் திரு முக்தர் அப்பாஸ் நக்வி எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:

சீக்கியர், ஜெயின், முஸ்லிம், கிறிஸ்தவர்கள், பௌத்த மதம் மற்றும் பார்சி இனத்தை சேர்ந்தவர்கள் தொழில்நுட்ப கல்வி / தொழில் கல்விக்கான மாணவர் சேர்க்கை, மற்றும் அரசு/ தனியார் துறை வேலைவாய்ப்புகளுக்கான போட்டித் தேர்வில் பங்கேற்க ‘நயா சவேரா’ திட்டத்தின் கீழ் இலவச பயிற்சிகளை சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சகம் அளிக்கிறது. தொண்டு  நிறுவனங்கள், மற்றும் திட்டங்களை அமல்படுத்தும் முகமைகள்(பிஐஏ)  மூலம் இந்த பயிற்சிகள் நாடு முழுவதும் அளிக்கப்படுகின்றன. நயா சவேரா திட்டம் அமல்படுத்தப்பட்டதிலிருந்து சிறுபான்மையினத்தை சேர்ந்த 1,19,283  மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.



இத்திட்டத்தை அமல்படுத்துவதற்காக 130 திட்ட அமலாக்க குழுக்களை மத்திய அமைச்சகம் கடந்த 2017-18ம் ஆண்டு உருவாக்கியது. இந்த நிதியாண்டில் நயா சவேரா திட்டத்தின் கீழ் பயிற்சி வகுப்புகளை நடத்த 37 அமைப்புகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது .. 2021-22ம் நிதியாண்டில் நவம்பர் 30ம் தேதி வரை திட்டத்தை அமல்படுத்தும் முகமைகளுக்கு(பிஐஏ) ரூ.13.53 கோடி வழங்கப்பட்டுள்ளது.                   


        ஹஜ் புனித யாத்திரைக்கான பதிவு

நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் திரு முக்தர் அப்பாஸ் நக்வி எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:

இந்திய முஸ்லிம்கள், ஹஜ் புனித யாத்திரையை எளிதாக மேற்கொள்ள, ஹஜ் யாத்திரை நடைமுறைகள் 100 சதவீதம் டிஜிட்டல் / ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்த நடைமுறை சுமூகமாகவும், வெளிப்படை தன்மையுடனும், இடைத்தரகர்கள் இன்றி நடக்கிறது. இதன் மூலம் ஹஜ் யாத்திரிகள், தனியார் ஹஜ் யாத்திரை ஏற்பாட்டாளர்கள், இந்திய ஹஜ் கமிட்டியினர் உட்பட பல தரப்பினர் பயனடைந்துள்ளனர்.

ஹஜ் யாத்திரைக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிப்பதற்கான நடைமுறை நவம்பர் 1ம் தேதி தொடங்கியது. புனித யாத்திரை மேற்கொள்ள விரும்பும் யாத்திரிகள் www.hajcommittee.gov.in என்ற இணையளம் மற்றும் கைப்பேசி செயலியில் 2022 ஜனவரி 31ம் தேதி வரை, தங்கள் விண்ணப்பங்களை தாக்கல் செய்யலாம். சிறுபான்மையினரின் நலனுக்கான நிதி

நாடாளுமன்றத்தின் மக்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சிறுபான்மையினர் நலன் அமைச்சர் திரு முக்தர் அப்பாஸ் நக்வி கீழ்காணும் தகவல்களை அளித்தார். 

மத்திய அரசு திட்டமான பிரதமரின் ஜன் விகாஸ் காரியக்ரம் , சமுதாய பொருளாதார  சொத்துக்கள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் 1,300 பகுதிகளை அடையாளம் கண்டுள்ளது.

இத்திட்டம் தொடங்கியது முதல் 42 கல்லூரிகள், 180 உறைவிட பள்ளிகள், 3,062 பள்ளி கட்டிடங்கள், 43,838 கூடுதல் வகுப்பறைகள்/ வளாகங்கள், 15,545 கற்பித்தல் உபகரணங்கள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகள், 1376 விடுதிகள், 24 பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகள், 232 ஐடிஐ கட்டிடங்கள், 55 பாலிடெக்னிக்குகள், 21 திறன் மையங்கள், 5,382 சுகாதார திட்டங்கள், ஒரு யுனானி மருத்துவக் கல்லூரி, 81,503 குடிநீர் விநியோக திட்டங்கள், 40,795 அங்கன்வாடி மையங்கள், 408 மண்டபங்கள், ஒரு சத்பவ் கேந்திரம், 168 பொது சேவை மையங்கள், 609 சந்தை வசதிகள், 9 ஹூனார் மையங்கள், 9330 சுகாதாரம்/ கழிவறை திட்டங்கள், 76 விளையாட்டு வசதிகள் உள்ளிட்டவற்றுக்கு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த