நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதில்
நாட்டில் புதிய துறைமுகங்கள் உருவாக்குதல்
மகாராஷ்ட்ரா மாநிலம் வதாவனில் பெரிய துறைமுகம் ஒன்றை அமைக்க மத்திய அரசு கொள்கை ரீதியான ஒப்புதலை அளித்துள்ளது. ஜவஹர்லால் நேரு துறைமுகத்தை முக்கிய பங்குதாரராகக் கொண்டு, 2013ஆம் ஆண்டு கம்பெனிகள் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சிறப்புக் காரண நிறுவனம் மூலம் இந்தப் புதிய துறைமுகம் அமைக்கப்பட உள்ளதாக மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
சிறிய துறைமுகங்கள் அந்தந்த மாநில அரசுகள் /கடல்சார் வாரியங்களின் கட்டுப்பாட்டில் வரும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.துறைமுகங்களில் சரக்கு கையாளுதல் புதுதில்லி, டிசம்பர்
பெரிய துறைமுகங்களில் எந்த நாட்டிற்கும் சரக்குகளை ஏற்றுமதி இறக்குமதி செய்ய யாருக்கும் அனுமதி மறுக்கப்படவில்லை. எனினும் அதானி துறைமுகம் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம் வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையின்படி, 15 நவம்பர் 2021 முதல் அந்தத் துறைமுகத்தில் ஈரான், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து அனுப்பப்படும் சரக்குப் பெட்டகங்கள், கையாளப்படுவதில்லை. இந்தத் துறைமுகத்தில் 3-ம் நபர் முனையம் உள்ளிட்ட அனைத்து சரக்கு முனையங்களுக்கும் இந்த சுற்றறிக்கை பொருந்தும் என்று மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில்அளித்த மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.நாட்டில் நடைபெறும் கப்பல் போக்குவரத்து திட்டங்கள்
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
கேரளாவின் கொச்சியில் புதிய கப்பல் நிறுத்தும் தளத்தை 310 மீட்டர் நீளத்தில்,75 மீட்டர் அகலத்தில், 13 மீட்டர் ஆழத்திலும் கொச்சின் ஷிப்யார்டு நிறுவனம் ரூ.1,799 கோடி செலவில் அமைத்து வருகிறது. இதில் விமானம் தாங்கி போர்க்கப்பல், ஆயில் டேங்கர் கப்பல்களையும் நிறுத்த முடியும். 2023 ஜூலை மாதம் இது செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொச்சியில் சர்வதேச கப்பல் பழுது பார்க்கும் மையம் ரூ.970 கோடி செலவில் அமைக்கப்படுகிறது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஹூக்ளி கொச்சின் ஷிப்யார்டு நிறுவனம் அமைக்கப்படுகிறது. தேசிய நீர்வழிப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக இந்நிறுவனம் அமைக்கப்படுகிறது. கர்நாடகாவின் மால்பே பகுதியில், சிஎஸ்எல் நிறுவனத்தின் துணை நிறுவனமான டெப்மா ஷிப்யார்டு நிறுவனம்(டிஎஸ்எல்) ரூ.70 கோடி முதலீட்டில் மீன்பிடி கப்பல் கட்டும் தளத்தை அமைத்துள்ளது. இது தற்போது செயல்பாட்டில் உள்ளது.
மும்பையில் சிஎஸ்எல் - மும்பை கப்பல் பழுது பார்க்கும் மையம் கடந்த 2018ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு போர்க்கப்பல் மற்றும் வர்த்தக கப்பல்கள் பழுதுபார்க்கப்படுகிறது.
மேற்கு வங்கம் கொல்கத்தாவில் சிஎஸ்எல்- கொல்கத்தா கப்பல் பழுது பார்க்கும் மையம் 2019ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த மையமும் போர்க்கப்பல்கள் மற்றும் வர்த்தக கப்பல்களை பழுதுபார்க்கிறது.
போர்ட் பிளேரில் உள்ள , சிஎஸ்எல் - அந்தமான், நிகோபார் கப்பல் பழுது பார்க்கும் மையம், அந்தமான் நிர்வாகத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தம் மூலம் கப்பல் பழுதுபார்க்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. அந்தமான் நிகோர்பார் தீவுகளில் அனைத்து வகை கப்பல்களையும் பழுதுபார்க்க இந்த நிறுவனம் உதவும்.
கருத்துகள்