முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்களுக்குப் பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்

ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்களுக்குப் பிரதமர் இறுதி அஞ்சலி செலுத்தினார்







ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்களுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இறுதி அஞ்சலி செலுத்தினார்


“ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்களுக்கு எனது இறுதி மரியாதையை செலுத்தினேன். அவர்களின் சிறப்பான பங்களிப்பை இந்தியா என்றும் மறவாகாது”, என்று பிரதமர் தனது டுவிட்டரில் கூறியுள்ளார். ஜெனரல் பிபின் ராவத் மறைவுக்கு ஏர் மார்ஷல் தேவ் இரங்கல் தெரிவித்துள்ளார்









ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் அனைத்து அதிகாரிகள், வீரர்களுக்கு, விமான படை தளபதி,  ஏர் மார்ஷல் அமித்  தேவ் இரங்கல் தெரிவித்துள்ளார்



ராணுவத்திற்கு ஜெனரல் ராவத் செய்த பங்களிப்பை ஏர் மார்ஷல் தேவ்,  நினைவு கூர்ந்தார். ஆயுதப் படைகளை நவீனமயமாக்குவதற்கான அவரது முயற்சிகள் தேசத்தின் நினைவில் என்றும் நிலைத்திருக்கும் என்று அவர்  கூறினார். நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள டிபென்ஸ் சர்வீசஸ் அலுவலர்கள் கல்லூரியில், லெஃப்டினன்ட் ஜெனரல் திரு.காலோன் அவர்களிடம், இந்திய முப்படை தளபதி, அவரது துணைவியார், இராணுவ உயர் அலுவலர்கள் விபத்துக்குள்ளாகி வீரமரணம் அடைந்தது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்து தனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்தார்.





நடந்த சம்பவம் தொடர்பாக வெலிங்டன் காவல்நிலையத்தில் இயற்கைக்கு மாறான உயிரிழப்பென வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நீலகிரி மாவட்டம் குன்னூரிலுள்ள விபத்து நடந்த பகுதியான காட்டேரி பள்ளத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த போது ''இந்த ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக நஞ்சப்பன்சத்திரம் மக்கள் நமது காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக முதல்வருக்கு இந்தத் தகவலைத் தெரிவித்தோம். உடனே அவர் என்னை வீட்டிற்கு அழைத்து காவல்துறை, தீயணைப்புத்துறை, தடயவியல் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் உடனே சம்பவ இடத்திற்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார். அதன்படி 12.25 மணிக்கே குன்னூர் காவல்நிலைய அதிகாரிகள் குறிப்பாக சிவா, பிரிதிவ்ராஜ், டிஎஸ்பி சசி, ஏடிஎஸ்பி முத்து மாணிக்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து நஞ்சப்பசத்திரம் மக்களுடன் சேர்ந்து  மூன்றுபேரை உயிருடன் மீட்டு உடனடியாக அனுப்பினர் அதிக தீ எரிந்துகொண்டிருந்த நிலையில் அந்தப் பகுதி மக்கள் வீட்டில் உள்ள ஜமக்காளம், பெட்ஷீட் கொடுத்து காப்பாற்றியுள்ளனர். அதற்காக நஞ்சப்பசத்திரம் பகுதி மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். இதுதொடர்பாக தமிழக காவல்துறை சார்பில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை 26 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. எப்பொழுது முப்படைத் தளபதி இங்கே வந்தாலும் மொத்த நீலகிரியைப் பாதுகாப்பு வளையத்தில் வைத்திருப்போம். எங்கேயும் யாரும் வர முடியாது. இதில் எந்தச் சந்தேகமும் கிடையாது'' என்றவர் போர்வை கம்பளி கொடுத்து மீட்புப் பணிக்கு உதவிய அந்தப்பகுதி மக்களுக்கு டிஜிபி கம்பளி கொடுத்து நன்றி தெரிவித்தார். குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த 13 பேரின் உடல்கள் சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. செல்லும் வழியில் உடல்களைக் கொண்டு சென்ற வாகனம் மற்றும் போலீஸ் வாகனம் ஆகியவை அடுத்தடுத்து விபத்தை எதிர்கொண்டது.

ஒருமுறை அமரர் ஊர்தி வாகனம் முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதியது. இதில் ஒரு வாகனத்தின் முன்பகுதி முற்றிலும் சேதம் அடைந்த நிலையில், அதனை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.இதையடுத்து, அந்த வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த ராணுவ வீரரின் உடல், வெளியே எடுக்கப்பட்டு பின்னால் வந்து கொண்டிருந்த வாகனத்தில் வைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டது. மேட்டுப்பாளையத்தை அடுத்த காரமடை பகுதியில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.இதேபோன்று, 13 வாகனங்களுக்கு பின்னால் காவல்துறை வாகனம் பாதுகாப்புக்காக வந்து கொண்டிருந்தது. மேட்டுப்பாளையம் அருகே வந்து கொண்டிருந்தபோது, வளைவில் கட்டுப்பாட்டை இழந்து சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக அருகேயிருந்த பள்ளத்தில் விழாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த முப்படைகளின் தளபதி உள்ளிட்டோரின் இறுதி ஊர்வலம் நண்பகல் 2 மணிக்குத் துவங்கியது. 4 மணிக்கு இறுதி நிகழ்வுகள் நடைபெற்றது. 

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்திசிலை அடிவாரத்தில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாநிலங்களவை உறுப்பினர்கள் 12 பேரும் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நேற்று போராட்டத்தைக் கைவிட்டனர்.

அவையில் இறந்தவர்களுக்கு அஞ்சலி உரை நிகழ்த்த எதிர்கட்சித்தலைவர்கள் யாருக்கும் அரசு அனுமதி தரவில்லை.

இறந்தவர்களின் குடுபத்தினருக்கு ஆறுதலாய் அனைவரும் இருக்கிறோம் என்பதை உணர்த்த வேண்டிய நேரம் இது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த