முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்களுக்குப் பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்

ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்களுக்குப் பிரதமர் இறுதி அஞ்சலி செலுத்தினார்







ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்களுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இறுதி அஞ்சலி செலுத்தினார்


“ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்களுக்கு எனது இறுதி மரியாதையை செலுத்தினேன். அவர்களின் சிறப்பான பங்களிப்பை இந்தியா என்றும் மறவாகாது”, என்று பிரதமர் தனது டுவிட்டரில் கூறியுள்ளார். ஜெனரல் பிபின் ராவத் மறைவுக்கு ஏர் மார்ஷல் தேவ் இரங்கல் தெரிவித்துள்ளார்









ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் அனைத்து அதிகாரிகள், வீரர்களுக்கு, விமான படை தளபதி,  ஏர் மார்ஷல் அமித்  தேவ் இரங்கல் தெரிவித்துள்ளார்



ராணுவத்திற்கு ஜெனரல் ராவத் செய்த பங்களிப்பை ஏர் மார்ஷல் தேவ்,  நினைவு கூர்ந்தார். ஆயுதப் படைகளை நவீனமயமாக்குவதற்கான அவரது முயற்சிகள் தேசத்தின் நினைவில் என்றும் நிலைத்திருக்கும் என்று அவர்  கூறினார். நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள டிபென்ஸ் சர்வீசஸ் அலுவலர்கள் கல்லூரியில், லெஃப்டினன்ட் ஜெனரல் திரு.காலோன் அவர்களிடம், இந்திய முப்படை தளபதி, அவரது துணைவியார், இராணுவ உயர் அலுவலர்கள் விபத்துக்குள்ளாகி வீரமரணம் அடைந்தது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்து தனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்தார்.





நடந்த சம்பவம் தொடர்பாக வெலிங்டன் காவல்நிலையத்தில் இயற்கைக்கு மாறான உயிரிழப்பென வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நீலகிரி மாவட்டம் குன்னூரிலுள்ள விபத்து நடந்த பகுதியான காட்டேரி பள்ளத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த போது ''இந்த ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக நஞ்சப்பன்சத்திரம் மக்கள் நமது காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக முதல்வருக்கு இந்தத் தகவலைத் தெரிவித்தோம். உடனே அவர் என்னை வீட்டிற்கு அழைத்து காவல்துறை, தீயணைப்புத்துறை, தடயவியல் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் உடனே சம்பவ இடத்திற்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார். அதன்படி 12.25 மணிக்கே குன்னூர் காவல்நிலைய அதிகாரிகள் குறிப்பாக சிவா, பிரிதிவ்ராஜ், டிஎஸ்பி சசி, ஏடிஎஸ்பி முத்து மாணிக்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து நஞ்சப்பசத்திரம் மக்களுடன் சேர்ந்து  மூன்றுபேரை உயிருடன் மீட்டு உடனடியாக அனுப்பினர் அதிக தீ எரிந்துகொண்டிருந்த நிலையில் அந்தப் பகுதி மக்கள் வீட்டில் உள்ள ஜமக்காளம், பெட்ஷீட் கொடுத்து காப்பாற்றியுள்ளனர். அதற்காக நஞ்சப்பசத்திரம் பகுதி மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். இதுதொடர்பாக தமிழக காவல்துறை சார்பில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை 26 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. எப்பொழுது முப்படைத் தளபதி இங்கே வந்தாலும் மொத்த நீலகிரியைப் பாதுகாப்பு வளையத்தில் வைத்திருப்போம். எங்கேயும் யாரும் வர முடியாது. இதில் எந்தச் சந்தேகமும் கிடையாது'' என்றவர் போர்வை கம்பளி கொடுத்து மீட்புப் பணிக்கு உதவிய அந்தப்பகுதி மக்களுக்கு டிஜிபி கம்பளி கொடுத்து நன்றி தெரிவித்தார். குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த 13 பேரின் உடல்கள் சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. செல்லும் வழியில் உடல்களைக் கொண்டு சென்ற வாகனம் மற்றும் போலீஸ் வாகனம் ஆகியவை அடுத்தடுத்து விபத்தை எதிர்கொண்டது.

ஒருமுறை அமரர் ஊர்தி வாகனம் முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதியது. இதில் ஒரு வாகனத்தின் முன்பகுதி முற்றிலும் சேதம் அடைந்த நிலையில், அதனை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.இதையடுத்து, அந்த வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த ராணுவ வீரரின் உடல், வெளியே எடுக்கப்பட்டு பின்னால் வந்து கொண்டிருந்த வாகனத்தில் வைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டது. மேட்டுப்பாளையத்தை அடுத்த காரமடை பகுதியில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.இதேபோன்று, 13 வாகனங்களுக்கு பின்னால் காவல்துறை வாகனம் பாதுகாப்புக்காக வந்து கொண்டிருந்தது. மேட்டுப்பாளையம் அருகே வந்து கொண்டிருந்தபோது, வளைவில் கட்டுப்பாட்டை இழந்து சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக அருகேயிருந்த பள்ளத்தில் விழாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த முப்படைகளின் தளபதி உள்ளிட்டோரின் இறுதி ஊர்வலம் நண்பகல் 2 மணிக்குத் துவங்கியது. 4 மணிக்கு இறுதி நிகழ்வுகள் நடைபெற்றது. 

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்திசிலை அடிவாரத்தில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாநிலங்களவை உறுப்பினர்கள் 12 பேரும் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நேற்று போராட்டத்தைக் கைவிட்டனர்.

அவையில் இறந்தவர்களுக்கு அஞ்சலி உரை நிகழ்த்த எதிர்கட்சித்தலைவர்கள் யாருக்கும் அரசு அனுமதி தரவில்லை.

இறந்தவர்களின் குடுபத்தினருக்கு ஆறுதலாய் அனைவரும் இருக்கிறோம் என்பதை உணர்த்த வேண்டிய நேரம் இது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...