ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்களுக்குப் பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்
ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்களுக்குப் பிரதமர் இறுதி அஞ்சலி செலுத்தினார்
ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்களுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இறுதி அஞ்சலி செலுத்தினார்
“ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்களுக்கு எனது இறுதி மரியாதையை செலுத்தினேன். அவர்களின் சிறப்பான பங்களிப்பை இந்தியா என்றும் மறவாகாது”, என்று பிரதமர் தனது டுவிட்டரில் கூறியுள்ளார். ஜெனரல் பிபின் ராவத் மறைவுக்கு ஏர் மார்ஷல் தேவ் இரங்கல் தெரிவித்துள்ளார்
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் அனைத்து அதிகாரிகள், வீரர்களுக்கு, விமான படை தளபதி, ஏர் மார்ஷல் அமித் தேவ் இரங்கல் தெரிவித்துள்ளார்
ராணுவத்திற்கு ஜெனரல் ராவத் செய்த பங்களிப்பை ஏர் மார்ஷல் தேவ், நினைவு கூர்ந்தார். ஆயுதப் படைகளை நவீனமயமாக்குவதற்கான அவரது முயற்சிகள் தேசத்தின் நினைவில் என்றும் நிலைத்திருக்கும் என்று அவர் கூறினார். நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள டிபென்ஸ் சர்வீசஸ் அலுவலர்கள் கல்லூரியில், லெஃப்டினன்ட் ஜெனரல் திரு.காலோன் அவர்களிடம், இந்திய முப்படை தளபதி, அவரது துணைவியார், இராணுவ உயர் அலுவலர்கள் விபத்துக்குள்ளாகி வீரமரணம் அடைந்தது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்து தனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்தார்.
நடந்த சம்பவம் தொடர்பாக வெலிங்டன் காவல்நிலையத்தில் இயற்கைக்கு மாறான உயிரிழப்பென வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நீலகிரி மாவட்டம் குன்னூரிலுள்ள விபத்து நடந்த பகுதியான காட்டேரி பள்ளத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த போது ''இந்த ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக நஞ்சப்பன்சத்திரம் மக்கள் நமது காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக முதல்வருக்கு இந்தத் தகவலைத் தெரிவித்தோம். உடனே அவர் என்னை வீட்டிற்கு அழைத்து காவல்துறை, தீயணைப்புத்துறை, தடயவியல் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் உடனே சம்பவ இடத்திற்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார். அதன்படி 12.25 மணிக்கே குன்னூர் காவல்நிலைய அதிகாரிகள் குறிப்பாக சிவா, பிரிதிவ்ராஜ், டிஎஸ்பி சசி, ஏடிஎஸ்பி முத்து மாணிக்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து நஞ்சப்பசத்திரம் மக்களுடன் சேர்ந்து மூன்றுபேரை உயிருடன் மீட்டு உடனடியாக அனுப்பினர் அதிக தீ எரிந்துகொண்டிருந்த நிலையில் அந்தப் பகுதி மக்கள் வீட்டில் உள்ள ஜமக்காளம், பெட்ஷீட் கொடுத்து காப்பாற்றியுள்ளனர். அதற்காக நஞ்சப்பசத்திரம் பகுதி மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். இதுதொடர்பாக தமிழக காவல்துறை சார்பில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை 26 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. எப்பொழுது முப்படைத் தளபதி இங்கே வந்தாலும் மொத்த நீலகிரியைப் பாதுகாப்பு வளையத்தில் வைத்திருப்போம். எங்கேயும் யாரும் வர முடியாது. இதில் எந்தச் சந்தேகமும் கிடையாது'' என்றவர் போர்வை கம்பளி கொடுத்து மீட்புப் பணிக்கு உதவிய அந்தப்பகுதி மக்களுக்கு டிஜிபி கம்பளி கொடுத்து நன்றி தெரிவித்தார். குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த 13 பேரின் உடல்கள் சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. செல்லும் வழியில் உடல்களைக் கொண்டு சென்ற வாகனம் மற்றும் போலீஸ் வாகனம் ஆகியவை அடுத்தடுத்து விபத்தை எதிர்கொண்டது.
ஒருமுறை அமரர் ஊர்தி வாகனம் முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதியது. இதில் ஒரு வாகனத்தின் முன்பகுதி முற்றிலும் சேதம் அடைந்த நிலையில், அதனை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.இதையடுத்து, அந்த வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த ராணுவ வீரரின் உடல், வெளியே எடுக்கப்பட்டு பின்னால் வந்து கொண்டிருந்த வாகனத்தில் வைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டது. மேட்டுப்பாளையத்தை அடுத்த காரமடை பகுதியில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.இதேபோன்று, 13 வாகனங்களுக்கு பின்னால் காவல்துறை வாகனம் பாதுகாப்புக்காக வந்து கொண்டிருந்தது. மேட்டுப்பாளையம் அருகே வந்து கொண்டிருந்தபோது, வளைவில் கட்டுப்பாட்டை இழந்து சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக அருகேயிருந்த பள்ளத்தில் விழாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த முப்படைகளின் தளபதி உள்ளிட்டோரின் இறுதி ஊர்வலம் நண்பகல் 2 மணிக்குத் துவங்கியது. 4 மணிக்கு இறுதி நிகழ்வுகள் நடைபெற்றது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்திசிலை அடிவாரத்தில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாநிலங்களவை உறுப்பினர்கள் 12 பேரும் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நேற்று போராட்டத்தைக் கைவிட்டனர்.
அவையில் இறந்தவர்களுக்கு அஞ்சலி உரை நிகழ்த்த எதிர்கட்சித்தலைவர்கள் யாருக்கும் அரசு அனுமதி தரவில்லை.
இறந்தவர்களின் குடுபத்தினருக்கு ஆறுதலாய் அனைவரும் இருக்கிறோம் என்பதை உணர்த்த வேண்டிய நேரம் இது
கருத்துகள்