ஊரகப் பகுதிகளில் சுகாதார கவனிப்பு
இந்திய பொது சுகாதார தரங்கள் மூலம் பொது சுகாதார வசதிகளுக்கான மக்கள் தொகை விதிமுறைகளை ஊரகப் பகுதிகளில் கீழ்காணுமாறு வழங்க மத்திய அரசு உறுதி செய்துள்ளது.
வ.எண்
பொது சுகாதார வசதிகள்
சமவெளிப் பகுதி
மலை/பழங்குடி/சிரமமான பகுதி
1.
துணை மையங்கள்
5000
3000
2.
பொது சுகாதார மையம்
30,000
20,000
3.
முதல் பரிந்துரை அலகு அல்லாத குழந்தை சுகாதார மையம்
1,20,000
80,000
4.
முதல் பரிந்துரை அலகு உள்ள குழந்தை சுகாதார மையம்
5,00,000
தகவல் இல்லை
ஊரக சுகாதார புள்ளிவிவரங்கள்படி 2019-20-ல் 18,610 ஆயுஷ்மான் பாரத் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்கள் – துணை மையங்கள் உட்பட 1,55,404 ஊரக துணை மையங்கள். 16,635 ஆயுஷ்மான் பாரத் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்கள் – பொது சுகாதார மையங்கள், 5,183 சமூக சுகாதார மையங்கள் உட்பட 24,918 ஊரக ஆரம்ப சுகாதார மையங்கள் உள்ளன.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மூத்த குடிமக்களுக்கு சுகாதார கவனிப்பு வசதிகள்
மூத்த குடிமக்களுக்கு சுகாதார கவனிப்பை மேம்படுத்த உறுதிபூண்டிருக்கும் மத்திய அரசு இது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளார்.
60 –வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி பாதிப்பு விகிதம் இதய நோய் 34.06%, உயர் ரத்த அழுத்தம் 32% எலும்பு மற்றும் மூட்டு நோய் 18.8%, நீரிழிவு நோய் 14.2%, நுரையீரல் நோய் 8.3% என கண்டறியப்பட்டுள்ளது. தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் புற்றுநோய், நீரிழிவு, இருதய நோய், பக்கவாதம் ஆகியவற்றை தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்குமான தேசிய திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் தொழில்நுட்ப மற்றும் நிதியுதவி வழங்கப்படுவதாக அவர் கூறினார்.
மேலும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் மூலம் ஆரோக்கியமான உணவுப்பழக்கம் ஊக்குவிக்கப்படுகிறது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் அமைச்சகத்தின் மூலம் உடல் தகுதி இந்தியா இயக்கமும், ஆயுஷ் அமைச்சகத்தின் மூலம் யோகா தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் அவர் தெரிவித்தார். அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது அரசு எடுத்த நடவடிக்கை
சுகாதாரம், மாநிலம் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், ரொக்கமில்லா சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சிகிச்சைக்கு இணையான சிகிச்சையளிக்க, நோயாளிகளிடமிருந்து அதிக கட்டணம் வசூலிப்பது உட்பட தனியார் மருத்துவமனைகளுக்கு எதிரான புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பது, சம்பந்தப்பட்ட மாநிலம் / யூனியன் பிரதேச அரசின் பொறுப்பாகும். இது போன்ற நடைமுறைகளில் கட்டுப்படுத்தி, தடுக்கத் தேவையான நடவடிக்கைகளையும் மாநிலங்களே மேற்கொள்ள வேண்டும். எனவே, இது தொடர்பான புகார்கள் ஏதும் வரப்பெற்றால், அவை உரிய மேல் நடவடிக்கைக்காக, மாநில / யூனியன் பிரதேச அரசுகளுக்கு அனுப்பப்படுவதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார், மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
பெருந்தொற்று ஆராய்ச்சி
உயிரி பாதுகாப்பு தயார் நிலை மற்றும் வலுப்படுத்துவதற்கான பெருந்தொற்று ஆராய்ச்சி, பலதுறை தேசிய கல்விக்கழகங்கள் மற்றும் கட்டமைப்பு ஆகியவற்றுக்கு “பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார கட்டமைப்பு இயக்கம்” என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 2021-22 முதல் 2025-26 வரையிலான காலத்திற்கு ரூ.1347 கோடி ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் சுகாதார ஆராய்ச்சித் துறை மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவற்றின் மூலம் செயல்படுத்தப்படும்.
இந்த முன்முயற்சி திட்டத்திற்கு 9 பிஎஸ்எல் – 3 பரிசோதனைக் கூடங்கள், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பிராந்திய ஆராய்ச்சி அமைப்பு, நுண்கிருமி ஆய்வுக்கான 4 தேசிய நிறுவனங்கள், தேசிய புனேயில் உள்ள எய்ட்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தில் நோய் ஒழிப்பு அறிவியல் மற்றும் சுகாதாரம் குறித்த ஆராய்ச்சி பிரிவு ஏற்கனவே செயல்பட்டு வரும் நுண்கிருமி ஆராய்ச்சி மற்றும் நோய் கண்டறியும் பரிசோதனைக் கூடங்களை வலுப்படுத்துதல் போன்ற முக்கிய செயல்பாடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல்களை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார். இதில் பொதுநீதி யாதெனில்: கொசு வர்த்தி ஏற்றி வைத்தால் கொசுக்கள் மடிந்த நிலை போய் அதன் மீதே கொசுக்கள் அமர்ந்திருப்பதைக் காண முடிகிறது.
அந்த தடுப்பு மருந்துக்கேற்ப கொசு தன்னை உரு மாற்றிக் கொண்டுள்ளது.
கொசுவர்த்தியைத் தாண்டி பல மருந்துகள் வந்துவிட்டன.
அவற்றில் சில மருந்துகளுக்கே கொசுக்கள் கட்டுப்படுகின்றன.
அதுபோன்றே கொரோனா தடுப்பூசி முழுமையடையும் நேரத்தில் கொரோனா கிருமி தன்னை உரு மாற்றிய நிலையில் சுற்றுகிறது.
தற்போதுள்ள தடுப்பூசிக்கு கட்டுப்படாத வகையில் தன்னை உருமாற்றி டெல்டா, டெல்டா+, ஒமைக்ரான் என்று வளர்ந்து நிற்கிறது.
தடுப்பூசி போட்டவர்களே விமானத்தில் பயணிக்க முடியுமெனில் அவ்வாறு பயணித்து வந்தவர்களில் பலருக்கு பெருந்தொற்று வந்தது எப்படி என்ற வினா எழுகிறது.
நாம் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிரானவர்கள் அல்ல.
இந்த உண்மைகள் தெரிந்தும் வேறு வழியின்றி பேரமைப்புகளின் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்பட்டு செயல்படுத்திக்கொண்டுள்ளனர்
முகக்கவசம் அணிந்தால் வெளிவிடும் கார்பன்டை ஆக்சைடான அசுத்தக் காற்றையே சுவாசிக்கிறோமே என்றால், அதெல்லாம் தெரியாது. அவர்கள் சொன்னார்கள். செய்யுங்கள் என்பதுதான் இன்றைய நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
கொரோனா வைரஸ் எங்கிருந்து எப்படி தோன்றியதோ அதை அப்படியே மூடி மறைத்துவிட்டார்கள்.
முதலில் இந்த வைரசை பரப்பிய சீனாவை கேட்க முடியாமல் மக்களை தடுப்பு ஊசி செலுத்திய பிறகு முகக்கவசம் அணியும்படி மிரட்டி, விரட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
உத்தரவு போடுபவர்களே உத்தரவை கடைபிடிக்க முடியாமல் மீறிக்கொண்டிருப்பதையும் பார்க்கிறோம்.
காரணம், இந்த வைரஸ் பல துறைகளின் வணிகத்தை உயர்த்தி, சக்கைபோடு போட வைத்து, இலாபம் பார்க்க வைத்திருக்கிறது.
கார்ப்பொரேட் போன்ற பெரும் வியாபாரிகள் அத்தனை சுலபமாக இதை முடிவுக்கு கொண்டுவர விடமாட்டார்கள் போலத் தான் தோன்றுகிறது.
அதனால்தான் உத்தரவாதம் தராமலே தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளார்கள் என்ற எண்ணம் மக்களிடையே எழுகிறது
ஆக.
நோய்த்தொற்று எப்போதுமே இருக்கிறது. அதனால்.
மக்கள் எப்போதும் எச்சரிக்கையோடு இருப்பதும், சுகாதாரமாக பேணுவதும், இயற்கை வழியில் உடல் நலத்தை தூய்மையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்வது அவசியம்.
தற்போது
கடவுள் உண்டு அல்லது இல்லை. என்ற வாதம் போலத்தான்.
நோய்த்தொற்று வரும்.ஆனால்வராது.
வந்தால் தீராது.
எனவே இயற்கைவழி உணவுக்கு மாறுங்கள்.
குழந்தைகளை கவனமுடன் பார்த்துக்கொள்ளுங்கள்
தற்போதைய முன்னெச்சரிக்கை நடவடிக்கை இதுதான்.
கருத்துகள்