முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஊரகப் பகுதிகளில் சுகாதார கவனிப்பு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் மக்களவையில் தகவல்

ஊரகப் பகுதிகளில் சுகாதார கவனிப்பு

இந்திய பொது சுகாதார தரங்கள் மூலம் பொது சுகாதார வசதிகளுக்கான மக்கள் தொகை விதிமுறைகளை ஊரகப் பகுதிகளில் கீழ்காணுமாறு வழங்க மத்திய அரசு உறுதி செய்துள்ளது.


வ.எண்

பொது சுகாதார வசதிகள்

சமவெளிப் பகுதி

மலை/பழங்குடி/சிரமமான பகுதி

1.

துணை மையங்கள்

5000

3000

2.

பொது சுகாதார மையம்

30,000

20,000

3.

முதல் பரிந்துரை அலகு அல்லாத குழந்தை சுகாதார மையம்

1,20,000

80,000

4.

முதல் பரிந்துரை அலகு உள்ள குழந்தை சுகாதார மையம்

5,00,000

தகவல் இல்லை


ஊரக சுகாதார புள்ளிவிவரங்கள்படி 2019-20-ல் 18,610 ஆயுஷ்மான் பாரத் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்கள் – துணை மையங்கள் உட்பட 1,55,404 ஊரக துணை மையங்கள். 16,635 ஆயுஷ்மான் பாரத் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்கள் – பொது சுகாதார மையங்கள், 5,183 சமூக சுகாதார மையங்கள் உட்பட 24,918 ஊரக ஆரம்ப சுகாதார மையங்கள் உள்ளன.

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.             


                     மூத்த குடிமக்களுக்கு சுகாதார கவனிப்பு வசதிகள்

மூத்த குடிமக்களுக்கு சுகாதார கவனிப்பை மேம்படுத்த உறுதிபூண்டிருக்கும் மத்திய அரசு இது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளார்.



60 –வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி பாதிப்பு விகிதம் இதய நோய் 34.06%, உயர் ரத்த அழுத்தம் 32% எலும்பு மற்றும் மூட்டு நோய் 18.8%, நீரிழிவு நோய் 14.2%, நுரையீரல் நோய் 8.3% என கண்டறியப்பட்டுள்ளது. தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் புற்றுநோய், நீரிழிவு, இருதய நோய், பக்கவாதம் ஆகியவற்றை தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்குமான தேசிய திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் தொழில்நுட்ப மற்றும் நிதியுதவி வழங்கப்படுவதாக அவர் கூறினார்.


மேலும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் மூலம் ஆரோக்கியமான உணவுப்பழக்கம் ஊக்குவிக்கப்படுகிறது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் அமைச்சகத்தின் மூலம் உடல் தகுதி இந்தியா இயக்கமும், ஆயுஷ் அமைச்சகத்தின் மூலம் யோகா தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் அவர் தெரிவித்தார்.  அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது அரசு எடுத்த நடவடிக்கை


சுகாதாரம், மாநிலம் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், ரொக்கமில்லா சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சிகிச்சைக்கு இணையான சிகிச்சையளிக்க, நோயாளிகளிடமிருந்து அதிக கட்டணம் வசூலிப்பது உட்பட தனியார் மருத்துவமனைகளுக்கு எதிரான புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பது, சம்பந்தப்பட்ட மாநிலம் / யூனியன் பிரதேச அரசின் பொறுப்பாகும். இது போன்ற  நடைமுறைகளில் கட்டுப்படுத்தி, தடுக்கத் தேவையான நடவடிக்கைகளையும் மாநிலங்களே மேற்கொள்ள வேண்டும். எனவே, இது தொடர்பான புகார்கள் ஏதும் வரப்பெற்றால், அவை உரிய மேல் நடவடிக்கைக்காக, மாநில / யூனியன் பிரதேச அரசுகளுக்கு அனுப்பப்படுவதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார், மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.       



பெருந்தொற்று ஆராய்ச்சி

உயிரி பாதுகாப்பு தயார் நிலை மற்றும் வலுப்படுத்துவதற்கான பெருந்தொற்று ஆராய்ச்சி, பலதுறை தேசிய கல்விக்கழகங்கள் மற்றும் கட்டமைப்பு ஆகியவற்றுக்கு “பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார கட்டமைப்பு இயக்கம்” என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 2021-22 முதல் 2025-26 வரையிலான காலத்திற்கு ரூ.1347 கோடி ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் சுகாதார ஆராய்ச்சித் துறை மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவற்றின் மூலம் செயல்படுத்தப்படும்.

இந்த முன்முயற்சி திட்டத்திற்கு 9 பிஎஸ்எல் – 3 பரிசோதனைக் கூடங்கள், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பிராந்திய ஆராய்ச்சி அமைப்பு, நுண்கிருமி ஆய்வுக்கான 4 தேசிய நிறுவனங்கள், தேசிய புனேயில் உள்ள எய்ட்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தில் நோய் ஒழிப்பு அறிவியல் மற்றும் சுகாதாரம் குறித்த ஆராய்ச்சி பிரிவு ஏற்கனவே செயல்பட்டு வரும் நுண்கிருமி ஆராய்ச்சி மற்றும் நோய் கண்டறியும் பரிசோதனைக் கூடங்களை வலுப்படுத்துதல் போன்ற முக்கிய செயல்பாடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல்களை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.                         இதில் பொதுநீதி யாதெனில்:                                  கொசு வர்த்தி ஏற்றி வைத்தால் கொசுக்கள் மடிந்த நிலை போய் அதன் மீதே கொசுக்கள் அமர்ந்திருப்பதைக் காண முடிகிறது.

அந்த தடுப்பு மருந்துக்கேற்ப கொசு தன்னை உரு மாற்றிக் கொண்டுள்ளது.

கொசுவர்த்தியைத் தாண்டி பல மருந்துகள் வந்துவிட்டன. 

அவற்றில் சில மருந்துகளுக்கே கொசுக்கள் கட்டுப்படுகின்றன.

அதுபோன்றே கொரோனா தடுப்பூசி முழுமையடையும் நேரத்தில் கொரோனா கிருமி தன்னை உரு மாற்றிய நிலையில் சுற்றுகிறது.

தற்போதுள்ள தடுப்பூசிக்கு கட்டுப்படாத வகையில் தன்னை உருமாற்றி டெல்டா, டெல்டா+, ஒமைக்ரான் என்று வளர்ந்து நிற்கிறது.

தடுப்பூசி போட்டவர்களே விமானத்தில் பயணிக்க முடியுமெனில் அவ்வாறு பயணித்து வந்தவர்களில் பலருக்கு பெருந்தொற்று வந்தது எப்படி என்ற வினா எழுகிறது.

நாம் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிரானவர்கள் அல்ல.

இந்த உண்மைகள் தெரிந்தும் வேறு வழியின்றி பேரமைப்புகளின் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்பட்டு செயல்படுத்திக்கொண்டுள்ளனர்

முகக்கவசம் அணிந்தால் வெளிவிடும் கார்பன்டை ஆக்சைடான அசுத்தக் காற்றையே சுவாசிக்கிறோமே என்றால், அதெல்லாம் தெரியாது. அவர்கள் சொன்னார்கள். செய்யுங்கள் என்பதுதான் இன்றைய நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

கொரோனா வைரஸ் எங்கிருந்து எப்படி தோன்றியதோ அதை அப்படியே மூடி மறைத்துவிட்டார்கள்.

 முதலில் இந்த வைரசை பரப்பிய சீனாவை கேட்க முடியாமல் மக்களை தடுப்பு ஊசி செலுத்திய பிறகு முகக்கவசம் அணியும்படி மிரட்டி, விரட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

உத்தரவு போடுபவர்களே உத்தரவை கடைபிடிக்க முடியாமல் மீறிக்கொண்டிருப்பதையும் பார்க்கிறோம்.

காரணம், இந்த வைரஸ் பல துறைகளின் வணிகத்தை உயர்த்தி, சக்கைபோடு போட வைத்து, இலாபம் பார்க்க வைத்திருக்கிறது.

கார்ப்பொரேட் போன்ற பெரும் வியாபாரிகள் அத்தனை சுலபமாக இதை முடிவுக்கு கொண்டுவர விடமாட்டார்கள் போலத் தான் தோன்றுகிறது.

அதனால்தான் உத்தரவாதம் தராமலே தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளார்கள் என்ற எண்ணம் மக்களிடையே எழுகிறது

ஆக.

நோய்த்தொற்று எப்போதுமே இருக்கிறது. அதனால்.

மக்கள் எப்போதும் எச்சரிக்கையோடு இருப்பதும், சுகாதாரமாக பேணுவதும், இயற்கை வழியில் உடல் நலத்தை தூய்மையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்வது அவசியம்.

தற்போது

கடவுள் உண்டு அல்லது இல்லை. என்ற வாதம் போலத்தான்.

நோய்த்தொற்று வரும்.ஆனால்வராது.

வந்தால் தீராது.

எனவே இயற்கைவழி உணவுக்கு மாறுங்கள்.

குழந்தைகளை கவனமுடன் பார்த்துக்கொள்ளுங்கள்

தற்போதைய முன்னெச்சரிக்கை நடவடிக்கை இதுதான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...