முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஊரகப் பகுதிகளில் சுகாதார கவனிப்பு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் மக்களவையில் தகவல்

ஊரகப் பகுதிகளில் சுகாதார கவனிப்பு

இந்திய பொது சுகாதார தரங்கள் மூலம் பொது சுகாதார வசதிகளுக்கான மக்கள் தொகை விதிமுறைகளை ஊரகப் பகுதிகளில் கீழ்காணுமாறு வழங்க மத்திய அரசு உறுதி செய்துள்ளது.


வ.எண்

பொது சுகாதார வசதிகள்

சமவெளிப் பகுதி

மலை/பழங்குடி/சிரமமான பகுதி

1.

துணை மையங்கள்

5000

3000

2.

பொது சுகாதார மையம்

30,000

20,000

3.

முதல் பரிந்துரை அலகு அல்லாத குழந்தை சுகாதார மையம்

1,20,000

80,000

4.

முதல் பரிந்துரை அலகு உள்ள குழந்தை சுகாதார மையம்

5,00,000

தகவல் இல்லை


ஊரக சுகாதார புள்ளிவிவரங்கள்படி 2019-20-ல் 18,610 ஆயுஷ்மான் பாரத் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்கள் – துணை மையங்கள் உட்பட 1,55,404 ஊரக துணை மையங்கள். 16,635 ஆயுஷ்மான் பாரத் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்கள் – பொது சுகாதார மையங்கள், 5,183 சமூக சுகாதார மையங்கள் உட்பட 24,918 ஊரக ஆரம்ப சுகாதார மையங்கள் உள்ளன.

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.             


                     மூத்த குடிமக்களுக்கு சுகாதார கவனிப்பு வசதிகள்

மூத்த குடிமக்களுக்கு சுகாதார கவனிப்பை மேம்படுத்த உறுதிபூண்டிருக்கும் மத்திய அரசு இது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளார்.



60 –வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி பாதிப்பு விகிதம் இதய நோய் 34.06%, உயர் ரத்த அழுத்தம் 32% எலும்பு மற்றும் மூட்டு நோய் 18.8%, நீரிழிவு நோய் 14.2%, நுரையீரல் நோய் 8.3% என கண்டறியப்பட்டுள்ளது. தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் புற்றுநோய், நீரிழிவு, இருதய நோய், பக்கவாதம் ஆகியவற்றை தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்குமான தேசிய திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் தொழில்நுட்ப மற்றும் நிதியுதவி வழங்கப்படுவதாக அவர் கூறினார்.


மேலும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் மூலம் ஆரோக்கியமான உணவுப்பழக்கம் ஊக்குவிக்கப்படுகிறது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் அமைச்சகத்தின் மூலம் உடல் தகுதி இந்தியா இயக்கமும், ஆயுஷ் அமைச்சகத்தின் மூலம் யோகா தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் அவர் தெரிவித்தார்.  அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது அரசு எடுத்த நடவடிக்கை


சுகாதாரம், மாநிலம் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், ரொக்கமில்லா சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சிகிச்சைக்கு இணையான சிகிச்சையளிக்க, நோயாளிகளிடமிருந்து அதிக கட்டணம் வசூலிப்பது உட்பட தனியார் மருத்துவமனைகளுக்கு எதிரான புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பது, சம்பந்தப்பட்ட மாநிலம் / யூனியன் பிரதேச அரசின் பொறுப்பாகும். இது போன்ற  நடைமுறைகளில் கட்டுப்படுத்தி, தடுக்கத் தேவையான நடவடிக்கைகளையும் மாநிலங்களே மேற்கொள்ள வேண்டும். எனவே, இது தொடர்பான புகார்கள் ஏதும் வரப்பெற்றால், அவை உரிய மேல் நடவடிக்கைக்காக, மாநில / யூனியன் பிரதேச அரசுகளுக்கு அனுப்பப்படுவதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார், மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.       



பெருந்தொற்று ஆராய்ச்சி

உயிரி பாதுகாப்பு தயார் நிலை மற்றும் வலுப்படுத்துவதற்கான பெருந்தொற்று ஆராய்ச்சி, பலதுறை தேசிய கல்விக்கழகங்கள் மற்றும் கட்டமைப்பு ஆகியவற்றுக்கு “பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார கட்டமைப்பு இயக்கம்” என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 2021-22 முதல் 2025-26 வரையிலான காலத்திற்கு ரூ.1347 கோடி ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் சுகாதார ஆராய்ச்சித் துறை மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவற்றின் மூலம் செயல்படுத்தப்படும்.

இந்த முன்முயற்சி திட்டத்திற்கு 9 பிஎஸ்எல் – 3 பரிசோதனைக் கூடங்கள், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பிராந்திய ஆராய்ச்சி அமைப்பு, நுண்கிருமி ஆய்வுக்கான 4 தேசிய நிறுவனங்கள், தேசிய புனேயில் உள்ள எய்ட்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தில் நோய் ஒழிப்பு அறிவியல் மற்றும் சுகாதாரம் குறித்த ஆராய்ச்சி பிரிவு ஏற்கனவே செயல்பட்டு வரும் நுண்கிருமி ஆராய்ச்சி மற்றும் நோய் கண்டறியும் பரிசோதனைக் கூடங்களை வலுப்படுத்துதல் போன்ற முக்கிய செயல்பாடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல்களை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.                         இதில் பொதுநீதி யாதெனில்:                                  கொசு வர்த்தி ஏற்றி வைத்தால் கொசுக்கள் மடிந்த நிலை போய் அதன் மீதே கொசுக்கள் அமர்ந்திருப்பதைக் காண முடிகிறது.

அந்த தடுப்பு மருந்துக்கேற்ப கொசு தன்னை உரு மாற்றிக் கொண்டுள்ளது.

கொசுவர்த்தியைத் தாண்டி பல மருந்துகள் வந்துவிட்டன. 

அவற்றில் சில மருந்துகளுக்கே கொசுக்கள் கட்டுப்படுகின்றன.

அதுபோன்றே கொரோனா தடுப்பூசி முழுமையடையும் நேரத்தில் கொரோனா கிருமி தன்னை உரு மாற்றிய நிலையில் சுற்றுகிறது.

தற்போதுள்ள தடுப்பூசிக்கு கட்டுப்படாத வகையில் தன்னை உருமாற்றி டெல்டா, டெல்டா+, ஒமைக்ரான் என்று வளர்ந்து நிற்கிறது.

தடுப்பூசி போட்டவர்களே விமானத்தில் பயணிக்க முடியுமெனில் அவ்வாறு பயணித்து வந்தவர்களில் பலருக்கு பெருந்தொற்று வந்தது எப்படி என்ற வினா எழுகிறது.

நாம் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிரானவர்கள் அல்ல.

இந்த உண்மைகள் தெரிந்தும் வேறு வழியின்றி பேரமைப்புகளின் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்பட்டு செயல்படுத்திக்கொண்டுள்ளனர்

முகக்கவசம் அணிந்தால் வெளிவிடும் கார்பன்டை ஆக்சைடான அசுத்தக் காற்றையே சுவாசிக்கிறோமே என்றால், அதெல்லாம் தெரியாது. அவர்கள் சொன்னார்கள். செய்யுங்கள் என்பதுதான் இன்றைய நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

கொரோனா வைரஸ் எங்கிருந்து எப்படி தோன்றியதோ அதை அப்படியே மூடி மறைத்துவிட்டார்கள்.

 முதலில் இந்த வைரசை பரப்பிய சீனாவை கேட்க முடியாமல் மக்களை தடுப்பு ஊசி செலுத்திய பிறகு முகக்கவசம் அணியும்படி மிரட்டி, விரட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

உத்தரவு போடுபவர்களே உத்தரவை கடைபிடிக்க முடியாமல் மீறிக்கொண்டிருப்பதையும் பார்க்கிறோம்.

காரணம், இந்த வைரஸ் பல துறைகளின் வணிகத்தை உயர்த்தி, சக்கைபோடு போட வைத்து, இலாபம் பார்க்க வைத்திருக்கிறது.

கார்ப்பொரேட் போன்ற பெரும் வியாபாரிகள் அத்தனை சுலபமாக இதை முடிவுக்கு கொண்டுவர விடமாட்டார்கள் போலத் தான் தோன்றுகிறது.

அதனால்தான் உத்தரவாதம் தராமலே தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளார்கள் என்ற எண்ணம் மக்களிடையே எழுகிறது

ஆக.

நோய்த்தொற்று எப்போதுமே இருக்கிறது. அதனால்.

மக்கள் எப்போதும் எச்சரிக்கையோடு இருப்பதும், சுகாதாரமாக பேணுவதும், இயற்கை வழியில் உடல் நலத்தை தூய்மையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்வது அவசியம்.

தற்போது

கடவுள் உண்டு அல்லது இல்லை. என்ற வாதம் போலத்தான்.

நோய்த்தொற்று வரும்.ஆனால்வராது.

வந்தால் தீராது.

எனவே இயற்கைவழி உணவுக்கு மாறுங்கள்.

குழந்தைகளை கவனமுடன் பார்த்துக்கொள்ளுங்கள்

தற்போதைய முன்னெச்சரிக்கை நடவடிக்கை இதுதான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த