முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுற்றுச்சூழல் துறை அமைச்சரிடம் மரங்கள் மீது ஆணி அடிக்க தடைசெய்து அரசாணை வெளியிட வலியுறுத்திய சூழலியல் குழுவினர்

தமிழகத்தின் சூழலியல் செயல்பாட்டாளர்களின்  தேனி மாவட்ட மாநாடு நடைபெற்றது 


பசுமை செந்தில் நிகழ்ச்சியை முன்னின்று நடத்தினார். தமிழகத்தின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் தேனி மாவட்டத்திலுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள்.உள்ளாட்சிப்  பிரதிநிதிகள்.தன்னார்வலர்கள்.

புதுக்கோட்டை மரம் அறக்கட்டளை நிறுவனர் மரம் எஸ்.ராஜா உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் பலர் ஒன்றுகூடி நடத்திய நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதுமுள்ள சூழலியல் செயல்பாட்டாளர்களின் சார்பாக தேனி மாவட்டத் தன்னார்வலர்கள் குழுவினர் கடந்த மூன்றாண்டுகளாக தேனி மாவட்டத்தின் பனை விதைகள் நடவு செய்யும் பணியையும், ஆணி பிடுங்கும் திருவிழா என்ற பெயரில் மரங்களில் அடிக்கப்பட்டுள்ள ஆணிகள், விளம்பரப் பதாகைகளை அகற்றும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர் இந்தகீ களப்பணியில் பங்கேற்ற பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த , தன்னார்வலர்களுக்கு பாராட்டி நன்றி தெரிவிக்கும் வகையில் 



விழா தேனியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. தி.மு.க.வின் தேனி வடக்கு மாவட்டப் பொறுப் பாளரான தங்கதமிழ்செல்வன் தலைமையில். சென்னை யுனிவர்சல் சின்டிகேட் அமைப்பின் தலைவரான நைனார் முகமது முன்னிலை வகித்தார். விழாவில் தமிழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்துகொண்டு தன் னார்வலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், மற்றும் கேடயங்களை வழங்கிப் பேசினார். விழாவில், நம்மாழ்வார், பென்னிகுவிக் பெயர் களில் 9 பேருக்கு விருதுகளும், 30 அமைப்புகள், 180 தன்னார்வலர்களுக்கு சான்றிதழ்களும், கேடயங்களையும் வழங்கிப் பேசினார். விழாவில் அவர் பேசும்போது, தமிழகத்தின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு பசுமைச் செயல்பாடுகளை முன்னெடுத்துள்ளார்.


பிளாஸ்டிக் பயன் பாட்டை முற்றிலும் ஒழிக்க மீண்டும் மஞ்சள் பை இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை எங்கு சென்றாலும் மஞ்சள் பை தான் எடுத்துச் செல்வார்கள். பின்னர் அது நாகரிகமில்லை எனக் கருதி விட்டார்கள். உலகிற்கே நாகரிகம் சொல்லிக் கொடுத்தவர்கள் தமிழர்கள் தான். எனவே, வெளியிடங்களுக்கு செல்லும் போது மஞ்சள் நிலை பை தூக்கிச் செல்வது அவமானமில்லை. அது நமது அடையாளம். யாரெல்லாம்  மஞ்சள்பை பயன்படுத்துகிறார்ளோ அவர்களெல்லோருமே சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள் தானென்றார். பின்னர் தேனி மாவட்டத்தில் தன்னார்வலர்களின் சார்பில்  மஞ்சள்பை விழிப்புணர்வு இயக்கத்தை அமைச்சர் தொடங்கி வைத்து மஞ்சள்பைகளை வழங்கினார். விழாவில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர். சரவணக்குமார், தேனி மேலப்பேட்டை  இந்து நாடார்கள் உறவின்முறை யின் பொதுச்செயலாளர் ராஜமோகன், தேனி கௌமாரியம்மன் உணவு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுதாகர், தேனி பாலசங்கா நிறுவன நிர்வாக இயக்குனர் செந்தில்நாதன் ஹோட்டல் தேனி இண்டர்நேஷனல் உரிமையாளர் நாராயணன், அய்யப்பன், தேனிமாவட்டத் தன்னார்வலர் குழு ஒருங்கிணைப் பாளர் பசுமை செந்தில் மற்றும் பலர் கலந்துகொண்ட நிகழ்வில் மரத்தில் ஆணிஅடிப்பதற்குத் தடைவிதித்து அரசாணை பிறப்பிக்க வேண்டுமென்ற கோரிக்கையை சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மூலமாக தமிழக முதல்வருக்கு முன் வைத்தனர்.

தமிழகத்தை பசுமை சூழ்ந்த மாநிலமாக மாற்றுவதில் முன்னெப்போதும் இல்லாத அக்கரையுடன்.கூடுதலான கவனம் செலுத்தி அதற்கென ஓர் தனித்துறையை அமைத்து அதற்கு ஏற்றவாறு தமது எண்ணங்களை செயலாக்கக்கூடிய ஆற்றல் உள்ளவர் யார்..? என்று தேர்வுசெய்து. புதுக்கோட்டை மன்னின் மைந்தரை அமைச்சராக்கி.சிறப்புறச் செயலாற்றிவரும் தமிழகத்தின் முதல்வர் செயல்படுத்த வைத்த   கோரிக்கையைக் கருணை உள்ளத்தோடு பரிசீலித்து விரைவில்  நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையோடு அந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் காத்திருக்கும் நிலையில் நெகிழிகள் தடுப்பு போல மரங்கள் மீது இழைக்கப்பட்ட தீங்குகள் தடுக்க ஆணி அடித்தால் தண்டனை என்றால் தான் மக்கள் பயந்து தயங்கி அந்த நிலை மாறும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...