முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கல்பாக்கத்தில் அவசர நிலை ஒத்திகை

கல்பாக்கத்தில் அவசர நிலை ஒத்திகை 


அணு சக்தித் துறையின் கல்பாக்கம் மையத்தில் சென்னை அணுமின் நிலையம், இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், கல்பாக்கம் மறுசுழற்சி ஆலை, முன்மாதிரி அதிவேக ஈனுலை (அணுமின் திட்டம்) மற்றும் பாபா அணு ஆராய்ச்சி மையப்பிரிவுகள் உள்ளன.  இந்த மையம் அவசர கால தயார் நிலை செயல்முறை சோதனை திட்டத்தின்படி, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தும் “வளாகம் தாண்டிய அவசர நிலை” ஒத்திகையை இன்று (14.12.2021) நடத்தியது.  இந்த ஒத்திகை 16 கிலோ மீட்டருக்குள் இருக்கும் அவசரகால திட்ட மண்டலத்தில் நடத்தப்பட்டது.

இந்த ஒத்திகை மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமையால் பொது இடத்தில், மாவட்ட ஆட்சியரும் இந்த ஒத்திகையின் தளபதியுமான திரு. ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப அவர்களின் தலைமையின் கீழ் நடத்தப்பட்டது.  இதற்கு தேவையான தொழில்நுட்ப கூறுகளை சென்னை அணுமின் நிலைய இயக்குனர் மற்றும் வளாக அவசரநிலை இயக்குனருமான திரு. எம். பலராமமூர்த்தி; அவர்களின் தலைமையின் கீழ் இயங்கும் கல்பாக்கம் அவசரகால நிலை குழு மூலம் வழங்கப்பட்டன.  இந்த ஒத்திகையின்; நோக்கம் என்னவென்றால் அணுமின் நிலையத்தில் கட்டமைப்பு மற்றும் இயங்குநிலையில் ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்தால் அதனை மாவட்ட நிர்வாகமும் அணுமின் கழக நிர்வாகங்களும் இந்நிலையை திறம்பட கையாளும் திறம் மற்றும் செயல் திட்டம் “உறுதியான பாதுகாப்பு” தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுவதை உறுதி செய்து கொள்வதாகும்.


இந்த ஒத்திகையானது கட்டளையிடு மற்றும் கட்டுப்படுத்து என்ற முறையில் பொது மக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி நடத்தப்பட்டது.  இதுபோன்ற ஒத்திகை இப்போதுதான் முதன்முறையாக நடத்தப்பட்டது.  மேலும் இதனைப்பற்றி மாவட்ட நிர்வாகனத்தினருக்கோ அல்லது பேரிடர் மேலாண்மை முகமையைச் சேர்ந்தவர்களுக்கோ முன்னறிவிப்பின்றி எதிர்பாராத விதத்தில் அறிவிக்கப்பட்டு அவர்களின் உண்மையான தயார்நிலை பற்றியும் அவை மேலும் மேம்பாடு அடைவதற்காகவும் நடத்தப்பட்டது.  ஆனால் பொது மக்களுக்கு தேவையான முன் அறிவிப்பும் அறிவுரைகளும் வழங்கப்பட்டிருந்தன. 

இந்த ஒத்திகை, சென்னை அணுமின் நிலையத்தில் பிரத்யேகமாக ஒரு சம்பவம் நடந்ததாக பாவிக்கப்பட்டு ஒரு குறுகிய கால அளவில் உருவாக்கப்பட்டது.  பின்னர் கல்பாக்கம் அவசரநிலை குழு அதற்கான தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்தது.  ஆனால், நிலைமைய அடுத்த கட்டத்திற்கு அதாவது வளாக அவசரநிலையாக விரிவுபடுத்தப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டது.  பின்னர்  இது வளாகம் தாண்டிய அவசர நிலையாக அறிவிக்கப்பட்டது. அப்போது மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு தனது கட்டுப்பாட்டில் எடுத்து நடவடிக்கைகைகளை மேற்கொண்டது.  தற்போதுள்ள பருவநிலையில் ஒய்யாளிக்குப்பம், சட்ராஸ், கல்பாக்கம் கிராமங்களுக்கு அணுசக்தித்துறையின் வழிகாட்டுதலோடு பாதுகாப்பு நடவடிக்கைகள் மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமையின் மூலம் மேற்கொள்ளப்பட்டன.


மாவட்ட வருவாய், ஊரக வளர்ச்சி, காவல், நல்வாழ்வு, தீயணைப்பு மற்றும் மீட்பு, வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, மீன்வளம், போக்குவரத்து மற்றும் மக்கள் தொடர்பு ஆகிய துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் இதில் பங்கெடுத்து இந்த ஒத்திகையை சிறப்பாக நடத்தி முடித்தனர்அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவினரும் இதில் பங்கெடுத்துக்ககொண்டனர்.

அணுசக்தித்துறை மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமையின் அணுசக்தித்துறை அவசரகால நிலையை கையாளும் திட்டங்களின்படி இந்த ஒத்திகை நடத்தப்பட்டது.  இதில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், அணுசக்தித்துறை ஒழுங்கமைப்பு வாரியம், தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் அணுசக்தித்துறையைச் சேர்ந்த 15 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த ஒத்திகையை பார்வையிட்டு இது நல்ல முறையில் நடத்தப்பட்டதாக தங்களது திருப்தியை  கருத்துக்கேட்புக்  கூட்டத்தில் தெரிவித்தனர். 

அவசரகால ஒத்திகையின் மூலம் நமது மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமையின் அவசரகால நிலையை கையாளும் திறனை கட்டளையிடு மற்றும் கடடுப்படுத்து என்ற தத்துவத்தின் அடிப்படையில் மிகச்சிறப்பாக வலுவடைந்துள்ளதாக திரு. ஆ.ர. ராகுல் நாத், மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது குறிப்பிட்டார்.  பொது மக்களுக்கு எந்தவித இடையூறுமின்றி குறிப்பாக போக்குவரத்தில் எந்தவித பாதிப்பின்றி ஒத்திகை நடத்தப்பட்டது சிறப்பான அம்சம் என மேலும் அவர் தெரிவித்தார்.  செய்தியாளர் சந்திப்பின்போது;, திருமதி. கா. சாகிதா பர்வின், வருவாய்க் கோட்ட அதிகாரி, செங்கல்பட்டு, மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமையின் அதிகாரிகள் மற்றும் சென்னை அணுமின் நிலைய பொறியாளர்கள் உடன் இருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த