சிவகங்கையில் மாற்றுத் திறனாளிகளுக்கு அமைச்சர் சான்று வழங்கினார்
சிவகங்கை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் தேசிய மாற்றுத்திறனாளிகள் தினத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனர் கலந்து கொண்டு சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழுடன் ,கேடயமும் வழங்கிச் சிறப்பித்தார். மேலும் காரைக்குடி மதர் சிறப்பு பள்ளி மாணவர்கள் பந்து சேகரித்தல் போட்டியில் பரிசு பெற்றனர்.
காரைக்குடி மதர் சிறப்பு பள்ளியின் மாணவர்களான சபரி, கிருஷ்,. நிகிலேஷ், . நேகா ஆகிய மாணவர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பரிசு வழங்கினார். அருகில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி , காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி மற்றும் சிவகங்கை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அலுவலர். கதிர்வேல் மற்றும் பத்திரிகையாளரும் நகர திமுக செயலாளருமான துரை ஆனந்த், காரைக்குடி மதர் சிறப்புப் பள்ளி நிர்வாக இயக்குநர் அருன் குமார் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.
கருத்துகள்