சென்னை, தாம்பரம் மாநகராட்சிகள் எஸ்.சி பெண்களுக்கும், ஆவடி மாநகராட்சி எஸ்.சி (பொது) பிரிவுக்கும் ஒதுக்கீடு
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பார்த்திபன் தாக்கல் செய்த மனுவில்,
''சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் பட்டியலினப் பொதுப்பிரிவுக்கு 16 வார்டுகள், பட்டியலினப் பெண்களுக்கு 16 வார்டுகள் என ஒதுக்கப்படும் நிலையில், மீதமுள்ள 168 இடங்களில் பெண்களுக்கு 89 இடங்களும், பொதுப் பிரிவுக்கு 79 இடங்களும் ஒதுக்கி 2019 ஆம் ஆண்டு மே மாதம் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. 2016 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட தமிழ்நாடு நகராட்சிகள் சட்டத்தின் அடிப்படையில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடாக, 84 இடங்கள்தான் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும்.ஆனால், மண்டல வாரியாக வார்டுகளைப் பிரித்து ஒற்றைப் படை வரிசையில் உபரியாக இருக்கும் வார்டைப் பெண்களுக்கு ஒதுக்குவதால், அவர்களுக்குப் பொது வார்டுகளை விட கூடுதல் வார்டுகள் வருவதாக மாநகராட்சி தெரிவித்திருந்த நிலையில் மண்டல வாரியாக வார்டுகளை ஒதுக்கீடு செய்யாமல், மாநகராட்சியின் ஒட்டுமொத்த வார்டுகளையும் பொதுப் பிரிவுக்கும், பெண்களுக்கும் சமமாகப் பிரித்து வழங்க வேண்டும். சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 200 இடங்களில் 105 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படுவதால் இது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது'' எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்றப் பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, சென்னையைப் பொறுத்தவரை மத்தியப் பகுதியில் தான் பெண்கள் அதிகம் என்றும், புறநகர் பகுதிகளில் குறைவு என்பதால் போதிய பிரதிநிதித்துவம் கொடுக்கும் வகையில் விதிகளுக்கு உட்பட்டு மண்டல வாரியாக வழங்கப்பட்டதாக தெரிவித்தார். இதனை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர் அரசியலமைப்புச் சட்டத்தில் மொத்த இடங்களின் எண்ணிக்கை அடிப்படையில் தான் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதால் அதனை மீறக்கூடாது எனத் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் மண்டல வாரியான ஒதுக்கீடு செய்யும் அறிவிப்பாணையை இரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும், பெண்களுக்கு வழங்குவதை மனுதாரர் எதிர்க்கவில்லை என்பதால், 50 சதவீத ஒதுக்கீடு அடிப்படையில் தேர்தல் நடத்தலாம் என்றும், ஆனால் அது மொத்த வார்டுகளின் அடிப்படையில் தான் இருக்க வேண்டுமெனக் கூறி, நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர். மேலும் அந்த தீர்ப்பை முன்னிட்டு நகர்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், அனைத்து மாநகராட்சி, நகராட்சி, ஆணையர்களிடம் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை ,விவரம் கேட்டது.
அதற்கான உத்திரவு பிறக்கப்பட்டுள்ளது. பொங்கலுக்கு பிறகு இன்று நடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த தேர்தல் ஆணையத்தில் அங்கீகரிக்கப்பட்ட அணைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் முடிவில் இட ஒதுக்கீடுகள் குறித்து இறுதி அறிக்கை வெளியிட்டது
மதுரவாயல் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சென்னை மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கான சாதிவாரியான இட ஒதுக்கீடு
வார்டு எண் 144 எஸ்.சி.
(பொது)
வார்டு எண்கள்
147, 149, 150 , 152 , 153, ஆகிய 5 வார்டுகள் பெண்கள்
(பொது)
வார்டு எண்கள்
91, 92 , 143, 145, 146, 148, 151, 154, 155, ஆகிய 9 வார்டுகள் பொது பிரிவு
பின்னர் தேதி அறிவிக்கப்பட உள்ளது. பிப்ரவரி 2 வது வாரத்தில் தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது. தலைவர், மேயர்களை கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளது. தற்போது வெளியான அறிவிக்கை ஆணையில் சென்னை, ஆவடி, தாம்பரம் ஆகிய மாநகராட்சி மேயர் பதவிகள் எஸ்.சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதில், சென்னை, தாம்பரம் மாநகராட்சிகள் எஸ்.சி பெண்களுக்கும், ஆவடி மாநகராட்சி எஸ்.சி (பொது) பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
கருத்துகள்