முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒலிம்பிக் படகு போட்டிகளில் பங்கேற்ற ராமேஸ்வரத்தில் “சாம்பியன்களுடன் சந்திப்பு” இயக்கம்

 ராமேஸ்வரத்தில் “ஒலிம்பிக் சாம்பியன்களுடன் சந்திப்பு” இயக்கம்


ஒலிம்பிக் படகு போட்டிகளில் பங்கேற்ற  கே சி கணபதி, வருண் தக்கார் ஆகியோர் வியாழன் அன்று (ஜனவரி 6, 2022) ராமேஸ்வரத்தில் “சாம்பியன்களுடன் சந்திப்பு” இயக்கத்தைத் தொடங்கினர். ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரர்களும், வீராங்கனைகளும் நாடு முழுவதும் பள்ளிகளுக்குச் சென்று  மாணவர்களுடன் கலந்துரையாடுமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி, கேட்டுக் கொண்டதையடுத்து இந்த இயக்கத்தை இவர்கள் நடத்தி வருகின்றனர்.


ஆசிய சாம்பியன் பட்ட போட்டிகளில், படகுப் போட்டிப் பிரிவில், தங்கப்பதக்கம் வென்ற கணபதியும், வருணும் ராமேஸ்வரத்தில் உள்ள விவேகானந்த வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுடன் கலந்துரையாடினர். விளையாட்டு வீரராகும் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான நோய் எதிர்ப்பு ஆற்றல் மற்றும் உடல் தகுதிக்கு சமச்சீரான ஊட்டச்சத்தின் தேவையை அப்போது அவர்கள் எடுத்துரைத்தனர்.

2022-ஆம் ஆண்டுக்கு மாணவர்களின்  விளையாட்டுக்கள் மீதான தீர்மானத்தை, அவர்கள் கேட்டறிந்ததோடு விளையாட்டு வீரர்களாக வளர்ந்து வரும் மாணவர்களின் அனுபவத்தையும் கேட்டறிந்தனர். மேலும், படகு செலுத்துவதற்கு முக்கியமான சில அடிப்படை கட்டுடலுக்கான பயிற்சிகளையும், இந்த இரட்டையர்கள் செய்து காண்பித்தனர்.

“படகு செலுத்துவதற்கு உடல் பலத்தோடு நெகிழ்ச்சித் தன்மையும், சீராக இருக்க வேண்டும்” இல்லையென்றால் திடீரென மாற்றம் அடையும் காற்றின் வேகம், உங்களையும், படகுகளையும் வீசியெறிந்து விடும்.  எனவே ஒவ்வொரு நாளையும் ஓட்டப்பயிற்சி அல்லது மிதிவண்டி ஓட்டுதலுடன் தொடங்க வேண்டும்.  இது உடலுக்கு நெகிழ்வுத் தன்மையை தரும். மாலையில், பளு தூக்குதலில் பயிற்சி பெறவேண்டும், இது உடலை வலுவாக்கும்” என்று மாணவர்களிடம் வருணும், கணபதியும் தெரிவித்தனர்.

“பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 75 பள்ளிகளிலிருந்து வந்துள்ள 150க்கும் அதிகமான மாணவர்களுடன், கலந்துரையாடுவது மகத்தான விஷயமாகும். அவர்களுக்கு நாங்கள், ஊக்கம் அளித்திருப்பதாகவும் இந்த மாணவர்களிலிருந்து ஒலிம்பிக் பதக்கம் பெறுவோர் உருவாவார்கள்  என்றும் நம்புகிறோம்” என இந்த இரட்டையர்கள் தெரிவித்தனர்.

‘சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப் பெருவிழா’-வின் ஒரு பகுதியாக இந்த தனித்துவ முன்முயற்சியை 2021 டிசம்பரில் ஒலிம்பிக் தங்கப்பதக்க வீரர் நீரஜ் சோப்ரா  தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து வட இந்தியாவில், ஒலிம்பிக் வெண்கலப் பதக்க வீரர் பஜ்ரங் புனியா, இயக்கத்தைக் கொண்டு சென்றார்.

பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுடன் உரையாடும்  ‘சாம்பியன்களுடன் சந்திப்பு’ என்ற இந்த இயக்கத்திற்கு, மத்திய கல்வி அமைச்சகமும், இளையோர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் அமைச்சகமும் கூட்டாக  ஏற்பாடு செய்து வருகின்றன. இந்த பயணத்தின் போது ஒலிம்பிக் வீரர்கள், தங்களின் சொந்த அனுபவங்களையும், வாழ்க்கை தந்த பாடங்களையும், எடுத்துரைத்ததோடு எதிர்கால விளையாட்டு வீரர்கள் உருவாவதற்கான ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்கள்.


ராமேஸ்வரம் பள்ளியில் நடைபெற்ற மாணவர் சந்திப்பின்போது, முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும் கொவிட்-19-க்கான வழிகாட்டு நெறிமுறைகளை  பள்ளி நிர்வாகம் கண்டிப்புடன் அமல்படுத்தியது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...