பூர்த்தியாகாத மதுரை மீனாட்சியம்மன் ஆலய இராஜகோபுரம்
தமிழகத்திலேயே மிகப்பெரிய உயரமாக அமைந்திருக்க வேண்டிய கோபுரம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் ராஜகோபுரம். ஆனால், இந்தப் புரிதல் மதுரை மக்களுக்கே இல்லை என்பதுதான் எதார்த்தம்.
விஜயநகரப் பேரரசின் தென்னக விரிவாக்கம் செய்த மன்னர்களில்
திருமலை நாயக்கர் மன்னர் தனது தலைநகரை திருச்சிராப்பள்ளியிலிருந்து மதுரைக்கு மாற்றி ஆட்சி செய்த காலத்தில் வண்டியூர் தெப்பக்குளம், திருமலை நாயக்கர் அமைத்த மஹால் (முன்னால் பாண்டிய நாட்டில் அரண்மனை) அதை மாற்றம் செய்யப்பட்டது உள்ளிட்ட வரலாற்று அடையாளங்களையும்
சிந்தித்தவர், எதிர்காலத்தில் மீனாட்சி அம்மன் கோயிலின் மற்ற கோபுரங்கள் எல்லாம் கட்டிடங்களால் மறைக்கப்பட வாய்ப்பு ள்ளதையும் அப்போது கணித்து. அதனால் மிகவும் பிரம்மாண்டமாக ராஜகோபுரத்தைக் கட்டத் தொடங்கினார். பெரும்பாலும் நாயக்கர்கள் அதன் மன்னர்கள் வைணவ நெறியைப் பின்பற்றி வரும் நிலையில் சைவ நெறி சார்ந்த மீனாட்சி அம்மன் ஆலயக் கோபுரம் அவராலும், அவருக்குப் பின் அந்த வம்சத்தின் கடைசி அரசி மீனாட்சி (தற்கொலை செய்த அரசி) யாலும் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட முடியாமலேயே நின்று போனது.
மீனாட்சி அம்மன் கோவிலின் கோபுரங்களுக்கெல்லாம் மகுடமாக அமையும் விதத்தில் 16 ஆம் நூற்றாண்டில் மிகவும் பிரம்மாண்டமாகக் கட்ட அடித்தளமிடப்பட்டது தான் ராஜகோபுர திருப்பணி. அதற்காக, புதுமண்டபம் எதிரே நந்தி சிலைக்கருகில் அஸ்திவார அடித்தளமும் அமைக்கப்பட்டது. மீனாட்சி அம்மன் கோவிலில் தற்போதுள்ள உள்ள 14 கோபுரங்களில் மிகவும் உயரமானது தெற்குக் கோபுரம் அதன் உயரம் 170 அடி. அதற்காக அமைக்கப்பட்ட அஸ்திவார அடித்தளத்துடன் ராஜகோபுரத்தின் கல்ஹாரம் எனப்படும் அடித்தளத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, அதைவிட சுமார் மும்மடங்கு பெரியது. அந்த ராஜகோபுரம் முழுமையாகியிருந்தால் அது தமிழகத்திலேயே மிக உயரமான கோவில் கோபுரமாக அமைந்திருக்குமென ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
“மீனாட்சியம்மன் கோவில் ராஜகோபுரமானது அதன் பிரம்மாண்டத்தில் மட்டுமல்ல, மிகவும் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளுக்காகவும் பெரும் வியப்பைத் தருகிறது. இதன் அடித்தளமான கல்ஹாரத்தின் உயரம் 50 அடியும். 170 அடி நீளமும், 110 அடி அகலமுமாகவுள்ளது. கோபுரம் முழுமையாகக் கட்டிமுடிக்கப் பட்டிருந்தால், அதன் உயரம் 300 அடிகளாக இருந்திருக்கலாமெனவும் கணிக்க முடிகிறது. கடைகளும் அதன் தெருவில் ஆக்கிரமிப்பு சூழ்ந்துள்ளதால், இக் கோபுரத்தின் பிரம்மாண்டத்தை யாரும் முழுமையாக உணரமுடியவில்லை.
கோபுரத்தின் நான்கு நிலைக்கற்களிலும் மிகவும் நுணுக்கமான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. பூத கணங்கள், பெண் தெய்வங்கள், தாமரை மாலைகள் ஆகியவை பொறிக்கப்பட்டுள்ளன. சிற்ப சாஸ்திரத்தின்படி சாலை விமானங்கள், கூடு ஆகியவற்றை அழகாகவும், பெரிதாகவும் அமைத்துள்ளனர். ஒரு விரல் அளவுள்ள சிவலிங்கங்கள் ஏராளமாக வடிவமைக்கப்பட்டுள்ளதும் அதில் முக அலங்காரம் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இராஜ கோபுரத்தைச் சீரமைக்க ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூபாய்.2.60 கோடி ஒதுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால், அதற்கான பணிகள் தொடங்கப்பட்டதாகத் தெரியவில்லை. இதுபோல முற்றுப்பெறாத ராஜகோபுரங்கள் மதுரைக்கு அருகில் அழகர்கோயில் மற்றும் திருவேடகத்திலும் உள்ளன.
மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் கும்பாபிஷேகப் பணிகள் தொடங்கப்படவிருக்கும் நிலையில், கும்பாபிஷேகத் திருப்பணி வேலைகளுடன் ராஜகோபுரத்தை முழுமையாகக் கட்டியெழுப்பும் பணிகளையும் தொடங்கி முடிக்க வேண்டும் என்பதே பக்தர்கள் மற்றும் சிற்பக் கலை கற்ற, தொல்லியல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுகுறித்த கருத்து தெரிவித்த பக்தர்கள் “முன்பெல்லாம் மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்களை மதுரைக்குள் எங்கிருந்து பார்த்தாலும் பார்க்கமுடியும். பக்கத்து கிராமங்களுக்கே கூடத் தெரியும் ஆனால் கடந்த 30 வருடமாக தற்போது, கட்டிடங்களுக்கான உயரக் கட்டுபாடு விதிகளை யாருமே பின்பற்றாததால் கோவிலுக்கு அருகிலுள்ள பகுதிகளிலிருந்து கூட பார்த்தால்கூட கோவில் கோபுரங்கள் தெரிவதில்லை. ராஜ கோபுரம் முழுமையாகக் கட்டிமுடிக்கப்பட்டால் இருக்கும் நிலையில் மீனாட்சி அம்மன் கோயில் கோபுரம் மதுரையின் அடையாளமாக மீட்கப்பட வேண்டும் என்பதும் அதற்கு தொல்லியல் துறை சார்ந்த 200 மீட்டர் ரேடியேஷன் ரெகுலேட்டட் ஏரியா அனுமதி படிவம் தாக்கல் செய்யாமலேயே நகர் ஊரமைப்புத் துறை ஊழல் செய்து அனுமதி பலர் பெற்ற காரணமாக பல கட்டிடங்கள் விதிமுறைகள் மீறப்பட்ட நிலையில் கோவில் நிர்வாகமும் அரசும் இந்த விஷயத்தில் தனிக்கவனம் செலுத்தினால் நல்லது” என்பது அனைவரும் எதிர்பார்க்கும் நிலையாகும்.
கருத்துகள்