தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகர்களில் ஒருவர்
இயக்குனர் கஸ்தூரி ராஜா வின் மகனாக வளரும் நடிகர் தனுஷ். தனுஷும் உச்ச நட்சத்திரமாக உள்ள ரஜினிகாந்தின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா ஆகியோருக்கு கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு குழந்தைகளும் உள்ள நிலையில் மக்கள் யாரும் எதிர்பாராத விதமாக தற்பொழுது இருவரும் பிரிய உள்ளதாக சமூக வலைத்தளங்களின் வாயிலாக தனுஷ் தெரிவித்துள்ளனர். இது திரையுலகினர் மற்றும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் தனுஷூம் அவரது மனைவி ஐஸ்வர்யாவும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்கின்றனர் என்று தனுஷ் தனது தூதஞ்சல் மூலம் தெரிவித்துள்ளார் நடிகர் தனுஷ். தனது அண்ணனான செல்வராகவன் இயக்கத்தில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் தனுஷ். ஒல்லியான உருவம் இருப்பதனால் இவர் ஆரம்ப காலத்தில் பயங்கரமாக உருவக் கேலிக்கு உள்ளானார்.
தற்போது தனது கடின உழைப்பால் ஹாலிவுட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் தனுஷ். தற்போது தொடர்ந்து வெற்றிப் படங்களாக கொடுத்து வரும் தனுஷ் தனது மனைவியை பிரிய போவதாக அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைதளங்களில் கூறியுள்ளார்.
இவர் மீது கடந்த காலத்தில் எனது காணாமல் போன மகன் தான் என மதுரை நீதிமன்றத்தில் கதிரேசன் என்பவர் வழக்குத் தொடுத்தது பழைய கதை.
இந்த விவாகரத்து மூலம் குழந்தைகளின் நிலை குறித்து இனி வெளிவரும் தகவல் உறுதிபடுத்தும்.
கருத்துகள்