முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற இந்து சமய அறநிலையத் துறை ஆலோசனைக்குழு உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 20. ஜனவரி 2022 ல் சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில்


இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருக்கோயில்களில் பக்தர்களின் வசதிகளை மேம்படுத்துவது, பராமரிப்பது, செம்மைப்படுத்துவது தொடர்பாக ஆலோசனைக்குழு உறுப்பினர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இது குறித்த தமிழகத்தின் முதல்வர் தனது பதிவில்  "இந்து சமய அறநிலையத் துறை ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பக்தர்களுக்கான வசதிகளையும் திருக்கோயில்களில் நிதிமேலாண்மையினையும் மேம்படுத்துவது, அரிய நூல்கள் - செப்பேடுகள் - ஓலைச்சுவடிகளைப் பாதுகாப்பது உள்ளிட்டவை குறித்து உறுப்பினர்களாக உள்ள ஆன்மீகப் பெரியார்களோடு பேசினேன். 

திருக்கோயில் நிர்வாகம் அரசியல் சார்பின்றித் திறம்பட முன்னெடுக்கப்பட்டு வருவதற்கு இந்த ஆலோசனைக்குழுவே சிறந்த சான்று.

மேலும், முக்கியமான திருக்கோயில்களின் அன்றாட நிகழ்வுகளைச் சென்னையில் இருந்தே கேமராக்கள் மூலம் கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையைத் திறந்து வைத்தேன்". எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.

முன்னதாக தமிழ்நாட்டிலுள்ள முக்கியத் திருக்கோயில்களின் அன்றாட நிகழ்வுகளை கண்காணித்திட இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில், திருக்கோயில்களின் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் வகையில் கட்டுப்பாட்டு அறையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.


சட்டமன்றப் பேரவையின் முதல் கூட்டத் தொடரில் தமிழ்நாடு ஆளுநர் உரையில் இந்து சமய அறநிலையத்துறை தொடர்பாக பல்வேறு அறிவிப்புகள் முன்பே வெளியிடப்பட்டன. அதில்

அனைத்து முக்கிய திருக்கோயில்களிலும் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கும், திருக்கோயில்களின் பராமரிப்பை செம்மைப்படுத்துவதற்கும், பிற ஆலோசனைகளை வழங்குவதற்கும், ஆலோசனைக்குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, ஆலோசனைக் குழு உறுப்பினர்களும் நியமனம் செய்யப்பட்டனர்.

முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்குழு உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில்,

ரூபாய்.10 இலட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் திருக்கோயில்களுக்கு பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்திட அமைக்கப்பட்டுள்ள மாநிலக் குழுவிற்கு மூன்று உறுப்பினர்களை ஆலோசனைக் குழுவிலிருந்து தேர்வு செய்தல் குறித்தும்,

ஸ்தல புராணம்/ ஸ்தல வரலாறு ஆவணப்படுத்துதல் மற்றும் வெளியிடுதல் இத்துறையின், கட்டுப்பாட்டின் கீழ் உள்ள திருக்கோயில்களின் மரபுகளுக்கேற்ப அதன் தொன்மை, வரலாற்று முக்கியத்துவம், காவியங்கள், புராணங்கள், கட்டடக் கலை, கல்வெட்டுச் செய்திகள், வழிபாட்டுச் சிறப்புகள், மூலிகை ஓவியங்கள் பற்றிய செய்திகளை உள்ளடக்கித் ஸ்தலவரலாறும், ஸதலபுராணமும் நூல்களாக வெளியிடப்படுகின்றன. சிறிய திருக்கோயில்களுக்கு அவற்றின் வழிபாட்டுச் சிறப்புகளை அறிந்து கொள்ள ஏதுவாக தகவல் சிற்றட்டைகளும் அச்சிடப்பட்டு வெளியிடப்படுகின்றன. மேற்சொல்லப்பட்ட ஸ்தல வரலாறு மற்றும் ஸ்தல புராணம் உள்ளிட்டவற்றை முறையாக ஆவணப்படுத்துதல், மின்னணுமயமாக்குதல், அச்சிடுதல் மற்றும் திருக்கோயில்களில் பக்தர்கள் பார்வையிடும் வகையில் காட்சிப்படுத்துதல் தொடர்பாகவும்,

அறிய புத்தகங்கள்/ ஓலைச்சுவடிகள்/ செப்பேடுகள் பாதுகாத்திடல் திருக்கோயில்களின் தல வரலாறு மற்றும் ஸ்தல புராணத்தைத் தவிர திருக்கோயில்கள் மற்றும் திருமடங்களால் வெளியிடப்பட்ட அறிய வகை புத்தகங்கள் ஆகியவற்றை மறு பதிப்பாக்கம் செய்தல், மின்னணுமயமாக்குதல் மற்றும் அப்புத்தகங்களைத் திருக்கோயில்கள் மற்றும் திருமடங்கள் வாயிலாக பக்தர்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்தல். ஓலைச் சுவடிகள் மற்றும் செப்பேடுகள் ஆகியவற்றினை படி எடுத்தல் மற்றும் ஒளி வருடல் செய்து பாதுகாப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த