முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற இந்து சமய அறநிலையத் துறை ஆலோசனைக்குழு உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 20. ஜனவரி 2022 ல் சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில்
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருக்கோயில்களில் பக்தர்களின் வசதிகளை மேம்படுத்துவது, பராமரிப்பது, செம்மைப்படுத்துவது தொடர்பாக ஆலோசனைக்குழு உறுப்பினர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இது குறித்த தமிழகத்தின் முதல்வர் தனது பதிவில் "இந்து சமய அறநிலையத் துறை ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பக்தர்களுக்கான வசதிகளையும் திருக்கோயில்களில் நிதிமேலாண்மையினையும் மேம்படுத்துவது, அரிய நூல்கள் - செப்பேடுகள் - ஓலைச்சுவடிகளைப் பாதுகாப்பது உள்ளிட்டவை குறித்து உறுப்பினர்களாக உள்ள ஆன்மீகப் பெரியார்களோடு பேசினேன்.
திருக்கோயில் நிர்வாகம் அரசியல் சார்பின்றித் திறம்பட முன்னெடுக்கப்பட்டு வருவதற்கு இந்த ஆலோசனைக்குழுவே சிறந்த சான்று.
மேலும், முக்கியமான திருக்கோயில்களின் அன்றாட நிகழ்வுகளைச் சென்னையில் இருந்தே கேமராக்கள் மூலம் கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையைத் திறந்து வைத்தேன்". எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.
முன்னதாக தமிழ்நாட்டிலுள்ள முக்கியத் திருக்கோயில்களின் அன்றாட நிகழ்வுகளை கண்காணித்திட இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில், திருக்கோயில்களின் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் வகையில் கட்டுப்பாட்டு அறையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சட்டமன்றப் பேரவையின் முதல் கூட்டத் தொடரில் தமிழ்நாடு ஆளுநர் உரையில் இந்து சமய அறநிலையத்துறை தொடர்பாக பல்வேறு அறிவிப்புகள் முன்பே வெளியிடப்பட்டன. அதில்
அனைத்து முக்கிய திருக்கோயில்களிலும் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கும், திருக்கோயில்களின் பராமரிப்பை செம்மைப்படுத்துவதற்கும், பிற ஆலோசனைகளை வழங்குவதற்கும், ஆலோசனைக்குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, ஆலோசனைக் குழு உறுப்பினர்களும் நியமனம் செய்யப்பட்டனர்.
முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்குழு உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில்,
ரூபாய்.10 இலட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் திருக்கோயில்களுக்கு பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்திட அமைக்கப்பட்டுள்ள மாநிலக் குழுவிற்கு மூன்று உறுப்பினர்களை ஆலோசனைக் குழுவிலிருந்து தேர்வு செய்தல் குறித்தும்,
ஸ்தல புராணம்/ ஸ்தல வரலாறு ஆவணப்படுத்துதல் மற்றும் வெளியிடுதல் இத்துறையின், கட்டுப்பாட்டின் கீழ் உள்ள திருக்கோயில்களின் மரபுகளுக்கேற்ப அதன் தொன்மை, வரலாற்று முக்கியத்துவம், காவியங்கள், புராணங்கள், கட்டடக் கலை, கல்வெட்டுச் செய்திகள், வழிபாட்டுச் சிறப்புகள், மூலிகை ஓவியங்கள் பற்றிய செய்திகளை உள்ளடக்கித் ஸ்தலவரலாறும், ஸதலபுராணமும் நூல்களாக வெளியிடப்படுகின்றன. சிறிய திருக்கோயில்களுக்கு அவற்றின் வழிபாட்டுச் சிறப்புகளை அறிந்து கொள்ள ஏதுவாக தகவல் சிற்றட்டைகளும் அச்சிடப்பட்டு வெளியிடப்படுகின்றன. மேற்சொல்லப்பட்ட ஸ்தல வரலாறு மற்றும் ஸ்தல புராணம் உள்ளிட்டவற்றை முறையாக ஆவணப்படுத்துதல், மின்னணுமயமாக்குதல், அச்சிடுதல் மற்றும் திருக்கோயில்களில் பக்தர்கள் பார்வையிடும் வகையில் காட்சிப்படுத்துதல் தொடர்பாகவும்,
அறிய புத்தகங்கள்/ ஓலைச்சுவடிகள்/ செப்பேடுகள் பாதுகாத்திடல் திருக்கோயில்களின் தல வரலாறு மற்றும் ஸ்தல புராணத்தைத் தவிர திருக்கோயில்கள் மற்றும் திருமடங்களால் வெளியிடப்பட்ட அறிய வகை புத்தகங்கள் ஆகியவற்றை மறு பதிப்பாக்கம் செய்தல், மின்னணுமயமாக்குதல் மற்றும் அப்புத்தகங்களைத் திருக்கோயில்கள் மற்றும் திருமடங்கள் வாயிலாக பக்தர்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்தல். ஓலைச் சுவடிகள் மற்றும் செப்பேடுகள் ஆகியவற்றினை படி எடுத்தல் மற்றும் ஒளி வருடல் செய்து பாதுகாப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கருத்துகள்