வடபழனி முருகன் கோவிலில் சிறப்பாக நடைபெற்ற குடமுழுக்கு- பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
ஆலயங்களில் ஆகமவிதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடத்த வேண்டும் என்பதால் வடபழனியில் நேற்று காலை 10.30 மணி முதல் 11 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்ட. வேளையில், ஆன்லைனில் ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சென்னை அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோவில் முருகன் கோவில்களில் மிகவும் பிரபலமானது. உள்ளூர் மட்டுமல்லாது, வெளி மாநிலங்கள், வெளி நாட்டு பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருவதுண்டு. கோவிலில் 2007 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது.
முருகப்பெருமானுக்கு 33 ஹோம குண்டங்கள், பரிவார தெய்வங்களுக்கு 75 ஹோம குண்டங்கள் என மொத்தம் 108 குண்டங்களுடன் பிரமாண்டமான யாகசாலை அமைக்கப்பட்டு பூஜை நடைபெற்றது. அதில், கங்கை, யமுனை, துங்கபத்ரா, காவிரி, கிருஷ்ணா, கோதாவரி, தாமிரபரணி உள்ளிட்ட நதிகள் மற்றும் ராமேஸ்வரம் தீர்த்த கிணறு, அறுபடை முருகன் திருத்தலங்கள் என பல்வேறு இடங்களில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டு பூஜிக்கப்பட்டது
. இந்த புனித நீர் கும்பாபிஷேகத்திற்கு பயன்படுத்தப்பட்டது.புகழ் பெற்ற வடபழநி முருகன் கோவில் அருகே சோழர் காலத்தில் கட்டப்பெற்ற வேங்கீஸ்வரர் கோவிலும் உள்ளது. சிந்தாமணி என்னும் ஒரு சிறிய கோவிலும் ஜவஹர்லால் நேரு சாலையில் (100 அடி சாலை) அமைந்துள்ளது 1890 ஆம் ஆண்டு மிகவும் எளிய ஓலைக்கூரைக் கொட்டகையுடன் கோவில். அண்ணாசாமி நாயக்கர் எனும் முருக பக்தர் தனது சொந்த வழிபாட்டிற்காக அமைத்தர் அங்கு தென்பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியின் படத்தை வைத்து வழிபட்டதாகவும் தன்னுடைய நாக்கை அறுத்து முருகனுக்கு காணிக்கையாக்கினார்.
இதற்கு பாவாடம் என்று பெயர். இதனால் அவருடைய வயிற்றுவலி நீங்கியது. நாளடைவில் அவர் முருகப்பெருமானின் தெய்வீக சக்தியை உணரத் தொடங்கினார். அதன் பின் அவர் சொல்லக்கூடிய அருள்வாக்கு பலருக்கும் உண்மையாக நடப்பதாக கூறினர். அதனால் மக்கள் தங்களின் அன்றாட பிரச்னை தீர அண்ணாசாமி நாயக்கரிடம் அருள்வாக்கு பெற்றனர். பின்னர் மக்களின் அதிக வருகையாலும், ஆதரவாலும் கோவில் புகழ் பெற்றது. 1920 ஆம் ஆண்டில் கோவில் ராஜ கோபுரம் கட்டப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. ஆண்டுக்கு சுமார் 7 ஆயிரம் தம்பதியர் இந்த ஆலயத்தில் திருமணம் செய்து கொள்கின்றனர். பல முருகன் கோவில்களில் இல்லாத ஆஞ்சனேயர் சன்னதியும் இங்கு உண்டு. தென்பழநி கோவிலுக்குச் செய்வதாக வேண்டிக்கொண்ட காணிக்கைகளை இக்கோவிலில் செலுத்துவதும் உண்டு.
மூன்று சித்தர்களால் பூஜிக்கப்பட்ட இந்த ஆலயத்தில் இன்றைக்கும் சித்தர்களுக்காக தனி வழிபாடு பௌர்ணமி நாட்களில் நடைபெறுகிறது பாவாடம் காணிக்கையால் அவருடைய வயிற்றுவலி நீங்கப்பெற்றார். மேலும், அவர் நாளடைவில் அந்த இடத்தில் முருகனின் தெய்வீக சக்தியை உணர்ந்தார். அதனால் அவர் பிறரிடம் சொல்லும் சம்பவங்கள் அனைத்தும் நடந்தேறின. அதனால் மக்கள் அவர் சொல்வதை "அருள்வாக்கு" என்று எடுத்துக்கொண்டனர். மக்களின் அன்றாடப் பிரச்சினைகளான நோய் தீருதல், வேலை வாய்ப்பு மற்றும் திருமணம் ஆக வேண்டி அண்ணாசாமி நாயக்கரிடம் அருள்வாக்கு பெற்றனர் அது முதல் அவர் அண்ணாசாமித் தம்பிரான் என அழைக்கப்பட்டார்.
அவருக்குப்பின், அவரின் பிரதான சீடரான இரத்தினசாமி செட்டியார் என்பவரால் 1865 ஆம் ஆண்டு தென்பழநியில் உள்ளது போல சிலை செய்யப்பட்டு கோவில் கட்டப்பட்டது. ஒரு நாள் இரத்தினசாமி செட்டியாரின் கனவில் அண்ணாசாமித் தம்பிரான் தோன்றி தன்னைப் போலவே "பாவாடம்" தரித்துக் கொள்ளுமாறு பணித்தார். அதனால் இவரும் பாவாடம் தரித்து, குறி சொல்லும் ஆற்றலைப் பெற்று இரத்தினசாமித் தம்பிரான் என அழைக்கப்பட்டார். தற்போது உள்ள கர்ப்பக்கிருகம், உட்பிரகாரம் மற்றும் கருங்கல் மண்டபம் போன்றவை இரத்தினசாமித் தம்பிரானின் சீடரான பாக்கியலிங்கத் தம்பிரான் செங்குந்தர் காலத்தில் கட்டப்பட்டவை ஆகும். இம் மூன்று தம்பிரான்களின் (சித்தர்கள்) சமாதியும் தமிழ்நாட்டில் உள்ள நெற்குன்றம் போகும் பாதையில் அமைந்துள்ளன. இங்கு சித்தர்கள் ஆலயம் அமைக்கப்பட்டு பௌர்ணமி பூசை மற்றும் குரு பூசை போன்றவை விமரிசையாக நடைபெறுகிறது.
கருத்துகள்