முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மோசடி வழக்கில் கைதாகி தற்போது மீண்டும் விஜயலட்சுமி புகாரில் கைதான ஹரி நாடாருக்கு உரிமை கோரும் இரு பெண்கள்

ஏற்கனவே மோசடி வழக்கில் கைதாகி தற்போது மீண்டும் விஜயலட்சுமி புகாரில் கைதான ஹரி நாடார்.


வாழ்க்கையில் எப்படியாவது பணக்காரராக வேண்டும் என்ற நோக்கத்தில் சொந்த ஊரிலிருந்து சிறு வயதில் சென்னைக்கு ஓடி வந்தவர்களில் திருநெல்வேலி மாவட்டம் மேல  இலந்தக்குளத்தை சேர்ந்த  ஹரி (நாடார்)யும்  பிழைப்புத் தேடி சென்னை வந்து. ஆரம்பத்தில் சிறிய சிறிய கடைகளில் வேலை பார்த்தவர், பிறகு தனியாக சிறிதாக தொழில் ஆரம்பித்து சம்பாதிக்கத் துவங்கினார். அப்போது நாடார் சமூக வெங்கடேஷ் பண்ணையார் உள்ளிட்ட தொழிலதிபர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு பின் பல மோசடி வேலை நடத்திய  நிலையில்  காலப்போக்கில் ?தொழில் அதிபராக !உயர்ந்தார். ஒரு கட்டத்தில் வட்டி தொழிலில் இறங்கியவர் முறைகேடுகள் பல செய்தே முன்னுக்கு வந்ததாக நம்பப்படுகிறது அல்லது கூறப்படுகிறது.

இதற்கிடையில் தான் பனங்காட்டு படை என்ற கட்சியில் ராக்கெட் ராஜா என்பவருடன் சேர்ந்து அரசியல்வாதியாக மாறியவர். ஆலங்குளம் தொகுதியில் 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஒரு முக்கியமான புள்ளி வழியாக போட்டியிட்டு 2 வது இடம் ஜாதி வாக்கு பிரித்து பெற வெற்றி பெற வேண்டிய நபர் தோல்வியாகி தோல்விகாண வேண்டிய நிலையில் ஒருவர் வெற்றி அமைந்துள்ளது 

அதன்பிறகு தான் ஹரி தன்னை பெரிய அரசியல் தலைவராக நினைத்துக் கருதத் தொடங்கிய ஹரி, பல பிரச்சினைகள் குறித்து கருத்து சொல்வது, பலரையும் ஏடாகூடமாக விமர்சிப்பது கட்டப்பஞ்சாயத்து செய்வதென இருந்து வந்தார். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போது முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் சில தலைவர்களையும் தரமற்ற வகையில் பேசிவந்தவர். சீமான் விஜயலட்சுமிக்கு இடையே நடந்து வரும் மோதலில் தலையிட்டு கருத்து கூறினார, சீமான் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஹரி ஜாதி ரீதியாக  நடிகை விஜயலட்சுமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு, தற்கொலைக்குத் தூண்டியதாக அவர் மீது காவல்நிலையத்தில்  வழக்குப்பதிவும் செய்தனர். முன்னதாக பெங்களூருவைச் சேர்ந்த இருவருக்கு வங்கியில் லோன் வாங்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக தேர்தல் முடியும் வரை காத்திருந்த நபர்கள் கொடுத்த புகாரின் பேரில் பெங்களூரு காவல்துறை ஹரி நாடாரை கைது செய்து பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையிலடைத்தனர். அப்போது  விஜயலட்சுமி கொடுத்திருந்த புகாரின் பேரில் மீண்டும் அவரை காவல் துறை கைது செய்துள்ளனர். அவர் கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக சிறையிலிருந்து வரும் நிலையில் ஹரி நாடாரின் மனைவியெனக் கூறிக்கொள்ளும் மலேசியாவைச் சேர்ந்த மஞ்சுளா என்ற பெண், ஹரி நாடார் கைது தொடர்பாக பரபரப்பான தகவல்  கொடுத்துள்ளார்.



அதாவது கடந்த 8 மாதங்களாக ஹரிநாடார் சிறையிலிருந்து வருகிறார், ஜாமினில் வெளியே கொண்டு வருவதற்காகப் போராடி வருகிறேன், விரைவில் எனக்கும் ஹரி நாடாருக்கும் திருமணமாக உள்ளது. நான் என்னை மனைவி என்று கூறிக்கொள்ளக் காரணம் எங்களுக்கு குழந்தை இருக்கிறது. நீதிமன்றத்திலேயே என்னை மனைவி என்று தான் ஹரிநாடார் சொல்லி இருக்கிறார். அவரைக் காப்பாற்ற அவர் சார்ந்திருந்த பனங்காட்டு படை கட்சி உதவவில்லை, ஹரி நாடாருக்காக நான் மலேசியாவிலிருந்து வந்திருக்கிறேன். இதுவரை எனக்கு எந்த உதவியும் இங்கு கிடைக்கவில்லை, இது உண்மையிலேயே எனக்கு  சோகமான நேரம், எமோஷனலாக நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன் எனக் கூறியிருந்த நிலையில் பனங்காட்டுப் படை என்ற லெட்டர் பேடு கட்சியிலிருந்து ஹரி நாடாரை  நீக்குவதாக அக்கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜா  என்பவர் அறிவித்துள்ளார். அதில் :- திருநெல்வேலி மாவட்டம் மேல இலந்தக்குளம் சேர்ந்த  அ.ஹரி நாடார் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் அறிவுறுத்தலின் படி, மாநில மாவட்ட நிர்வாகிகளின் ஒப்புதலின் படி அவர் வகித்து வந்த ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கப்படுகிறார். அதனால் அவரது  கருத்திற்கும், செயலுக்கும் இனி கட்சி பொறுப்பேற்காது. பனங்காட்டு படை கட்சி உறவுகள் அவரோடு கட்சி அரசியல் செயல்பாடுகளில் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டியதில்லை என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத ஹரி நாடார், நடிகர் வடிவேலு பாணி பேச்சு மூலம் வாயை கொடுத்து இப்போது வகையாக மாட்டியுள்ளார். கடந்த ஆட்சியில் ஹரிநாடார் மீது விஜயலட்சுமி புகார் கொடுத்திருந்தாலும் அப்போது ஒரு முக்கியமான புள்ளி உதவியில் அது கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த வழக்குகள் மீண்டும் உயிர் பெற்று விசாரணை வேகம் எடுத்துள்ளது. மோசடி 2 நம்பர் பைனான்சியர், திரைப்படத் தயாரிப்பாளர்? அரசியல்(வியாதி) வாதி, நடிகர் ! என பல பொய் முகங்கள் அவருக்கு இருந்து வந்த நிலையில், இப்போது மொத்தத்தில் அவர் ஒரு  ஏமாற்றுப் பேர்வழி என்று பலராலும் அம்பலப்படுத்தப்பட்ட நிலையில் விமர்சித்து வருகின்ற நிலையில் அவரது லெட்டர் பேடு  கட்சியும் அவரைத் தூக்கி எறிந்திருப்பது அதை உறுதி செய்வதாக உள்ளது. இதில் பொது நீதி எதுவென்று பார்த்தால் மோசடி தொழில் செய்யபன் அரசியலுக்கு வரக்கூடாது வந்தால் ஜோபிக்க முடியாது ..

.1990 க்கு பின்னர் பல முறைகேடுகள் செய்த நபர்கள் அரசியல் புகழ் தேடி வருவது தான் வாடிக்கையாகவும் அது அவர்களின் தற்காப்பு மற்றும் பாதுகாப்பு என அவர்கள் உணர்ந்த போதும் மக்கள் அதை வேடிக்கையாக வே பார்க்கும் நிலை.ஹரி நாடார் என் கணவர். சட்டப்படி நாங்கள் இன்னும் விவாகரத்து வாங்கவில்லை. நான் விவாகரத்து கொடுக்க மாட்டேன். என்னை மஞ்சு போன் செய்து மிரட்டுகிறார். மஞ்சு ஹரி நாடாரின் மனைவி கிடையாது. ஆனால் பெங்களூர் காவல்துறை மஞ்சுவை ஹரிநாடாரின் மனைவி என்று ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளனர். இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஹரி நாடாரின் மனைவி ஷாலினி தெரிவித்துள்ளார். ஆனால் மஞ்சுவும் ஹரிநாடார் தான் என் கணவர்  நாங்கள் சேர்ந்து வாழ்கிறோம் என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த நிலையில் ஷாலினி, சட்டப்படி நான்தான் ஹரி நாடாரின் மனைவி என்று காவல்துறையில் மனு அளித்துள்ளார். திருநெல்வேலி காவல் ஆணையர் அலுவலகத்தில் ஷாலினி மனுவளித்து, மஞ்சு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், சைதாப்பேட்டை சிறையில் ஹரி நாடாரை சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று ஷாலினி கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த