மோசடி வழக்கில் கைதாகி தற்போது மீண்டும் விஜயலட்சுமி புகாரில் கைதான ஹரி நாடாருக்கு உரிமை கோரும் இரு பெண்கள்
ஏற்கனவே மோசடி வழக்கில் கைதாகி தற்போது மீண்டும் விஜயலட்சுமி புகாரில் கைதான ஹரி நாடார்.
வாழ்க்கையில் எப்படியாவது பணக்காரராக வேண்டும் என்ற நோக்கத்தில் சொந்த ஊரிலிருந்து சிறு வயதில் சென்னைக்கு ஓடி வந்தவர்களில் திருநெல்வேலி மாவட்டம் மேல இலந்தக்குளத்தை சேர்ந்த ஹரி (நாடார்)யும் பிழைப்புத் தேடி சென்னை வந்து. ஆரம்பத்தில் சிறிய சிறிய கடைகளில் வேலை பார்த்தவர், பிறகு தனியாக சிறிதாக தொழில் ஆரம்பித்து சம்பாதிக்கத் துவங்கினார். அப்போது நாடார் சமூக வெங்கடேஷ் பண்ணையார் உள்ளிட்ட தொழிலதிபர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு பின் பல மோசடி வேலை நடத்திய நிலையில் காலப்போக்கில் ?தொழில் அதிபராக !உயர்ந்தார். ஒரு கட்டத்தில் வட்டி தொழிலில் இறங்கியவர் முறைகேடுகள் பல செய்தே முன்னுக்கு வந்ததாக நம்பப்படுகிறது அல்லது கூறப்படுகிறது.
இதற்கிடையில் தான் பனங்காட்டு படை என்ற கட்சியில் ராக்கெட் ராஜா என்பவருடன் சேர்ந்து அரசியல்வாதியாக மாறியவர். ஆலங்குளம் தொகுதியில் 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஒரு முக்கியமான புள்ளி வழியாக போட்டியிட்டு 2 வது இடம் ஜாதி வாக்கு பிரித்து பெற வெற்றி பெற வேண்டிய நபர் தோல்வியாகி தோல்விகாண வேண்டிய நிலையில் ஒருவர் வெற்றி அமைந்துள்ளது
அதன்பிறகு தான் ஹரி தன்னை பெரிய அரசியல் தலைவராக நினைத்துக் கருதத் தொடங்கிய ஹரி, பல பிரச்சினைகள் குறித்து கருத்து சொல்வது, பலரையும் ஏடாகூடமாக விமர்சிப்பது கட்டப்பஞ்சாயத்து செய்வதென இருந்து வந்தார். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போது முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் சில தலைவர்களையும் தரமற்ற வகையில் பேசிவந்தவர். சீமான் விஜயலட்சுமிக்கு இடையே நடந்து வரும் மோதலில் தலையிட்டு கருத்து கூறினார, சீமான் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஹரி ஜாதி ரீதியாக நடிகை விஜயலட்சுமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு, தற்கொலைக்குத் தூண்டியதாக அவர் மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதிவும் செய்தனர். முன்னதாக பெங்களூருவைச் சேர்ந்த இருவருக்கு வங்கியில் லோன் வாங்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக தேர்தல் முடியும் வரை காத்திருந்த நபர்கள் கொடுத்த புகாரின் பேரில் பெங்களூரு காவல்துறை ஹரி நாடாரை கைது செய்து பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையிலடைத்தனர். அப்போது விஜயலட்சுமி கொடுத்திருந்த புகாரின் பேரில் மீண்டும் அவரை காவல் துறை கைது செய்துள்ளனர். அவர் கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக சிறையிலிருந்து வரும் நிலையில் ஹரி நாடாரின் மனைவியெனக் கூறிக்கொள்ளும் மலேசியாவைச் சேர்ந்த மஞ்சுளா என்ற பெண், ஹரி நாடார் கைது தொடர்பாக பரபரப்பான தகவல் கொடுத்துள்ளார்.
அதாவது கடந்த 8 மாதங்களாக ஹரிநாடார் சிறையிலிருந்து வருகிறார், ஜாமினில் வெளியே கொண்டு வருவதற்காகப் போராடி வருகிறேன், விரைவில் எனக்கும் ஹரி நாடாருக்கும் திருமணமாக உள்ளது. நான் என்னை மனைவி என்று கூறிக்கொள்ளக் காரணம் எங்களுக்கு குழந்தை இருக்கிறது. நீதிமன்றத்திலேயே என்னை மனைவி என்று தான் ஹரிநாடார் சொல்லி இருக்கிறார். அவரைக் காப்பாற்ற அவர் சார்ந்திருந்த பனங்காட்டு படை கட்சி உதவவில்லை, ஹரி நாடாருக்காக நான் மலேசியாவிலிருந்து வந்திருக்கிறேன். இதுவரை எனக்கு எந்த உதவியும் இங்கு கிடைக்கவில்லை, இது உண்மையிலேயே எனக்கு சோகமான நேரம், எமோஷனலாக நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன் எனக் கூறியிருந்த நிலையில் பனங்காட்டுப் படை என்ற லெட்டர் பேடு கட்சியிலிருந்து ஹரி நாடாரை நீக்குவதாக அக்கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜா என்பவர் அறிவித்துள்ளார். அதில் :- திருநெல்வேலி மாவட்டம் மேல இலந்தக்குளம் சேர்ந்த அ.ஹரி நாடார் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் அறிவுறுத்தலின் படி, மாநில மாவட்ட நிர்வாகிகளின் ஒப்புதலின் படி அவர் வகித்து வந்த ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கப்படுகிறார். அதனால் அவரது கருத்திற்கும், செயலுக்கும் இனி கட்சி பொறுப்பேற்காது. பனங்காட்டு படை கட்சி உறவுகள் அவரோடு கட்சி அரசியல் செயல்பாடுகளில் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டியதில்லை என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத ஹரி நாடார், நடிகர் வடிவேலு பாணி பேச்சு மூலம் வாயை கொடுத்து இப்போது வகையாக மாட்டியுள்ளார். கடந்த ஆட்சியில் ஹரிநாடார் மீது விஜயலட்சுமி புகார் கொடுத்திருந்தாலும் அப்போது ஒரு முக்கியமான புள்ளி உதவியில் அது கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த வழக்குகள் மீண்டும் உயிர் பெற்று விசாரணை வேகம் எடுத்துள்ளது. மோசடி 2 நம்பர் பைனான்சியர், திரைப்படத் தயாரிப்பாளர்? அரசியல்(வியாதி) வாதி, நடிகர் ! என பல பொய் முகங்கள் அவருக்கு இருந்து வந்த நிலையில், இப்போது மொத்தத்தில் அவர் ஒரு ஏமாற்றுப் பேர்வழி என்று பலராலும் அம்பலப்படுத்தப்பட்ட நிலையில் விமர்சித்து வருகின்ற நிலையில் அவரது லெட்டர் பேடு கட்சியும் அவரைத் தூக்கி எறிந்திருப்பது அதை உறுதி செய்வதாக உள்ளது. இதில் பொது நீதி எதுவென்று பார்த்தால் மோசடி தொழில் செய்யபன் அரசியலுக்கு வரக்கூடாது வந்தால் ஜோபிக்க முடியாது ..
.1990 க்கு பின்னர் பல முறைகேடுகள் செய்த நபர்கள் அரசியல் புகழ் தேடி வருவது தான் வாடிக்கையாகவும் அது அவர்களின் தற்காப்பு மற்றும் பாதுகாப்பு என அவர்கள் உணர்ந்த போதும் மக்கள் அதை வேடிக்கையாக வே பார்க்கும் நிலை.ஹரி நாடார் என் கணவர். சட்டப்படி நாங்கள் இன்னும் விவாகரத்து வாங்கவில்லை. நான் விவாகரத்து கொடுக்க மாட்டேன். என்னை மஞ்சு போன் செய்து மிரட்டுகிறார். மஞ்சு ஹரி நாடாரின் மனைவி கிடையாது. ஆனால் பெங்களூர் காவல்துறை மஞ்சுவை ஹரிநாடாரின் மனைவி என்று ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளனர். இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஹரி நாடாரின் மனைவி ஷாலினி தெரிவித்துள்ளார். ஆனால் மஞ்சுவும் ஹரிநாடார் தான் என் கணவர் நாங்கள் சேர்ந்து வாழ்கிறோம் என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த நிலையில் ஷாலினி, சட்டப்படி நான்தான் ஹரி நாடாரின் மனைவி என்று காவல்துறையில் மனு அளித்துள்ளார். திருநெல்வேலி காவல் ஆணையர் அலுவலகத்தில் ஷாலினி மனுவளித்து, மஞ்சு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், சைதாப்பேட்டை சிறையில் ஹரி நாடாரை சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று ஷாலினி கோரிக்கை விடுத்துள்ளார்.
கருத்துகள்