முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மார்கழி மாதக் கோலத்தின் சிறப்பு இப்போது உள்ள யாரும் அதை உணர்வதில்லை

மார்கழி மாதக் கோலத்தின் சிறப்பு இப்போது உள்ள யாரும் அதை உணர்வதில்லை


மார்கழி மாதம் என்பது கடும்குளிர் காலம். ஈ, எறும்பு போன்ற சிறிய ஜீவ ராசிகளுக்கு உணவு கிடைப்பதில்லை.

குளிர்காலம் என்றாலே எறும்புகள்,  வீட்டிற்குள் புகுந்துவிடும். கருப்பட்டி போன்ற இனிப்புப் பொருட்களில் மொய்க்கும்.


ஈ, எறும்பிற்குகூட கருணை காட்டுபவர்கள் நம்மவர்கள். அதைக் கொல்வதற்கு மனமில்லை. அதேநேரம் அவற்றை எப்படித் தடுப்பது? என சிந்தித்த பின் உதயமானதே பழங்கால கோலம் போடும் முறை.


தினமும் அதிகாலை எழுந்து, அரிசி மாவில் வாசலில் கோலமிடுவார்கள். இதனால் எறும்புகளுக்கு வாசலிலேயே உணவு கிடைத்து விடுவதால் வீட்டிற்குள் நுழைவதில்லை. இதற்காக உருவானதே வாசலில் கோலமிடும் வழக்கமும், பழக்கமும்.



இதை அறிவியல் காரணமாகப் பார்த்தால்

மார்கழி மாதம் அதிகாலை, பூமியின் காற்று மண்டலத்தில் தூய ஆக்சிஜன்  நிறைந்திருக்கும். இது மருத்துவக் குணம் கொண்டதனால், அதிகாலை எழுவதால் தூய ஆக்சிஜனை சுவாசிக்க முடியும். இதை சுவாசிப்பதால் உடல் நீண்ட ஆரோக்கியம் பெருகும், சுறுசுறுப்பாகச் செயல்பட முடியும்.



மார்கழி மாதம் கோலமிடும் போது கோலத்தின் நடுவில் மாட்டுச்சாணத்தில் பூசணிப்பூ சொருகி வைக்கப்பட்டிருக்கும். இதற்கு இருவேறு காரணங்களுண்டு.

பூசணிப்பூ மார்கழி மாதத்தில் பூக்கும் பூ. மஞ்சள் நிறப் பூ. மஞ்சள் என்பது மங்களத்தின் அடையாளம். எனவே, அதை வாசலில் வைப்பதால் இறையருள் கிடைக்கும் என்பதும் ஒரு காரணம்.



பூசணிப்பூ இருக்கும் வீட்டில் கல்யாண வயதில் கன்னிப்பெண் உள்ளார் என்று அர்த்தமாம்.  அவ்வழியே செல்லும் உறவினர்கள் மற்றும் ஊரார்கள் வீட்டில் மாப்பிள்ளை இருந்தால் பரிசம்போட வருவார்கள் என்பது ஐதீகம்.





பழங்காலத்தில் பூசணிப்பூவால் பல திருமணங்கள் நடைபெற்றுள்ளதாம். பூசணிப்பூவை தலையில் வைத்துக்கொள்வது கூட வழக்கமாம்.

இப்பொழுதுள்ள பெண்கள் கோலம் என்ற வார்த்தைகூட தெரியாமல் வளர்கின்றனர். அப்படியே கோலமிட்டாலும் சுண்ணாம்பைப் பயன்படுத்துகின்றனர்.

முதலில் சுண்ணாம்புக் கோலப்பொடிகளைத் தவிர்க்க வேண்டும்.

உண்மையில் கோலமிட நினைப்பவர்கள், அரிசிமாவைப் பயன்படுத்தி. அதில் வண்ணம் தீட்ட வேண்டும் என்றால், வண்ணப்பூக்களை பயன்படுத்துங்கள்.

பார்பதற்கே அவ்வளவு இரம்யமாக இருக்கும். ஈ, எறும்பு, தேனீ எனப் பல உயிரினம் தினம்தோறும் உங்களால் வாழ்வு பெரும்.இப்போது வட இந்தியாவில் உள்ள இரங்கோலி கலாச்சார கோல முறைகள் வந்த பிறகு தமிழ்நாட்டில் நிகழ்வு பாரம்பரிய கோலமிடும் முறை மாறிவருகிறது . இதுவும் நமது கலாச்சாரத்தில் இருந்து வந்த ஒரு நிகழ்வு சமீபத்திய காலங்களில் காணாமல் போவது வேதனை தரும் செயலாகும்.



சங்க இலக்கியங்களில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள 'தை நீராடல்' எனும் 'சிறுவீட்டு' பொங்கல் நிகழ்ச்சி, செடீடிநாட்டுப் பகுதியில் செவ்வாய் பொங்கல் எனவும் வைகை நதி சார்ந்த தன்னரசுக் கள்ளர் நாடுகளில் கொப்பிப் பொங்கல் எனவும்  பூ எருவாட்டி திருவிழாவாக பரிணாமம் பெற்று, அதில் தற்போது

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியில் பாரம்பரியமாக நடந்து வருகிறது.

பொங்கல் விழா பிறப்பு, இறப்புத் தீட்டுக்களால் பாதிக்கப்படாத திருவிழா என்பது பலர் அறியாத செய்தி. பொங்கல் அன்று ஒரு வீட்டில் இறப்பு நிகழ்ந்தாலும் இறந்தவர் உடலை எடுத்துச் சென்று, வீட்டைச் சுத்தம் செய்து பொங்கல் படைக்கும் வழக்கம் நடந்து வருவதே ஆனால் ஆண்டு முடியாத நிலையில் பொங்கலிட்டு படையல் செய்வதில்லை  இதற்குச் சான்று.

தைப்பொங்கலையொட்டி வரும் சந்தி மறித்து பொங்கல், சப்த கன்னி பொங்கல் வரிசையில் தை நீராடல் மற்றும் 'சிறுவீட்டு' பொங்கல் இயற்கை சார்ந்த திருவிழாவாக நடந்துள்ளதாக, சங்க இலக்கியங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

'வாசலிலே பூசணிப் பூ' - களை கட்டும் சிறுவீட்டுப் பொங்கல்

வத்தலக்குண்டு அருகே 100 குடும்பங்கள் வசிக்கும் கீழக்கோயில்பட்டியில், இந்தச் சங்ககால விழா, 'பூ எருவாட்டி' திருவிழாவாக, 'சிறுவீட்டு' பொங்கல் எனப் பரிணாமம் பெற்று நடந்து வருகிறது.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியர் தொ.பரமசிவன் எழுதிய 'பண்பாட்டு அசைவுகள்' என்ற நூலில் தைப்பூசம் என்ற தலைப்பில், சங்க இலக்கியங்களில் 'சிறுவீட்டு' பொங்கல் குறித்தும், தைநீராடல் குறித்தும் எழுதியுள்ளார். 'ஆண்டாளின் முப்பது நாள் திருப்பாவை விரதம் மார்கழி மாதம் பவுர்ணமி அன்றே துவங்குகிறது. எனவே, திருப்பாவை விரதம் தை மாத பவுர்ணமியில் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.

அந்நாட்களில் 'பாற்சோறு மூட நெற்பெய்து' (பாற் பொங்கலிட்டு) உண்டு களித்திருக்க வேண்டும். மார்கழி நீராட்டைப் போலவே, தை நீராட்டும் பெண்

பிள்ளைகள் நோன்பிருந்து 'சிறுவீடு' கட்டிப் பொங்கலிட்டுக் கொண்டாடிய ஒரு பழைய வழக்கத்தை வைணவ மதத்தினர் தனதாக்கி மார்கழி நீராட்டாக மாற்றியுள்ளனர்.  உண்மை சங்கரன் என்ற சிவனை வழிபட்டு மக்கள் 1500 ஆம் ஆண்டு வரை சங்கரன் பொங்கல் தான் இது பெண்களுக்காக கொண்டாடப்படுவதால், பூ வைக்கும் வீடுகளில் தைப்பூசத்திற்குள் தனிப் பொங்கல் வைக்க வேண்டும்.

இப்பொங்கல் தலை வாசலில் வைக்காமல், வீடு முற்றத்தில் களிமண்ணால் சிறு வீடு கட்டி, அதன் முன்பாக பொங்கல் வைத்து முடிந்ததும், பூ எரு தட்டுகளை இளம் பெண்கள் எடுத்துச் சென்று நீர் நிலைகளில் விடுவர்' இவ்வாறு விடுவது கொப்பி கொண்டு விடும் நிகழ்வு   இதற்கு நாட்டுப்புற பாடல்கள் கூட உண்டு.

மார்கழி மாதத்தில் வாசலில் கோலமிட்டு பூசணி, செம்பருத்தி, எக்காளம் (எருக்கு) பூக்களை சாண உருண்டையில் சொருகி, கோலத்தின் நடுவே வைக்கும் பழக்கம், பெண் வாரிசுகள் உள்ள வீடுகளில் உள்ளது.

சாண உருண்டைகளை அன்றே எருவாட்டியாக்கி, பூசணி பூக்களை நான்காக கிழித்து, அதன் மீது ஒட்டி காய வைத்து 'பூ எருவாட்டி'யாக தயாரிப்பர். இப்படி மார்கழி மாதம் முழுவதும் பூ எருவாட்டியை சேமித்து வைப்பர்.

பொங்கல் முடிந்த மூன்றாம் நாள், கோயில் முன்பாக, பூ எருவாட்டி தட்டுகளை வட்டமாக வைத்து 'என "வாடாமல் வதங்காமல் வளர்தனடி கொப்பி நீ வைகையாற்றுத் தண்ணியில போறியடி கொப்பி " கும்மியடித்து, தெம்மாங்கு பாடி மகிழ்கின்றனர். அருகில் உள்ள மருதாநதியில் எருவாட்டி மீது வெற்றிலையை வைத்து சூடமேற்றி குலவைச் சத்தத்துடன் நீரில் விடுகின்றனர்.

கிராமத்துப் பெரியவர் பழனிச்சாமி, வயது 96, கூறிய தகவல்: தலைமுறை, தலைமுறையாக இந்நிகழ்ச்சி நடக்கிறது. பொங்கல் திருவிழாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக முன்னோர்கள் இவ்வழக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக நினைக்கிறேன்,” என்றார். நாமறிந்த உண்மை 1980 வரை கலாச்சாரமும் பண்பாடும் தொடர்ந்து வந்த நிலையில் தற்போது கடவுள் வழிபாடு மற்றும் தமிழகத்தின் கலாச்சார மாற்றங்கள் பல மக்கள் நாகரிக வாழ்க்கை முறை அவர்களை பழமையிலிருந்து பிரித்து ஆங்கிலக் கலாச்சாரம் நோக்கி இட்டுச்செல்லும் நிலை ஆபத்தானது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...