மார்கழி மாதக் கோலத்தின் சிறப்பு இப்போது உள்ள யாரும் அதை உணர்வதில்லை
மார்கழி மாதம் என்பது கடும்குளிர் காலம். ஈ, எறும்பு போன்ற சிறிய ஜீவ ராசிகளுக்கு உணவு கிடைப்பதில்லை.
குளிர்காலம் என்றாலே எறும்புகள், வீட்டிற்குள் புகுந்துவிடும். கருப்பட்டி போன்ற இனிப்புப் பொருட்களில் மொய்க்கும்.
ஈ, எறும்பிற்குகூட கருணை காட்டுபவர்கள் நம்மவர்கள். அதைக் கொல்வதற்கு மனமில்லை. அதேநேரம் அவற்றை எப்படித் தடுப்பது? என சிந்தித்த பின் உதயமானதே பழங்கால கோலம் போடும் முறை.
தினமும் அதிகாலை எழுந்து, அரிசி மாவில் வாசலில் கோலமிடுவார்கள். இதனால் எறும்புகளுக்கு வாசலிலேயே உணவு கிடைத்து விடுவதால் வீட்டிற்குள் நுழைவதில்லை. இதற்காக உருவானதே வாசலில் கோலமிடும் வழக்கமும், பழக்கமும்.
இதை அறிவியல் காரணமாகப் பார்த்தால்
மார்கழி மாதம் அதிகாலை, பூமியின் காற்று மண்டலத்தில் தூய ஆக்சிஜன் நிறைந்திருக்கும். இது மருத்துவக் குணம் கொண்டதனால், அதிகாலை எழுவதால் தூய ஆக்சிஜனை சுவாசிக்க முடியும். இதை சுவாசிப்பதால் உடல் நீண்ட ஆரோக்கியம் பெருகும், சுறுசுறுப்பாகச் செயல்பட முடியும்.
மார்கழி மாதம் கோலமிடும் போது கோலத்தின் நடுவில் மாட்டுச்சாணத்தில் பூசணிப்பூ சொருகி வைக்கப்பட்டிருக்கும். இதற்கு இருவேறு காரணங்களுண்டு.
பூசணிப்பூ மார்கழி மாதத்தில் பூக்கும் பூ. மஞ்சள் நிறப் பூ. மஞ்சள் என்பது மங்களத்தின் அடையாளம். எனவே, அதை வாசலில் வைப்பதால் இறையருள் கிடைக்கும் என்பதும் ஒரு காரணம்.
பூசணிப்பூ இருக்கும் வீட்டில் கல்யாண வயதில் கன்னிப்பெண் உள்ளார் என்று அர்த்தமாம். அவ்வழியே செல்லும் உறவினர்கள் மற்றும் ஊரார்கள் வீட்டில் மாப்பிள்ளை இருந்தால் பரிசம்போட வருவார்கள் என்பது ஐதீகம்.
பழங்காலத்தில் பூசணிப்பூவால் பல திருமணங்கள் நடைபெற்றுள்ளதாம். பூசணிப்பூவை தலையில் வைத்துக்கொள்வது கூட வழக்கமாம்.
இப்பொழுதுள்ள பெண்கள் கோலம் என்ற வார்த்தைகூட தெரியாமல் வளர்கின்றனர். அப்படியே கோலமிட்டாலும் சுண்ணாம்பைப் பயன்படுத்துகின்றனர்.
முதலில் சுண்ணாம்புக் கோலப்பொடிகளைத் தவிர்க்க வேண்டும்.
உண்மையில் கோலமிட நினைப்பவர்கள், அரிசிமாவைப் பயன்படுத்தி. அதில் வண்ணம் தீட்ட வேண்டும் என்றால், வண்ணப்பூக்களை பயன்படுத்துங்கள்.
பார்பதற்கே அவ்வளவு இரம்யமாக இருக்கும். ஈ, எறும்பு, தேனீ எனப் பல உயிரினம் தினம்தோறும் உங்களால் வாழ்வு பெரும்.இப்போது வட இந்தியாவில் உள்ள இரங்கோலி கலாச்சார கோல முறைகள் வந்த பிறகு தமிழ்நாட்டில் நிகழ்வு பாரம்பரிய கோலமிடும் முறை மாறிவருகிறது . இதுவும் நமது கலாச்சாரத்தில் இருந்து வந்த ஒரு நிகழ்வு சமீபத்திய காலங்களில் காணாமல் போவது வேதனை தரும் செயலாகும்.
சங்க இலக்கியங்களில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள 'தை நீராடல்' எனும் 'சிறுவீட்டு' பொங்கல் நிகழ்ச்சி, செடீடிநாட்டுப் பகுதியில் செவ்வாய் பொங்கல் எனவும் வைகை நதி சார்ந்த தன்னரசுக் கள்ளர் நாடுகளில் கொப்பிப் பொங்கல் எனவும் பூ எருவாட்டி திருவிழாவாக பரிணாமம் பெற்று, அதில் தற்போது
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியில் பாரம்பரியமாக நடந்து வருகிறது.
பொங்கல் விழா பிறப்பு, இறப்புத் தீட்டுக்களால் பாதிக்கப்படாத திருவிழா என்பது பலர் அறியாத செய்தி. பொங்கல் அன்று ஒரு வீட்டில் இறப்பு நிகழ்ந்தாலும் இறந்தவர் உடலை எடுத்துச் சென்று, வீட்டைச் சுத்தம் செய்து பொங்கல் படைக்கும் வழக்கம் நடந்து வருவதே ஆனால் ஆண்டு முடியாத நிலையில் பொங்கலிட்டு படையல் செய்வதில்லை இதற்குச் சான்று.
தைப்பொங்கலையொட்டி வரும் சந்தி மறித்து பொங்கல், சப்த கன்னி பொங்கல் வரிசையில் தை நீராடல் மற்றும் 'சிறுவீட்டு' பொங்கல் இயற்கை சார்ந்த திருவிழாவாக நடந்துள்ளதாக, சங்க இலக்கியங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
'வாசலிலே பூசணிப் பூ' - களை கட்டும் சிறுவீட்டுப் பொங்கல்
வத்தலக்குண்டு அருகே 100 குடும்பங்கள் வசிக்கும் கீழக்கோயில்பட்டியில், இந்தச் சங்ககால விழா, 'பூ எருவாட்டி' திருவிழாவாக, 'சிறுவீட்டு' பொங்கல் எனப் பரிணாமம் பெற்று நடந்து வருகிறது.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியர் தொ.பரமசிவன் எழுதிய 'பண்பாட்டு அசைவுகள்' என்ற நூலில் தைப்பூசம் என்ற தலைப்பில், சங்க இலக்கியங்களில் 'சிறுவீட்டு' பொங்கல் குறித்தும், தைநீராடல் குறித்தும் எழுதியுள்ளார். 'ஆண்டாளின் முப்பது நாள் திருப்பாவை விரதம் மார்கழி மாதம் பவுர்ணமி அன்றே துவங்குகிறது. எனவே, திருப்பாவை விரதம் தை மாத பவுர்ணமியில் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
அந்நாட்களில் 'பாற்சோறு மூட நெற்பெய்து' (பாற் பொங்கலிட்டு) உண்டு களித்திருக்க வேண்டும். மார்கழி நீராட்டைப் போலவே, தை நீராட்டும் பெண்
பிள்ளைகள் நோன்பிருந்து 'சிறுவீடு' கட்டிப் பொங்கலிட்டுக் கொண்டாடிய ஒரு பழைய வழக்கத்தை வைணவ மதத்தினர் தனதாக்கி மார்கழி நீராட்டாக மாற்றியுள்ளனர். உண்மை சங்கரன் என்ற சிவனை வழிபட்டு மக்கள் 1500 ஆம் ஆண்டு வரை சங்கரன் பொங்கல் தான் இது பெண்களுக்காக கொண்டாடப்படுவதால், பூ வைக்கும் வீடுகளில் தைப்பூசத்திற்குள் தனிப் பொங்கல் வைக்க வேண்டும்.
இப்பொங்கல் தலை வாசலில் வைக்காமல், வீடு முற்றத்தில் களிமண்ணால் சிறு வீடு கட்டி, அதன் முன்பாக பொங்கல் வைத்து முடிந்ததும், பூ எரு தட்டுகளை இளம் பெண்கள் எடுத்துச் சென்று நீர் நிலைகளில் விடுவர்' இவ்வாறு விடுவது கொப்பி கொண்டு விடும் நிகழ்வு இதற்கு நாட்டுப்புற பாடல்கள் கூட உண்டு.
மார்கழி மாதத்தில் வாசலில் கோலமிட்டு பூசணி, செம்பருத்தி, எக்காளம் (எருக்கு) பூக்களை சாண உருண்டையில் சொருகி, கோலத்தின் நடுவே வைக்கும் பழக்கம், பெண் வாரிசுகள் உள்ள வீடுகளில் உள்ளது.
சாண உருண்டைகளை அன்றே எருவாட்டியாக்கி, பூசணி பூக்களை நான்காக கிழித்து, அதன் மீது ஒட்டி காய வைத்து 'பூ எருவாட்டி'யாக தயாரிப்பர். இப்படி மார்கழி மாதம் முழுவதும் பூ எருவாட்டியை சேமித்து வைப்பர்.
பொங்கல் முடிந்த மூன்றாம் நாள், கோயில் முன்பாக, பூ எருவாட்டி தட்டுகளை வட்டமாக வைத்து 'என "வாடாமல் வதங்காமல் வளர்தனடி கொப்பி நீ வைகையாற்றுத் தண்ணியில போறியடி கொப்பி " கும்மியடித்து, தெம்மாங்கு பாடி மகிழ்கின்றனர். அருகில் உள்ள மருதாநதியில் எருவாட்டி மீது வெற்றிலையை வைத்து சூடமேற்றி குலவைச் சத்தத்துடன் நீரில் விடுகின்றனர்.
கிராமத்துப் பெரியவர் பழனிச்சாமி, வயது 96, கூறிய தகவல்: தலைமுறை, தலைமுறையாக இந்நிகழ்ச்சி நடக்கிறது. பொங்கல் திருவிழாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக முன்னோர்கள் இவ்வழக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக நினைக்கிறேன்,” என்றார். நாமறிந்த உண்மை 1980 வரை கலாச்சாரமும் பண்பாடும் தொடர்ந்து வந்த நிலையில் தற்போது கடவுள் வழிபாடு மற்றும் தமிழகத்தின் கலாச்சார மாற்றங்கள் பல மக்கள் நாகரிக வாழ்க்கை முறை அவர்களை பழமையிலிருந்து பிரித்து ஆங்கிலக் கலாச்சாரம் நோக்கி இட்டுச்செல்லும் நிலை ஆபத்தானது.
கருத்துகள்