முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மார்கழி மாதக் கோலத்தின் சிறப்பு இப்போது உள்ள யாரும் அதை உணர்வதில்லை

மார்கழி மாதக் கோலத்தின் சிறப்பு இப்போது உள்ள யாரும் அதை உணர்வதில்லை


மார்கழி மாதம் என்பது கடும்குளிர் காலம். ஈ, எறும்பு போன்ற சிறிய ஜீவ ராசிகளுக்கு உணவு கிடைப்பதில்லை.

குளிர்காலம் என்றாலே எறும்புகள்,  வீட்டிற்குள் புகுந்துவிடும். கருப்பட்டி போன்ற இனிப்புப் பொருட்களில் மொய்க்கும்.


ஈ, எறும்பிற்குகூட கருணை காட்டுபவர்கள் நம்மவர்கள். அதைக் கொல்வதற்கு மனமில்லை. அதேநேரம் அவற்றை எப்படித் தடுப்பது? என சிந்தித்த பின் உதயமானதே பழங்கால கோலம் போடும் முறை.


தினமும் அதிகாலை எழுந்து, அரிசி மாவில் வாசலில் கோலமிடுவார்கள். இதனால் எறும்புகளுக்கு வாசலிலேயே உணவு கிடைத்து விடுவதால் வீட்டிற்குள் நுழைவதில்லை. இதற்காக உருவானதே வாசலில் கோலமிடும் வழக்கமும், பழக்கமும்.



இதை அறிவியல் காரணமாகப் பார்த்தால்

மார்கழி மாதம் அதிகாலை, பூமியின் காற்று மண்டலத்தில் தூய ஆக்சிஜன்  நிறைந்திருக்கும். இது மருத்துவக் குணம் கொண்டதனால், அதிகாலை எழுவதால் தூய ஆக்சிஜனை சுவாசிக்க முடியும். இதை சுவாசிப்பதால் உடல் நீண்ட ஆரோக்கியம் பெருகும், சுறுசுறுப்பாகச் செயல்பட முடியும்.



மார்கழி மாதம் கோலமிடும் போது கோலத்தின் நடுவில் மாட்டுச்சாணத்தில் பூசணிப்பூ சொருகி வைக்கப்பட்டிருக்கும். இதற்கு இருவேறு காரணங்களுண்டு.

பூசணிப்பூ மார்கழி மாதத்தில் பூக்கும் பூ. மஞ்சள் நிறப் பூ. மஞ்சள் என்பது மங்களத்தின் அடையாளம். எனவே, அதை வாசலில் வைப்பதால் இறையருள் கிடைக்கும் என்பதும் ஒரு காரணம்.



பூசணிப்பூ இருக்கும் வீட்டில் கல்யாண வயதில் கன்னிப்பெண் உள்ளார் என்று அர்த்தமாம்.  அவ்வழியே செல்லும் உறவினர்கள் மற்றும் ஊரார்கள் வீட்டில் மாப்பிள்ளை இருந்தால் பரிசம்போட வருவார்கள் என்பது ஐதீகம்.





பழங்காலத்தில் பூசணிப்பூவால் பல திருமணங்கள் நடைபெற்றுள்ளதாம். பூசணிப்பூவை தலையில் வைத்துக்கொள்வது கூட வழக்கமாம்.

இப்பொழுதுள்ள பெண்கள் கோலம் என்ற வார்த்தைகூட தெரியாமல் வளர்கின்றனர். அப்படியே கோலமிட்டாலும் சுண்ணாம்பைப் பயன்படுத்துகின்றனர்.

முதலில் சுண்ணாம்புக் கோலப்பொடிகளைத் தவிர்க்க வேண்டும்.

உண்மையில் கோலமிட நினைப்பவர்கள், அரிசிமாவைப் பயன்படுத்தி. அதில் வண்ணம் தீட்ட வேண்டும் என்றால், வண்ணப்பூக்களை பயன்படுத்துங்கள்.

பார்பதற்கே அவ்வளவு இரம்யமாக இருக்கும். ஈ, எறும்பு, தேனீ எனப் பல உயிரினம் தினம்தோறும் உங்களால் வாழ்வு பெரும்.இப்போது வட இந்தியாவில் உள்ள இரங்கோலி கலாச்சார கோல முறைகள் வந்த பிறகு தமிழ்நாட்டில் நிகழ்வு பாரம்பரிய கோலமிடும் முறை மாறிவருகிறது . இதுவும் நமது கலாச்சாரத்தில் இருந்து வந்த ஒரு நிகழ்வு சமீபத்திய காலங்களில் காணாமல் போவது வேதனை தரும் செயலாகும்.



சங்க இலக்கியங்களில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள 'தை நீராடல்' எனும் 'சிறுவீட்டு' பொங்கல் நிகழ்ச்சி, செடீடிநாட்டுப் பகுதியில் செவ்வாய் பொங்கல் எனவும் வைகை நதி சார்ந்த தன்னரசுக் கள்ளர் நாடுகளில் கொப்பிப் பொங்கல் எனவும்  பூ எருவாட்டி திருவிழாவாக பரிணாமம் பெற்று, அதில் தற்போது

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியில் பாரம்பரியமாக நடந்து வருகிறது.

பொங்கல் விழா பிறப்பு, இறப்புத் தீட்டுக்களால் பாதிக்கப்படாத திருவிழா என்பது பலர் அறியாத செய்தி. பொங்கல் அன்று ஒரு வீட்டில் இறப்பு நிகழ்ந்தாலும் இறந்தவர் உடலை எடுத்துச் சென்று, வீட்டைச் சுத்தம் செய்து பொங்கல் படைக்கும் வழக்கம் நடந்து வருவதே ஆனால் ஆண்டு முடியாத நிலையில் பொங்கலிட்டு படையல் செய்வதில்லை  இதற்குச் சான்று.

தைப்பொங்கலையொட்டி வரும் சந்தி மறித்து பொங்கல், சப்த கன்னி பொங்கல் வரிசையில் தை நீராடல் மற்றும் 'சிறுவீட்டு' பொங்கல் இயற்கை சார்ந்த திருவிழாவாக நடந்துள்ளதாக, சங்க இலக்கியங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

'வாசலிலே பூசணிப் பூ' - களை கட்டும் சிறுவீட்டுப் பொங்கல்

வத்தலக்குண்டு அருகே 100 குடும்பங்கள் வசிக்கும் கீழக்கோயில்பட்டியில், இந்தச் சங்ககால விழா, 'பூ எருவாட்டி' திருவிழாவாக, 'சிறுவீட்டு' பொங்கல் எனப் பரிணாமம் பெற்று நடந்து வருகிறது.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியர் தொ.பரமசிவன் எழுதிய 'பண்பாட்டு அசைவுகள்' என்ற நூலில் தைப்பூசம் என்ற தலைப்பில், சங்க இலக்கியங்களில் 'சிறுவீட்டு' பொங்கல் குறித்தும், தைநீராடல் குறித்தும் எழுதியுள்ளார். 'ஆண்டாளின் முப்பது நாள் திருப்பாவை விரதம் மார்கழி மாதம் பவுர்ணமி அன்றே துவங்குகிறது. எனவே, திருப்பாவை விரதம் தை மாத பவுர்ணமியில் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.

அந்நாட்களில் 'பாற்சோறு மூட நெற்பெய்து' (பாற் பொங்கலிட்டு) உண்டு களித்திருக்க வேண்டும். மார்கழி நீராட்டைப் போலவே, தை நீராட்டும் பெண்

பிள்ளைகள் நோன்பிருந்து 'சிறுவீடு' கட்டிப் பொங்கலிட்டுக் கொண்டாடிய ஒரு பழைய வழக்கத்தை வைணவ மதத்தினர் தனதாக்கி மார்கழி நீராட்டாக மாற்றியுள்ளனர்.  உண்மை சங்கரன் என்ற சிவனை வழிபட்டு மக்கள் 1500 ஆம் ஆண்டு வரை சங்கரன் பொங்கல் தான் இது பெண்களுக்காக கொண்டாடப்படுவதால், பூ வைக்கும் வீடுகளில் தைப்பூசத்திற்குள் தனிப் பொங்கல் வைக்க வேண்டும்.

இப்பொங்கல் தலை வாசலில் வைக்காமல், வீடு முற்றத்தில் களிமண்ணால் சிறு வீடு கட்டி, அதன் முன்பாக பொங்கல் வைத்து முடிந்ததும், பூ எரு தட்டுகளை இளம் பெண்கள் எடுத்துச் சென்று நீர் நிலைகளில் விடுவர்' இவ்வாறு விடுவது கொப்பி கொண்டு விடும் நிகழ்வு   இதற்கு நாட்டுப்புற பாடல்கள் கூட உண்டு.

மார்கழி மாதத்தில் வாசலில் கோலமிட்டு பூசணி, செம்பருத்தி, எக்காளம் (எருக்கு) பூக்களை சாண உருண்டையில் சொருகி, கோலத்தின் நடுவே வைக்கும் பழக்கம், பெண் வாரிசுகள் உள்ள வீடுகளில் உள்ளது.

சாண உருண்டைகளை அன்றே எருவாட்டியாக்கி, பூசணி பூக்களை நான்காக கிழித்து, அதன் மீது ஒட்டி காய வைத்து 'பூ எருவாட்டி'யாக தயாரிப்பர். இப்படி மார்கழி மாதம் முழுவதும் பூ எருவாட்டியை சேமித்து வைப்பர்.

பொங்கல் முடிந்த மூன்றாம் நாள், கோயில் முன்பாக, பூ எருவாட்டி தட்டுகளை வட்டமாக வைத்து 'என "வாடாமல் வதங்காமல் வளர்தனடி கொப்பி நீ வைகையாற்றுத் தண்ணியில போறியடி கொப்பி " கும்மியடித்து, தெம்மாங்கு பாடி மகிழ்கின்றனர். அருகில் உள்ள மருதாநதியில் எருவாட்டி மீது வெற்றிலையை வைத்து சூடமேற்றி குலவைச் சத்தத்துடன் நீரில் விடுகின்றனர்.

கிராமத்துப் பெரியவர் பழனிச்சாமி, வயது 96, கூறிய தகவல்: தலைமுறை, தலைமுறையாக இந்நிகழ்ச்சி நடக்கிறது. பொங்கல் திருவிழாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக முன்னோர்கள் இவ்வழக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக நினைக்கிறேன்,” என்றார். நாமறிந்த உண்மை 1980 வரை கலாச்சாரமும் பண்பாடும் தொடர்ந்து வந்த நிலையில் தற்போது கடவுள் வழிபாடு மற்றும் தமிழகத்தின் கலாச்சார மாற்றங்கள் பல மக்கள் நாகரிக வாழ்க்கை முறை அவர்களை பழமையிலிருந்து பிரித்து ஆங்கிலக் கலாச்சாரம் நோக்கி இட்டுச்செல்லும் நிலை ஆபத்தானது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த