முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாநில மொழிகளில் ஏஐசிடிஇ தயாரித்த தொழில்நுட்ப புத்தகங்கள் : மத்திய கல்வி அமைச்சர் வெளியீடு

தொழில்நுட்பத்துக்கான தேசிய கல்வி கூட்டணி (நீட்) 3.0 மற்றும் மாநில மொழிகளில் ஏஐசிடிஇ தயாரித்த தொழில்நுட்ப புத்தகங்கள் : மத்திய கல்வி அமைச்சர் வெளியீடு.


நாட்டில் உள்ள மாணவர்களுக்கு நன்கு உருவாக்கப்பட்ட  கல்வி தொழில்நுட்ப தீர்வுகள், பாடப்பிரிவுகளை வழங்க, தொழில்நுட்பத்துக்கான தேசிய கல்வி கூட்டணி 3.0 என்ற தளத்தை, மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் திரு .தர்மேந்திர ப்ரதான் தொடங்கி வைத்தார்.  அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) மாநில மொழிகளில் தயாரித்த தொழில்நுட்ப புத்தகங்களையும் அவர் வெளியிட்டார். 


இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு .தர்மேந்திர ப்ரதான் பேசியதாவது:

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்கள் இடையே நிலவும் டிஜிட்டல் இடைவெளியை போக்குவதில் தொழில்நுட்பத்துக்கான தேசிய கல்வி கூட்டணி (நீட்) தளம் குறிப்பிடத்தக்கதாக  இருக்கும் மற்றும் அறிவு அடிப்படையிலான தேவையை நிறைவேற்றும்.  தொழில்நுட்பத்துக்கான தேசிய கல்வி கூட்டணி  தளத்தில், 58 உலகளாவிய மற்றும் இந்திய கல்வி தொழில்நுட்ப நிறுவனங்கள் இணைந்து 100 பாடப்பிரிவுகளையும், மின்னணு பாடங்களையும் வழங்குகின்றன. இதன் மூலம் மாணவர்களின் கற்றல் மற்றும் வேலைவாய்ப்பு திறன் அதிகரிக்கும். கற்றல் குறைபாட்டை போக்குவதில், மின்னணு பாடங்கள் மற்றும் டிஜிட்டல் திட்டங்கள் சரியான நடவடிக்கைகளாக இருக்கும்.

வேலை வாய்ப்பு திறன்களை ஊக்குவிக்கவும், எதிர்கால தேவைகளுக்கு நமது இளைஞர்களை தயார்படுத்தும் வகையிலான பாடங்களை, திறன் இந்தியா அமைப்புடன் இணைந்து நீட் தளத்தில் பாடங்களை ஏஐசிடிஇ சேர்க்க வேண்டும்.  மிக குறைந்த செலவில் மின்னணு பாடங்களை ஏஐசிடிஇ மற்றும் கல்வி தொழில்நுட்ப நிறுவனங்கள் வழங்க வேண்டும்.  நீட் 3.0 தளத்தில் இணைந்துள்ள உலகளாவிய கல்வி தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் இந்திய தொடக்க நிறுவனங்களுக்கு பாராட்டுக்கள். குறைந்த செலவில் அனைவருக்கும் கல்வி கிடைக்கும் வகையில், கூட்டாக செயல்பட அனைத்து கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களும் வரவேற்கப்படுகின்றன.

நீட் 3.0 திட்டத்தின் கீழ், 12 லட்சத்துக்கும் அதிகமான பின்தங்கியுள்ள மாணவர்கள் ரூ.253 கோடிக்கும் மேற்பட்ட மதிப்பில் இலவச தொழில்நுட்ப கல்விக்கான கூப்பன்களை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.  புத்தாண்டில் பிரதமரிடம் இருந்து மாணவர்கள் பெறும் மிகப் பெரிய பரிசு இது. 21ம் நூற்றாண்டில் உலகளாவிய பொருளாதாரத்தை இந்தியா வழி நடத்தும். வர்த்தக மற்றும் பொருளாதாரத்துக்கு சிறந்த இடமாக இந்தியா இருக்கும்.

நாட்டில் பல மொழிகள் இருப்பது நமது பலம். புதுமையான சமூகத்தை உருவாக்குவதில் அந்த மொழிகளை பயன்படுத்துவது முக்கியம். மாநில மொழிகளில் படிப்பது, நமது இளைஞர்களின் விவேகமான சிந்தனையை மேலும் மேம்படுத்தி அவர்களை உலகளாவிய குடிமக்களாக மாற்றும்.


இவ்வாறு மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர ப்ரதான்  கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...