முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தில்லை நடராஜர் ஆலய தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு.!

சிதம்பரம் தில்லை நடராஜர் ஆலய தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு.!


சிதம்பரத்தில்  அருகில் புவனகிரி சாலை பகுதியில் வசிக்கும் லட்சுமி என்ற ஜெயஷீலா( வயது 36),  நடராஜர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்யச்  சென்றதாகவும். பின்னர் அவர் சிற்றம்பல மேடையிலேறி சாமி தரிசனம் காண முயன்றதாகவும் உடனே தீட்சிதர்கள் சிலர் ஜெயஷீலாவை ஆபாசமாகத் திட்டி திருப்பியனுப்பியுள்ளது குறித்து சிதம்பரம் நகர்க் காவல் நிலையத்தில் புகார் அளித்ததில் . ஆதிதிராவிடர் பிரிவைச் சேர்ந்த பெண் என தன்னை கோவில் தீட்சிதர்கள் ஆபாசமாகத் திட்டி சாமி கும்பிட விடாமல் திருப்பி அனுப்பியதாகக் கூறியிருந்தார்

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு. செய்யப்பட்ட நிலையில்


 

தீட்சிதர்களிடையே வாக்குவாதம் எழுந்தது.

பெண் ஒருவர் சாமி கும்பிடச் சென்றபோது சாதிப்பெயரை சொல்லித் திட்டியாக அளித்த புகாரில் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். ஏற்கெனவே தீட்சிதர்கள் மீது கொலை முயற்சிப் புகாரளித்த சக தீட்சிதர் சாமி கும்பிடச் சென்றபோது மீண்டும் தீட்சிதர்கள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தீட்சிதர்களிடையே அதிகரித்து வரும் மோதலால் வந்த பிரச்சினைகள் குறித்து


சிதம்பரம் நடராஜர் கோவிலில் பணி நீக்க நடவடிக்கைக்குள்ளான கணேஷ் தீட்சிதர் சாமி கும்பிடச் சென்றபோது சக தீட்சிதர்களால் தடுத்து தாக்கப்பட்டதாக அவர் காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர் காவல்துறை 3 தீட்சிதர்கள் பேரில் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில் மறுநாள் அவரது மகனான தர்ஷன் தீட்சிதர் என்பவர் பெண் பக்தர் ஒருவரை சாமி கும்பிட கனகசபைக்கு அழைத்துச் சென்றபோது கனகசபை மீது ஏறக் கூடாதென தீட்சிதர்கள் தடுத்து சாதிப் பெயரைக் கூறி திட்டியதாக சிதம்பரத்தைச் சேர்ந்த பெண் பக்தர் ஜெயஷீலா என்பவர் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளித்திருந்தாரர்.


அந்தப் புகாரின் பேரில் சிதம்பரம் நகர் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஜெயஷீலா அளித்த புகாரில் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் 20 பேர் மீதும் கூட்டமாகச் சேர்ந்து தடுத்தல், தாக்குதல், மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது


 நடராஜர் கோவில் தீட்சிதர்கள் சார்பில் செய்தியாளர்களிடம் பேசிய ஐயப்ப தீட்சிதர் என்பவர், கோவில் விதிமுறைகளுக்கு முரணாக கணேஷ் தீட்சிதர் மற்றும் தர்ஷன் தீட்சிதர் ஆகிய இருவரும் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.


கணேஷ் தீட்சிதர் மற்றும் தர்ஷன் தீட்சிதர் ஆகிய இருவரும் கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றனர். கனகசபை மீது ஏற முயன்ற போது அவர்களை சக தீட்சிதர்கள் மீண்டும் தடுத்தனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதமும் ஏற்பட்டது.


இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தர்ஷன் தீட்சிதர், சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை எனக் கூறப்படும் சிற்றம்பல மேடையில் ஏறி அனைவரும் சாமி கும்பிட வேண்டும் என்பதே எனது விருப்பம். அதற்காகத்தான் போராடிக் கொண்டிருக்கிறேன். சோழர்கள் காலத்தில் கட்டிய நடராஜர் கோயிலில் கனகசபை மீது யாரும் ஏறக்கூடாது என தீட்சிதர்கள் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும். இது தவறானது.


காவல்துறையில் புகார் அளித்து வழக்குப்பதிவு செய்யப்பட்ட 3 தீட்சிதர்களும் கோவிலுக்குள் தான் இருக்கின்றனர். பூஜை செய்கின்றனர். அவர்கள் கைது செய்யப்படவில்லை. நாங்கள் கொடுத்த புகாரை வாபஸ் வாங்க வேண்டும் என்று கோயில் தீட்சிதர்கள் எங்களிடம் சொல்கின்றனர். நடராஜர் கோயிலின் கனகசபை மீது அனைவரும் ஏறி சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம். பழைய முறைப்படி அனைவரும் சாமி தரிசனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கூறினார். பெரும்பான்மைகோயிலில் எந்தவித தீண்டாமையும் இல்லை.


அணைத்து மதத்தினரும,பல சமுதாயத்தினரும் வருகிறார்கள். இந்து சமுதாயத்தின் அனைத்துப் பிரிவு பக்தர்களும் கோவிலுக்கு வருகிறார்கள். யாரையும் தவறாகப் பேசுவதில்லை. கோவிலின் நலன் கருதி சில சட்ட திட்டங்கள் வகுத்து  கனகசபை (சிற்றம்பல மேடை) மீது யாரும் ஏறக்கூடாது என உத்தரவு போடப்பட்டு, எல்லோரும் அதைக் கடைபிடித்து வருகிறார்கள்.  தீட்சிதர்கள் சக்தி கணேசன், தர்ஷன் மட்டும் விதிமுறைகளை மதிக்காமல் சம்பந்தமில்லாத பெண்களை கனகசபைக்கு அழைத்து வருகிறார்கள். அதுபோன்ற ஒரு சம்பவத்தில், தான் தாழ்த்தப்பட்டவர் என்பதால் கோவிலில் அனுமதி மறுக்கப்படுவதாக ஒரு பெண் தவறுதலான புகாரை தெரிவித்திருக்கிறார். 2 ஆண்டுகளுக்கு முன்பு தர்ஷன் தீட்சிதர் கோவிலில் ஒரு பெண் பக்தரை அடித்து பிரச்சினை செய்ததால் அது சட்டங்களை மீறியதாக் கருதி, அவருக்கு அபராதம் விதித்து பணி நீக்கம் செய்யப்பட்டார். தற்போது பழி தீர்ப்பதற்காக இதுபோன்ற வேலைகளைச் செய் கிறார்.

மேலும் கோவிலில் நடந்த நிர்வாகக் குழு கூட்டத்தில், நிர்வாகத்துக்கு எதிராக கருத்துகளை கூறியதற்காக தர்ஷன் தீட்சிதருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதை செலுத்தத் தவறினால் மீண்டும் பணி நீக்கம் செய்யப்படுவார். இவ்விவகாரத்தில் சக்தி கணேசன் தீட்சிதர், காவல் நிலையத்தில் தன்னை தாக்கியதாக பொய்யான புகார் தெரிவித்துள்ளார். பெரும்பான்மையான கருத்தின் அடிப்படையில் கனகசபை (சிற்றம்பல மேடை) மீது யாரும் ஏறவேண்டாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகத்தில், பூஜையில் யாரும் தலையிடக் கூடாது என்று நீதிமன்ற உத் தரவும் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே, செய்தியாளர்களிடம் பேசிய தர்ஷன் தீட்சிதர், “நடராஜர் கோவிலில்  தீட்சிதர்கள் எப்படி சுவாமி தரிசனம் செய்கிறார்களோ, அதேபோல் பக்தர்களும் தரிசனம் செய்ய வேண்டும். கோயிலில் நடைபெறும் சில அநியாயங்களை எனது தந்தையும் நானும்தட்டிக் கேட்பதால், எங்களை கோயில் நிர்வாகத்தினர் மிரட்டுகிறார்கள். அடிக்கிறார்கள். ‘பக்தர்களை கனகசபையில் ஏற்றக் கூடாது’ என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இது மன்னர் கட்டிய கோவில். கால காலமாக கனகசபையில் ஏறி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இந்த நடைமுறை மீண்டும் வர வேண்டும்” என்று தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த