சிதம்பரம் தில்லை நடராஜர் ஆலய தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு.!
சிதம்பரத்தில் அருகில் புவனகிரி சாலை பகுதியில் வசிக்கும் லட்சுமி என்ற ஜெயஷீலா( வயது 36), நடராஜர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்யச் சென்றதாகவும். பின்னர் அவர் சிற்றம்பல மேடையிலேறி சாமி தரிசனம் காண முயன்றதாகவும் உடனே தீட்சிதர்கள் சிலர் ஜெயஷீலாவை ஆபாசமாகத் திட்டி திருப்பியனுப்பியுள்ளது குறித்து சிதம்பரம் நகர்க் காவல் நிலையத்தில் புகார் அளித்ததில் . ஆதிதிராவிடர் பிரிவைச் சேர்ந்த பெண் என தன்னை கோவில் தீட்சிதர்கள் ஆபாசமாகத் திட்டி சாமி கும்பிட விடாமல் திருப்பி அனுப்பியதாகக் கூறியிருந்தார்
சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு. செய்யப்பட்ட நிலையில்
தீட்சிதர்களிடையே வாக்குவாதம் எழுந்தது.
பெண் ஒருவர் சாமி கும்பிடச் சென்றபோது சாதிப்பெயரை சொல்லித் திட்டியாக அளித்த புகாரில் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். ஏற்கெனவே தீட்சிதர்கள் மீது கொலை முயற்சிப் புகாரளித்த சக தீட்சிதர் சாமி கும்பிடச் சென்றபோது மீண்டும் தீட்சிதர்கள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தீட்சிதர்களிடையே அதிகரித்து வரும் மோதலால் வந்த பிரச்சினைகள் குறித்து
சிதம்பரம் நடராஜர் கோவிலில் பணி நீக்க நடவடிக்கைக்குள்ளான கணேஷ் தீட்சிதர் சாமி கும்பிடச் சென்றபோது சக தீட்சிதர்களால் தடுத்து தாக்கப்பட்டதாக அவர் காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர் காவல்துறை 3 தீட்சிதர்கள் பேரில் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில் மறுநாள் அவரது மகனான தர்ஷன் தீட்சிதர் என்பவர் பெண் பக்தர் ஒருவரை சாமி கும்பிட கனகசபைக்கு அழைத்துச் சென்றபோது கனகசபை மீது ஏறக் கூடாதென தீட்சிதர்கள் தடுத்து சாதிப் பெயரைக் கூறி திட்டியதாக சிதம்பரத்தைச் சேர்ந்த பெண் பக்தர் ஜெயஷீலா என்பவர் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளித்திருந்தாரர்.
அந்தப் புகாரின் பேரில் சிதம்பரம் நகர் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஜெயஷீலா அளித்த புகாரில் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் 20 பேர் மீதும் கூட்டமாகச் சேர்ந்து தடுத்தல், தாக்குதல், மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
நடராஜர் கோவில் தீட்சிதர்கள் சார்பில் செய்தியாளர்களிடம் பேசிய ஐயப்ப தீட்சிதர் என்பவர், கோவில் விதிமுறைகளுக்கு முரணாக கணேஷ் தீட்சிதர் மற்றும் தர்ஷன் தீட்சிதர் ஆகிய இருவரும் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
கணேஷ் தீட்சிதர் மற்றும் தர்ஷன் தீட்சிதர் ஆகிய இருவரும் கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றனர். கனகசபை மீது ஏற முயன்ற போது அவர்களை சக தீட்சிதர்கள் மீண்டும் தடுத்தனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதமும் ஏற்பட்டது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தர்ஷன் தீட்சிதர், சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை எனக் கூறப்படும் சிற்றம்பல மேடையில் ஏறி அனைவரும் சாமி கும்பிட வேண்டும் என்பதே எனது விருப்பம். அதற்காகத்தான் போராடிக் கொண்டிருக்கிறேன். சோழர்கள் காலத்தில் கட்டிய நடராஜர் கோயிலில் கனகசபை மீது யாரும் ஏறக்கூடாது என தீட்சிதர்கள் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும். இது தவறானது.
காவல்துறையில் புகார் அளித்து வழக்குப்பதிவு செய்யப்பட்ட 3 தீட்சிதர்களும் கோவிலுக்குள் தான் இருக்கின்றனர். பூஜை செய்கின்றனர். அவர்கள் கைது செய்யப்படவில்லை. நாங்கள் கொடுத்த புகாரை வாபஸ் வாங்க வேண்டும் என்று கோயில் தீட்சிதர்கள் எங்களிடம் சொல்கின்றனர். நடராஜர் கோயிலின் கனகசபை மீது அனைவரும் ஏறி சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம். பழைய முறைப்படி அனைவரும் சாமி தரிசனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கூறினார். பெரும்பான்மைகோயிலில் எந்தவித தீண்டாமையும் இல்லை.
அணைத்து மதத்தினரும,பல சமுதாயத்தினரும் வருகிறார்கள். இந்து சமுதாயத்தின் அனைத்துப் பிரிவு பக்தர்களும் கோவிலுக்கு வருகிறார்கள். யாரையும் தவறாகப் பேசுவதில்லை. கோவிலின் நலன் கருதி சில சட்ட திட்டங்கள் வகுத்து கனகசபை (சிற்றம்பல மேடை) மீது யாரும் ஏறக்கூடாது என உத்தரவு போடப்பட்டு, எல்லோரும் அதைக் கடைபிடித்து வருகிறார்கள். தீட்சிதர்கள் சக்தி கணேசன், தர்ஷன் மட்டும் விதிமுறைகளை மதிக்காமல் சம்பந்தமில்லாத பெண்களை கனகசபைக்கு அழைத்து வருகிறார்கள். அதுபோன்ற ஒரு சம்பவத்தில், தான் தாழ்த்தப்பட்டவர் என்பதால் கோவிலில் அனுமதி மறுக்கப்படுவதாக ஒரு பெண் தவறுதலான புகாரை தெரிவித்திருக்கிறார். 2 ஆண்டுகளுக்கு முன்பு தர்ஷன் தீட்சிதர் கோவிலில் ஒரு பெண் பக்தரை அடித்து பிரச்சினை செய்ததால் அது சட்டங்களை மீறியதாக் கருதி, அவருக்கு அபராதம் விதித்து பணி நீக்கம் செய்யப்பட்டார். தற்போது பழி தீர்ப்பதற்காக இதுபோன்ற வேலைகளைச் செய் கிறார்.
மேலும் கோவிலில் நடந்த நிர்வாகக் குழு கூட்டத்தில், நிர்வாகத்துக்கு எதிராக கருத்துகளை கூறியதற்காக தர்ஷன் தீட்சிதருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதை செலுத்தத் தவறினால் மீண்டும் பணி நீக்கம் செய்யப்படுவார். இவ்விவகாரத்தில் சக்தி கணேசன் தீட்சிதர், காவல் நிலையத்தில் தன்னை தாக்கியதாக பொய்யான புகார் தெரிவித்துள்ளார். பெரும்பான்மையான கருத்தின் அடிப்படையில் கனகசபை (சிற்றம்பல மேடை) மீது யாரும் ஏறவேண்டாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகத்தில், பூஜையில் யாரும் தலையிடக் கூடாது என்று நீதிமன்ற உத் தரவும் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே, செய்தியாளர்களிடம் பேசிய தர்ஷன் தீட்சிதர், “நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் எப்படி சுவாமி தரிசனம் செய்கிறார்களோ, அதேபோல் பக்தர்களும் தரிசனம் செய்ய வேண்டும். கோயிலில் நடைபெறும் சில அநியாயங்களை எனது தந்தையும் நானும்தட்டிக் கேட்பதால், எங்களை கோயில் நிர்வாகத்தினர் மிரட்டுகிறார்கள். அடிக்கிறார்கள். ‘பக்தர்களை கனகசபையில் ஏற்றக் கூடாது’ என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இது மன்னர் கட்டிய கோவில். கால காலமாக கனகசபையில் ஏறி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இந்த நடைமுறை மீண்டும் வர வேண்டும்” என்று தெரிவித்தார்.
கருத்துகள்