முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தில்லை நடராஜர் ஆலய தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு.!

சிதம்பரம் தில்லை நடராஜர் ஆலய தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு.!


சிதம்பரத்தில்  அருகில் புவனகிரி சாலை பகுதியில் வசிக்கும் லட்சுமி என்ற ஜெயஷீலா( வயது 36),  நடராஜர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்யச்  சென்றதாகவும். பின்னர் அவர் சிற்றம்பல மேடையிலேறி சாமி தரிசனம் காண முயன்றதாகவும் உடனே தீட்சிதர்கள் சிலர் ஜெயஷீலாவை ஆபாசமாகத் திட்டி திருப்பியனுப்பியுள்ளது குறித்து சிதம்பரம் நகர்க் காவல் நிலையத்தில் புகார் அளித்ததில் . ஆதிதிராவிடர் பிரிவைச் சேர்ந்த பெண் என தன்னை கோவில் தீட்சிதர்கள் ஆபாசமாகத் திட்டி சாமி கும்பிட விடாமல் திருப்பி அனுப்பியதாகக் கூறியிருந்தார்

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு. செய்யப்பட்ட நிலையில்


 

தீட்சிதர்களிடையே வாக்குவாதம் எழுந்தது.

பெண் ஒருவர் சாமி கும்பிடச் சென்றபோது சாதிப்பெயரை சொல்லித் திட்டியாக அளித்த புகாரில் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். ஏற்கெனவே தீட்சிதர்கள் மீது கொலை முயற்சிப் புகாரளித்த சக தீட்சிதர் சாமி கும்பிடச் சென்றபோது மீண்டும் தீட்சிதர்கள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தீட்சிதர்களிடையே அதிகரித்து வரும் மோதலால் வந்த பிரச்சினைகள் குறித்து


சிதம்பரம் நடராஜர் கோவிலில் பணி நீக்க நடவடிக்கைக்குள்ளான கணேஷ் தீட்சிதர் சாமி கும்பிடச் சென்றபோது சக தீட்சிதர்களால் தடுத்து தாக்கப்பட்டதாக அவர் காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர் காவல்துறை 3 தீட்சிதர்கள் பேரில் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில் மறுநாள் அவரது மகனான தர்ஷன் தீட்சிதர் என்பவர் பெண் பக்தர் ஒருவரை சாமி கும்பிட கனகசபைக்கு அழைத்துச் சென்றபோது கனகசபை மீது ஏறக் கூடாதென தீட்சிதர்கள் தடுத்து சாதிப் பெயரைக் கூறி திட்டியதாக சிதம்பரத்தைச் சேர்ந்த பெண் பக்தர் ஜெயஷீலா என்பவர் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளித்திருந்தாரர்.


அந்தப் புகாரின் பேரில் சிதம்பரம் நகர் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஜெயஷீலா அளித்த புகாரில் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் 20 பேர் மீதும் கூட்டமாகச் சேர்ந்து தடுத்தல், தாக்குதல், மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது


 நடராஜர் கோவில் தீட்சிதர்கள் சார்பில் செய்தியாளர்களிடம் பேசிய ஐயப்ப தீட்சிதர் என்பவர், கோவில் விதிமுறைகளுக்கு முரணாக கணேஷ் தீட்சிதர் மற்றும் தர்ஷன் தீட்சிதர் ஆகிய இருவரும் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.


கணேஷ் தீட்சிதர் மற்றும் தர்ஷன் தீட்சிதர் ஆகிய இருவரும் கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றனர். கனகசபை மீது ஏற முயன்ற போது அவர்களை சக தீட்சிதர்கள் மீண்டும் தடுத்தனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதமும் ஏற்பட்டது.


இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தர்ஷன் தீட்சிதர், சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை எனக் கூறப்படும் சிற்றம்பல மேடையில் ஏறி அனைவரும் சாமி கும்பிட வேண்டும் என்பதே எனது விருப்பம். அதற்காகத்தான் போராடிக் கொண்டிருக்கிறேன். சோழர்கள் காலத்தில் கட்டிய நடராஜர் கோயிலில் கனகசபை மீது யாரும் ஏறக்கூடாது என தீட்சிதர்கள் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும். இது தவறானது.


காவல்துறையில் புகார் அளித்து வழக்குப்பதிவு செய்யப்பட்ட 3 தீட்சிதர்களும் கோவிலுக்குள் தான் இருக்கின்றனர். பூஜை செய்கின்றனர். அவர்கள் கைது செய்யப்படவில்லை. நாங்கள் கொடுத்த புகாரை வாபஸ் வாங்க வேண்டும் என்று கோயில் தீட்சிதர்கள் எங்களிடம் சொல்கின்றனர். நடராஜர் கோயிலின் கனகசபை மீது அனைவரும் ஏறி சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம். பழைய முறைப்படி அனைவரும் சாமி தரிசனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கூறினார். பெரும்பான்மைகோயிலில் எந்தவித தீண்டாமையும் இல்லை.


அணைத்து மதத்தினரும,பல சமுதாயத்தினரும் வருகிறார்கள். இந்து சமுதாயத்தின் அனைத்துப் பிரிவு பக்தர்களும் கோவிலுக்கு வருகிறார்கள். யாரையும் தவறாகப் பேசுவதில்லை. கோவிலின் நலன் கருதி சில சட்ட திட்டங்கள் வகுத்து  கனகசபை (சிற்றம்பல மேடை) மீது யாரும் ஏறக்கூடாது என உத்தரவு போடப்பட்டு, எல்லோரும் அதைக் கடைபிடித்து வருகிறார்கள்.  தீட்சிதர்கள் சக்தி கணேசன், தர்ஷன் மட்டும் விதிமுறைகளை மதிக்காமல் சம்பந்தமில்லாத பெண்களை கனகசபைக்கு அழைத்து வருகிறார்கள். அதுபோன்ற ஒரு சம்பவத்தில், தான் தாழ்த்தப்பட்டவர் என்பதால் கோவிலில் அனுமதி மறுக்கப்படுவதாக ஒரு பெண் தவறுதலான புகாரை தெரிவித்திருக்கிறார். 2 ஆண்டுகளுக்கு முன்பு தர்ஷன் தீட்சிதர் கோவிலில் ஒரு பெண் பக்தரை அடித்து பிரச்சினை செய்ததால் அது சட்டங்களை மீறியதாக் கருதி, அவருக்கு அபராதம் விதித்து பணி நீக்கம் செய்யப்பட்டார். தற்போது பழி தீர்ப்பதற்காக இதுபோன்ற வேலைகளைச் செய் கிறார்.

மேலும் கோவிலில் நடந்த நிர்வாகக் குழு கூட்டத்தில், நிர்வாகத்துக்கு எதிராக கருத்துகளை கூறியதற்காக தர்ஷன் தீட்சிதருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதை செலுத்தத் தவறினால் மீண்டும் பணி நீக்கம் செய்யப்படுவார். இவ்விவகாரத்தில் சக்தி கணேசன் தீட்சிதர், காவல் நிலையத்தில் தன்னை தாக்கியதாக பொய்யான புகார் தெரிவித்துள்ளார். பெரும்பான்மையான கருத்தின் அடிப்படையில் கனகசபை (சிற்றம்பல மேடை) மீது யாரும் ஏறவேண்டாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகத்தில், பூஜையில் யாரும் தலையிடக் கூடாது என்று நீதிமன்ற உத் தரவும் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே, செய்தியாளர்களிடம் பேசிய தர்ஷன் தீட்சிதர், “நடராஜர் கோவிலில்  தீட்சிதர்கள் எப்படி சுவாமி தரிசனம் செய்கிறார்களோ, அதேபோல் பக்தர்களும் தரிசனம் செய்ய வேண்டும். கோயிலில் நடைபெறும் சில அநியாயங்களை எனது தந்தையும் நானும்தட்டிக் கேட்பதால், எங்களை கோயில் நிர்வாகத்தினர் மிரட்டுகிறார்கள். அடிக்கிறார்கள். ‘பக்தர்களை கனகசபையில் ஏற்றக் கூடாது’ என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இது மன்னர் கட்டிய கோவில். கால காலமாக கனகசபையில் ஏறி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இந்த நடைமுறை மீண்டும் வர வேண்டும்” என்று தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...