2022-22-ம் ஆண்வு பொருளாதார ஆய்வறிக்கையின் மையக் கருப்பொருள் ‘‘விரைவான அணுகுமுறை’’
இந்தாண்டு பொருளாதார ஆய்வறிக்கையின் மையக் கருப்பொருள் ‘‘விரைவான அணுகுமுறை’’. இது கோவிட்-19 பெருந்தொற்றைச் சமாளிக்க மேற்கொள்ளப்பட்ட இந்தியாவின் பொருளாதார நடவடிக்கையில் அமல்படுத்தப்பட்டது. பல தரப்பினரின் கருத்துக்கள், நிகழ்நேர கண்காணிப்பு, இலகுவான நடவடிக்கைகள் மூலம் இந்த விரைவான மற்றும் சுறுசுறுப்பான அணுகுமுறை மேற்கொள்ளப்பட்டதாக பொருளதார ஆய்வறிக்கையின் முன்னுரை தெரிவிக்கிறது.
கருத்துகேட்பு அடிப்படையிலான கொள்கை உருவாக்கம் எப்போதும் சாத்தியமாக இருந்தது என்று பொருளாதார ஆய்வறிக்கையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். நிகழ்நேர தரவுகள், தொடர்ச்சியான கண்காணிப்புக்கு உதவுவதால், விரைவான, சுறுசுறுப்பான திட்டம் இன்று பொருத்தமாக உள்ளது. ஜிஎஸ்டி தகவல்கள், டிஜிட்டல் முறையிலான கட்டணங்கள், செயற்கைகோள் புகைப்படங்கள், மின்சார உற்பத்தி, சரக்குப் போக்குவரத்து, உள்நாட்டு/வெளிநாட்டு வர்த்தகம் போன்ற தகவல்கள் இதில் அடங்கியுள்ளன.
இவற்றில் சில பொதுத் தளங்களில் இருந்தும், பல புதுமையான முறைகளில் தனியார் துறையினரால் பெறப்படுகிறது.
* இந்தப் பொருளாதார ஆய்வறிக்கையின் மற்றொரு சிறப்பம்சம், கலை மற்றும் அறிவியல் கொள்கை தாயாரிப்புடன் தொடர்புடையது. இது கோவிட்-19 காரணமாக ஏற்பட்ட நிச்சயமற்ற நிலைபற்றியது அல்ல, தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட வேகமான மாற்றம், நுகர்வோர் நடவடிக்கை, விநியோக சங்கிலிகள், சர்வதேச நிலவரங்கள், பருவநிலை மாற்றம் உட்பட பல காரணங்களால் கோவிட் தொற்றுக்கு பிந்தைய நீண்டகால நிச்சயமற்ற தன்மை பற்றியது. இந்த நிச்சயமற்ற தனமையை அங்கீகரிப்பது, நீண்டகால விநியோக பாதுகாப்பு யுக்தியைக் தெரிவிப்பதாக உள்ளது : ஒரு புறம் புத்தாக்கம் மூலம் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் கொள்கைகள், அதே நேரத்தில் மறுபுறம் பொருளாதா மீட்புக்கான முதலீடு, சமூக பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் மிகப் பெரிய நடவடிக்கைகள்.பாதுகாப்பு குறித்த மத்திய அரசின் பல நடவடிக்கைகளையும் இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ஒழுங்குமுறையில் தளர்வு, எளிதான நடைமுறை, தனியார் மயமாக்கம், அன்னியச் செலாவணி கையிருப்பு, பணவீக்க இலக்கு, அனைவருக்கும் வீடு, பசுமைத் தொழில்நுட்பம், திவால் மற்றும் நொடிப்பு விதிமுறைகள், ஏழைகளுக்குச் சுகாதார காப்பீடு, நிதி உள்ளடக்கம், கட்டமைப்புக்கான செலவினம், நேரடிப் பணப் பரிமாற்றம் போன்ற மாறுபட்ட கொள்கைகளுக்கு இடையேயான தொடர்புகளை மக்கள் அங்கீகரிக்க வேண்டும் என இந்தப் பொருளாதார ஆய்வறிக்கை எதிர்பார்க்கிறது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, முதல் ஆய்வறிக்கைக்கு பிந்தைய ஆய்வறிக்கை ஆவணம் மத்திய பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டது.
இந்த இரட்டை அறிக்கைக்கு பதில் தற்போது, ஒரே ஆய்வறிக்கையாகவும், புள்ளி விவரங்களுக்கு தனி அறிக்கையாகவும் பொருளாதார ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 2020-21ம் ஆண்டுப் பொருளாதார ஆய்வறிக்கை 900 பக்கங்கள் கொண்டாதாகத் தயாரிக்கப்பட்டது. ஆனால், இந்தாண்டு ஆய்வறிக்கை ஒரே புத்தமாகவும், புள்ளிவிவரங்களுக்குத் தனி அறிக்கையாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பொருளாதார ஆய்வறிக்கை அடுத்த சில ஆண்டுகளில் புதிய வகையான சமூக-பொருளாதாரத் தரவுகளை உள்ளடக்கிய பின்னூட்ட சுழற்சி அணுகுமுறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் என்று நம்புகிறது. மேலும் இந்தாண்டு பொருளாதார ஆய்வறிக்கையில் நகரமயமாக்கல், உள்கட்டமைப்பு, சுற்றுச்சூழல் தாக்கம், வேளாண் நடைமுறைகள் போன்றவற்றை விளக்குவதற்கு செயற்கைகோள் தரவுகளும், படங்களும் பயன்படுத்துப்பட்டுள்ளன.பொருளாதார ஆய்வறிக்கை 2021-22-ன் முக்கிய அம்சங்கள்
2021-22-ல் உறுதியான நிலையில் 9.2 சதவீத வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது
2022-23-ல் 8.0 - 8.5 சதவீத ஜிடிபி வளர்ச்சி மதிப்பிடப்பட்டுள்ளது
பெருந்தொற்று: அரசின் விநியோக சீர்திருத்தங்கள் நீடித்த, நீண்டகால விரிவாக்கத்திற்குப் பொருளாதாரத்தைத் தயார் செய்துள்ளது
2021 ஏப்ரல் – நவம்பர் காலத்தில் (சென்ற ஆண்டை விட) மூலதனச் செலவுகள் 13.5 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும்
2021 டிசம்பர் 31 அன்று அந்நியச் செலாவணி கையிருப்பு 633.6 பில்லியன் அமெரிக்க டாலரைத் தொட்டுள்ளது
2022 -23-ன் சவால்களை எதிர்கொள்ள பருண்மைப் பொருளாதார நிலைத்தன்மைக் குறியீடுகள் பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பதைக் காட்டுகின்றன
வருவாய் வரவுகளில் பெருமளவு வளர்ச்சி
சமூகத் துறை: சமூக சேவைகள் மீதான செலவு 2014-15-ல் 6.2 சதவீதம் என்பதோடு ஒப்பிடுகையில், 2021-22-ல் ஜிடிபி விகிதத்திற்கேற்ப 8.6 சதவீதமாக அதிகரித்துள்ளது
பொருளாதாரம் மீட்சியடைந்ததையடுத்து 2020-21-ன் கடைசி காலாண்டில் வேலைவாய்ப்புக் குறியீடுகள் பெருந்தொற்றுக்கு முந்தைய நிலைக்கு மீண்டும் வந்துள்ளன
வணிகம் சார்ந்த ஏற்றுமதிகளும். இறக்குமதிகளும் வலுவுடன் மீட்சியடைந்து கொவிடுக்கு முந்தைய நிலைகளைக் கடந்துள்ளன
2021 டிசம்பர் 31 நிலவரப்படி வங்கிக்கடன் 9.2 சதவீத அளவிற்கு அதிகரித்துள்ளது
ஐபிஓ-க்கள் (மக்களிடமிருந்து நிறுவனங்கள் மூலதனத்தை திரட்ட அனுமதிப்பது) மூலம் ரூ.89,066 கோடி திரட்டப்பட்டுள்ளது; கடந்த 10 ஆண்டில் எந்த ஆண்டையும் விட இது உயர் அளவாகும்
2021 – 22 -ல் (ஏப்ரல் – டிசம்பர்) ஒருங்கிணைந்த நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் பணவீக்கம் 5.2 சதவீதமாக உள்ளது
2021 - 22 -ல் (ஏப்ரல் – டிசம்பர்) சராசரி உணவுப் பணவீக்கம் 2.9 சதவீதமாகக் குறைந்துள்ளது
தீவிரமான விநியோக நிர்வாகம் காரணமாக மிகவும் அத்தியாவசியமானப் பொருட்களின் விலைகள் கட்டுப்பாட்டில் உள்ளன
வேளாண்மை: 2021 – 22-ல் ஒட்டுமொத்த மதிப்புக் கூடுதல் 3.9 சதவீத வளர்ச்சி அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது
ரயில்வே: 2020-21-ல் மூலதனச் செலவினம் கணிசமாக ரூ.155,181 கோடிக்கு அதிகரிக்கப்பட்டது; 2021-22-ல் இது ரூ.215,058 கோடி அளவுக்கு மேலும் அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, இது 2014-வுடன் ஒப்பிடுகையில் ஐந்து மடங்கு அதிகமாகும்2020 -21-ல் நாளொன்றுக்கு சாலை அமைத்தல் 36.5 கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது – முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 30.4 சதவீதம் அதிகமாகும்
நீடித்த வளர்ச்சி இலக்குகள் (எஸ்டிஜி) : 2020-21-ல் நித்தி ஆயோகின் தரவுப் பலகையில் ஒட்டு மொத்த ஸ்கோர்
66-க்கு முன்னேறி உள்ளது
மத்திய நிதி மற்றும் கார்ப்ரேட் நிறுவனங்கள் துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் 2021-22 –க்கான பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பித்தார். இந்தப் பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
பொருளாதார நிலை:
2020-21-ல் 7.3 சதவீதம் என்பதற்கு மாறாக 2021-22-ல் (முதலாவது மதிப்பீட்டின்படி) உறுதியான நிலையில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 9.2 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2022 -23-ல் உறுதியான நிலையில் 8-8.5 சதவீத அளவிற்கு ஜிடிபி வளர்ச்சி மதிப்பிடப்பட்டுள்ளது.
பொருளாதார மீட்சிக்கு உதவி செய்ய நிதிமுறை நல்ல நிலையில் இருப்பதால் வரும் ஆண்டில் தனியார் துறை முதலீடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2022 – 23 ஆம் ஆண்டுக்கு ஜிடிபி வளர்ச்சி முறையே உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றின் 8.7 சதவீதம், 7.5 சதவீதம் என்ற சமீபத்திய மதிப்பீடுகளுடன் ஒப்பிட்டவையாகும்.
சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எஃப்) சமீபத்திய உலகப் பொருளாதார கண்ணோட்ட மதிப்பீடுகளின்படி இந்தியாவின் ஜிடிபி 2021 – 22, 2022 – 23-ல் 9 சதவீத வளர்ச்சி, 2023 – 2024-ல் 7.1 சதவீத வளர்ச்சி என மதிப்பிடப்பட்டுள்ளது. இது அனைத்து 3 ஆண்டுகளிலும் உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக இந்தியாவை மாற்றும்.
2021-22-ல் வேளாண்மை மற்றும் துணை தொழில்களில் 3.9 சதவீதமும் தொழில் துறையில் 11.8 சதவீதமும், சேவைகள் துறையில் 8.2 சதவீதமும் வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
தேவையைப் பொறுத்தவரை 2021-22-ல் நுகர்பொருள்கள் 7.0 சதவீத வளர்ச்சியும், ஒட்டுமொத்த மூலதன உருவாக்கம் 15 சதவீதமும், ஏற்றுமதி 16.5 சதவீதமும், இறக்குமதி 29.4 சதவீதமும் எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்