முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

2022-22-ம் ஆண்வு பொருளாதார ஆய்வறிக்கையின் மையக் கருப்பொருள் ‘‘விரைவான அணுகுமுறை

2022-22-ம் ஆண்வு பொருளாதார ஆய்வறிக்கையின் மையக் கருப்பொருள் ‘‘விரைவான அணுகுமுறை’’


இந்தாண்டு பொருளாதார ஆய்வறிக்கையின் மையக்  கருப்பொருள் ‘‘விரைவான அணுகுமுறை’’.  இது கோவிட்-19 பெருந்தொற்றைச்  சமாளிக்க மேற்கொள்ளப்பட்ட இந்தியாவின் பொருளாதார நடவடிக்கையில் அமல்படுத்தப்பட்டது.  பல தரப்பினரின் கருத்துக்கள், நிகழ்நேர கண்காணிப்பு, இலகுவான நடவடிக்கைகள் மூலம் இந்த விரைவான மற்றும் சுறுசுறுப்பான அணுகுமுறை மேற்கொள்ளப்பட்டதாக பொருளதார ஆய்வறிக்கையின் முன்னுரை தெரிவிக்கிறது. 


கருத்துகேட்பு அடிப்படையிலான கொள்கை உருவாக்கம் எப்போதும் சாத்தியமாக இருந்தது என்று பொருளாதார ஆய்வறிக்கையில் மத்திய நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். நிகழ்நேர தரவுகள், தொடர்ச்சியான கண்காணிப்புக்கு உதவுவதால், விரைவான, சுறுசுறுப்பான திட்டம் இன்று பொருத்தமாக உள்ளது. ஜிஎஸ்டி தகவல்கள், டிஜிட்டல் முறையிலான கட்டணங்கள், செயற்கைகோள் புகைப்படங்கள், மின்சார உற்பத்தி, சரக்குப்  போக்குவரத்து, உள்நாட்டு/வெளிநாட்டு வர்த்தகம் போன்ற தகவல்கள் இதில் அடங்கியுள்ளன.

இவற்றில் சில பொதுத்  தளங்களில் இருந்தும், பல புதுமையான முறைகளில் தனியார் துறையினரால் பெறப்படுகிறது.

* இந்தப்  பொருளாதார ஆய்வறிக்கையின் மற்றொரு சிறப்பம்சம், கலை மற்றும் அறிவியல் கொள்கை தாயாரிப்புடன் தொடர்புடையது. இது கோவிட்-19 காரணமாக ஏற்பட்ட நிச்சயமற்ற நிலைபற்றியது அல்ல, தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட வேகமான மாற்றம், நுகர்வோர் நடவடிக்கை, விநியோக சங்கிலிகள், சர்வதேச நிலவரங்கள், பருவநிலை மாற்றம் உட்பட பல காரணங்களால் கோவிட் தொற்றுக்கு பிந்தைய நீண்டகால நிச்சயமற்ற தன்மை பற்றியது. இந்த நிச்சயமற்ற தனமையை  அங்கீகரிப்பது, நீண்டகால விநியோக பாதுகாப்பு யுக்தியைக்  தெரிவிப்பதாக உள்ளது :  ஒரு புறம் புத்தாக்கம் மூலம் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் கொள்கைகள்,  அதே நேரத்தில் மறுபுறம் பொருளாதா மீட்புக்கான முதலீடு, சமூக பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் மிகப் பெரிய நடவடிக்கைகள்.பாதுகாப்பு குறித்த மத்திய அரசின் பல நடவடிக்கைகளையும் இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ஒழுங்குமுறையில் தளர்வு, எளிதான நடைமுறை, தனியார் மயமாக்கம், அன்னியச்  செலாவணி கையிருப்பு, பணவீக்க இலக்கு, அனைவருக்கும் வீடு, பசுமைத்  தொழில்நுட்பம், திவால் மற்றும் நொடிப்பு விதிமுறைகள், ஏழைகளுக்குச்  சுகாதார காப்பீடு, நிதி உள்ளடக்கம், கட்டமைப்புக்கான செலவினம், நேரடிப்  பணப்  பரிமாற்றம் போன்ற மாறுபட்ட கொள்கைகளுக்கு இடையேயான தொடர்புகளை மக்கள் அங்கீகரிக்க வேண்டும் என இந்தப்  பொருளாதார ஆய்வறிக்கை எதிர்பார்க்கிறது. 

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, முதல் ஆய்வறிக்கைக்கு பிந்தைய ஆய்வறிக்கை ஆவணம் மத்திய பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டது.


இந்த இரட்டை அறிக்கைக்கு பதில் தற்போது, ஒரே ஆய்வறிக்கையாகவும், புள்ளி விவரங்களுக்கு தனி அறிக்கையாகவும் பொருளாதார ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 2020-21ம் ஆண்டுப்  பொருளாதார ஆய்வறிக்கை 900 பக்கங்கள் கொண்டாதாகத்  தயாரிக்கப்பட்டது. ஆனால், இந்தாண்டு ஆய்வறிக்கை ஒரே புத்தமாகவும், புள்ளிவிவரங்களுக்குத்  தனி அறிக்கையாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பொருளாதார ஆய்வறிக்கை அடுத்த சில ஆண்டுகளில் புதிய வகையான சமூக-பொருளாதாரத் தரவுகளை உள்ளடக்கிய பின்னூட்ட சுழற்சி அணுகுமுறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் என்று நம்புகிறது. மேலும் இந்தாண்டு பொருளாதார ஆய்வறிக்கையில் நகரமயமாக்கல், உள்கட்டமைப்பு, சுற்றுச்சூழல் தாக்கம், வேளாண் நடைமுறைகள் போன்றவற்றை விளக்குவதற்கு செயற்கைகோள் தரவுகளும், படங்களும் பயன்படுத்துப்பட்டுள்ளன.பொருளாதார ஆய்வறிக்கை 2021-22-ன் முக்கிய அம்சங்கள்

2021-22-ல் உறுதியான நிலையில் 9.2 சதவீத வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது

2022-23-ல் 8.0 - 8.5 சதவீத ஜிடிபி வளர்ச்சி மதிப்பிடப்பட்டுள்ளது

பெருந்தொற்று: அரசின் விநியோக சீர்திருத்தங்கள் நீடித்த, நீண்டகால விரிவாக்கத்திற்குப் பொருளாதாரத்தைத் தயார் செய்துள்ளது

2021 ஏப்ரல் – நவம்பர் காலத்தில் (சென்ற ஆண்டை விட) மூலதனச் செலவுகள் 13.5 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும்

2021 டிசம்பர் 31 அன்று அந்நியச் செலாவணி கையிருப்பு 633.6 பில்லியன் அமெரிக்க டாலரைத் தொட்டுள்ளது

2022 -23-ன் சவால்களை எதிர்கொள்ள பருண்மைப் பொருளாதார நிலைத்தன்மைக் குறியீடுகள் பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பதைக் காட்டுகின்றன

வருவாய் வரவுகளில் பெருமளவு வளர்ச்சி

சமூகத் துறை: சமூக சேவைகள் மீதான செலவு 2014-15-ல் 6.2 சதவீதம் என்பதோடு ஒப்பிடுகையில், 2021-22-ல் ஜிடிபி விகிதத்திற்கேற்ப 8.6 சதவீதமாக அதிகரித்துள்ளது

பொருளாதாரம் மீட்சியடைந்ததையடுத்து 2020-21-ன் கடைசி காலாண்டில் வேலைவாய்ப்புக் குறியீடுகள் பெருந்தொற்றுக்கு முந்தைய நிலைக்கு மீண்டும் வந்துள்ளன

வணிகம் சார்ந்த ஏற்றுமதிகளும். இறக்குமதிகளும் வலுவுடன் மீட்சியடைந்து கொவிடுக்கு முந்தைய நிலைகளைக் கடந்துள்ளன

2021 டிசம்பர் 31 நிலவரப்படி வங்கிக்கடன் 9.2 சதவீத அளவிற்கு அதிகரித்துள்ளது

ஐபிஓ-க்கள் (மக்களிடமிருந்து நிறுவனங்கள் மூலதனத்தை திரட்ட அனுமதிப்பது) மூலம் ரூ.89,066 கோடி திரட்டப்பட்டுள்ளது; கடந்த 10 ஆண்டில் எந்த ஆண்டையும் விட இது உயர் அளவாகும்

2021 – 22 -ல் (ஏப்ரல் – டிசம்பர்) ஒருங்கிணைந்த நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் பணவீக்கம் 5.2 சதவீதமாக உள்ளது

2021  - 22 -ல் (ஏப்ரல் – டிசம்பர்)  சராசரி உணவுப் பணவீக்கம் 2.9 சதவீதமாகக் குறைந்துள்ளது

தீவிரமான விநியோக நிர்வாகம் காரணமாக மிகவும் அத்தியாவசியமானப் பொருட்களின் விலைகள் கட்டுப்பாட்டில் உள்ளன

வேளாண்மை: 2021 – 22-ல் ஒட்டுமொத்த மதிப்புக் கூடுதல் 3.9 சதவீத வளர்ச்சி அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது

ரயில்வே: 2020-21-ல் மூலதனச் செலவினம் கணிசமாக ரூ.155,181 கோடிக்கு அதிகரிக்கப்பட்டது; 2021-22-ல் இது ரூ.215,058 கோடி அளவுக்கு மேலும் அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, இது 2014-வுடன் ஒப்பிடுகையில் ஐந்து மடங்கு அதிகமாகும்2020 -21-ல் நாளொன்றுக்கு சாலை அமைத்தல் 36.5 கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது – முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 30.4 சதவீதம் அதிகமாகும்

நீடித்த வளர்ச்சி இலக்குகள் (எஸ்டிஜி) : 2020-21-ல் நித்தி ஆயோகின் தரவுப் பலகையில் ஒட்டு மொத்த ஸ்கோர்

66-க்கு முன்னேறி உள்ளது

மத்திய நிதி மற்றும் கார்ப்ரேட் நிறுவனங்கள் துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் 2021-22 –க்கான பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பித்தார். இந்தப் பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

பொருளாதார நிலை:

2020-21-ல் 7.3 சதவீதம் என்பதற்கு மாறாக 2021-22-ல் (முதலாவது மதிப்பீட்டின்படி) உறுதியான நிலையில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 9.2 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2022 -23-ல் உறுதியான நிலையில் 8-8.5 சதவீத அளவிற்கு ஜிடிபி வளர்ச்சி மதிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதார மீட்சிக்கு உதவி செய்ய நிதிமுறை நல்ல நிலையில் இருப்பதால் வரும் ஆண்டில் தனியார் துறை முதலீடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2022 – 23 ஆம் ஆண்டுக்கு ஜிடிபி வளர்ச்சி முறையே உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றின் 8.7 சதவீதம், 7.5 சதவீதம் என்ற சமீபத்திய மதிப்பீடுகளுடன் ஒப்பிட்டவையாகும்.

சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எஃப்) சமீபத்திய உலகப் பொருளாதார கண்ணோட்ட மதிப்பீடுகளின்படி இந்தியாவின் ஜிடிபி 2021 – 22, 2022 – 23-ல் 9 சதவீத வளர்ச்சி, 2023 – 2024-ல் 7.1 சதவீத வளர்ச்சி என மதிப்பிடப்பட்டுள்ளது. இது அனைத்து 3 ஆண்டுகளிலும் உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக இந்தியாவை மாற்றும்.

2021-22-ல் வேளாண்மை மற்றும் துணை தொழில்களில் 3.9 சதவீதமும் தொழில் துறையில் 11.8 சதவீதமும், சேவைகள் துறையில் 8.2 சதவீதமும் வளர்ச்சி  எதிர்பார்க்கப்படுகிறது.

தேவையைப் பொறுத்தவரை 2021-22-ல் நுகர்பொருள்கள் 7.0 சதவீத வளர்ச்சியும், ஒட்டுமொத்த மூலதன உருவாக்கம் 15 சதவீதமும், ஏற்றுமதி 16.5 சதவீதமும், இறக்குமதி 29.4 சதவீதமும் எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த