முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சென்னை பெருநகர் உள்ளிட்ட 21 மாநகராட்சிகளைக் கைப்பற்றியது ஆளும் திமுக கூட்டணி.

சென்னை பெருநகர் உள்ளிட்ட 21 மாநகராட்சிகளைக் கைப்பற்றியது ஆளும் திமுக கூட்டணி.


ஆறாகப் பெருக்கெடுத்து ஓடிய பணம்! அள்ளித் தரப்படும் பரிசுப் பொருட்கள். இத்யாதிகள் என  ஏதோ, பெரு வியாபாரத்திற்கான முதலீட்டைப் போல, ஊரக பேரூராட்சி,நகராட்சி, மாநகராட்சித் தேர்தல்களை அரசியல் கட்சிகள் கையாளும் அணுகுமுறைகள் உண்மையாகவே அதிர்ச்சியளிக்கின்றன!


நம்மை நாமே சுரண்டிக் கொழுப்பதற்குத் தரும் அங்கீகாரமா? உள்ளாட்சி தேர்தல்கள் என்ற கேள்வியை நம்மால் தவிர்க்க முடியவில்லை. சாதாரண வார்டு கவுன்சிலருக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் கோடிக்கணக்கில் செலவு செய்கிறார்கள். 600 வாக்குகள் கொண்ட ஒரு வார்டில் இரண்டரைக் கோடி ரூபாய் செலவு செய்து வென்ற ஒரு வேட்பாளரும் உண்டு, ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து சேவைகள் செய்த பிறகு மனைவியை வேட்பாளராக நிறுத்தி எந்தச் செலவும் செய்யாமல் ஒரு ஊதா நோட்டீஸ் மட்டுமே அடித்து வெற்றி கண்ட கவுன்சிலரும் உண்டு .



”எங்க வேட்பாளர் இத்தனை ஸ்வீட் பாக்சை இறக்கியிருக்கிறார்” என்கிறார் ஒரு..... கட்சிக்காரர்!

”எங்க ஆளு இத்தனை ரோஸ்மில்க் தருவாராக்கும்” என்கிறார் ஒருவர்!

”அந்த ஏரியாவுல ஆயிரம் சாக்லேட் சப்ளை பண்ணியாச்சு நாங்க” என்கிறார் ஒருவர்!

இதெல்லாம் மக்களுக்கு ஓட்டுக்கு லஞ்சம் கொடுப்பவர்கள் சொல்லுகின்ற குறியீட்டுச் சொற்கள்!




இது தொண்டு செய்வதற்கான பொறுப்பு! இதில் போட்டியிடுபவர் இவ்வளவு பணம் செலவழிப்பானேன்? என்ற வினா எழாமல் இல்லை.... தேர்தல் அலுவலர்கள் பலர்  பறக்கும் படை என்ற பெயரில் சோதனை நடத்தி வியாபாரம் செய்து பிழைத்துக் கொண்டிருக்கும் சூழல் நாம் நன்கு அறிவோம் அதில் வியாபாரம் செய்து பிழைக்கும் நபர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டனர். இது தேவையா என்பது எழு வினா.?


திமுகவின் வெற்றி எதிர்பார்த்தது தான்.‌ பத்து ஆண்டுகள் பொறுமையாக கட்சிப் பணியாற்றியதற்கு கிடைத்த ஜாக்பாட் பரிசு. திமுக

தனது வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொண்டது சிறப்பு.‌ திமுக ஒரு தெளிவான அரசியல் குடும்பம் என்பதை மெய்ப்படுத்தியுள்ளது.‌ 



பாரதிய ஜனதா கட்சியின் அடிவருடியாக இருந்ததன் துர்பலனை அதிமுக கண்கூடாக அனுபவிக்கிறது.‌ பாஜக சார்ந்த  இபிஎஸ் + ஓபிஎஸ் மேலும் 10 நபர்கள்  கட்சியை விட்டு தானே விலகினால் அஇஅதிமுக இரட்டை இலை மீண்டும் துளிர்க்க வாய்ப்பு உள்ளது.




பாஜக முதன்முதலாக ஒரே கட்சியாக தேர்தல் பணியாற்றக் கற்றுக் கொண்டது சிறப்பு. மற்றபடி நரேந்திர மோடி பாஜக மீதான வெறுப்பு தமிழ்நாட்டில் இன்னும் குறையவில்லை என்பதே உண்மை.



அமமுக தனது பலம் வாய்ந்த இடங்களில்  துளிர் விடத் தொடங்கி விட்டது. வழக்கம் போல காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக எல்லாம் திமுகவின் பலத்தால் வெற்றிகரமாக உள்ள நிலையில். சேலம் மற்றும் கடலோரப் பகுதி கூடக் கைவிட பாமக மிகவும் கவனமாக காய் நகர்த்த வேண்டிய நேரமிது.‌ கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் இனி மெல்லச் சாகும். சீமானின் நாதக என்றுமே பாஜகவால் முடியாததை சாதிக்கும் நிழலாகத் தொடரும்.‌ 



உள்ளாட்சியில் நல்லாட்சி மலர வாழ்த்துகள். சென்னை பெரு நகர மாநகராட்சியின் முதல் தேர்தல். 4 சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி. போற்றுதலுக்கு உரியது.

2-23-92-198  வார்டு பிரிவு மக்களுக்கு வாழ்த்துக் கூறலாம் இத்தனை பண வலிமை, அடியாள் வலிமையையும் மீறி தனி நபர்களை கொண்டாடிய மக்கள். திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட்ட பொறியியல் கல்லூரி மாணவி வெற்றி பெற்றதோடு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட 8 பேரில் 7 பேரை டெபாசிட் இழக்கச் செய்துள்ளார்கள். தமிழ்நாட்டில் முதல்வர் தகவலில். "ஒன்பது மாத கால DravidianModel’ ஆட்சிக்குத் தமிழ்நாட்டு மக்கள் அளித்துள்ள நற்சான்றிதழ்தான் இந்த UrbanLocalBodyElection முடிவுகள்!




வெற்றியால் கர்வம் கொள்ளவில்லை; பொறுப்புகள் கூடியிருப்பதையே உணர்கிறேன்!

மக்கள் என் மீது வெளிப்படுத்தியுள்ள நம்பிக்கையைக் காப்பாற்ற உழைப்பேன்!" எனத் தெரிவித்துள்ளார்..  சென்னை மாநகரத்தில்  கவுன்சிலரானார் பாஜகவின் "உமா ஆனந்தன்!




இவர் பேசிய பேச்சுகள் பல சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. தீவிர இந்துத்துவா கொள்கை கொண்டவர் சாதி ரீதியாக பல மேடைகளில் பேசி இருக்கிறார். இதனால் இந்தப் பகுதியில் பிரபலமானவராக அறியப்பட்டார் உமா ஆனந்தன்

நகர்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்ற நிலையில் சென்னை மாநகராட்சியின் 134-வது வார்டில், மொத்தம் 15 பேர் போட்டியிட்டதில் மூன்று பேர் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 12 பேர் களத்திலிருந்தனர். அதிமுக சார்பில் அனுராதா பாலாஜியும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுசீலா கோபாலகிருஷ்ணனும் போட்டியிட்டார்கள். பாஜகவில் இருந்து போட்டியிட்ட  வேட்பாளர் உமா ஆனந்தன் காங்கிரஸ் வேட்பாளரை விட 2036 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். உமா ஆனந்தன் 5539 வாக்கும், காங்கிரஸ் வேட்பாளர் 3503 வாக்குகளும், அதிமுக 2695 வாக்குகளும் பெற்றுள்ளனர். உமா ஆனந்தன் வெற்றியை அடுத்து, பாஜக சென்னையில் தங்களது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

உமா ஆனந்தன் தன்னை ஒரு கோட்ஸே ஆதரவாளர் என்று சொல்லித்தான் பிரசாரம் மேற்கொண்டார். கோட்ஸே குறித்து இவர் அளித்த பேட்டி இணையம் முழுக்க சர்ச்சையானது. கோட்ஸே காந்தியை சுட்டார். ஆம் அது அவரின் நியாயாம். அவர் ஒரு இந்து. இப்பவும் சொல்கிறேன், எனக்கு அது மிகவும் பெருமையாக உள்ளது. கோட்ஸே உமா ஆனந்தன் நான் பெருமையாக சொல்கிறேன். நான் ஒரு கோட்ஸே ஆதரவாளர், என்று உமா ஆனந்த் குறிப்பிட்டு இருந்தார். அதேபோல் பிராமணர்கள் உயர்ந்தவர்கள் என்றும் உமா ஆனந்தன் பேசியது சர்ச்சையானது. இதுவும் சமூகவலைதளத்தில் பெரிய விவாதமாக மாறியது.

உமா ஆனந்த் இப்படி கோட்ஸேவிற்கு ஆதரவாக பேசிய வீடியோ இணையம் முழுக்க பரவியது. இவரை எப்படி பாஜக வேட்பாளராக தேர்வு செய்தது. எந்த அடிப்படையில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது என்று இணையதளத்தில் உள்ள பலர் கேள்வி எழுப்பினர். தற்போது உமா ஆனந்தன் வெற்றி பெற்றிருப்பதை பாஜக கொண்டாடுகிறது. பெரியார் மண்ணில் கோட்ஸே என்ற அடைமொழியுடன் உமா ஆனந்தனின் வெற்றியை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வருகிறார்கள்.      அதிமுக தொண்டர்கள் கவனத்திற்கு. இது பகடியோ, எகத்தாளமோ அல்ல.

அப்பட்டமான நெற்றிப் பொட்டில் அறையும் உண்மை. 

அதன் தொண்டர்கள் கட்சியின் மீது அக்கறை இருந்தால் தலைமை மாற்றத்திற்கான போர் குரல் எழுப்பி உங்கள் அரசியல் எதிர்காலத்தில் அதிமுகவில் இருக்க வேண்டும் என்றால் வழி தேடவேண்டிய நேரமிது .

பயிரைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். என்று பலர் அதிலும் அதிமுகவினர் தற்போது தான் உண்மை உணர்ந்து பேசி வருகின்றனர் என்பதை நாம் காணும் நிலை.அதிமுக எம் ஜி ஆர் காலத்தில் முதல் முதலில் நடத்திய உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வென்றது நெல்லை நகராட்சி மட்டுமே இப்போது அதுவுமில்லை..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த