சென்னை பெருநகர் உள்ளிட்ட 21 மாநகராட்சிகளைக் கைப்பற்றியது ஆளும் திமுக கூட்டணி.
ஆறாகப் பெருக்கெடுத்து ஓடிய பணம்! அள்ளித் தரப்படும் பரிசுப் பொருட்கள். இத்யாதிகள் என ஏதோ, பெரு வியாபாரத்திற்கான முதலீட்டைப் போல, ஊரக பேரூராட்சி,நகராட்சி, மாநகராட்சித் தேர்தல்களை அரசியல் கட்சிகள் கையாளும் அணுகுமுறைகள் உண்மையாகவே அதிர்ச்சியளிக்கின்றன!
நம்மை நாமே சுரண்டிக் கொழுப்பதற்குத் தரும் அங்கீகாரமா? உள்ளாட்சி தேர்தல்கள் என்ற கேள்வியை நம்மால் தவிர்க்க முடியவில்லை. சாதாரண வார்டு கவுன்சிலருக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் கோடிக்கணக்கில் செலவு செய்கிறார்கள். 600 வாக்குகள் கொண்ட ஒரு வார்டில் இரண்டரைக் கோடி ரூபாய் செலவு செய்து வென்ற ஒரு வேட்பாளரும் உண்டு, ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து சேவைகள் செய்த பிறகு மனைவியை வேட்பாளராக நிறுத்தி எந்தச் செலவும் செய்யாமல் ஒரு ஊதா நோட்டீஸ் மட்டுமே அடித்து வெற்றி கண்ட கவுன்சிலரும் உண்டு .
”எங்க வேட்பாளர் இத்தனை ஸ்வீட் பாக்சை இறக்கியிருக்கிறார்” என்கிறார் ஒரு..... கட்சிக்காரர்!
”எங்க ஆளு இத்தனை ரோஸ்மில்க் தருவாராக்கும்” என்கிறார் ஒருவர்!
”அந்த ஏரியாவுல ஆயிரம் சாக்லேட் சப்ளை பண்ணியாச்சு நாங்க” என்கிறார் ஒருவர்!
இதெல்லாம் மக்களுக்கு ஓட்டுக்கு லஞ்சம் கொடுப்பவர்கள் சொல்லுகின்ற குறியீட்டுச் சொற்கள்!
இது தொண்டு செய்வதற்கான பொறுப்பு! இதில் போட்டியிடுபவர் இவ்வளவு பணம் செலவழிப்பானேன்? என்ற வினா எழாமல் இல்லை.... தேர்தல் அலுவலர்கள் பலர் பறக்கும் படை என்ற பெயரில் சோதனை நடத்தி வியாபாரம் செய்து பிழைத்துக் கொண்டிருக்கும் சூழல் நாம் நன்கு அறிவோம் அதில் வியாபாரம் செய்து பிழைக்கும் நபர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டனர். இது தேவையா என்பது எழு வினா.?
திமுகவின் வெற்றி எதிர்பார்த்தது தான். பத்து ஆண்டுகள் பொறுமையாக கட்சிப் பணியாற்றியதற்கு கிடைத்த ஜாக்பாட் பரிசு. திமுக
தனது வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொண்டது சிறப்பு. திமுக ஒரு தெளிவான அரசியல் குடும்பம் என்பதை மெய்ப்படுத்தியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் அடிவருடியாக இருந்ததன் துர்பலனை அதிமுக கண்கூடாக அனுபவிக்கிறது. பாஜக சார்ந்த இபிஎஸ் + ஓபிஎஸ் மேலும் 10 நபர்கள் கட்சியை விட்டு தானே விலகினால் அஇஅதிமுக இரட்டை இலை மீண்டும் துளிர்க்க வாய்ப்பு உள்ளது.
பாஜக முதன்முதலாக ஒரே கட்சியாக தேர்தல் பணியாற்றக் கற்றுக் கொண்டது சிறப்பு. மற்றபடி நரேந்திர மோடி பாஜக மீதான வெறுப்பு தமிழ்நாட்டில் இன்னும் குறையவில்லை என்பதே உண்மை.
அமமுக தனது பலம் வாய்ந்த இடங்களில் துளிர் விடத் தொடங்கி விட்டது. வழக்கம் போல காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக எல்லாம் திமுகவின் பலத்தால் வெற்றிகரமாக உள்ள நிலையில். சேலம் மற்றும் கடலோரப் பகுதி கூடக் கைவிட பாமக மிகவும் கவனமாக காய் நகர்த்த வேண்டிய நேரமிது. கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் இனி மெல்லச் சாகும். சீமானின் நாதக என்றுமே பாஜகவால் முடியாததை சாதிக்கும் நிழலாகத் தொடரும்.
உள்ளாட்சியில் நல்லாட்சி மலர வாழ்த்துகள். சென்னை பெரு நகர மாநகராட்சியின் முதல் தேர்தல். 4 சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி. போற்றுதலுக்கு உரியது.
2-23-92-198 வார்டு பிரிவு மக்களுக்கு வாழ்த்துக் கூறலாம் இத்தனை பண வலிமை, அடியாள் வலிமையையும் மீறி தனி நபர்களை கொண்டாடிய மக்கள். திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட்ட பொறியியல் கல்லூரி மாணவி வெற்றி பெற்றதோடு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட 8 பேரில் 7 பேரை டெபாசிட் இழக்கச் செய்துள்ளார்கள். தமிழ்நாட்டில் முதல்வர் தகவலில். "ஒன்பது மாத கால DravidianModel’ ஆட்சிக்குத் தமிழ்நாட்டு மக்கள் அளித்துள்ள நற்சான்றிதழ்தான் இந்த UrbanLocalBodyElection முடிவுகள்!
வெற்றியால் கர்வம் கொள்ளவில்லை; பொறுப்புகள் கூடியிருப்பதையே உணர்கிறேன்!
மக்கள் என் மீது வெளிப்படுத்தியுள்ள நம்பிக்கையைக் காப்பாற்ற உழைப்பேன்!" எனத் தெரிவித்துள்ளார்.. சென்னை மாநகரத்தில் கவுன்சிலரானார் பாஜகவின் "உமா ஆனந்தன்!
இவர் பேசிய பேச்சுகள் பல சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. தீவிர இந்துத்துவா கொள்கை கொண்டவர் சாதி ரீதியாக பல மேடைகளில் பேசி இருக்கிறார். இதனால் இந்தப் பகுதியில் பிரபலமானவராக அறியப்பட்டார் உமா ஆனந்தன்
நகர்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்ற நிலையில் சென்னை மாநகராட்சியின் 134-வது வார்டில், மொத்தம் 15 பேர் போட்டியிட்டதில் மூன்று பேர் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 12 பேர் களத்திலிருந்தனர். அதிமுக சார்பில் அனுராதா பாலாஜியும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுசீலா கோபாலகிருஷ்ணனும் போட்டியிட்டார்கள். பாஜகவில் இருந்து போட்டியிட்ட வேட்பாளர் உமா ஆனந்தன் காங்கிரஸ் வேட்பாளரை விட 2036 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். உமா ஆனந்தன் 5539 வாக்கும், காங்கிரஸ் வேட்பாளர் 3503 வாக்குகளும், அதிமுக 2695 வாக்குகளும் பெற்றுள்ளனர். உமா ஆனந்தன் வெற்றியை அடுத்து, பாஜக சென்னையில் தங்களது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
உமா ஆனந்தன் தன்னை ஒரு கோட்ஸே ஆதரவாளர் என்று சொல்லித்தான் பிரசாரம் மேற்கொண்டார். கோட்ஸே குறித்து இவர் அளித்த பேட்டி இணையம் முழுக்க சர்ச்சையானது. கோட்ஸே காந்தியை சுட்டார். ஆம் அது அவரின் நியாயாம். அவர் ஒரு இந்து. இப்பவும் சொல்கிறேன், எனக்கு அது மிகவும் பெருமையாக உள்ளது. கோட்ஸே உமா ஆனந்தன் நான் பெருமையாக சொல்கிறேன். நான் ஒரு கோட்ஸே ஆதரவாளர், என்று உமா ஆனந்த் குறிப்பிட்டு இருந்தார். அதேபோல் பிராமணர்கள் உயர்ந்தவர்கள் என்றும் உமா ஆனந்தன் பேசியது சர்ச்சையானது. இதுவும் சமூகவலைதளத்தில் பெரிய விவாதமாக மாறியது.
உமா ஆனந்த் இப்படி கோட்ஸேவிற்கு ஆதரவாக பேசிய வீடியோ இணையம் முழுக்க பரவியது. இவரை எப்படி பாஜக வேட்பாளராக தேர்வு செய்தது. எந்த அடிப்படையில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது என்று இணையதளத்தில் உள்ள பலர் கேள்வி எழுப்பினர். தற்போது உமா ஆனந்தன் வெற்றி பெற்றிருப்பதை பாஜக கொண்டாடுகிறது. பெரியார் மண்ணில் கோட்ஸே என்ற அடைமொழியுடன் உமா ஆனந்தனின் வெற்றியை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதிமுக தொண்டர்கள் கவனத்திற்கு. இது பகடியோ, எகத்தாளமோ அல்ல.
அப்பட்டமான நெற்றிப் பொட்டில் அறையும் உண்மை.
அதன் தொண்டர்கள் கட்சியின் மீது அக்கறை இருந்தால் தலைமை மாற்றத்திற்கான போர் குரல் எழுப்பி உங்கள் அரசியல் எதிர்காலத்தில் அதிமுகவில் இருக்க வேண்டும் என்றால் வழி தேடவேண்டிய நேரமிது .
பயிரைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். என்று பலர் அதிலும் அதிமுகவினர் தற்போது தான் உண்மை உணர்ந்து பேசி வருகின்றனர் என்பதை நாம் காணும் நிலை.அதிமுக எம் ஜி ஆர் காலத்தில் முதல் முதலில் நடத்திய உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வென்றது நெல்லை நகராட்சி மட்டுமே இப்போது அதுவுமில்லை..
கருத்துகள்