ரூ 46.29 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் மற்றும் 95.44 லட்சம் மதிப்பிலான தங்கம் சென்னை விமான நிலைய சுங்கத்துறையால் பறிமுதல்
பெங்களூரு வருவாய் நுண்ணறிவு இயக்குநரகத்திடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், 2022 பிப்ரவரி 19 அன்று துபாய்க்கு செல்லவிருந்த மகாராஷ்டிராவின் தானேவை சேர்ந்த திரு .ஹரேஷ் பத்துமால் கங்வானியை விமான நிலைய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் இடைமறித்து சோதனை செய்த போது, அவரது பையில் ரூபாய் 46.29 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் (ஐக்கிய அரபு எமிரேட்) மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. சுங்க சட்டம் 1962 மற்றும் அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் ஆகியவற்றின் கீழ் பணம் பறிமுதல் செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
மேலும், ரூபாய் 64.82 லட்சம் மதிப்பிலான 1.4 கிலோ எடையிலான தங்கக் கட்டிகள் துபாயில் இருந்து 2022 பிப்ரவரி 19 அன்று சென்னை வந்த ஐந்து பயணிகளிடம் இருந்து சுங்க சட்டம் 1962-ன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை வருவாய் நுண்ணறிவு இயக்குநரகத்திடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் துபாயிலிருந்து அந்த விமானத்தை சோதனையிட்டனர். அப்போது, இருக்கையின் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூபாய் 30.62 லட்சம் மதிப்பிலான 699 கிராம் எடையிலான தங்கக் கட்டிகள் கண்டறியப்பட்டு சுங்க சட்டம் 1962-ன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன
கருத்துகள்