கச்சா எண்ணெய் விலை குறித்து ஏற்றுமதி நாடுகள் மற்றும் இதர சர்வதேச அமைப்பின் தலைவர்களிடம் இந்தியா கவலை
கச்சா எண்ணெய் விலை ஏற்றம், இறக்கம் குறித்து எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நாடுகள் மற்றும் இதர சர்வதேச அமைப்பின் தலைவர்களிடம் இந்தியா கவலை
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணையமைச்சர் திரு. ராமேஷ்வர் தெலி கூறியதாவது:
இந்தியாவில் 2021ம் ஆண்டில் கச்சா எண்ணெய் தேவை நாள் ஒன்றுக்கு சுமார் 4.9 மில்லியன் பீப்பாய்களாக இருந்தது. இது 2045ம் ஆண்டில் 11 மில்லியன் பீப்பாய்களாக அதிகரிக்கும் என பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு (ஒபெக்), தனது ‘வேர்ல்டு ஆயில் அவுட்லுக்’ என்ற இதழில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை வழங்க, தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் உள்நாட்டில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதிய நாடுகள், புதிய பகுதிகளில் இருந்து பெட்ராலியப் பொருட்களை இறக்குமதி செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. பாரம்பரிய ஹைட்ரோ கார்பனை தாண்டி, எத்தனால், உயிரி எரிவாயு, ஹைட்ரஜன், எரிபொருளில் எத்தனால் கலப்பு திட்டம், மலிவான போக்குவரத்துக்கு நிலையான மாற்று எரிவாயு போன்ற திட்டங்களில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.
கச்சா எண்ணெய் விலையின் ஏற்றம், இறக்கம் குறித்தும், வாடிக்கையாளர் நாடுகளுக்கு பொறுப்பான, நியாயமான விலையை நிர்ணயிப்பது குறித்தும், கச்சா எண்ணெய் உற்பத்தி, ஏற்றுமதி நாடுகள், சர்வதேச அமைப்புகளின் தலைவர்களிடம் இந்தியா தனது கவலையை தெரிவித்துள்ளதுபெட்ரோலிய தயாரிப்பு பொருட்களின் ஏற்றுமதி
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணையமைச்சர் திரு. ராமேஷ்வர் தெலி கூறியதாவது:
உள்நாட்டு தேவை போக, கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள் தயாரிப்பை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றுமதி செய்கின்றன. பொதுத்துறை மற்றும் தனியார் துறை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், கடந்த 2 ஆண்டுகளாக ஏற்றுமதி செய்த பெட்ரோலியப் பொருட்கள் விவரம்:
அதிவேக டீசல், அதிவேக பெட்ரோல், விமான எரிபொருள், நாப்ஃதா போன்றவற்றை எண்ணெய் நிறுவனங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், சீனா, அமெரிக்கா, துருக்கி, நேபாளம், மலேசியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளன.
கடந்த 2019-20ம் ஆண்டில் 65,685 (TMT- ஆயிரம் மெட்ரிக் டன்கள்) பெட்ரோலிய தயாரிப்புகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.2,54, 018 கோடி. கடந்த 2020-21ம் ஆண்டில் 56,769 டிஎம்டி பெட்ரோலிய தயாரிப்புகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ. 1,57,168 கோடி.வாகன எரிபொருள் தொலைநோக்குப் பார்வை மற்றும் கொள்கை - 2025
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இணை அமைச்சர் திரு. ராமேஸ்வர் தெலி கீழ்காணும் தகவல்களை வெளியிட்டார்.
எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், நிலைத்தன்மைக்காக எரிசக்தியைப் பயன்படுத்துவதில் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் தொடர்ச்சியான நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.
இறக்குமதி ஆதாரங்களை பல்வகைப்படுத்துதல், மாற்று எரிபொருட்களை மேம்படுத்துதல், எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை அதிகரித்தல், மாற்று எரிசக்தி, சுத்திகரிப்பு செயல்முறைகளை மேம்படுத்துதல், எரிபொருள் திறன் நெறிமுறைகள் பற்றிய அறிவிப்பு போன்றவை இவற்றில் அடங்கும்.
பல்வேறு நோக்கங்களுடன் உயிரி எரிபொருட்களின் பயன்பாட்டை அரசு ஊக்குவித்து வருகிறது. 2018 தேசிய உயிரி எரிபொருள் கொள்கையின்படி இறக்குமதி சார்ந்திருப்பதைக் குறைத்தல், வேலைவாய்ப்பை உருவாக்குதல், விவசாயிகளுக்கு மேம்பட்ட வருவாயை வழங்குதல், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைத்தல் போன்றவை இவற்றில் அடங்கும்
கருத்துகள்