தி மு க பிரமுகர் தாக்குதல் வழக்கில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பூந்தமல்லி சிறையில் மார்ச் ஏழு வரை அடைக்கப்பட்டாரார்
தி மு க பிரமுகர் தாக்குதல் வழக்கில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பூந்தமல்லி சிறையில் மார்ச் ஏழு வரை அடைக்கப்பட்டாரார் .
சென்னை ராயபுரம் பகுதி 49-ஆவது வார்டில் மக்கள் வரிசையில் நின்று வாக்குகளைச் செலுத்திக்கொண்டிருந்த போது அவர்கள், ஒருவரை ஏற்கெனவே வேறொரு வாக்குச்சாவடியில் வாக்களித்து விட்டு, கள்ள வாக்கு செலுத்த வந்ததாகக் கூறி சுற்றி வளைத்தனர். இந்தத் தகவலறிந்து அந்த இடத்துக்கு விரைந்த அதிமுக வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் அந்த நபரிடம் வாக்குவாதம் செய்த பின்னர், அங்கிருந்த அதிமுக-வினரிடம் அந்த நபரைக் காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு கூறிதையடுத்து, அதிமுக-வினர் அந்த நபரைத் தாக்கியதாகக் கூறப்படுவதுடன் காணொளிக்காட்சி ஒன்றும் வெளியிடப்பட்டது
அதில் அதிமுக-வினர் அந்த நபரின் சட்டையைக் கழற்றி, அவரை அரை நிர்வாணப்படுத்தி இழுத்துச் சென்றனர். அதிமுக-வினர் தாக்குவது போன்ற காணொளி சமூக வலைதளத்திலும் பரவியது. முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் 40 நபர்கள் மீது, தாக்குதலுக்கு உள்ளான நரேஷ் தன்னை அரை நிர்வாணப்படுத்தித் தாக்கியதாக தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில்
அளித்த புகாரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுக-வினர்மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் 8 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கொலைவெறித் தாக்குதல், ஆயுதங்களைக்கொண்டு தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள வாக்குமூலம் வருமாறு:-
நான் நரசய்யா தெருவில் துணிக்கடை வைத்து உள்ளேன். தேர்தல் அன்று மாலை 4.30 மணிக்கு வார்டு எண்.49-ல் காமராஜர் மெட்ரிக்குலேசன் பள்ளி சஞ்சீவிராய கோவில் தெருவில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் மிகவும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. நான் அங்கு சென்று தி.மு.க. தொண்டராக நின்று கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் எதிர்பாராத நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவரது வெள்ளை நிற காரில் அ.தி.மு.க. கட்சி கொடியுடன் வாக்குச்சாவடி மையத்துக்கு வந்தார். 20 மோட்டார் சைக்கிள்களில் 40 பேரும் அவருடன் வந்தனர். ஏ.டி.அரசு, சோமு, சந்திரன் மற்றும் லோகு ஆகியோருடன் வந்து வாக்குச்சாவடி மையத்துக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டனர்.
இதனை அங்கு நின்று கொண்டிருந்த நான் அவர்கள் அருகே சென்று ஏன் இவ்வளவு நபர்களுடன் வாக்குச்சாவடிக்குள் அத்துமீறி நுழைகிறீர்கள் என்று கேட்டேன். அப்போது ஜெயக்குமார் என்னை பார்த்து ஆபாச வார்த்தைகளை பேசினார். ஒரு முன்னாள் அமைச்சரையே கேள்வி கேட்கிறீயா, இவனை அடித்து சாவடிங்கடா என்று கூறினார். உடனே ஏ.டி.அரசு, என்னை எட்டி உதைத்தார். நான் நிலை தடுமாறி கீழே விழுந்தேன். அப்போது அவருடன் பார்த்தால் அடையாளம் காட்ட கூடியவர்கள் என்னை பலமாக தாக்கினார்கள். உயிர் பிழைத்தால் போதும் என்று அவர்களிடம் இருந்து தப்பி என் உயிரை காப்பாற்றி கொள்ள நான் ஓடினேன். அப்போதும் என்னை விடாமல் துரத்தி ஜெயக்குமார், ஏ.டி.அரசு, சோமு, சந்திரன், லோகு மற்றும் அவருடன் வந்த அனைவரும் விரட்டி பிடித்து என்னை மறுபடியும் பலமாக தாக்கி என்னை கொடுங்காயப்படுத்தினர்.
அது மட்டுமல்லாமல் என்னுடைய மேல் சட்டையை கழற்றி என் இரு கைகளையும் கட்டி கொலை குற்றவாளி போல என்னை அரை நிர்வாணப்படுத்தி இழுத்து வந்தனர். அதில் எனக்கு முதுகு தண்டுவடம், இடது கை மற்றும் வலது கை மோதிர விரலில் பலத்த காயம் ஏற்பட்டது.
அதுமட்டும் அல்லாமல் 2 கால்களும் பலத்த காயம் ஏற்பட்டது. வலி தாங்காமல் நான் மயங்கி கீழே விழுந்துவிட்டேன். என் அருகில் இருந்த நண்பர்கள் என்னை பத்திரமாக மீட்டு ஆட்டோவில் ஏற்றி அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்து டாக்டரிடம் காண்பித்தனர். என்னை தாறுமாறாக அடித்த முன்னாள் அமைச்சர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கொடுத்த புகாரில் கண்டுள்ள படி முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் 40 நபர்கள் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ததைத் தொடர்ந்து, நேற்றிரவு இரவு 8 மணிக்கு பட்டினப்பாக்கத்திலுள்ள டி
. ஜெயக்குமார் வீட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட டி. ஜெயக்குமாரை காவல்துறையினர் ரகசிய இடத்தில்வைத்து நான்கு மணி நேரம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து சுமார் 12 மணியளவில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரை எழும்பூர் நீதிமன்றத்தில், ஜார்ஜ்டவுன் 15-வது நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் முரளிகிருஷ்ணா முன்பு காவல்துறையினர் ஆஜர்படுத்தியபோது, முறையான சட்ட விதிகளைப் பின்பற்றி கைதுசெய்யப்படவில்லை என ஜெயக்குமார் தரப்பு வாதாட, அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள், அரை நிர்வாணப்படுத்தித் தாக்குவது போன்ற காணொளி காட்சி இருப்பதாகவும், முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தூண்டுதலின் பேரில் தான் இந்தச் சம்பவம் நடைபெற்றதாகவும், அதனால் தான் அவர் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்ததைத் தொடர்ந்து நீதிபதி, ஜெயக்குமாரை 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து உடனடியாக ஜெயக்குமார் தரப்பு வழக்கறிஞர்கள் ஜாமீன் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். எனினும், அரசுத் தரப்பு, இன்று நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையைக் காரணம் காட்டி ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார் நீதிபதி. மேலும் முன்னால் அமைச்சர் டி.ஜெயக்குமார் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டாரார் அதற்கு அதிமுக தற்போது உள்ள ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கண்டனம் தெரிவித்துள்ளார்
கருத்துகள்