முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தி மு க பிரமுகர் தாக்குதல் வழக்கில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பூந்தமல்லி சிறையில் மார்ச் ஏழு வரை அடைக்கப்பட்டாரார்

தி மு க பிரமுகர் தாக்குதல் வழக்கில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பூந்தமல்லி சிறையில் மார்ச் ஏழு வரை  அடைக்கப்பட்டாரார் .


                                                 சென்னை ராயபுரம் பகுதி 49-ஆவது வார்டில் மக்கள் வரிசையில் நின்று வாக்குகளைச் செலுத்திக்கொண்டிருந்த போது அவர்கள், ஒருவரை ஏற்கெனவே வேறொரு வாக்குச்சாவடியில் வாக்களித்து விட்டு, கள்ள வாக்கு செலுத்த வந்ததாகக் கூறி சுற்றி வளைத்தனர். இந்தத் தகவலறிந்து அந்த இடத்துக்கு விரைந்த அதிமுக வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் அந்த நபரிடம் வாக்குவாதம் செய்த பின்னர், அங்கிருந்த அதிமுக-வினரிடம் அந்த நபரைக் காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு கூறிதையடுத்து, அதிமுக-வினர் அந்த நபரைத் தாக்கியதாகக் கூறப்படுவதுடன் காணொளிக்காட்சி ஒன்றும் வெளியிடப்பட்டது 

அதில் அதிமுக-வினர் அந்த நபரின் சட்டையைக் கழற்றி, அவரை அரை நிர்வாணப்படுத்தி இழுத்துச் சென்றனர். அதிமுக-வினர் தாக்குவது போன்ற காணொளி  சமூக வலைதளத்திலும் பரவியது. முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் 40 நபர்கள் மீது, தாக்குதலுக்கு உள்ளான நரேஷ் தன்னை அரை நிர்வாணப்படுத்தித் தாக்கியதாக தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் 

அளித்த புகாரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுக-வினர்மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் 8 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கொலைவெறித் தாக்குதல், ஆயுதங்களைக்கொண்டு தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள வாக்குமூலம் வருமாறு:-


நான் நரசய்யா தெருவில் துணிக்கடை வைத்து உள்ளேன். தேர்தல் அன்று மாலை 4.30 மணிக்கு வார்டு எண்.49-ல் காமராஜர் மெட்ரிக்குலேசன் பள்ளி சஞ்சீவிராய கோவில் தெருவில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் மிகவும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. நான் அங்கு சென்று தி.மு.க. தொண்டராக நின்று கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் எதிர்பாராத நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவரது வெள்ளை நிற காரில் அ.தி.மு.க. கட்சி கொடியுடன் வாக்குச்சாவடி மையத்துக்கு வந்தார். 20 மோட்டார் சைக்கிள்களில் 40 பேரும் அவருடன் வந்தனர். ஏ.டி.அரசு, சோமு, சந்திரன் மற்றும் லோகு ஆகியோருடன் வந்து வாக்குச்சாவடி மையத்துக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டனர்.

இதனை அங்கு நின்று கொண்டிருந்த நான் அவர்கள் அருகே சென்று ஏன் இவ்வளவு நபர்களுடன் வாக்குச்சாவடிக்குள் அத்துமீறி நுழைகிறீர்கள் என்று கேட்டேன். அப்போது ஜெயக்குமார் என்னை பார்த்து ஆபாச வார்த்தைகளை பேசினார். ஒரு முன்னாள் அமைச்சரையே கேள்வி கேட்கிறீயா, இவனை அடித்து சாவடிங்கடா என்று கூறினார். உடனே ஏ.டி.அரசு, என்னை எட்டி உதைத்தார். நான் நிலை தடுமாறி கீழே விழுந்தேன். அப்போது அவருடன் பார்த்தால் அடையாளம் காட்ட கூடியவர்கள் என்னை பலமாக தாக்கினார்கள். உயிர் பிழைத்தால் போதும் என்று அவர்களிடம் இருந்து தப்பி என் உயிரை காப்பாற்றி கொள்ள நான் ஓடினேன். அப்போதும் என்னை விடாமல் துரத்தி ஜெயக்குமார், ஏ.டி.அரசு, சோமு, சந்திரன், லோகு மற்றும் அவருடன் வந்த அனைவரும் விரட்டி பிடித்து என்னை மறுபடியும் பலமாக தாக்கி என்னை கொடுங்காயப்படுத்தினர்.

அது மட்டுமல்லாமல் என்னுடைய மேல் சட்டையை கழற்றி என் இரு கைகளையும் கட்டி கொலை குற்றவாளி போல என்னை அரை நிர்வாணப்படுத்தி இழுத்து வந்தனர். அதில் எனக்கு முதுகு தண்டுவடம், இடது கை மற்றும் வலது கை மோதிர விரலில் பலத்த காயம் ஏற்பட்டது.

அதுமட்டும் அல்லாமல் 2 கால்களும் பலத்த காயம் ஏற்பட்டது. வலி தாங்காமல் நான் மயங்கி கீழே விழுந்துவிட்டேன். என் அருகில் இருந்த நண்பர்கள் என்னை பத்திரமாக மீட்டு ஆட்டோவில் ஏற்றி அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்து டாக்டரிடம் காண்பித்தனர். என்னை தாறுமாறாக அடித்த முன்னாள் அமைச்சர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கொடுத்த புகாரில் கண்டுள்ள படி முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் 40 நபர்கள் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ததைத் தொடர்ந்து, நேற்றிரவு இரவு 8 மணிக்கு பட்டினப்பாக்கத்திலுள்ள டி

. ஜெயக்குமார் வீட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட டி. ஜெயக்குமாரை காவல்துறையினர் ரகசிய இடத்தில்வைத்து நான்கு மணி நேரம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து சுமார் 12 மணியளவில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரை எழும்பூர் நீதிமன்றத்தில், ஜார்ஜ்டவுன் 15-வது நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் முரளிகிருஷ்ணா முன்பு காவல்துறையினர் ஆஜர்படுத்தியபோது, முறையான சட்ட விதிகளைப் பின்பற்றி கைதுசெய்யப்படவில்லை என ஜெயக்குமார் தரப்பு வாதாட, அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள், அரை நிர்வாணப்படுத்தித் தாக்குவது போன்ற காணொளி காட்சி இருப்பதாகவும், முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தூண்டுதலின் பேரில் தான் இந்தச் சம்பவம் நடைபெற்றதாகவும், அதனால் தான் அவர் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்ததைத் தொடர்ந்து நீதிபதி, ஜெயக்குமாரை 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து உடனடியாக ஜெயக்குமார் தரப்பு வழக்கறிஞர்கள் ஜாமீன் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். எனினும், அரசுத் தரப்பு, இன்று நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையைக் காரணம் காட்டி ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார் நீதிபதி. மேலும் முன்னால் அமைச்சர் டி.ஜெயக்குமார் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டாரார் அதற்கு அதிமுக தற்போது உள்ள ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கண்டனம் தெரிவித்துள்ளார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த