முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தி மு க பிரமுகர் தாக்குதல் வழக்கில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பூந்தமல்லி சிறையில் மார்ச் ஏழு வரை அடைக்கப்பட்டாரார்

தி மு க பிரமுகர் தாக்குதல் வழக்கில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பூந்தமல்லி சிறையில் மார்ச் ஏழு வரை  அடைக்கப்பட்டாரார் .


                                                 சென்னை ராயபுரம் பகுதி 49-ஆவது வார்டில் மக்கள் வரிசையில் நின்று வாக்குகளைச் செலுத்திக்கொண்டிருந்த போது அவர்கள், ஒருவரை ஏற்கெனவே வேறொரு வாக்குச்சாவடியில் வாக்களித்து விட்டு, கள்ள வாக்கு செலுத்த வந்ததாகக் கூறி சுற்றி வளைத்தனர். இந்தத் தகவலறிந்து அந்த இடத்துக்கு விரைந்த அதிமுக வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் அந்த நபரிடம் வாக்குவாதம் செய்த பின்னர், அங்கிருந்த அதிமுக-வினரிடம் அந்த நபரைக் காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு கூறிதையடுத்து, அதிமுக-வினர் அந்த நபரைத் தாக்கியதாகக் கூறப்படுவதுடன் காணொளிக்காட்சி ஒன்றும் வெளியிடப்பட்டது 

அதில் அதிமுக-வினர் அந்த நபரின் சட்டையைக் கழற்றி, அவரை அரை நிர்வாணப்படுத்தி இழுத்துச் சென்றனர். அதிமுக-வினர் தாக்குவது போன்ற காணொளி  சமூக வலைதளத்திலும் பரவியது. முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் 40 நபர்கள் மீது, தாக்குதலுக்கு உள்ளான நரேஷ் தன்னை அரை நிர்வாணப்படுத்தித் தாக்கியதாக தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் 

அளித்த புகாரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுக-வினர்மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் 8 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கொலைவெறித் தாக்குதல், ஆயுதங்களைக்கொண்டு தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள வாக்குமூலம் வருமாறு:-


நான் நரசய்யா தெருவில் துணிக்கடை வைத்து உள்ளேன். தேர்தல் அன்று மாலை 4.30 மணிக்கு வார்டு எண்.49-ல் காமராஜர் மெட்ரிக்குலேசன் பள்ளி சஞ்சீவிராய கோவில் தெருவில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் மிகவும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. நான் அங்கு சென்று தி.மு.க. தொண்டராக நின்று கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் எதிர்பாராத நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவரது வெள்ளை நிற காரில் அ.தி.மு.க. கட்சி கொடியுடன் வாக்குச்சாவடி மையத்துக்கு வந்தார். 20 மோட்டார் சைக்கிள்களில் 40 பேரும் அவருடன் வந்தனர். ஏ.டி.அரசு, சோமு, சந்திரன் மற்றும் லோகு ஆகியோருடன் வந்து வாக்குச்சாவடி மையத்துக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டனர்.

இதனை அங்கு நின்று கொண்டிருந்த நான் அவர்கள் அருகே சென்று ஏன் இவ்வளவு நபர்களுடன் வாக்குச்சாவடிக்குள் அத்துமீறி நுழைகிறீர்கள் என்று கேட்டேன். அப்போது ஜெயக்குமார் என்னை பார்த்து ஆபாச வார்த்தைகளை பேசினார். ஒரு முன்னாள் அமைச்சரையே கேள்வி கேட்கிறீயா, இவனை அடித்து சாவடிங்கடா என்று கூறினார். உடனே ஏ.டி.அரசு, என்னை எட்டி உதைத்தார். நான் நிலை தடுமாறி கீழே விழுந்தேன். அப்போது அவருடன் பார்த்தால் அடையாளம் காட்ட கூடியவர்கள் என்னை பலமாக தாக்கினார்கள். உயிர் பிழைத்தால் போதும் என்று அவர்களிடம் இருந்து தப்பி என் உயிரை காப்பாற்றி கொள்ள நான் ஓடினேன். அப்போதும் என்னை விடாமல் துரத்தி ஜெயக்குமார், ஏ.டி.அரசு, சோமு, சந்திரன், லோகு மற்றும் அவருடன் வந்த அனைவரும் விரட்டி பிடித்து என்னை மறுபடியும் பலமாக தாக்கி என்னை கொடுங்காயப்படுத்தினர்.

அது மட்டுமல்லாமல் என்னுடைய மேல் சட்டையை கழற்றி என் இரு கைகளையும் கட்டி கொலை குற்றவாளி போல என்னை அரை நிர்வாணப்படுத்தி இழுத்து வந்தனர். அதில் எனக்கு முதுகு தண்டுவடம், இடது கை மற்றும் வலது கை மோதிர விரலில் பலத்த காயம் ஏற்பட்டது.

அதுமட்டும் அல்லாமல் 2 கால்களும் பலத்த காயம் ஏற்பட்டது. வலி தாங்காமல் நான் மயங்கி கீழே விழுந்துவிட்டேன். என் அருகில் இருந்த நண்பர்கள் என்னை பத்திரமாக மீட்டு ஆட்டோவில் ஏற்றி அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்து டாக்டரிடம் காண்பித்தனர். என்னை தாறுமாறாக அடித்த முன்னாள் அமைச்சர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கொடுத்த புகாரில் கண்டுள்ள படி முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் 40 நபர்கள் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ததைத் தொடர்ந்து, நேற்றிரவு இரவு 8 மணிக்கு பட்டினப்பாக்கத்திலுள்ள டி

. ஜெயக்குமார் வீட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட டி. ஜெயக்குமாரை காவல்துறையினர் ரகசிய இடத்தில்வைத்து நான்கு மணி நேரம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து சுமார் 12 மணியளவில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரை எழும்பூர் நீதிமன்றத்தில், ஜார்ஜ்டவுன் 15-வது நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் முரளிகிருஷ்ணா முன்பு காவல்துறையினர் ஆஜர்படுத்தியபோது, முறையான சட்ட விதிகளைப் பின்பற்றி கைதுசெய்யப்படவில்லை என ஜெயக்குமார் தரப்பு வாதாட, அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள், அரை நிர்வாணப்படுத்தித் தாக்குவது போன்ற காணொளி காட்சி இருப்பதாகவும், முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தூண்டுதலின் பேரில் தான் இந்தச் சம்பவம் நடைபெற்றதாகவும், அதனால் தான் அவர் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்ததைத் தொடர்ந்து நீதிபதி, ஜெயக்குமாரை 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து உடனடியாக ஜெயக்குமார் தரப்பு வழக்கறிஞர்கள் ஜாமீன் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். எனினும், அரசுத் தரப்பு, இன்று நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையைக் காரணம் காட்டி ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார் நீதிபதி. மேலும் முன்னால் அமைச்சர் டி.ஜெயக்குமார் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டாரார் அதற்கு அதிமுக தற்போது உள்ள ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கண்டனம் தெரிவித்துள்ளார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...