முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாகர்கோவில் மகளிர் காவல் பணி ஆய்வாளர் வீட்டில் விடிய விடிய சோதனை

வருமானத்துக்கு 171 சதவீதம் அதிகமாக சொத்துக்குவிப்பு; மகளிர் காவல் பணி ஆய்வாளர் வீட்டில் விடிய விடிய சோதனை.

காவல்துறை ஆய்வாளர் கண்மணி தனது வருமானத்திற்கு அதிகமாக 171.78 சதவீதம் சொத்து சேர்த்தது நடந்த சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கண்மணி. இவருக்கு மத்திய அரசின் சிறந்த காவல்துறை ஆய்வாளர் விருதும் வழங்கப்பட்டுள்ளது. இவர்து கணவர் சேவியர் பாண்டியன் அரசு வழக்கறிஞராகவும் உள்ளார். நாகர்கோவில் பாலசுப்பிரமணிய வீதியில் கண்மணி வசிக்கும் வீட்டில் நேற்று  அதிகாலை 6 மணி முதல் இன்று அதிகாலை 2 மணி வரை சுமார் 20 மணி நேரம் ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு கண்மணியிடம் விசாரணை நடத்தினார்கள். மேலும், அவரது உறவினரான வடிவீஸ்வரம் மணி, கண்மணியின் தோழியான அமுதா ஆகியோரின் வீடுகளிலும் ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறை துணை கண்காணிப்பாளர் பீட்டர் பால் தலைமையில் அதிரடியாக நடத்தப்பட்ட. சோதனையின்போது 88 சவரன் தங்க நகைகள், 7 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் ரொக்கம், வங்கியில் வைப்புத் தொகை 88 லட்சம் ரூபாய், வங்கியில் முதலீடு 3 லட்சம் ரூபாய் என மொத்தம் ஒரு கோடியே 13 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களின் ஆவணங்கள், வெற்று பாண்டுகளில் கையெழுத்துப் போட்ட பலரது  பாண்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காவல்துறை ஆய்வாளர் கண்மணி தனது வருமானத்திற்கு அதிகமாக 171.78 சதவீதம் சொத்துக்குவிப்பு செய்தது இந்தச் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.  காவல்துறை ஆய்வாளர் வீட்டில் இவ்வளவு பெரிய தொகை பறிமுதல் செய்யப்பட்டது காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள்  மத்தியிலேயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது காவல்துறை ஆய்வாளராக உள்ள கண்மணி வீட்டில் சோதனை

நாகர்கோவிலில் கோட்டாறு காவல் நிலைய சார்பு ஆய்வாளராகப் பணிபுரிந்த கண்மணி, பின்னர் எஸ்.பி.சி.ஐ.டி எஸ்.ஐ ஆகவும் பணிபுரிந்தார். 2018 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை எஸ்.பி ஆய்வாளராகப் பணியிலிருந்தார். பின்னர் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக நியமிக்கப்பட்டார். எஸ்.பி ஆய்வாளராக இருந்த காலத்தில் அரசியல்வாதிகளுக்கும், திருட்டு மணல் கடத்தல் கும்பலுக்கும் ஆதரவாக இவர் பல காவல்துறை  அதிகாரிகளைப் பழிவாங்கியதாக காவல்துறை  வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இதுபற்றி காவல்துறை வட்டாரத்தில் விசாரித்த போது. ``பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு போல எஸ்.பி அலுவலகத்தில் கோலோச்சினார் கண்மணி. தன்னிச்சையாக பல கட்டப்பஞ்சாயத்துகளை நடத்தி முடித்து கல்லாக்கட்டியதால் தான் எஸ்.பி அலுவலகத்திலிருந்து மாற்றப்பட்டார். கந்துவட்டிக்குப் பணம் கொடுப்பவர்களை காவல்துறை கைது செய்வதை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், காவல்துறை ஆய்வாளரான இவரே பலருக்கு வட்டிக்குப் பணம் கொடுத்திருக்கிறார்.

சோதனை நடந்த கண்மணியின் வீடு

வட்டி வாங்கியதில் பலர் பெரும் புள்ளிகள் என்கிறார்கள். காவல்துறை ஆய்வாளர் என்பதால் வட்டி சரியான நேரத்திற்கு கொடுத்திருக்கிறார்கள். அதிலொருவர் வட்டி கொடுப்பதில் காலதாமதம் ஆனதால் ஆய்வாளர் கண்மணி அவரை மிரட்டியிருக்கிறார். இதனால் மன உளைச்சலடைந்த அந்த நபர், கண்மணி குறித்த பல தகவல்களை ஆதாரத்துடன் ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவுக்கு கொடுத்திருக்கிறார்


வழக்கமாக வருமானத்துக்கு அதிகமாக 15 சதவிகிதம் சொத்து இருந்தால் பெரிய பிரச்னை இல்லை. ஆனால், இவர் 171 சதவிகிதம் அதிகமாக சொத்து சேர்த்திருப்பதால்


பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது" என்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த