முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாகர்கோவில் மகளிர் காவல் பணி ஆய்வாளர் வீட்டில் விடிய விடிய சோதனை

வருமானத்துக்கு 171 சதவீதம் அதிகமாக சொத்துக்குவிப்பு; மகளிர் காவல் பணி ஆய்வாளர் வீட்டில் விடிய விடிய சோதனை.

காவல்துறை ஆய்வாளர் கண்மணி தனது வருமானத்திற்கு அதிகமாக 171.78 சதவீதம் சொத்து சேர்த்தது நடந்த சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கண்மணி. இவருக்கு மத்திய அரசின் சிறந்த காவல்துறை ஆய்வாளர் விருதும் வழங்கப்பட்டுள்ளது. இவர்து கணவர் சேவியர் பாண்டியன் அரசு வழக்கறிஞராகவும் உள்ளார். நாகர்கோவில் பாலசுப்பிரமணிய வீதியில் கண்மணி வசிக்கும் வீட்டில் நேற்று  அதிகாலை 6 மணி முதல் இன்று அதிகாலை 2 மணி வரை சுமார் 20 மணி நேரம் ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு கண்மணியிடம் விசாரணை நடத்தினார்கள். மேலும், அவரது உறவினரான வடிவீஸ்வரம் மணி, கண்மணியின் தோழியான அமுதா ஆகியோரின் வீடுகளிலும் ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறை துணை கண்காணிப்பாளர் பீட்டர் பால் தலைமையில் அதிரடியாக நடத்தப்பட்ட. சோதனையின்போது 88 சவரன் தங்க நகைகள், 7 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் ரொக்கம், வங்கியில் வைப்புத் தொகை 88 லட்சம் ரூபாய், வங்கியில் முதலீடு 3 லட்சம் ரூபாய் என மொத்தம் ஒரு கோடியே 13 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களின் ஆவணங்கள், வெற்று பாண்டுகளில் கையெழுத்துப் போட்ட பலரது  பாண்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காவல்துறை ஆய்வாளர் கண்மணி தனது வருமானத்திற்கு அதிகமாக 171.78 சதவீதம் சொத்துக்குவிப்பு செய்தது இந்தச் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.  காவல்துறை ஆய்வாளர் வீட்டில் இவ்வளவு பெரிய தொகை பறிமுதல் செய்யப்பட்டது காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள்  மத்தியிலேயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது காவல்துறை ஆய்வாளராக உள்ள கண்மணி வீட்டில் சோதனை

நாகர்கோவிலில் கோட்டாறு காவல் நிலைய சார்பு ஆய்வாளராகப் பணிபுரிந்த கண்மணி, பின்னர் எஸ்.பி.சி.ஐ.டி எஸ்.ஐ ஆகவும் பணிபுரிந்தார். 2018 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை எஸ்.பி ஆய்வாளராகப் பணியிலிருந்தார். பின்னர் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக நியமிக்கப்பட்டார். எஸ்.பி ஆய்வாளராக இருந்த காலத்தில் அரசியல்வாதிகளுக்கும், திருட்டு மணல் கடத்தல் கும்பலுக்கும் ஆதரவாக இவர் பல காவல்துறை  அதிகாரிகளைப் பழிவாங்கியதாக காவல்துறை  வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இதுபற்றி காவல்துறை வட்டாரத்தில் விசாரித்த போது. ``பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு போல எஸ்.பி அலுவலகத்தில் கோலோச்சினார் கண்மணி. தன்னிச்சையாக பல கட்டப்பஞ்சாயத்துகளை நடத்தி முடித்து கல்லாக்கட்டியதால் தான் எஸ்.பி அலுவலகத்திலிருந்து மாற்றப்பட்டார். கந்துவட்டிக்குப் பணம் கொடுப்பவர்களை காவல்துறை கைது செய்வதை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், காவல்துறை ஆய்வாளரான இவரே பலருக்கு வட்டிக்குப் பணம் கொடுத்திருக்கிறார்.

சோதனை நடந்த கண்மணியின் வீடு

வட்டி வாங்கியதில் பலர் பெரும் புள்ளிகள் என்கிறார்கள். காவல்துறை ஆய்வாளர் என்பதால் வட்டி சரியான நேரத்திற்கு கொடுத்திருக்கிறார்கள். அதிலொருவர் வட்டி கொடுப்பதில் காலதாமதம் ஆனதால் ஆய்வாளர் கண்மணி அவரை மிரட்டியிருக்கிறார். இதனால் மன உளைச்சலடைந்த அந்த நபர், கண்மணி குறித்த பல தகவல்களை ஆதாரத்துடன் ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவுக்கு கொடுத்திருக்கிறார்


வழக்கமாக வருமானத்துக்கு அதிகமாக 15 சதவிகிதம் சொத்து இருந்தால் பெரிய பிரச்னை இல்லை. ஆனால், இவர் 171 சதவிகிதம் அதிகமாக சொத்து சேர்த்திருப்பதால்


பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது" என்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...