வருமானத்துக்கு 171 சதவீதம் அதிகமாக சொத்துக்குவிப்பு; மகளிர் காவல் பணி ஆய்வாளர் வீட்டில் விடிய விடிய சோதனை.
காவல்துறை ஆய்வாளர் கண்மணி தனது வருமானத்திற்கு அதிகமாக 171.78 சதவீதம் சொத்து சேர்த்தது நடந்த சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கண்மணி. இவருக்கு மத்திய அரசின் சிறந்த காவல்துறை ஆய்வாளர் விருதும் வழங்கப்பட்டுள்ளது. இவர்து கணவர் சேவியர் பாண்டியன் அரசு வழக்கறிஞராகவும் உள்ளார். நாகர்கோவில் பாலசுப்பிரமணிய வீதியில் கண்மணி வசிக்கும் வீட்டில் நேற்று அதிகாலை 6 மணி முதல் இன்று அதிகாலை 2 மணி வரை சுமார் 20 மணி நேரம் ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு கண்மணியிடம் விசாரணை நடத்தினார்கள். மேலும், அவரது உறவினரான வடிவீஸ்வரம் மணி, கண்மணியின் தோழியான அமுதா ஆகியோரின் வீடுகளிலும் ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறை துணை கண்காணிப்பாளர் பீட்டர் பால் தலைமையில் அதிரடியாக நடத்தப்பட்ட. சோதனையின்போது 88 சவரன் தங்க நகைகள், 7 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் ரொக்கம், வங்கியில் வைப்புத் தொகை 88 லட்சம் ரூபாய், வங்கியில் முதலீடு 3 லட்சம் ரூபாய் என மொத்தம் ஒரு கோடியே 13 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களின் ஆவணங்கள், வெற்று பாண்டுகளில் கையெழுத்துப் போட்ட பலரது பாண்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காவல்துறை ஆய்வாளர் கண்மணி தனது வருமானத்திற்கு அதிகமாக 171.78 சதவீதம் சொத்துக்குவிப்பு செய்தது இந்தச் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. காவல்துறை ஆய்வாளர் வீட்டில் இவ்வளவு பெரிய தொகை பறிமுதல் செய்யப்பட்டது காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியிலேயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது காவல்துறை ஆய்வாளராக உள்ள கண்மணி வீட்டில் சோதனை
இதுபற்றி காவல்துறை வட்டாரத்தில் விசாரித்த போது. ``பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு போல எஸ்.பி அலுவலகத்தில் கோலோச்சினார் கண்மணி. தன்னிச்சையாக பல கட்டப்பஞ்சாயத்துகளை நடத்தி முடித்து கல்லாக்கட்டியதால் தான் எஸ்.பி அலுவலகத்திலிருந்து மாற்றப்பட்டார். கந்துவட்டிக்குப் பணம் கொடுப்பவர்களை காவல்துறை கைது செய்வதை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், காவல்துறை ஆய்வாளரான இவரே பலருக்கு வட்டிக்குப் பணம் கொடுத்திருக்கிறார்.
சோதனை நடந்த கண்மணியின் வீடு
வட்டி வாங்கியதில் பலர் பெரும் புள்ளிகள் என்கிறார்கள். காவல்துறை ஆய்வாளர் என்பதால் வட்டி சரியான நேரத்திற்கு கொடுத்திருக்கிறார்கள். அதிலொருவர் வட்டி கொடுப்பதில் காலதாமதம் ஆனதால் ஆய்வாளர் கண்மணி அவரை மிரட்டியிருக்கிறார். இதனால் மன உளைச்சலடைந்த அந்த நபர், கண்மணி குறித்த பல தகவல்களை ஆதாரத்துடன் ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவுக்கு கொடுத்திருக்கிறார்
வழக்கமாக வருமானத்துக்கு அதிகமாக 15 சதவிகிதம் சொத்து இருந்தால் பெரிய பிரச்னை இல்லை. ஆனால், இவர் 171 சதவிகிதம் அதிகமாக சொத்து சேர்த்திருப்பதால்
கருத்துகள்