ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிதி விவரம்
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக இன்று பதிலளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி கீழ்காணும் தகவல்களை தெரிவித்தார்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 2018-19-ல் ரூ.73451.70 லட்சம் வழங்கப்பட்டு, ரூ.65318.84 லட்சம் பயன்படுத்தப்பட்டுள்ளது, 2019-20-ல் ரூ 74546.32 லட்சம் வழங்கப்பட்டு, ரூ 68212.89 லட்சம் பயன்படுத்தப்பட்டுள்ளது, 2020-21-ல் ரூ 70977.53 லட்சம் வழங்கப்பட்டு, ரூ 68736.15 லட்சம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு 2018-19-ல் ரூ 7895.14 லட்சம் வழங்கப்பட்டு, ரூ 8622.16 லட்சம் பயன்படுத்தப்பட்டுள்ளது, 2019-20-ல் ரூ 14915.36 லட்சம் வழங்கப்பட்டு, ரூ 10624.87 லட்சம் பயன்படுத்தப்பட்டுள்ளது, 2020-21-ல் ரூ 9636.91 லட்சம் வழங்கப்பட்டு, ரூ 7620.64 லட்சம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 2215 குழந்தைகள் நல மையங்களும், தமிழகத்தில் 229 மையங்களும் புதுச்சேரியில் 28 மையங்களும் நிறுவப்பட்டுள்ளன.குழந்தைகள் பாதுகாப்பு சேவைகள் திட்டம் - குழந்தைகள் பராமரிப்பு மையங்களுக்கு வழங்கப்படும் நிதி விவரம்: மத்திய அமைச்சர் பதில்
குழந்தைகள் பாதுகாப்பு சேவைகள் திட்டம் – மிஷன் வத்சாலயா திட்டத்தின்கீழ் குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களுக்காக மாநில அரசுகளின் தேவைகள் மற்றும் கோரிக்கைப்படி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் கடந்த 2019 – 20 ஆம் ஆண்டில் தமிழகத்தில் உள்ள 229 குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில் 13339 குழந்தைகள் பயன்பெற்றுள்ளனர். நடப்பு 2020 – 21 ஆம் ஆண்டில் மேற்சொன்ன 229 இல்லங்களில் 13819 குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளில் புதிதாக பராமரிக்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கை உயரவில்லை.
குழந்தைகள் பாதுகாப்பு சேவைகள் திட்டம் – மிஷன் வத்சாலயா கீழ் தமிழகத்தில் செயல்படும் குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களுக்காக கடந்த 2018 – 19 ஆண்டில் ரூ. 7895.14 லட்சமும், 2019 -20 ஆம் ஆண்டில் ரூ. 14915.36 லட்சமும், 2020 – 21 ஆம் ஆண்டில் ரூ. 9636.91 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2021- 22 ஆண்டில் (31 ஜனவரி 2021 படி) 2457.23 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் செயல்படும் குழந்தைகள் பராமரிப்பு மையங்களுக்காக ரூ. 24741.64 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்தகவலை மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக இன்று தாக்கல் செய்த பதிலில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
கருத்துகள்