கர்நாடகவில் புர்கா அணிந்து வந்த இஸ்லாமிய மாணவியை நோக்கி, காவித் தூண்டு அணிந்திருந்த மாணவர்கள் கோஷம் எழுப்பிய காணொளி வைரல்
கர்நாடகவில் புர்கா அணிந்து வந்த இஸ்லாமிய மாணவியை நோக்கி, காவித் தூண்டு அணிந்திருந்த மாணவர்கள் கோஷம் எழுப்பிய காணொளி வைரலாகிய நிலையில், தற்போது அந்த மாணவி தனக்கு நேர்ந்தது குறித்து
விளக்கமளித்துள்ளார்காலை மாண்டியாவில் பிஇஎஸ் கல்லூரிக்கு புர்கா அணிந்து தனியாக மாணவி ஒருவர் வந்ததைக் கண்ட காவித் துண்டு அணிந்த மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள், அவர் முன் நின்று ”ஜெய் ஸ்ரீராம்” என்று கோஷம் எழுப்பினர். அப்பெண்ணும் அம்மாணவர்களுக்கு எதிராக ”அல்லாஹு அக்பர்” என்று குரல் எழுப்பியபடி தன் பாதையில் நடந்தார். உடனே கல்லூரி ஊழியர்கள் வந்து மாணவியை அழைத்துச் சென்றனர். இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகிறது. காவித் தூண்டு அணிந்த மாணவர்களின் செயல் ஏற்புடையதல்ல என்றும், கல்லூரிகளில் வன்முறைக்கு இடமில்லை என்றும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அம்மாணவி முஸ்கான், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அளித்த பேட்டியில் விவரித்த போது, “நான் கவலைப்படவில்லை. எனது அசைன்மென்ட்டை ஒப்படைக்கவே கல்லூரிக்கு வந்தேன். புர்கா அணிந்ததால் என்னை அவர்கள் அனுமதிக்கவில்லை. என்னை நோக்கி ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் எழுப்பினர். அதனைத் தொடர்ந்தே நான் அல்லாஹு அக்பர் என்று கூற ஆரம்பித்தேன்.எனது இந்து நண்பர்கள் எனக்கு துணையாக இருந்தனர்.
காவித் துண்டு அணிந்திருந்தவர்கள் வெளியிலிருந்து வந்திருப்பதாக தெரிவித்தனர். நான் தொடர்ந்து ஹிஜாப் அணிவேன். இதற்கான போராட்டம் தொடரும். ஆடைக்காக அவர்கள் கல்வியை அழிக்கிறார்கள்" என்று தெரிவித்தார். முன்னதாக, ஹிஜாப் விவகாரத்தில் எதிர்வினை என்ற பெயரில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்த நிலையில், கர்நாடகாவில் அடுத்த மூன்று நாட்களுக்கு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார். பள்ளிச் சிறுடையில் வரவில்லையா அவர்கள்? எனக் கேட்கிறீர்களா என்ன புரிதல் உங்களுக்கு தேவை ?
தலையில் முக்காடு கூடாது என்பது தான் பள்ளியும் பாசகவும் செய்யும் அரசியல் நாடகம். டர்பன், தாடி இந்திய இராணுவத்தில் கூட அனுமதிக்கப்படுகிறது?
திருநீறும், நாமமும், குடுமியும் கூட பள்ளிகளில் அனுமதிக்கப்படுகிறது? ஆக மத சுதந்திரங்களில் தனிநபர்கள் மற்றும் வெளி நபர்கள் தலையிடும் செயல் அது நியாயமற்ற நிகழ்வாகவே பார்க்க முடியும் .
கருத்துகள்