முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உள்ளடக்கிய, சமமான மற்றும் தரமான கல்வி ஒவ்வொரு குழந்தையின் உரிமை: குடியரசுத் துணைத் தலைவர்

உள்ளடக்கிய, சமமான மற்றும் தரமான கல்வி ஒவ்வொரு குழந்தையின் உரிமை: குடியரசுத் துணைத் தலைவர்


அனைவரையும் உள்ளடக்கிய, சமமான மற்றும் தரமான கல்வி என்பது ஒவ்வொரு குழந்தையின் உரிமை என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு  வலியுறுத்தியுள்ளார். பின்தங்கிய மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவும் கொள்கைகளைத்  தனியார் பள்ளிகள் உருவாக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். ஆதரவற்றோர் மற்றும் நலிந்தோருக்கு உதவிக்கரம் நீட்டுவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றார் அவர்.


பெங்களூருவில் உள்ள கிரீன்வுட் உயர்நிலை சர்வதேசப் பள்ளியில் கலை, நாடகம் மற்றும் இசைக்கான நவீன உள்விளையாட்டு அரங்கம் உள்ளிட்டவற்றை இன்று திறந்து வைத்த பிறகு கூட்டத்தினரிடையே உரையாற்றிய திரு நாயுடு, இளம் வயதிலேயே சேவை உணர்வை வளர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.


"பள்ளிகள் தங்கள் பாடத்திட்டத்தில் சமூக சேவையை சேர்க்க வேண்டும், இதனால் சமுதாயத்திற்குத் திரும்பக் கொடுக்கும் மனப்பான்மையை குழந்தைகளிடம் இளம் வயதிலேயே வளர்க்க வேண்டும்," என்று குடியரசுத் துணைத் தலைவர் கூறினார்

படிப்பு, விளையாட்டு, இணைப்  பாடத்திட்டம் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கு கல்வி நிறுவனங்கள் சமமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்தினார். இத்தகைய அணுகுமுறை மாணவர்களின் ஒட்டுமொத்த முழுமையான  வளர்ச்சிக்கு வழிவகுத்து அவர்களை தன்னம்பிக்கை கொண்ட நபர்களாக   மாற்றும் என்றார் அவர்.

தோட்டம் அமைத்தல், மரம் வளர்ப்பு, நீர் சேமிப்பு போன்ற நடவடிக்கைகளில் கல்வி நிறுவனங்கள் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார். குழந்தைகளை இது இயற்கையுடன் நெருக்கமாக்கும், மேலும், குறைந்த அளவில் பயன்பாடு, மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி ஆகியவற்றை வலியுறுத்துவதன் மூலம் நீர் பாதுகாப்பின் அவசியத்தை மேலும் எடுத்துரைக்கும் என்றார்.

பாடப்புத்தகங்களுக்கு அப்பாற்பட்ட செயல்களுக்கும் தேசியக் கல்விக் கொள்கை-2020 முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய திரு நாயுடு, விளையாட்டு, இணைப்  பாடத்திட்டச்  செயல்பாடுகளுக்கும்  மற்றும் மாணவர்களிடையே உயர்ந்த நெறிமுறை வளர்ப்பதற்கும்  அனைத்து மாநிலங்களும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

'நன்னெறிகளின்  சிதைவு' குறித்து தமது கவலையை வெளிப்படுத்திய குடியரசுத் துணைத் தலைவர், நமது கலாச்சார  விழுமியங்களை உள்வாங்கி, இந்தியாவின் புகழ்பெற்ற பாரம்பரியத்தைப் பாதுகாக்க பாடுபடுமாறு மாணவர்களை வலியுறுத்தினார். "மதிப்புகளை நாம் மீட்டெடுக்க வேண்டும், பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும், நமது கலாச்சாரத்தை மேம்படுத்த வேண்டும், இந்தியராக இருப்பதில் பெருமிதம் கொள்ள வேண்டும்," என்று அவர் அறிவுறுத்தினார்

ஒரு காலத்தில் இந்தியா ‘உலகத்தின் குரு’ என்று அழைக்கப்பட்டது என்று கூறிய திரு நாயுடு, நீடித்த காலனித்துவ ஆட்சி நமது புகழ்பெற்ற கடந்த காலத்தை மறக்கச் செய்துள்ளது என்று சுட்டிக்காட்டினார். "இந்தியா இன்று முன்னேறுகிறது, இது நமது வேர்களுக்குத் திரும்புவதற்கான நேரம்" என்று அவர் மேலும் கூறினார்.

தாய்மொழியை மேம்படுத்துதல் மற்றும் பரப்புதல் ஆகியவற்றுக்கான தமது அறைகூவலை மீண்டும் வலியுறுத்திய குடியரசுத் துணைத் தலைவர், ஒருவர் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்கலாம், ஆனால் தாய்மொழியைகே  கற்பதற்கு  எப்போதும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று கருத்துத்  தெரிவித்தார்.

நமது அன்றாட வாழ்வில் உடல் தகுதியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த திரு நாயுடு, ஒவ்வொரு பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம், பஞ்சாயத்து மற்றும் கிராமம் ஆகியவற்றை  ஃபிட் இந்தியா இயக்கம் சென்றடைய வேண்டும் என விருப்பம் தெரிவித்தார்.

கலை வரம்பற்றது என்று குறிப்பிட்ட  திரு நாயுடு, கலை நமது கற்பனைக்கு வடிவம் கொடுக்கிறது என்றும் எல்லையே இல்லாத ஒரு உலகளாவிய மொழியைப் பேசுகிறது என்றும் கூறினார். இந்தியாவின் தனித்துவமான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட நடன வடிவங்களைக் குறிப்பிடுகையில், பரதநாட்டியம், குச்சிப்புடி, கதகளி உள்ளிட்டவை தலைமுறை தலைமுறையாக போற்றப்படும்  பழமையான கலை வடிவங்களில் சில என்று திரு நாயுடு குறிப்பிட்டார். மேலும், "இந்தியக்  கலை, இசை மற்றும் நாடகம் உலகிற்கு அதன் மிகப்பெரிய கொடையாகும். நமது வளமான மற்றும் பன்முகத்தன்மை வாய்ந்த கலை வடிவங்களைப் பாதுகாத்து மேம்படுத்துவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்" என்று அவர் கூறினார்.

கர்நாடக ஆளுநர் திரு தாவர் சந்த் கெலாட், கர்நாடக அமைச்சர் திரு முனிரத்னா, கிரீன்வுட் உயர்நிலைப் பள்ளியின் தலைவர் திரு பிஜாய் அகர்வால், முதல்வர் திரு அலோசியஸ் டி மெல்லோ, ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த