முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேசிய பங்கு சந்தையின் மந்தனத் தகவல்களைப் பகிர்ந்த சித்ரா கூறும் சாமியார் ஆணந்த சுப்ரமணியன் தானா என்பதே எழு வினா

தேசிய பங்கு சந்தையின் (NSE) முன்னாள் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணன். இவர் தொடர்ந்து பல ஆண்டுகளாக பங்குச் சந்தையின் ரகசியத் தகவல்களைப் பகிர்ந்ததாக  செபி கூறியுள்ளது.


குறித்து வெளியான அறிக்கையில், கடந்த 20 ஆண்டுகளாக இமயமலையில் வசிக்கும் சாமியார் ஒருவரிடம் பொருளாதார ஆலோசனைகளும் மற்றும் பங்குச் சந்தை ரகசியங்களையும் பகிர்ந்து வந்ததாகப் பேசப்படுகிறது.


குறிப்பாக இந்தச் சாமியரின் வழிகாட்டலின் படியே நிர்வாகத் தலைவரின் ஆலோசகராக ஆனந்த சுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் செபி கடுமையான குற்றச்சாட்டினை முன் வைத்துள்ளதில்


ரகசிய மெயில் மூலமாக சித்ராவுக்கு மெயில் வருவதும், அதனை அப்படியே செயல் படுத்துவதுமாக இருந்துள்ளதன் மூலம் ஆனந்த் சுப்ரமணியன் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல பலன்களைப் பெற்று வந்துள்ளார். குறிப்பாக பங்குச் சந்தையின் ரகசிய தகவல்கள் மூன்றாம் நபருக்கு பகிரப்பட்டுள்ளதால்  அது நிர்வாக குறைப்பாட்டினை சுட்டிக் காட்டுகின்றது. இது மோசமான நடத்தையென செபி தரப்புக் குற்றம் சாட்டியுள்ளது.


இமயமலையிலிருப்பதாகக் கூறப்படும் பெயர் வெளிடப்படாத அல்லது தெரியாத சாமியார் ரிக் யஜூர் சாம என வேதங்களின் பெயர்களில் உருவாக்கப்பட்டுள்ள இ.மெயில் ஐடி க்குதான்  ரகசியத் தகவல் பகிரப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளதும். இந்த மெயில் படி தான் என் எஸ் இ-யின் ஆலோசகராக நியமிக்கப்பட்ட ஆனந்த சுப்ரமணியனுக்கு, அடுத்தடுத்து மூன்று சம்பள உயர்வளித்து, 4 கோடி ரூபாய் சம்பளம் வழங்கியுள்ளதாகவும் செபி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது..


சித்ரா ராமகிருஷ்ணனுக்கு மூன்று கோடி ரூபாய் அபராதமும், ஆனந்த சுப்ரமனியனுக்கு இரண்டு கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.  மட்டும் அல்ல இனி வரும் மூன்று ஆண்டுகளுக்கு பங்குச் சந்தை நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாதெனவும் செபி அதிரடியான உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.இதில் செபி அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, அவரை?  20 ஆண்டுக்கு முன்னர் தான் பார்த்தேன்.. அதன் பிறகு ஒருசில இடங்களில் சந்தித்தேன். எனக்கு மானசீகமான வழிகாட்டி. அவர் ஒரு தவயோகி என்றெல்லாம் கூறியிருக்கிறார் சித்ரா ராமகிருஷ்ணன். ஆனால் சித்ரா சொன்னது அத்தனையும் பொய்யான தகவல்கள் என்பதை சோ கால்ட் சாமியார் அனுப்பிய மின்னஞ்சல்களைச் சுட்டிக்காட்டி பல ஊடகங்கள் எழுதியுள்ள நிலையில் .உதாரணமாக  2015-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ஆம் தேதி சாமியாரிடமிருந்து சித்ரா ராமகிருஷ்ணனுக்கு ஒரு இ மெயில் வருகிறது.


அதில், பேக்கை எல்லாம் ரெடியாக வெச்சிருங்க.. அடுத்த மாதம் ஷெஸில்ஸுக்கு போக ப்ளான் செய்திருக்கிறேன். என்னுடன் வர முடியுமானால் முயற்சி செய்யலாம். உங்களுக்கு தேவையானதை சேசு செய்வார். அப்புறம் நீச்சல் தெரிந்தால், அங்கே கடலில் குளித்துவிட்டு கடற்கரையில் ரெஸ்ட் எடுக்கலாம் என்றெல்லாம் நீள்கிறது அந்த மெயில்       இன்னொரு மின்னஞ்சல் சித்ரா ராமகிருஷ்ணன் அழகைப் பற்றியது. 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதியில் அந்த மெயில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதில் இன்னைக்கு நீங்கள் ரொம்ப அழகாக இருக்கீங்க.. உங்கள் தோற்றத்தை இன்னும் கவர்ச்சியாகவும் மாத்தனும்னா உங்கள் தலைமுடியை பிளாட் செய்யலாம். அதுக்கு நீங்கள் நிறைய கற்றுக் கொள்ளனும். மார்ச் மாதத்தின் நடுவில் கொஞ்சம் ப்ரீயாக இருங்க எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ஆம் தேதி மெயிலில், மகர குண்டல பாடலை கேட்டீங்களா? உங்கள் முகம் மற்றும் இதயத்திலிருந்து வரும் மகிழ்ச்சியைப் பார்த்து சந்தோஷப்படுகிறேன் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகர குண்டலம் என்பது திருப்புகழில் உள்ளது. இது காம உணர்வுகளை பக்தியுடன் இணைக்கக் கூடிய பாடல். மகர குண்டல பாடல் பற்றி சாமியார் தெரிந்திருக்க முடியுமெனில் அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராகவே இருக்க வாய்ப்புள்ளது என்பதையும் இந்த மெயில் வெளிப்படுத்துகிறது. மேலும் உங்களுடன் நேற்றைய நேரத்தைச் செலவிட்டேன். நீங்கள் செய்த இந்தச் சின்ன விஷயங்கள் உங்களை ரொம்பவே இளமையாக, சுறுசுறுப்பாகவும் வைத்திருக்குமெனவும் விலாவரியாக அந்தரங்கம் குறித்து பேசுவதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆக மறைமுக சாமியார் பிடியில் சித்ரா ராமகிருஷ்ணன்  செபிக்கு இழப்பு யார் காரணம் என்பது. விசாரணை முடிவில் இன்னும் முழுமையாக வரும் அது வரை காத்திருக்கலாம்.ஆட்டுவித்த சாமியார் தான் ஆனந்த் சுப்ரமணியனா?  இந்த முறைகேட்டை தடுக்க தவறியதற்காக என்எஸ்இ ஒழுங்கு அதிகாரி வி.ஆர்.நரசிம்மனுக்கு ரூபாய் .6 லட்சம் அபராதம்.

சித்ரா பதவியிலிருந்த மூன்று ஆண்டு காலத்தில் பல நிறுவனங்கள் அவரது செயல்பாடு குறித்தும், ஆனந்த சுப்ரமணியன் குறித்தும் செபிக்கு புகார்கள் அளித்திருந்த போதும் குற்றச்சாட்டு தொடர்பாக செபி இப்போதுதான் புலனாய்வு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது., சித்ரா ராமகிருஷ்ணன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். மும்பையில் அவரது வீடு, அலுவலகம் அவருக்குத் தொடர்பான இடங்களில் சோதனை நடந்தது. வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக இந்தச் சோதனை நடைபெறுவதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்

சித்ரா பதவியிலிருந்த காலத்தில் தினசரி 49 கோடி வர்த்தக நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்திருக்கிறார். இதன் மதிப்பு தினசரி 64 ஆயிரம் கோடி ரூபாய் எனத் தெரிகிறது. இத்தனை ஆயிரம் கோடி வர்த்தகத்தையும் சித்ரா மூலம் கட்டுப்படுத்தி ஊழல் செய்தும், செய்ய வைத்துமிருக்கிறார் அந்த சாமியார். சித்ராவே சாமியார் மாதிரி ஒரு பினாமி பெயரில் இயங்கினாரா அல்லது சாமியார் சிபாரிசு செய்த ஆனந்த் சுப்ரமணியன் தான் அந்த சாமியாரா என்று கேள்வியும் சந்தேகமும் தற்போது எழுப்பப்படுகிறது. அதுவும் நியாயம் தானே.

ஆனந்த் சுப்ரமணியன் மனித உளவியலில் பரிச்சயம் கொண்டவர் என்றும், அவர் தான் இமயமலை சாமியாராக புனைந்து சித்ராவை தன் விருப்பப்படி ஆட்டி வைத்துள்ளார் என்றும் கூறப்படவே . 2018 ஆம் ஆண்டில் தேசியப் பங்குச் சந்தை, செபிக்கு ஒரு கடிதம் அளித்திருக்கிறது.


அதில் மனித உளவியலில் நன்கு பரிச்சயம் கொண்ட ஆனந்த் சுப்ரமணியன் தான் அந்த சாமியார் என்றும், அவரே சாமியார் பெயரில் சித்ராவை கைப்பாவையாக நடத்தியிருக்கிறார் என்றும் கூறியிருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...