முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேசிய பங்கு சந்தையின் மந்தனத் தகவல்களைப் பகிர்ந்த சித்ரா கூறும் சாமியார் ஆணந்த சுப்ரமணியன் தானா என்பதே எழு வினா

தேசிய பங்கு சந்தையின் (NSE) முன்னாள் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணன். இவர் தொடர்ந்து பல ஆண்டுகளாக பங்குச் சந்தையின் ரகசியத் தகவல்களைப் பகிர்ந்ததாக  செபி கூறியுள்ளது.


குறித்து வெளியான அறிக்கையில், கடந்த 20 ஆண்டுகளாக இமயமலையில் வசிக்கும் சாமியார் ஒருவரிடம் பொருளாதார ஆலோசனைகளும் மற்றும் பங்குச் சந்தை ரகசியங்களையும் பகிர்ந்து வந்ததாகப் பேசப்படுகிறது.


குறிப்பாக இந்தச் சாமியரின் வழிகாட்டலின் படியே நிர்வாகத் தலைவரின் ஆலோசகராக ஆனந்த சுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் செபி கடுமையான குற்றச்சாட்டினை முன் வைத்துள்ளதில்


ரகசிய மெயில் மூலமாக சித்ராவுக்கு மெயில் வருவதும், அதனை அப்படியே செயல் படுத்துவதுமாக இருந்துள்ளதன் மூலம் ஆனந்த் சுப்ரமணியன் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல பலன்களைப் பெற்று வந்துள்ளார். குறிப்பாக பங்குச் சந்தையின் ரகசிய தகவல்கள் மூன்றாம் நபருக்கு பகிரப்பட்டுள்ளதால்  அது நிர்வாக குறைப்பாட்டினை சுட்டிக் காட்டுகின்றது. இது மோசமான நடத்தையென செபி தரப்புக் குற்றம் சாட்டியுள்ளது.


இமயமலையிலிருப்பதாகக் கூறப்படும் பெயர் வெளிடப்படாத அல்லது தெரியாத சாமியார் ரிக் யஜூர் சாம என வேதங்களின் பெயர்களில் உருவாக்கப்பட்டுள்ள இ.மெயில் ஐடி க்குதான்  ரகசியத் தகவல் பகிரப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளதும். இந்த மெயில் படி தான் என் எஸ் இ-யின் ஆலோசகராக நியமிக்கப்பட்ட ஆனந்த சுப்ரமணியனுக்கு, அடுத்தடுத்து மூன்று சம்பள உயர்வளித்து, 4 கோடி ரூபாய் சம்பளம் வழங்கியுள்ளதாகவும் செபி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது..


சித்ரா ராமகிருஷ்ணனுக்கு மூன்று கோடி ரூபாய் அபராதமும், ஆனந்த சுப்ரமனியனுக்கு இரண்டு கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.  மட்டும் அல்ல இனி வரும் மூன்று ஆண்டுகளுக்கு பங்குச் சந்தை நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாதெனவும் செபி அதிரடியான உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.இதில் செபி அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, அவரை?  20 ஆண்டுக்கு முன்னர் தான் பார்த்தேன்.. அதன் பிறகு ஒருசில இடங்களில் சந்தித்தேன். எனக்கு மானசீகமான வழிகாட்டி. அவர் ஒரு தவயோகி என்றெல்லாம் கூறியிருக்கிறார் சித்ரா ராமகிருஷ்ணன். ஆனால் சித்ரா சொன்னது அத்தனையும் பொய்யான தகவல்கள் என்பதை சோ கால்ட் சாமியார் அனுப்பிய மின்னஞ்சல்களைச் சுட்டிக்காட்டி பல ஊடகங்கள் எழுதியுள்ள நிலையில் .உதாரணமாக  2015-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ஆம் தேதி சாமியாரிடமிருந்து சித்ரா ராமகிருஷ்ணனுக்கு ஒரு இ மெயில் வருகிறது.


அதில், பேக்கை எல்லாம் ரெடியாக வெச்சிருங்க.. அடுத்த மாதம் ஷெஸில்ஸுக்கு போக ப்ளான் செய்திருக்கிறேன். என்னுடன் வர முடியுமானால் முயற்சி செய்யலாம். உங்களுக்கு தேவையானதை சேசு செய்வார். அப்புறம் நீச்சல் தெரிந்தால், அங்கே கடலில் குளித்துவிட்டு கடற்கரையில் ரெஸ்ட் எடுக்கலாம் என்றெல்லாம் நீள்கிறது அந்த மெயில்       இன்னொரு மின்னஞ்சல் சித்ரா ராமகிருஷ்ணன் அழகைப் பற்றியது. 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதியில் அந்த மெயில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதில் இன்னைக்கு நீங்கள் ரொம்ப அழகாக இருக்கீங்க.. உங்கள் தோற்றத்தை இன்னும் கவர்ச்சியாகவும் மாத்தனும்னா உங்கள் தலைமுடியை பிளாட் செய்யலாம். அதுக்கு நீங்கள் நிறைய கற்றுக் கொள்ளனும். மார்ச் மாதத்தின் நடுவில் கொஞ்சம் ப்ரீயாக இருங்க எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ஆம் தேதி மெயிலில், மகர குண்டல பாடலை கேட்டீங்களா? உங்கள் முகம் மற்றும் இதயத்திலிருந்து வரும் மகிழ்ச்சியைப் பார்த்து சந்தோஷப்படுகிறேன் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகர குண்டலம் என்பது திருப்புகழில் உள்ளது. இது காம உணர்வுகளை பக்தியுடன் இணைக்கக் கூடிய பாடல். மகர குண்டல பாடல் பற்றி சாமியார் தெரிந்திருக்க முடியுமெனில் அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராகவே இருக்க வாய்ப்புள்ளது என்பதையும் இந்த மெயில் வெளிப்படுத்துகிறது. மேலும் உங்களுடன் நேற்றைய நேரத்தைச் செலவிட்டேன். நீங்கள் செய்த இந்தச் சின்ன விஷயங்கள் உங்களை ரொம்பவே இளமையாக, சுறுசுறுப்பாகவும் வைத்திருக்குமெனவும் விலாவரியாக அந்தரங்கம் குறித்து பேசுவதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆக மறைமுக சாமியார் பிடியில் சித்ரா ராமகிருஷ்ணன்  செபிக்கு இழப்பு யார் காரணம் என்பது. விசாரணை முடிவில் இன்னும் முழுமையாக வரும் அது வரை காத்திருக்கலாம்.ஆட்டுவித்த சாமியார் தான் ஆனந்த் சுப்ரமணியனா?  இந்த முறைகேட்டை தடுக்க தவறியதற்காக என்எஸ்இ ஒழுங்கு அதிகாரி வி.ஆர்.நரசிம்மனுக்கு ரூபாய் .6 லட்சம் அபராதம்.

சித்ரா பதவியிலிருந்த மூன்று ஆண்டு காலத்தில் பல நிறுவனங்கள் அவரது செயல்பாடு குறித்தும், ஆனந்த சுப்ரமணியன் குறித்தும் செபிக்கு புகார்கள் அளித்திருந்த போதும் குற்றச்சாட்டு தொடர்பாக செபி இப்போதுதான் புலனாய்வு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது., சித்ரா ராமகிருஷ்ணன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். மும்பையில் அவரது வீடு, அலுவலகம் அவருக்குத் தொடர்பான இடங்களில் சோதனை நடந்தது. வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக இந்தச் சோதனை நடைபெறுவதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்

சித்ரா பதவியிலிருந்த காலத்தில் தினசரி 49 கோடி வர்த்தக நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்திருக்கிறார். இதன் மதிப்பு தினசரி 64 ஆயிரம் கோடி ரூபாய் எனத் தெரிகிறது. இத்தனை ஆயிரம் கோடி வர்த்தகத்தையும் சித்ரா மூலம் கட்டுப்படுத்தி ஊழல் செய்தும், செய்ய வைத்துமிருக்கிறார் அந்த சாமியார். சித்ராவே சாமியார் மாதிரி ஒரு பினாமி பெயரில் இயங்கினாரா அல்லது சாமியார் சிபாரிசு செய்த ஆனந்த் சுப்ரமணியன் தான் அந்த சாமியாரா என்று கேள்வியும் சந்தேகமும் தற்போது எழுப்பப்படுகிறது. அதுவும் நியாயம் தானே.

ஆனந்த் சுப்ரமணியன் மனித உளவியலில் பரிச்சயம் கொண்டவர் என்றும், அவர் தான் இமயமலை சாமியாராக புனைந்து சித்ராவை தன் விருப்பப்படி ஆட்டி வைத்துள்ளார் என்றும் கூறப்படவே . 2018 ஆம் ஆண்டில் தேசியப் பங்குச் சந்தை, செபிக்கு ஒரு கடிதம் அளித்திருக்கிறது.


அதில் மனித உளவியலில் நன்கு பரிச்சயம் கொண்ட ஆனந்த் சுப்ரமணியன் தான் அந்த சாமியார் என்றும், அவரே சாமியார் பெயரில் சித்ராவை கைப்பாவையாக நடத்தியிருக்கிறார் என்றும் கூறியிருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த