தேசிய பங்கு சந்தையின் மந்தனத் தகவல்களைப் பகிர்ந்த சித்ரா கூறும் சாமியார் ஆணந்த சுப்ரமணியன் தானா என்பதே எழு வினா
தேசிய பங்கு சந்தையின் (NSE) முன்னாள் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணன். இவர் தொடர்ந்து பல ஆண்டுகளாக பங்குச் சந்தையின் ரகசியத் தகவல்களைப் பகிர்ந்ததாக செபி கூறியுள்ளது.
குறித்து வெளியான அறிக்கையில், கடந்த 20 ஆண்டுகளாக இமயமலையில் வசிக்கும் சாமியார் ஒருவரிடம் பொருளாதார ஆலோசனைகளும் மற்றும் பங்குச் சந்தை ரகசியங்களையும் பகிர்ந்து வந்ததாகப் பேசப்படுகிறது.
குறிப்பாக இந்தச் சாமியரின் வழிகாட்டலின் படியே நிர்வாகத் தலைவரின் ஆலோசகராக ஆனந்த சுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் செபி கடுமையான குற்றச்சாட்டினை முன் வைத்துள்ளதில்
ரகசிய மெயில் மூலமாக சித்ராவுக்கு மெயில் வருவதும், அதனை அப்படியே செயல் படுத்துவதுமாக இருந்துள்ளதன் மூலம் ஆனந்த் சுப்ரமணியன் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல பலன்களைப் பெற்று வந்துள்ளார். குறிப்பாக பங்குச் சந்தையின் ரகசிய தகவல்கள் மூன்றாம் நபருக்கு பகிரப்பட்டுள்ளதால் அது நிர்வாக குறைப்பாட்டினை சுட்டிக் காட்டுகின்றது. இது மோசமான நடத்தையென செபி தரப்புக் குற்றம் சாட்டியுள்ளது.
இமயமலையிலிருப்பதாகக் கூறப்படும் பெயர் வெளிடப்படாத அல்லது தெரியாத சாமியார் ரிக் யஜூர் சாம என வேதங்களின் பெயர்களில் உருவாக்கப்பட்டுள்ள இ.மெயில் ஐடி க்குதான் ரகசியத் தகவல் பகிரப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளதும். இந்த மெயில் படி தான் என் எஸ் இ-யின் ஆலோசகராக நியமிக்கப்பட்ட ஆனந்த சுப்ரமணியனுக்கு, அடுத்தடுத்து மூன்று சம்பள உயர்வளித்து, 4 கோடி ரூபாய் சம்பளம் வழங்கியுள்ளதாகவும் செபி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது..
சித்ரா ராமகிருஷ்ணனுக்கு மூன்று கோடி ரூபாய் அபராதமும், ஆனந்த சுப்ரமனியனுக்கு இரண்டு கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மட்டும் அல்ல இனி வரும் மூன்று ஆண்டுகளுக்கு பங்குச் சந்தை நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாதெனவும் செபி அதிரடியான உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.இதில் செபி அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, அவரை? 20 ஆண்டுக்கு முன்னர் தான் பார்த்தேன்.. அதன் பிறகு ஒருசில இடங்களில் சந்தித்தேன். எனக்கு மானசீகமான வழிகாட்டி. அவர் ஒரு தவயோகி என்றெல்லாம் கூறியிருக்கிறார் சித்ரா ராமகிருஷ்ணன். ஆனால் சித்ரா சொன்னது அத்தனையும் பொய்யான தகவல்கள் என்பதை சோ கால்ட் சாமியார் அனுப்பிய மின்னஞ்சல்களைச் சுட்டிக்காட்டி பல ஊடகங்கள் எழுதியுள்ள நிலையில் .உதாரணமாக 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ஆம் தேதி சாமியாரிடமிருந்து சித்ரா ராமகிருஷ்ணனுக்கு ஒரு இ மெயில் வருகிறது.
அதில், பேக்கை எல்லாம் ரெடியாக வெச்சிருங்க.. அடுத்த மாதம் ஷெஸில்ஸுக்கு போக ப்ளான் செய்திருக்கிறேன். என்னுடன் வர முடியுமானால் முயற்சி செய்யலாம். உங்களுக்கு தேவையானதை சேசு செய்வார். அப்புறம் நீச்சல் தெரிந்தால், அங்கே கடலில் குளித்துவிட்டு கடற்கரையில் ரெஸ்ட் எடுக்கலாம் என்றெல்லாம் நீள்கிறது அந்த மெயில் இன்னொரு மின்னஞ்சல் சித்ரா ராமகிருஷ்ணன் அழகைப் பற்றியது. 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதியில் அந்த மெயில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதில் இன்னைக்கு நீங்கள் ரொம்ப அழகாக இருக்கீங்க.. உங்கள் தோற்றத்தை இன்னும் கவர்ச்சியாகவும் மாத்தனும்னா உங்கள் தலைமுடியை பிளாட் செய்யலாம். அதுக்கு நீங்கள் நிறைய கற்றுக் கொள்ளனும். மார்ச் மாதத்தின் நடுவில் கொஞ்சம் ப்ரீயாக இருங்க எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ஆம் தேதி மெயிலில், மகர குண்டல பாடலை கேட்டீங்களா? உங்கள் முகம் மற்றும் இதயத்திலிருந்து வரும் மகிழ்ச்சியைப் பார்த்து சந்தோஷப்படுகிறேன் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகர குண்டலம் என்பது திருப்புகழில் உள்ளது. இது காம உணர்வுகளை பக்தியுடன் இணைக்கக் கூடிய பாடல். மகர குண்டல பாடல் பற்றி சாமியார் தெரிந்திருக்க முடியுமெனில் அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராகவே இருக்க வாய்ப்புள்ளது என்பதையும் இந்த மெயில் வெளிப்படுத்துகிறது. மேலும் உங்களுடன் நேற்றைய நேரத்தைச் செலவிட்டேன். நீங்கள் செய்த இந்தச் சின்ன விஷயங்கள் உங்களை ரொம்பவே இளமையாக, சுறுசுறுப்பாகவும் வைத்திருக்குமெனவும் விலாவரியாக அந்தரங்கம் குறித்து பேசுவதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆக மறைமுக சாமியார் பிடியில் சித்ரா ராமகிருஷ்ணன் செபிக்கு இழப்பு யார் காரணம் என்பது. விசாரணை முடிவில் இன்னும் முழுமையாக வரும் அது வரை காத்திருக்கலாம்.ஆட்டுவித்த சாமியார் தான் ஆனந்த் சுப்ரமணியனா? இந்த முறைகேட்டை தடுக்க தவறியதற்காக என்எஸ்இ ஒழுங்கு அதிகாரி வி.ஆர்.நரசிம்மனுக்கு ரூபாய் .6 லட்சம் அபராதம்.
சித்ரா பதவியிலிருந்த மூன்று ஆண்டு காலத்தில் பல நிறுவனங்கள் அவரது செயல்பாடு குறித்தும், ஆனந்த சுப்ரமணியன் குறித்தும் செபிக்கு புகார்கள் அளித்திருந்த போதும் குற்றச்சாட்டு தொடர்பாக செபி இப்போதுதான் புலனாய்வு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது., சித்ரா ராமகிருஷ்ணன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். மும்பையில் அவரது வீடு, அலுவலகம் அவருக்குத் தொடர்பான இடங்களில் சோதனை நடந்தது. வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக இந்தச் சோதனை நடைபெறுவதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்
சித்ரா பதவியிலிருந்த காலத்தில் தினசரி 49 கோடி வர்த்தக நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்திருக்கிறார். இதன் மதிப்பு தினசரி 64 ஆயிரம் கோடி ரூபாய் எனத் தெரிகிறது. இத்தனை ஆயிரம் கோடி வர்த்தகத்தையும் சித்ரா மூலம் கட்டுப்படுத்தி ஊழல் செய்தும், செய்ய வைத்துமிருக்கிறார் அந்த சாமியார். சித்ராவே சாமியார் மாதிரி ஒரு பினாமி பெயரில் இயங்கினாரா அல்லது சாமியார் சிபாரிசு செய்த ஆனந்த் சுப்ரமணியன் தான் அந்த சாமியாரா என்று கேள்வியும் சந்தேகமும் தற்போது எழுப்பப்படுகிறது. அதுவும் நியாயம் தானே.
ஆனந்த் சுப்ரமணியன் மனித உளவியலில் பரிச்சயம் கொண்டவர் என்றும், அவர் தான் இமயமலை சாமியாராக புனைந்து சித்ராவை தன் விருப்பப்படி ஆட்டி வைத்துள்ளார் என்றும் கூறப்படவே . 2018 ஆம் ஆண்டில் தேசியப் பங்குச் சந்தை, செபிக்கு ஒரு கடிதம் அளித்திருக்கிறது.
அதில் மனித உளவியலில் நன்கு பரிச்சயம் கொண்ட ஆனந்த் சுப்ரமணியன் தான் அந்த சாமியார் என்றும், அவரே சாமியார் பெயரில் சித்ராவை கைப்பாவையாக நடத்தியிருக்கிறார் என்றும் கூறியிருக்கிறது.
கருத்துகள்