அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையின் போது பிறப்புச் சான்றிதழின் அடிப்படையில் மாணவரது பதிவு
தமிழகத்தின் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள அறிவிப்பில் ., 10,11, மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மதிப்பெண் சான்றிதழ்களில் பெயர் திருத்தம் கோரி அதிக விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. பிழையில்லா மதிப்பெண் சான்றிதழ்களை அச்சிட்டு வழங்குவற்கு ஏதுவாக பள்ளிகளில் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையின் போது பிறப்புச் சான்றிதழின் அடிப்படையில் மாணவரது பெயர், தாய், தந்தையார் பெயர் (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்), பிறந்ததேதி ஆகியவற்றை மாணவர் சேர்க்கைப் பதிவேட்டில் கட்டாயம் பதிவு செய்தல் வேண்டும். 2020 - 2021 ஆம் கல்வி ஆண்டு முதல் அனைத்துப் பள்ளிகளிலும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச்சான்றிதழ்களில் மாணவரது பெயர், தாய், தந்தை பெயர் ஆகியவற்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவு செய்து வழங்குவதற்கு ஒரே மாதிரி படிவத்தினை (Uniform format) பயன்படுத்த வேண்டும்.
பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலைப்பள்ளி பொதுத்தேர்வுகளுக்கான பள்ளி மாணவர்கள் பெயர் பட்டியலின் அடிப்படையிலேயே மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சிட்டு வழங்கப்படுகின்றன. பெயர்பட்டியல் கல்வித்தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் உள்ள விவரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்படுவதால், பள்ளித் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களது பெயர், தாய், தந்தை / பாதுகாவலரது பெயர் (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்) மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை EMIS ல் பதிவேற்றம் செய்யும் பொழுது எவ்வித தவறும் இல்லாமல் சரியாகப் பதிவு செய்திருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.
பள்ளி சேர்க்கை விண்ணப்பம், சேர்க்கை நீக்கல் பதிவேடு மற்றும் பள்ளி மாற்றுச் சான்றிதழ்களில் தாய் , தந்தை ,பாதுகாவலர் பெயர் (தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும்) மற்றும் தாய்மொழி ஆகிய இனங்கள் புதிதாக EMIS-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
எனவே, அனைத்துப் பள்ளிகளிலும் சேர்க்கை விண்ணப்பம், மாணவர் சேர்க்கைப் பதிவேடு மற்றும் பள்ளி மாற்றுச் சான்றிதழில், மாணவரது பெயர், தாய், தந்தை, பாதுகாவலர் பெயர் (தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும்), பிறந்த தேதி ஆகிய விவரங்களை பிழையின்றி தெளிவாக பதிவு செய்ய வேண்டும் என அநீத உத்தரவு மூலம் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்