இந்திய சினிமாவின் நைட்டிங்கேல் ஆக திகழ்ந்த பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கரின் மறைவு தலைவர்கள் இரங்கல்
பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். ‘’இந்திய சினிமாவின் நைட்டிங்கேலின்’’ மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள திரு நாயுடு, ‘’ லதா அவர்களின் மறைவால், இந்தியா தனது குரலை இழந்து விட்டது’’ என்று தெரிவித்துள்ளார்.
கலைச்சோலையில் பாடிக்கொண்டிருந்த கானக்குயில் பறந்தோடிவிட்டது.கலைச்சோலையில் பாடிக்கொண்டிருந்த கானக்குயில் பறந்தோடிவிட்டது. லதாமங்கேஷ்கரின் தேன்மதுரக் குரல் நம்மோடு என்றும் பயணிக்கும். பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கல் சுஸ்ரீ லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பிப்ரவரி 6ஆம் தேதி முதல் இரண்டு நாட்கள் அரசு துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
சுஸ்ரீ லதா மங்கேஷ்கர் இன்று காலமானார் என்பதை இந்திய அரசு ஆழ்ந்த வருத்தத்துடன் அறிவித்துள்ளது. மறைந்த பிரமுகருக்கு மரியாதை செலுத்தும் வகையில், இந்தியா முழுவதும் இன்று முதல் இரண்டு நாட்கள் அரசுமுறை துக்கம் அனுசரிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
06.02.2022 மற்றும் 07.02.2022 ஆகிய நாட்களில் இந்தியா முழுவதும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும், மேலும் அரசுமுறை உபசரிப்பு மற்றும் பொழுதுபோக்கு எதுவும் இருக்காது.
சுஸ்ரீ லதா மங்கேஷ்கருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.‘பாரத ரத்னா’ லதா மங்கேஷ்கர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி- ஒரு சிறப்புப் பந்தம்
லதா மங்கேஷ்கர் அவர்களுக்கும், பிரதமர் திரு நரேந்திர மோடிக்கும் இடையிலான சிறப்புப் பந்தத்தை விளக்கும் விரிவான கட்டுரை பிரதமரின் வலைதளமான narendramodi.in.-ல் பகிரப்பட்டுள்ளது.
பிரதமரின் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
‘’‘பாரத ரத்னா’ லதா தீதி மற்றும் பிரதமர் @narendramodi ஒரு சிறப்பு பந்தம்
https://t.co/tiSTrSm715
நமோ செயலி மூலம்
அவரது இரங்கல் செய்தி வருமாறு;
‘’இந்திய சினிமாவின் நைட்டிங்கேல் ஆக திகழ்ந்த பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கரின் மறைவால் மிகவும் வேதனையடைந்துள்ளேன். லதா அவர்களின் மறைவால், இந்தியா தனது குரலை இழந்து விட்டது. இந்தியா மற்றும் உலகம் முழுவதும் இசை விரும்பிகளை தமது மெல்லிய, கம்பீரமான குரலால் பல தசாப்தங்களாக அவர் பரவசமடைய வைத்துள்ளார்பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். அவரது குடும்பத்தினருடன் பேசிய பிரதமர் தமது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார். இந்திய கலாச்சாரத்தின் சின்னம் என்று வருங்கால தலைமுறையினர் அவரை நினைவுகூர்வர் என்று பிரதமர் கூறினார். அவரது இனிமையான குரல் மக்களை வசியப்படுத்தும் ஒப்பற்ற திறனைப் பெற்றிருந்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள தொடர் டுவிட்டர் பதிவுகளில் கூறியிருப்பதாவது;
‘’ நான் சொல்லொணா துயரத்தில் உள்ளேன். அன்பான, கனிவான லதா தீதி நம்மோடு இல்லை. அவர் நமது தேசத்தில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை உருவாக்கி பிரிந்துள்ளார். ஈடுஇணையற்ற காந்தக் குரலுடன் மக்களை வசீகரித்த இந்திய கலாச்சாரத்தின் சின்னமாக திகழ்ந்த இவரை வருங்கால தலைமுறையினர் நினைவில் கொள்வார்.
லதா தீதியின் பாடல்கள் பல்வேறு உணர்ச்சிகளை வெளிக் கொண்டு வந்துள்ளன. பல தசாப்தங்களாக இந்திய சினிமா உலகின் மாற்றத்திற்கு முக்கிய காரணமாக இருந்தார். சினிமாவைத் தாண்டி இந்தியாவின் வளர்ச்சியை அவர் எப்போதும் விரும்பினார். வலிமையான முன்னேறிய இந்தியாவை எப்போதும் காண அவர் விரும்பினார்.
லதா தீதியிடம் நான் எப்போதும் அளவற்ற பாசத்தைப் பெற்றிருந்ததை எனது பெருமையாகக் கருதுகிறேன். அவருடனான எனது தொடர்பு மறக்க முடியாததாக இருக்கும். லதா தீதியின் மறைவால் எனது சக இந்தியர்களுடன் நான் துக்கப்படுகிறேன். அவரது குடும்பத்தினரிடம் பேசி ஆறுதல் கூறினேன். ஓம் சாந்தி.
கருத்துகள்