முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எம் எல் எம் மோசடிக் கும்பல் தமிழகம் முழுவதும் நடத்திய கிரிப்ட்டோ கரண்சி மோசடி பல கோடி ஸ்வாஹா

கிரிப்டோகரன்சி முதலீடு என ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி- 


எம் எல் எம் மோசடிக் கும்பல் தமிழகம் முழுவதும் நடத்திய கிரிப்ட்டோ கரண்சி மோசடி பல கோடி ஸ்வாஹா!. சதுரங்கவேட்டை பட பாணியில் ஏமாந்த மதுரை மற்றும் புதுக்கோட்டை சிவகங்கை மக்கள்

சதுரங்கவேட்டை திரைப்படப்  பாணியில் கிரிப்டோகரன்சி முதலீட்டில் இடைத்தரகர்கள்  கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட நிலையில் அவர்கள் மீது  மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்கள்  அளித்துள்ளார் அதுகுறித்து விபரம் வருமாறு :- முதலில் மதுரை முனிச்சாலை பகுதியைச் சேர்ந்த பாண்டிக்கருப்பன் என்ற நபர் ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை அலுவலர் அவரது மனைவியான கோமதி சேலைகள் வாங்கி விற்பனை  செய்து வந்த நிலையில் மதுரை ஐயர்பங்களாவைச் சேர்ந்த பாண்டித்துரை கோமதி குடும்ப நண்பர் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் நல்ல இலாபம் கிடைக்கும் எனக் கூறி கோயம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மற்றும் ரெஜினாகுமாரி என இருவரை அறிமுகப்படுத்தியதில் 

அவர்கள்  கோமதி குடும்பத்தில் பேசி கிரிப்டோ காயினில் 8000 ரூபாய் முதலீடு செய்த நிலையில், எம்.எல்.எம் எனும் இறுதியில் நடக்கும் மோசடி போல பல முதலீட்டாளர்களை  உறுப்பினர்களாக இணைத்துவிட்டால் சில மாதங்களில் பல கோடி  லாபம் ஈட்டுவதோடு பி.எம்.டபிள்யூ கார் போன்ற ஆடம்பர வசதியான கார்கள் கிடைக்கும் என ஆசைவார்த்தை கூறியதையடுத்து மதுரை காளவாசல் பகுதி பிரபல தங்கும்விடுதியில் கிரிப்டோகரன்சி டுபாக்கூர் நிறுவனத்தின் தலைவர் என கந்தசாமி என்பவர் வருவதாகக் கூறி கோமதியையும் கோமதி சேர்த்துவிட்ட உறுப்பினர்களையும் அழைத்து வரக்கூறி, அங்கு நடைபெற்ற பிரமாண்ட நிகழ்ச்சியில் 200 பேர் கலந்துகொண்ட நிலையில், உறுப்பினர்கள் தலா 4,000 ரூபாயை செலுத்திவிட்டு ஐடியை வாங்கிகொள்ளுமாறு கூறியுள்ளனர்.

மேலும் கோமதியை தனியாக சந்தித்து நீங்கள் முதல் உறுப்பினராக இணைந்துள்ளதால் 5 லட்சம் ரூபாய் செலுத்தி, உடனடியாக அதற்குரிய கிரிப்டோகரன்சியை பெற்றுகொள்ளுமாறு கூறியுள்ளனர்.


இதனையடுத்து கோவிந்தசாமி, ஆறுமுகம், ரெஜினா குமாரி ஆகிய மூவரும் தங்கியிருந்த விடுதிக்கு நேரில் சென்ற கோமதி மற்றும் அவரது கணவர் பாண்டிக்கருப்பன் ஆகிய இருவரும் 3.75 லட்சம் ரூபாய் பணத்தை வழங்கியுள்ளனர். அப்போது கிரிப்டோகரன்சி காயினை தருமாறு கேட்ட நிலையில் கிரிப்டோகரன்சி நிறுவனத்தலைவர் கந்தசாமியிடம் தான் உள்ளது எனவும், இரண்டே நாளில் வீடுதேடி வந்து காயினை தருவதாகவும் கூறியுள்ளனர்.



ஆனால் சில நாட்கள் ஆகியும் காயின் தராத நிலையில் தனது பணத்தையாவது திரும்ப தருமாறு கோமதி கேட்டநிலையில், பணம் தராமல் ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டதோடு இதுபோன்று பல்வேறு பகுதிகளில் தாங்கள் ஏமாற்றிவருவதாகவும் கூறி மிட்டியுள்ளனர். இதையடுத்து கிரிப்டோகரன்சி என்ற பெயரில் பல கோடி ரூபாய் பணமோசடியில் அவர்கள் ஈடுபட்டு வருவதைக்கூறி் பாதிக்கப்பட்ட கோமதி மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள நிலையில் எந்த விசாரணையும் தொடங்காத நிலையில் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் கிரிப்டோ கரண்சி நிறுவனத்தின் தலைவர் என்று கூறப்பட்ட கந்தசாமி மற்றும் அவரது நண்பர்கள் சிலர் கிரிப்டோகரன்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகக் கூறி மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள செய்தியாளர் அரங்கில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பாதிக்கப்பட்ட கோமதி மற்றும் அவருடன் வந்த சில பெண்கள் ஆறுமுகத்தை மடக்கி பணத்தை கேட்க முயன்றபோது திடீரென செய்தியாளர் சந்திப்பை வேகமாக முடித்துவிட்டு அங்கிருந்து காவல்துறையினரின் முன்பாகவே அவசர அசரமாக இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.


தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள ஆடம்பர தங்கும் விடுதிகளில் தங்கவைத்து சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில் பல்வேறு நபர்களிடம் கோடிக்கணக்கில் ஏமாற்றி மோசடி செய்த கும்பல், காவல்துறை முன்பாகவே தப்பியோடிய நிலையில் தாங்கள் சேர்த்துவைத்த பணத்தையும் இழந்ததோடு, உறுப்பினர்களிடமிருந்து வாங்கிக்கொடுத்த பணத்திற்கும் பதில் சொல்லமுடியாமல் கோமதி அதே இடத்தில் பரிதாபமாக நின்றார். அதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை KLKS நகர், பகுதியில் வசிக்கும் பி.சந்திரசேகரன் வயது 52 அவர் சென்னை  மாநகரத்தின் காவல் ஆணையர், கிரேட்டர் சென்னை அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் பல முதலீட்டாளர்களை ஏமாற்றி மோசடி செய்ததற்காக, கிரிப்டோ கரன்சியை வாங்குவதற்கும் விற்பதற்கும், www.efixgrow.com என்ற இணையதளத்தின் உரிமையாளர் எஸ்.தேவானந்த் மீது புகார் பதிவு செய்வதற்கான கோரிக்கை வைத்துள்ளதில் ரூபாய் 70,00,000/-, அவரை மோசடி செய்த நபர் குறித்த புகார் ஆகும் காப்பீட்டு ஆலோசகராக பணிபுரிந்த சந்திரசேகர்


ஜூன் 2009 ல், பஜாஜ் அலையன்ஸில் (TLC) இன்சூரன்ஸ் ஆலோசகராகப் பணிபுரிந்ததில் எஸ்.தேவானந்த் என்ற வடமாநில நபர் கிரிப்டடோ வணிகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தவருடன் அவருக்கு அறிமுகம் ஏற்பட்டதாகவும். பின்னர்  2019 ல் அவரைச் சந்தித்து ஒரு விளம்பரத்தைக் காட்டி, அவர் ஆன்லைன் கிரிப்டோ கரன்சியில் வணிகம் செய்வதாகக் கூறியதுடன் கிரிப்டோ கரன்சியை வாங்குவதற்கும் விற்பதற்கும் www.efixgrow.com.,Crypto Exchange என்ற பெயரில் இணையதளம் இருப்பதாகவும் . பிட்-காயின் போன்ற கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று கூறிய. அவருடைய வார்த்தைகளை நம்பி பிட் காயின் வாங்குவதற்காக அவர் மூலம் கொஞ்சம் பணத்தை முதலீடும் செய்துள்ளார்

 எஸ்.தேவானந்த், அவரது சொந்த இணையதளமான www.efixgrow.com, கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் வைத்திருப்பதால், அவருடைய எக்ஸ்சேஞ்ச் மூலம் பிட்-காயின்களை வாங்க முதலீடு செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார் அவருடைய பரிவர்த்தனையில் அத்தகைய முதலீட்டிற்கு  ‘ட்ரான்’ (கிரிப்டோ கரன்சி) வாங்க வேண்டும், இந்த ட்ரானைப் பயன்படுத்தி அவர் தனது பரிமாற்றத்தின் மூலம்  பிட்-காயின்களை வாங்குவார். மேலும், அனைத்து முதலீட்டாளர்களுக்கும் நல்ல லாபத்தை அளிக்கும் வகையில், தனக்காக பல முதலீட்டாளர்களை அறிமுகப்படுத்துமாறு சந்திர சேகரிடம் கூறியுள்ளார்

அதன்பிறகு புதுக்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல முதலீட்டாளர்களை அறிமுகப்படுத்தியதில் . (முதலீட்டாளர்களின் பட்டியல் பெரிது). இந்த முதலீட்டாளர்கள் அனைவரும் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய அவரிடம் பணம் கொடுத்த அனைத்தும்  வங்கிப் பரிவர்த்தனைகள், சிடிஎம்ஏ பரிவர்த்தனைகள் மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் எஸ்.தேவானந்தின் கணக்கு, அவரது மனைவி எம்.மணிமாலா கணக்கு மற்றும் வேறு இரண்டு கணக்குகளுக்கு மாறியது. சந்திரசேகர் கணக்கு மற்றும் அவரது நண்பர் நடராஜன் கணக்கு மூலம் தானும் பணம் கொடுத்திருந்தார், பணம் கொடுப்பதற்காக சென்னை கோயம்பேடு லீ கிளப்பில் எஸ்.தேவானந்த் மற்றும் அவரது மனைவி எம்.மணிமாலா ஆகியோரை கிரிப்ட்டோ கரண்சி வருமானம் தொடர்பாக பி.சந்திரசேகரன் சந்திப்பது வழக்கமான நிகழ்வு 

கணக்குகளின் விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது ;

அனுப்புநர்களின் கணக்கு விவரங்கள்: அவரது எஸ்பிஐ ஏ/சி. - CUB, புதுக்கோட்டை, மற்றும்,

நடராஜன் SB A/c - TMB, புதுக்கோட்டையிலிருந்து

பெறுநர்களின் கணக்கு:- 

எஸ்.தேவானந்த் எஸ்பி ஏ/சி. – ஆக்சிஸ் வங்கி, விருகம்பாக்கம், சென்னைக்கும்

எம்.மணிமாலா எஸ்பி ஏ/சி. – கனரா வங்கி, அசோக் நகர், சென்னைக்கும்,

வெங்கடேஷ் பிரசாத் எஸ்பி– எஸ்பிஐ, பவர் ஹோம் கிளை, சென்னைக்கும்

வாரன் டிரேடர்ஸ் தற்போதைய ஏ/சி. - ஐடிஎஃப்ஐ வங்கி, என வங்கி பரிவர்த்தனைகளைப் பொறுத்தவரை, சந்திரசேகர் வங்கி அறிக்கைகளையும் இணைத்துள்ள நிலையில் சிடிஎம்ஏ மற்றும் பிற ஆன்-லைன் பரிவர்த்தனைகள் மற்றும் பண பரிவர்த்தனை தொடர்பாக, அவரால் கணக்கு அறிக்கைகளைப் பெற முடியவில்லை எனவும்

அவரது முதலீட்டாளர்களில் ஒருவரான வழக்கறிஞர் மூலமாக மூலதனம் மூலம் இந்தத் தொழிலில் முதலீடு செய்திருந்தார். அவர் ஒரு கிரிப்டோ அசல் வர்த்தகர் y'Ethrium' மூலம் முதலீடு செய்தார். அவர் 2020 இல் 4.8 எத்ரியத்தை முதலீடு செய்தார். அந்த 4.8 எத்ரியனின் தற்போதைய மதிப்பு ரூ.15,00,000/- ஆகும். இந்த எத்ரியத்தை தனது ‘ஃபோர்சேஜ் வாலட் ஐடி’ மூலம் எஸ்.தேவானந்த் மற்றும் அவரது மனைவி  எம்.மணிமாலா ஆகியோரின் வாலட் ஐடிக்கு மாற்றியுள்ளனர். ‘ஃபோர்சேஜ்.ஐஓ வாலட் ஐடி’ விவரங்களும் வழங்கிய புகார்தாரர் மூலம் கிட்டத்தட்ட 140 முதலீட்டாளர்களை அறிமுகப்படுத்தியிருந்த நிலையில் அனைவரும் தங்கள் பணத்தை முதலீடு செய்தனர். வங்கி, சிடிஎம்ஏ மற்றும் ஆன்-லைன் பரிவர்த்தனைகள் மூலம் மேற்கூறிய கணக்குகளுக்கு சுமார் ரூ.70.00.000/- (ரூபா எழுபது லட்சம்) மாற்றிய  (முதலீட்டாளர்களின் பட்டியல் இணைந்து) உள்ள நிலையில் எஸ்.தேவானந்த் மற்றும் அவரது மனைவி எம்.மணிமாலா, இவர்களின் பணத்தைப் பயன்படுத்தி, தங்கள் பெயரில் பிட்-காயின்களை வாங்கியுள்ளனர்.  இவர்கள் பணத்தைப் பயன்படுத்தி பெரும் லாபமும் சம்பாதித்துள்ளனர். செப்டம்பர் 2019 ல் வாங்கிய பிட்-காயின்கள் இன்றைய மதிப்பை விட மூன்று மடங்கு மதிப்பாக மாறியுள்ளன. இவ்வளவு பெரிய லாபம் சம்பாதித்த பிறகும், முதலீட்டாளர்களின் பங்கை இவர்களுக்கு வழங்க எஸ்.தேவானந்த் தயாராக இல்லை என்ற நிலையில்

இப்போது சந்திரசேகர் அறிமுகப்படுத்திய முதலீட்டாளர்கள் பிட்-காயின்கள் அல்லது அவற்றின் அடிப்படைத் தொகையைத் திரும்பக் கோருகின்ற நிலையில் சொன்ன எஸ்.தேவானந்திற்கு போன் செய்திருந்த  போது மொபைல் எண்கள் 3ம்) போன் சைலண்ட் மோடில் இருக்கும் நிலையில்

 எஸ்.தேவானந்திடம் அவரைச் சந்திக்க அவரது வீட்டு முகவரியைக் கேட்டுள்ளார், ஆனால் அவர் தனது வீட்டு முகவரியைக் கொடுக்க மறுத்துவிட்டார். வழக்கம் போல், சென்னை கோயம்பேடு, லீ கிளப்பில் உள்ள அனைத்து வணிகத்திற்காகவும் மூன்று முறை அவரைச் சந்திக்கும் அவரது முதலீட்டாளர்களுக்கும் பிட்-காயின்களை வழங்குமாறு அல்லது அவர்கள் முதலீட்டுத் தொகையைத் திருப்பித் தருமாறு வலியுறுத்திய நிலையில். ஆரம்பத்தில் பிட் காயின்களை தருவதாக உறுதியளித்தவர், பின்னர் பணத்தை திருப்பி தருவதாகக் கூறியதாகவும். இப்போது அவர்கள் பணத்தைத் திருப்பித் தர மறுத்து விட்டதாகவும், பணம் கேட்டு வரக்கூடாது எனவும் மிரட்டியுள்ளதாகவும் இப்போது புகார் தாரர் செய்த தொலைபேசி அழைப்புகளைத் தவிர்க்கும் நிலையில். அவரது முதலீட்டாளர்களை சந்திரசேகர் எதிர்கொள்ள முடியாத நிலையில் தவிக்க

ஏற்கனவே இந்தச் சிக்கலைப் பற்றி 04.மார்ச் 2021 தேதியிட்ட ஆன்-லைன் புகாரை  அளித்திருந்த பின்னர் தற்போது. கமிஷனர், சிசிபி. Ref. எண். ECP21033482. இந்த புகார் வடபழனி காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்ட நிலையில். இப்போது  புதிய புகார் 

அவர் கொடுத்த சூழ்நிலையில், அவரது முதலீட்டாளர்களுக்கும் ஆன்-லைன் வர்த்தகம் மூலம் ஏமாற்றுதல், மோசடி செய்ததற்காக, எஸ்.தேவானந்த் மற்றும் அவரது மனைவி எம்.மணிமாலா ஆகியோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறும்.  70,00,000/-, (ரூபாய் எழுபது இலட்சம்) மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து கூறப்பட்ட தொகையை மீட்டு தாருங்கள் என  கேட்டுக்கொண்டார் புகார் கொடுத்த புதுக்கோட்டை பி. சந்திரசேகரன் .ஆக நாளுக்கு நாள் இந்த மக்களின் கிரிப்ட்டோ கரண்சி மோகத்தைப் பயன்படுத்தி பல மோசடி அரங்கேறும் நிலையில் காவல்துறை உறக்கத்தில் இருந்து விடுபட வேண்டிய நேரமிது.கிரிப்டோகரன்சி போன்ற விர்ச்சுவல் டிஜிட்டல் சொத்துக்களை விற்பதன் மூலம் கிடைக்கும் வருவாய்க்கு 30 சதவீத வரி விதிக்கப்படும் சமீப காலங்களில் கிரிப்டோகரன்சிகளில் முதலீடு மற்றும் வர்த்தகம் செய்யும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கிரிப்டோகரன்சி குறித்த ஆராய்ச்சி நிறுவனமான செயின் அனாலசிஸின் அக்டோபர் மாத அறிக்கைப் படி, 2021 ஜூன் வரையிலான ஆண்டில் இந்தியாவில் கிரிப்டோ சந்தை 641% வளர்ந்துள்ளது. கிரிப்டோகரன்சி மூலமாக பணமோசடி, பயங்கரவாதிகளுக்கு நிதி அளித்தல் மற்றும் அதிக விலை ஏற்ற இறங்கங்கள் போன்ற ஆபத்துக்கள் இருப்பதாக மத்திய ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

இந்நிலையில் மத்திய அரசே பிரத்யேக டிஜிட்டல் பணத்தை ரிசர்வ் வங்கியுடன் இணைந்து கொண்டு வர உள்ளது.விர்ச்சுவல் டிஜிட்டல் சொத்துக்களில் நடக்கும் பரிவர்த்தனைகள் மிகப்பெரியளவில் அதிகரித்துள்ளதால், அதற்கென தனியாக வரி திட்டத்தை கொண்டு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதுஅதன்படி கிரிப்டோகரன்சி போன்ற டிஜிட்டல் பணத்தில் செய்யும் முதலீடு மூலம் கிடைக்கும் வருவாய்க்கு 30% வரி என அறிவித்துள்ளனர். அதில் ஏற்படும் நஷ்டத்தை வேறெந்த வருமானத்திலும் ஈடு செய்ய முடியாது. டிஜிட்டல் பணத்தை பரிசாக பெற்றாலும் வரி விதிக்கப்படும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த