முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எம் எல் எம் மோசடிக் கும்பல் தமிழகம் முழுவதும் நடத்திய கிரிப்ட்டோ கரண்சி மோசடி பல கோடி ஸ்வாஹா

கிரிப்டோகரன்சி முதலீடு என ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி- 


எம் எல் எம் மோசடிக் கும்பல் தமிழகம் முழுவதும் நடத்திய கிரிப்ட்டோ கரண்சி மோசடி பல கோடி ஸ்வாஹா!. சதுரங்கவேட்டை பட பாணியில் ஏமாந்த மதுரை மற்றும் புதுக்கோட்டை சிவகங்கை மக்கள்

சதுரங்கவேட்டை திரைப்படப்  பாணியில் கிரிப்டோகரன்சி முதலீட்டில் இடைத்தரகர்கள்  கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட நிலையில் அவர்கள் மீது  மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்கள்  அளித்துள்ளார் அதுகுறித்து விபரம் வருமாறு :- முதலில் மதுரை முனிச்சாலை பகுதியைச் சேர்ந்த பாண்டிக்கருப்பன் என்ற நபர் ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை அலுவலர் அவரது மனைவியான கோமதி சேலைகள் வாங்கி விற்பனை  செய்து வந்த நிலையில் மதுரை ஐயர்பங்களாவைச் சேர்ந்த பாண்டித்துரை கோமதி குடும்ப நண்பர் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் நல்ல இலாபம் கிடைக்கும் எனக் கூறி கோயம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மற்றும் ரெஜினாகுமாரி என இருவரை அறிமுகப்படுத்தியதில் 

அவர்கள்  கோமதி குடும்பத்தில் பேசி கிரிப்டோ காயினில் 8000 ரூபாய் முதலீடு செய்த நிலையில், எம்.எல்.எம் எனும் இறுதியில் நடக்கும் மோசடி போல பல முதலீட்டாளர்களை  உறுப்பினர்களாக இணைத்துவிட்டால் சில மாதங்களில் பல கோடி  லாபம் ஈட்டுவதோடு பி.எம்.டபிள்யூ கார் போன்ற ஆடம்பர வசதியான கார்கள் கிடைக்கும் என ஆசைவார்த்தை கூறியதையடுத்து மதுரை காளவாசல் பகுதி பிரபல தங்கும்விடுதியில் கிரிப்டோகரன்சி டுபாக்கூர் நிறுவனத்தின் தலைவர் என கந்தசாமி என்பவர் வருவதாகக் கூறி கோமதியையும் கோமதி சேர்த்துவிட்ட உறுப்பினர்களையும் அழைத்து வரக்கூறி, அங்கு நடைபெற்ற பிரமாண்ட நிகழ்ச்சியில் 200 பேர் கலந்துகொண்ட நிலையில், உறுப்பினர்கள் தலா 4,000 ரூபாயை செலுத்திவிட்டு ஐடியை வாங்கிகொள்ளுமாறு கூறியுள்ளனர்.

மேலும் கோமதியை தனியாக சந்தித்து நீங்கள் முதல் உறுப்பினராக இணைந்துள்ளதால் 5 லட்சம் ரூபாய் செலுத்தி, உடனடியாக அதற்குரிய கிரிப்டோகரன்சியை பெற்றுகொள்ளுமாறு கூறியுள்ளனர்.


இதனையடுத்து கோவிந்தசாமி, ஆறுமுகம், ரெஜினா குமாரி ஆகிய மூவரும் தங்கியிருந்த விடுதிக்கு நேரில் சென்ற கோமதி மற்றும் அவரது கணவர் பாண்டிக்கருப்பன் ஆகிய இருவரும் 3.75 லட்சம் ரூபாய் பணத்தை வழங்கியுள்ளனர். அப்போது கிரிப்டோகரன்சி காயினை தருமாறு கேட்ட நிலையில் கிரிப்டோகரன்சி நிறுவனத்தலைவர் கந்தசாமியிடம் தான் உள்ளது எனவும், இரண்டே நாளில் வீடுதேடி வந்து காயினை தருவதாகவும் கூறியுள்ளனர்.



ஆனால் சில நாட்கள் ஆகியும் காயின் தராத நிலையில் தனது பணத்தையாவது திரும்ப தருமாறு கோமதி கேட்டநிலையில், பணம் தராமல் ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டதோடு இதுபோன்று பல்வேறு பகுதிகளில் தாங்கள் ஏமாற்றிவருவதாகவும் கூறி மிட்டியுள்ளனர். இதையடுத்து கிரிப்டோகரன்சி என்ற பெயரில் பல கோடி ரூபாய் பணமோசடியில் அவர்கள் ஈடுபட்டு வருவதைக்கூறி் பாதிக்கப்பட்ட கோமதி மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள நிலையில் எந்த விசாரணையும் தொடங்காத நிலையில் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் கிரிப்டோ கரண்சி நிறுவனத்தின் தலைவர் என்று கூறப்பட்ட கந்தசாமி மற்றும் அவரது நண்பர்கள் சிலர் கிரிப்டோகரன்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகக் கூறி மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள செய்தியாளர் அரங்கில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பாதிக்கப்பட்ட கோமதி மற்றும் அவருடன் வந்த சில பெண்கள் ஆறுமுகத்தை மடக்கி பணத்தை கேட்க முயன்றபோது திடீரென செய்தியாளர் சந்திப்பை வேகமாக முடித்துவிட்டு அங்கிருந்து காவல்துறையினரின் முன்பாகவே அவசர அசரமாக இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.


தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள ஆடம்பர தங்கும் விடுதிகளில் தங்கவைத்து சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில் பல்வேறு நபர்களிடம் கோடிக்கணக்கில் ஏமாற்றி மோசடி செய்த கும்பல், காவல்துறை முன்பாகவே தப்பியோடிய நிலையில் தாங்கள் சேர்த்துவைத்த பணத்தையும் இழந்ததோடு, உறுப்பினர்களிடமிருந்து வாங்கிக்கொடுத்த பணத்திற்கும் பதில் சொல்லமுடியாமல் கோமதி அதே இடத்தில் பரிதாபமாக நின்றார். அதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை KLKS நகர், பகுதியில் வசிக்கும் பி.சந்திரசேகரன் வயது 52 அவர் சென்னை  மாநகரத்தின் காவல் ஆணையர், கிரேட்டர் சென்னை அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் பல முதலீட்டாளர்களை ஏமாற்றி மோசடி செய்ததற்காக, கிரிப்டோ கரன்சியை வாங்குவதற்கும் விற்பதற்கும், www.efixgrow.com என்ற இணையதளத்தின் உரிமையாளர் எஸ்.தேவானந்த் மீது புகார் பதிவு செய்வதற்கான கோரிக்கை வைத்துள்ளதில் ரூபாய் 70,00,000/-, அவரை மோசடி செய்த நபர் குறித்த புகார் ஆகும் காப்பீட்டு ஆலோசகராக பணிபுரிந்த சந்திரசேகர்


ஜூன் 2009 ல், பஜாஜ் அலையன்ஸில் (TLC) இன்சூரன்ஸ் ஆலோசகராகப் பணிபுரிந்ததில் எஸ்.தேவானந்த் என்ற வடமாநில நபர் கிரிப்டடோ வணிகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தவருடன் அவருக்கு அறிமுகம் ஏற்பட்டதாகவும். பின்னர்  2019 ல் அவரைச் சந்தித்து ஒரு விளம்பரத்தைக் காட்டி, அவர் ஆன்லைன் கிரிப்டோ கரன்சியில் வணிகம் செய்வதாகக் கூறியதுடன் கிரிப்டோ கரன்சியை வாங்குவதற்கும் விற்பதற்கும் www.efixgrow.com.,Crypto Exchange என்ற பெயரில் இணையதளம் இருப்பதாகவும் . பிட்-காயின் போன்ற கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று கூறிய. அவருடைய வார்த்தைகளை நம்பி பிட் காயின் வாங்குவதற்காக அவர் மூலம் கொஞ்சம் பணத்தை முதலீடும் செய்துள்ளார்

 எஸ்.தேவானந்த், அவரது சொந்த இணையதளமான www.efixgrow.com, கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் வைத்திருப்பதால், அவருடைய எக்ஸ்சேஞ்ச் மூலம் பிட்-காயின்களை வாங்க முதலீடு செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார் அவருடைய பரிவர்த்தனையில் அத்தகைய முதலீட்டிற்கு  ‘ட்ரான்’ (கிரிப்டோ கரன்சி) வாங்க வேண்டும், இந்த ட்ரானைப் பயன்படுத்தி அவர் தனது பரிமாற்றத்தின் மூலம்  பிட்-காயின்களை வாங்குவார். மேலும், அனைத்து முதலீட்டாளர்களுக்கும் நல்ல லாபத்தை அளிக்கும் வகையில், தனக்காக பல முதலீட்டாளர்களை அறிமுகப்படுத்துமாறு சந்திர சேகரிடம் கூறியுள்ளார்

அதன்பிறகு புதுக்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல முதலீட்டாளர்களை அறிமுகப்படுத்தியதில் . (முதலீட்டாளர்களின் பட்டியல் பெரிது). இந்த முதலீட்டாளர்கள் அனைவரும் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய அவரிடம் பணம் கொடுத்த அனைத்தும்  வங்கிப் பரிவர்த்தனைகள், சிடிஎம்ஏ பரிவர்த்தனைகள் மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் எஸ்.தேவானந்தின் கணக்கு, அவரது மனைவி எம்.மணிமாலா கணக்கு மற்றும் வேறு இரண்டு கணக்குகளுக்கு மாறியது. சந்திரசேகர் கணக்கு மற்றும் அவரது நண்பர் நடராஜன் கணக்கு மூலம் தானும் பணம் கொடுத்திருந்தார், பணம் கொடுப்பதற்காக சென்னை கோயம்பேடு லீ கிளப்பில் எஸ்.தேவானந்த் மற்றும் அவரது மனைவி எம்.மணிமாலா ஆகியோரை கிரிப்ட்டோ கரண்சி வருமானம் தொடர்பாக பி.சந்திரசேகரன் சந்திப்பது வழக்கமான நிகழ்வு 

கணக்குகளின் விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது ;

அனுப்புநர்களின் கணக்கு விவரங்கள்: அவரது எஸ்பிஐ ஏ/சி. - CUB, புதுக்கோட்டை, மற்றும்,

நடராஜன் SB A/c - TMB, புதுக்கோட்டையிலிருந்து

பெறுநர்களின் கணக்கு:- 

எஸ்.தேவானந்த் எஸ்பி ஏ/சி. – ஆக்சிஸ் வங்கி, விருகம்பாக்கம், சென்னைக்கும்

எம்.மணிமாலா எஸ்பி ஏ/சி. – கனரா வங்கி, அசோக் நகர், சென்னைக்கும்,

வெங்கடேஷ் பிரசாத் எஸ்பி– எஸ்பிஐ, பவர் ஹோம் கிளை, சென்னைக்கும்

வாரன் டிரேடர்ஸ் தற்போதைய ஏ/சி. - ஐடிஎஃப்ஐ வங்கி, என வங்கி பரிவர்த்தனைகளைப் பொறுத்தவரை, சந்திரசேகர் வங்கி அறிக்கைகளையும் இணைத்துள்ள நிலையில் சிடிஎம்ஏ மற்றும் பிற ஆன்-லைன் பரிவர்த்தனைகள் மற்றும் பண பரிவர்த்தனை தொடர்பாக, அவரால் கணக்கு அறிக்கைகளைப் பெற முடியவில்லை எனவும்

அவரது முதலீட்டாளர்களில் ஒருவரான வழக்கறிஞர் மூலமாக மூலதனம் மூலம் இந்தத் தொழிலில் முதலீடு செய்திருந்தார். அவர் ஒரு கிரிப்டோ அசல் வர்த்தகர் y'Ethrium' மூலம் முதலீடு செய்தார். அவர் 2020 இல் 4.8 எத்ரியத்தை முதலீடு செய்தார். அந்த 4.8 எத்ரியனின் தற்போதைய மதிப்பு ரூ.15,00,000/- ஆகும். இந்த எத்ரியத்தை தனது ‘ஃபோர்சேஜ் வாலட் ஐடி’ மூலம் எஸ்.தேவானந்த் மற்றும் அவரது மனைவி  எம்.மணிமாலா ஆகியோரின் வாலட் ஐடிக்கு மாற்றியுள்ளனர். ‘ஃபோர்சேஜ்.ஐஓ வாலட் ஐடி’ விவரங்களும் வழங்கிய புகார்தாரர் மூலம் கிட்டத்தட்ட 140 முதலீட்டாளர்களை அறிமுகப்படுத்தியிருந்த நிலையில் அனைவரும் தங்கள் பணத்தை முதலீடு செய்தனர். வங்கி, சிடிஎம்ஏ மற்றும் ஆன்-லைன் பரிவர்த்தனைகள் மூலம் மேற்கூறிய கணக்குகளுக்கு சுமார் ரூ.70.00.000/- (ரூபா எழுபது லட்சம்) மாற்றிய  (முதலீட்டாளர்களின் பட்டியல் இணைந்து) உள்ள நிலையில் எஸ்.தேவானந்த் மற்றும் அவரது மனைவி எம்.மணிமாலா, இவர்களின் பணத்தைப் பயன்படுத்தி, தங்கள் பெயரில் பிட்-காயின்களை வாங்கியுள்ளனர்.  இவர்கள் பணத்தைப் பயன்படுத்தி பெரும் லாபமும் சம்பாதித்துள்ளனர். செப்டம்பர் 2019 ல் வாங்கிய பிட்-காயின்கள் இன்றைய மதிப்பை விட மூன்று மடங்கு மதிப்பாக மாறியுள்ளன. இவ்வளவு பெரிய லாபம் சம்பாதித்த பிறகும், முதலீட்டாளர்களின் பங்கை இவர்களுக்கு வழங்க எஸ்.தேவானந்த் தயாராக இல்லை என்ற நிலையில்

இப்போது சந்திரசேகர் அறிமுகப்படுத்திய முதலீட்டாளர்கள் பிட்-காயின்கள் அல்லது அவற்றின் அடிப்படைத் தொகையைத் திரும்பக் கோருகின்ற நிலையில் சொன்ன எஸ்.தேவானந்திற்கு போன் செய்திருந்த  போது மொபைல் எண்கள் 3ம்) போன் சைலண்ட் மோடில் இருக்கும் நிலையில்

 எஸ்.தேவானந்திடம் அவரைச் சந்திக்க அவரது வீட்டு முகவரியைக் கேட்டுள்ளார், ஆனால் அவர் தனது வீட்டு முகவரியைக் கொடுக்க மறுத்துவிட்டார். வழக்கம் போல், சென்னை கோயம்பேடு, லீ கிளப்பில் உள்ள அனைத்து வணிகத்திற்காகவும் மூன்று முறை அவரைச் சந்திக்கும் அவரது முதலீட்டாளர்களுக்கும் பிட்-காயின்களை வழங்குமாறு அல்லது அவர்கள் முதலீட்டுத் தொகையைத் திருப்பித் தருமாறு வலியுறுத்திய நிலையில். ஆரம்பத்தில் பிட் காயின்களை தருவதாக உறுதியளித்தவர், பின்னர் பணத்தை திருப்பி தருவதாகக் கூறியதாகவும். இப்போது அவர்கள் பணத்தைத் திருப்பித் தர மறுத்து விட்டதாகவும், பணம் கேட்டு வரக்கூடாது எனவும் மிரட்டியுள்ளதாகவும் இப்போது புகார் தாரர் செய்த தொலைபேசி அழைப்புகளைத் தவிர்க்கும் நிலையில். அவரது முதலீட்டாளர்களை சந்திரசேகர் எதிர்கொள்ள முடியாத நிலையில் தவிக்க

ஏற்கனவே இந்தச் சிக்கலைப் பற்றி 04.மார்ச் 2021 தேதியிட்ட ஆன்-லைன் புகாரை  அளித்திருந்த பின்னர் தற்போது. கமிஷனர், சிசிபி. Ref. எண். ECP21033482. இந்த புகார் வடபழனி காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்ட நிலையில். இப்போது  புதிய புகார் 

அவர் கொடுத்த சூழ்நிலையில், அவரது முதலீட்டாளர்களுக்கும் ஆன்-லைன் வர்த்தகம் மூலம் ஏமாற்றுதல், மோசடி செய்ததற்காக, எஸ்.தேவானந்த் மற்றும் அவரது மனைவி எம்.மணிமாலா ஆகியோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறும்.  70,00,000/-, (ரூபாய் எழுபது இலட்சம்) மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து கூறப்பட்ட தொகையை மீட்டு தாருங்கள் என  கேட்டுக்கொண்டார் புகார் கொடுத்த புதுக்கோட்டை பி. சந்திரசேகரன் .ஆக நாளுக்கு நாள் இந்த மக்களின் கிரிப்ட்டோ கரண்சி மோகத்தைப் பயன்படுத்தி பல மோசடி அரங்கேறும் நிலையில் காவல்துறை உறக்கத்தில் இருந்து விடுபட வேண்டிய நேரமிது.கிரிப்டோகரன்சி போன்ற விர்ச்சுவல் டிஜிட்டல் சொத்துக்களை விற்பதன் மூலம் கிடைக்கும் வருவாய்க்கு 30 சதவீத வரி விதிக்கப்படும் சமீப காலங்களில் கிரிப்டோகரன்சிகளில் முதலீடு மற்றும் வர்த்தகம் செய்யும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கிரிப்டோகரன்சி குறித்த ஆராய்ச்சி நிறுவனமான செயின் அனாலசிஸின் அக்டோபர் மாத அறிக்கைப் படி, 2021 ஜூன் வரையிலான ஆண்டில் இந்தியாவில் கிரிப்டோ சந்தை 641% வளர்ந்துள்ளது. கிரிப்டோகரன்சி மூலமாக பணமோசடி, பயங்கரவாதிகளுக்கு நிதி அளித்தல் மற்றும் அதிக விலை ஏற்ற இறங்கங்கள் போன்ற ஆபத்துக்கள் இருப்பதாக மத்திய ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

இந்நிலையில் மத்திய அரசே பிரத்யேக டிஜிட்டல் பணத்தை ரிசர்வ் வங்கியுடன் இணைந்து கொண்டு வர உள்ளது.விர்ச்சுவல் டிஜிட்டல் சொத்துக்களில் நடக்கும் பரிவர்த்தனைகள் மிகப்பெரியளவில் அதிகரித்துள்ளதால், அதற்கென தனியாக வரி திட்டத்தை கொண்டு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதுஅதன்படி கிரிப்டோகரன்சி போன்ற டிஜிட்டல் பணத்தில் செய்யும் முதலீடு மூலம் கிடைக்கும் வருவாய்க்கு 30% வரி என அறிவித்துள்ளனர். அதில் ஏற்படும் நஷ்டத்தை வேறெந்த வருமானத்திலும் ஈடு செய்ய முடியாது. டிஜிட்டல் பணத்தை பரிசாக பெற்றாலும் வரி விதிக்கப்படும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...