குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி
சமாதன் இணையதளத்தில் உள்ள புள்ளிவிவரங்களின்படி, 3.02.2022வரை, குறு மற்றும் சிறு தொழில் துறையினருக்கு வழங்கப்பட்ட கடனுதவியில், 01.04.2020 முதல் ரூ.11,741.21 கோடி நிலுவையில் இருப்பதாக, மத்திய குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறைஅமைச்சர் திரு.நாராயண் ராணே தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ள அவர், தற்சார்பு இந்தியா திட்டத்தின்கீழ், பொருளாதாரத்திற்கு ஆதரவளிக்க, குறிப்பாக குறு,சிறு, ந
டுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில், மத்திய அரசு, தொடர்ச்சியாக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருவதாகக் கூறினார். (i)நெருக்கடியில் உள்ள குறு,சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.20,000கோடி அளவிற்கு துணைக்கடன்களும், (ii) ரூ.50,000கோடி மூலதன ஊக்குவிப்பு நிதியும் (iii) குறு,சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில் துறையினருக்கு, 3 லட்சம் கோடி அவசரகடன் உத்தரவாத திட்ட நிதியும் வழங்கப்பட்டிருப்பதுடன், (iv) குறு,சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனம் குறித்து புதிய விளக்கம் அளிக்கப்பட்டு, (v)ரூ.200 கோடி வரையிலான அரசு கொள்முதல்களுக்கு சர்வதேச டெண்டர் கோரப்படுவதில்லை என்றும் திரு.நாராயண் ராணே கூறியுள்ளார்.
உற்பத்தி மற்றும் சேவை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் பிற கடன்வழங்கும் நிறுவனங்களிடம் இருந்து ரூ.200 லட்சம்(ரூ.2கோடி) வரை, பிணை இல்லாத கடனுதவிகளைப் பெறுவதற்கான திட்டத்தையும், குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம் செயல்படுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களில் பெண் தொழில்முனைவோர்
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சர் திரு. நாராயண் ராணே கீழ்காணும் தகவல்களை வெளியிட்டார்.
01/04/2019 முதல் 02/02/2022 வரையிலான காலகட்டத்தில், ஆண்டு வாரியாக, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் உத்யோக் ஆதார் மெமோராண்டம் (UAM) மற்றும் உத்யம் ரிஜிஸ்ட்ரேஷன் (UR) தளத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பெண் தொழில்முனைவோரின் எண்ணிக்கை வருமாறு:
01/04/2019 முதல் 31/03/2020 வரை உத்யோக் ஆதார் மெமோராண்டம் கீழ் குறு தொழில்களில் 498635 தொழில்முனைவோரும், சிறு தொழில்களில் 50738 தொழில்முனைவோரும், நடுத்தர தொழில்களில் 1366 தொழில்முனைவோரும் என மொத்தம் 550739 பெண் தொழில்முனைவோர் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர்.
01/04/2020 முதல் 30/06/2020 வரை உத்யோக் ஆதார் மெமோராண்டம் கீழ் குறு தொழில்களில் 152512 தொழில்முனைவோரும், சிறு தொழில்களில் 28237 தொழில்முனைவோரும், நடுத்தர தொழில்களில் 1073 தொழில்முனைவோரும் என மொத்தம் 181822 பெண் தொழில்முனைவோர் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர்.
01/07/2020 முதல் 31/03/2021 வரை உத்யோக் ஆதார் மெமோராண்டம் கீழ் குறு தொழில்களில் 473333 தொழில்முனைவோரும், சிறு தொழில்களில் 16663 தொழில்முனைவோரும், நடுத்தர தொழில்களில் 1073 தொழில்முனைவோரும் என மொத்தம் 491069 பெண் தொழில்முனைவோர் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர்.
01/04/2021 முதல் 2/02/2022 வரை உத்யோக் ஆதார் மெமோராண்டம் கீழ் குறு தொழில்களில் 692034 தொழில்முனைவோரும், சிறு தொழில்களில் 15989 தொழில்முனைவோரும், நடுத்தர தொழில்களில் 633 தொழில்முனைவோரும் என மொத்தம் 708656 பெண் தொழில்முனைவோர் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர்குறு,சிறு,நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொகுப்பு மேம்பாட்டு திட்டம்
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் திரு. நாராயண் ராணே எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
குறு,சிறு தொழில்கள் தொகுப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஒரு தொகுப்பில் உள்ள பொது உதவி மையத்துக்கு தேவையான உதவிகள் அளிக்கப்படுகின்றன. இந்த பொது உதவி மையம், தேவை அடிப்படையிலான திட்டம். கடந்த 3 ஆண்டுகளில், இத்திட்டத்தின் கீழ், பல்வேறு தொகுப்புகளில் உள்ள பொது உதவி மையங்களின் 36 திட்டங்கள், நாடு முழுவதும் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மாநில வாரியான விவரங்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த தொகுப்பின் வருவாய், உற்பத்தி மற்றும் ஏற்றுமதிகள் ஆகியவை உள்நாட்டு மற்றும் உலகளாவிய தேவை, பருவகாலம் ஆகியவற்றை சார்ந்து உள்ளன.
மூன்றாம் நபர் மூலம் இத்திட்டத்தை மதிப்பீடு செய்தபோது, தொகுப்பில் உள்ள பயனாளிகள் உற்பத்தியில் சராசரியாக 35 சதவீதம் உயர்வை தெரிவித்துள்ளனர். விற்பனை மற்றும் ஏற்றுமதி குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.
இந்த தொகுப்பில் உள்ள கலைஞர்களுக்கு, பாரம்பரிய தொழில்கள் மீளுருவாக்க நிதி திட்டத்தின் (Scheme of Fund for Regeneration of Traditional Industries (SFURTI) கீழ் உதவிகள் அளிக்கப்படுகின்றன.
கடந்த 2018-19ம் ஆண்டில் தமிழகத்தில் அம்பத்தூர், பரமக்குடியில் பொறியியல் தொகுப்பும், மதுரையில் தங்கநகை கடைகள் தொகுப்பும், சேலத்தில் ஸ்டீல் தயாரிப்பு தொகுப்பும், தஞ்சாவூரில் அரிசி ஆலை தொகுப்பும், விருதுநகரில் அச்சு தொழில், பெண்களுக்கான ஆயத்த ஆடைகள் தொகுப்பும் உருவாக்கப்பட்டன. கடந்த 2019-20ம் ஆண்டில் தமிழகத்தில், கும்பகோணத்தில் எஸ்.எஸ்.பாத்திரங்கள் தொகுப்பு உருவாக்கப்பட்டது. ஈரோட்டில் கயிறு தயாரிப்பு தொகுப்பு உருவாக்கப்பட்டது. கடந்த 2020-21ம் ஆண்டில் வேலூர் ராணிபேட்டையில் பொறியியல் தொகுப்பு உருவாக்கப்பட்டது.
கருத்துகள்