முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி


சமாதன் இணையதளத்தில் உள்ள புள்ளிவிவரங்களின்படி,  3.02.2022வரை, குறு மற்றும் சிறு தொழில் துறையினருக்கு வழங்கப்பட்ட கடனுதவியில்,  01.04.2020 முதல் ரூ.11,741.21 கோடி நிலுவையில் இருப்பதாக, மத்திய குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறைஅமைச்சர் திரு.நாராயண் ராணே தெரிவித்துள்ளார்.  

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ள அவர்,  தற்சார்பு இந்தியா திட்டத்தின்கீழ், பொருளாதாரத்திற்கு ஆதரவளிக்க, குறிப்பாக குறு,சிறு, ந


டுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில், மத்திய அரசு, தொடர்ச்சியாக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருவதாகக் கூறினார்.  (i)நெருக்கடியில் உள்ள குறு,சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.20,000கோடி அளவிற்கு துணைக்கடன்களும்,  (ii) ரூ.50,000கோடி மூலதன ஊக்குவிப்பு நிதியும்  (iii) குறு,சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில் துறையினருக்கு, 3 லட்சம் கோடி அவசரகடன் உத்தரவாத திட்ட நிதியும்  வழங்கப்பட்டிருப்பதுடன்,  (iv) குறு,சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனம் குறித்து புதிய விளக்கம் அளிக்கப்பட்டு,  (v)ரூ.200 கோடி வரையிலான அரசு கொள்முதல்களுக்கு சர்வதேச டெண்டர் கோரப்படுவதில்லை என்றும் திரு.நாராயண் ராணே கூறியுள்ளார்.  

உற்பத்தி மற்றும் சேவை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் பிற கடன்வழங்கும் நிறுவனங்களிடம் இருந்து ரூ.200 லட்சம்(ரூ.2கோடி) வரை, பிணை இல்லாத கடனுதவிகளைப் பெறுவதற்கான திட்டத்தையும், குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம் செயல்படுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களில் பெண் தொழில்முனைவோர்


நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சர் திரு. நாராயண் ராணே கீழ்காணும் தகவல்களை வெளியிட்டார். 


01/04/2019 முதல் 02/02/2022 வரையிலான காலகட்டத்தில், ஆண்டு வாரியாக, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் உத்யோக் ஆதார் மெமோராண்டம் (UAM) மற்றும் உத்யம் ரிஜிஸ்ட்ரேஷன் (UR) தளத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பெண் தொழில்முனைவோரின் எண்ணிக்கை வருமாறு:


01/04/2019 முதல் 31/03/2020 வரை  உத்யோக் ஆதார் மெமோராண்டம் கீழ் குறு தொழில்களில் 498635  தொழில்முனைவோரும், சிறு தொழில்களில் 50738  தொழில்முனைவோரும், நடுத்தர தொழில்களில் 1366  தொழில்முனைவோரும் என மொத்தம் 550739 பெண் தொழில்முனைவோர் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர்.

01/04/2020 முதல் 30/06/2020 வரை  உத்யோக் ஆதார் மெமோராண்டம் கீழ் குறு தொழில்களில் 152512   தொழில்முனைவோரும், சிறு தொழில்களில் 28237  தொழில்முனைவோரும், நடுத்தர தொழில்களில் 1073  தொழில்முனைவோரும் என மொத்தம் 181822 பெண் தொழில்முனைவோர் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர். 

01/07/2020 முதல் 31/03/2021 வரை  உத்யோக் ஆதார் மெமோராண்டம் கீழ் குறு தொழில்களில் 473333  தொழில்முனைவோரும், சிறு தொழில்களில் 16663  தொழில்முனைவோரும், நடுத்தர தொழில்களில் 1073  தொழில்முனைவோரும் என மொத்தம் 491069 பெண் தொழில்முனைவோர் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர்.

01/04/2021 முதல் 2/02/2022 வரை  உத்யோக் ஆதார் மெமோராண்டம் கீழ் குறு தொழில்களில் 692034  தொழில்முனைவோரும், சிறு தொழில்களில் 15989  தொழில்முனைவோரும், நடுத்தர தொழில்களில் 633  தொழில்முனைவோரும் என மொத்தம் 708656 பெண் தொழில்முனைவோர் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர்குறு,சிறு,நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொகுப்பு மேம்பாட்டு திட்டம்

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர்  திரு. நாராயண் ராணே எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

குறு,சிறு தொழில்கள் தொகுப்பு  மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஒரு தொகுப்பில் உள்ள பொது உதவி மையத்துக்கு தேவையான உதவிகள் அளிக்கப்படுகின்றன. இந்த பொது உதவி மையம், தேவை அடிப்படையிலான திட்டம். கடந்த 3 ஆண்டுகளில், இத்திட்டத்தின் கீழ், பல்வேறு தொகுப்புகளில் உள்ள பொது உதவி மையங்களின் 36 திட்டங்கள், நாடு முழுவதும் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மாநில வாரியான விவரங்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த தொகுப்பின் வருவாய், உற்பத்தி மற்றும் ஏற்றுமதிகள் ஆகியவை உள்நாட்டு மற்றும் உலகளாவிய தேவை, பருவகாலம் ஆகியவற்றை சார்ந்து உள்ளன.

மூன்றாம் நபர் மூலம் இத்திட்டத்தை மதிப்பீடு செய்தபோது, தொகுப்பில் உள்ள பயனாளிகள் உற்பத்தியில் சராசரியாக 35 சதவீதம் உயர்வை தெரிவித்துள்ளனர். விற்பனை மற்றும் ஏற்றுமதி குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. 

இந்த தொகுப்பில் உள்ள கலைஞர்களுக்கு, பாரம்பரிய தொழில்கள் மீளுருவாக்க நிதி திட்டத்தின்  (Scheme of Fund for Regeneration of Traditional Industries (SFURTI) கீழ் உதவிகள் அளிக்கப்படுகின்றன.

கடந்த 2018-19ம் ஆண்டில் தமிழகத்தில் அம்பத்தூர், பரமக்குடியில் பொறியியல் தொகுப்பும், மதுரையில் தங்கநகை கடைகள் தொகுப்பும், சேலத்தில் ஸ்டீல் தயாரிப்பு தொகுப்பும், தஞ்சாவூரில் அரிசி ஆலை தொகுப்பும், விருதுநகரில் அச்சு தொழில், பெண்களுக்கான ஆயத்த ஆடைகள் தொகுப்பும் உருவாக்கப்பட்டன. கடந்த 2019-20ம் ஆண்டில் தமிழகத்தில், கும்பகோணத்தில் எஸ்.எஸ்.பாத்திரங்கள் தொகுப்பு உருவாக்கப்பட்டது. ஈரோட்டில் கயிறு தயாரிப்பு தொகுப்பு உருவாக்கப்பட்டது. கடந்த 2020-21ம் ஆண்டில்  வேலூர் ராணிபேட்டையில் பொறியியல் தொகுப்பு உருவாக்கப்பட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த