முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி


சமாதன் இணையதளத்தில் உள்ள புள்ளிவிவரங்களின்படி,  3.02.2022வரை, குறு மற்றும் சிறு தொழில் துறையினருக்கு வழங்கப்பட்ட கடனுதவியில்,  01.04.2020 முதல் ரூ.11,741.21 கோடி நிலுவையில் இருப்பதாக, மத்திய குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறைஅமைச்சர் திரு.நாராயண் ராணே தெரிவித்துள்ளார்.  

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ள அவர்,  தற்சார்பு இந்தியா திட்டத்தின்கீழ், பொருளாதாரத்திற்கு ஆதரவளிக்க, குறிப்பாக குறு,சிறு, ந


டுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில், மத்திய அரசு, தொடர்ச்சியாக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருவதாகக் கூறினார்.  (i)நெருக்கடியில் உள்ள குறு,சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.20,000கோடி அளவிற்கு துணைக்கடன்களும்,  (ii) ரூ.50,000கோடி மூலதன ஊக்குவிப்பு நிதியும்  (iii) குறு,சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில் துறையினருக்கு, 3 லட்சம் கோடி அவசரகடன் உத்தரவாத திட்ட நிதியும்  வழங்கப்பட்டிருப்பதுடன்,  (iv) குறு,சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனம் குறித்து புதிய விளக்கம் அளிக்கப்பட்டு,  (v)ரூ.200 கோடி வரையிலான அரசு கொள்முதல்களுக்கு சர்வதேச டெண்டர் கோரப்படுவதில்லை என்றும் திரு.நாராயண் ராணே கூறியுள்ளார்.  

உற்பத்தி மற்றும் சேவை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் பிற கடன்வழங்கும் நிறுவனங்களிடம் இருந்து ரூ.200 லட்சம்(ரூ.2கோடி) வரை, பிணை இல்லாத கடனுதவிகளைப் பெறுவதற்கான திட்டத்தையும், குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம் செயல்படுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களில் பெண் தொழில்முனைவோர்


நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சர் திரு. நாராயண் ராணே கீழ்காணும் தகவல்களை வெளியிட்டார். 


01/04/2019 முதல் 02/02/2022 வரையிலான காலகட்டத்தில், ஆண்டு வாரியாக, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் உத்யோக் ஆதார் மெமோராண்டம் (UAM) மற்றும் உத்யம் ரிஜிஸ்ட்ரேஷன் (UR) தளத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பெண் தொழில்முனைவோரின் எண்ணிக்கை வருமாறு:


01/04/2019 முதல் 31/03/2020 வரை  உத்யோக் ஆதார் மெமோராண்டம் கீழ் குறு தொழில்களில் 498635  தொழில்முனைவோரும், சிறு தொழில்களில் 50738  தொழில்முனைவோரும், நடுத்தர தொழில்களில் 1366  தொழில்முனைவோரும் என மொத்தம் 550739 பெண் தொழில்முனைவோர் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர்.

01/04/2020 முதல் 30/06/2020 வரை  உத்யோக் ஆதார் மெமோராண்டம் கீழ் குறு தொழில்களில் 152512   தொழில்முனைவோரும், சிறு தொழில்களில் 28237  தொழில்முனைவோரும், நடுத்தர தொழில்களில் 1073  தொழில்முனைவோரும் என மொத்தம் 181822 பெண் தொழில்முனைவோர் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர். 

01/07/2020 முதல் 31/03/2021 வரை  உத்யோக் ஆதார் மெமோராண்டம் கீழ் குறு தொழில்களில் 473333  தொழில்முனைவோரும், சிறு தொழில்களில் 16663  தொழில்முனைவோரும், நடுத்தர தொழில்களில் 1073  தொழில்முனைவோரும் என மொத்தம் 491069 பெண் தொழில்முனைவோர் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர்.

01/04/2021 முதல் 2/02/2022 வரை  உத்யோக் ஆதார் மெமோராண்டம் கீழ் குறு தொழில்களில் 692034  தொழில்முனைவோரும், சிறு தொழில்களில் 15989  தொழில்முனைவோரும், நடுத்தர தொழில்களில் 633  தொழில்முனைவோரும் என மொத்தம் 708656 பெண் தொழில்முனைவோர் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர்குறு,சிறு,நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொகுப்பு மேம்பாட்டு திட்டம்

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர்  திரு. நாராயண் ராணே எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

குறு,சிறு தொழில்கள் தொகுப்பு  மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஒரு தொகுப்பில் உள்ள பொது உதவி மையத்துக்கு தேவையான உதவிகள் அளிக்கப்படுகின்றன. இந்த பொது உதவி மையம், தேவை அடிப்படையிலான திட்டம். கடந்த 3 ஆண்டுகளில், இத்திட்டத்தின் கீழ், பல்வேறு தொகுப்புகளில் உள்ள பொது உதவி மையங்களின் 36 திட்டங்கள், நாடு முழுவதும் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மாநில வாரியான விவரங்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த தொகுப்பின் வருவாய், உற்பத்தி மற்றும் ஏற்றுமதிகள் ஆகியவை உள்நாட்டு மற்றும் உலகளாவிய தேவை, பருவகாலம் ஆகியவற்றை சார்ந்து உள்ளன.

மூன்றாம் நபர் மூலம் இத்திட்டத்தை மதிப்பீடு செய்தபோது, தொகுப்பில் உள்ள பயனாளிகள் உற்பத்தியில் சராசரியாக 35 சதவீதம் உயர்வை தெரிவித்துள்ளனர். விற்பனை மற்றும் ஏற்றுமதி குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. 

இந்த தொகுப்பில் உள்ள கலைஞர்களுக்கு, பாரம்பரிய தொழில்கள் மீளுருவாக்க நிதி திட்டத்தின்  (Scheme of Fund for Regeneration of Traditional Industries (SFURTI) கீழ் உதவிகள் அளிக்கப்படுகின்றன.

கடந்த 2018-19ம் ஆண்டில் தமிழகத்தில் அம்பத்தூர், பரமக்குடியில் பொறியியல் தொகுப்பும், மதுரையில் தங்கநகை கடைகள் தொகுப்பும், சேலத்தில் ஸ்டீல் தயாரிப்பு தொகுப்பும், தஞ்சாவூரில் அரிசி ஆலை தொகுப்பும், விருதுநகரில் அச்சு தொழில், பெண்களுக்கான ஆயத்த ஆடைகள் தொகுப்பும் உருவாக்கப்பட்டன. கடந்த 2019-20ம் ஆண்டில் தமிழகத்தில், கும்பகோணத்தில் எஸ்.எஸ்.பாத்திரங்கள் தொகுப்பு உருவாக்கப்பட்டது. ஈரோட்டில் கயிறு தயாரிப்பு தொகுப்பு உருவாக்கப்பட்டது. கடந்த 2020-21ம் ஆண்டில்  வேலூர் ராணிபேட்டையில் பொறியியல் தொகுப்பு உருவாக்கப்பட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...