கோயம்புத்தூர், வடவள்ளியில் காதி பஞ்சாயத்து கோயம்புத்தூர் மாவட்டம் வடவள்ளியில் காதி பஞ்சாயத்து எனும் காதி மற்றும் கிராம கைவினைஞர்களிடம் குறை கேட்கும் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் சந்தைப்படுத்துதல் நிபுணத்துவ உறுப்பினர் திரு.மனோஜ் குமார் கோயல் கலந்து கொண்டு கைவினைஞர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். கோயம்புத்தூரில் உள்ள காஞ்சிபுரம் சர்வோதய சங்கத்திற்கு சென்றிருந்த அவர், வடவள்ளியில் காதி மற்றும் கிராமத் தொழில்களின் செயல்பாடுகளைப் பார்வையிட்டார். இங்கு பட்டு நெசவாளர்களை சந்தித்து அவர் கலந்துரையாடினார்.
நெசவாளர்கள் வயதுமூப்பை அடைந்திருப்பதால் ஊதிய உயர்வு, ஓய்வூதியப் பயன்கள், மருத்துவக் காப்பீடு ஆகிய கோரிக்கைகளை ஆணைய உறுப்பினரிடம் தெரிவித்தனர். இந்தக் கோரிக்கைகளை எழுத்து வடிவத்தில் தருமாறும் அப்போதுதான் இதனை ஆணையத்தின் முன் சமர்ப்பித்து
பொருத்தமான முடிவுகளை எடுக்க இயலும் என்று திரு.கோயல் தெரிவித்தார். தங்களிடம் குறைகளைக் கேட்டறிந்ததற்கும் சாத்தியமான வழிகளில் உதவி செய்ய திறந்த மனதுடன் பேசியதற்கும் காதி கிராமத் தொழில் கைவினைஞர்கள் திரு.கோயலுக்கு நன்றி தெரிவித்தனர். காதி பஞ்சாயத்துக்குப் பின் கைவினைக் க
கருத்துகள்