கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள்- மீதி நபர்கள் விடுதலை,
நீதிமன்றத்தில் தண்டனை விபரம் மார்ச் 8 ஆம் தேதி அறிவிப்பு. கோகுல் ராஜ் கொலை வழக்கில் 1 1 பேரைக் குற்றவாளியாக அறிவித்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக தாயார் சித்ரா கண்ணீருடன் கருத்து..
சேலம் மாவட்டம் ஓமலூரைச் கல்லூரி மாணவா் கோகுல்ராஜ். 2015-ஆம் ஆண்டு, நாமக்கல் மாவட்டம் தொட்டிப்பாளையம் பகுதியில் இரயில்வே தண்டவாளத்தில் கொல்லப்ப்பட்டுக் கிடந்தாா். காதல் விவகாரத்தில் இக்கொலை செய்யப்பட்டதாக விசாரணைக்கு பின்னர் தெரியவந்தது.
இந்த வழக்கில் சங்ககிரி தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், மற்றும் அவரது கூட்டாளிகள் உள்பட 17 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 16 பேர் கைது செய்யப்பட்டதில் ஒருவர் தலைமறைவான நிலையில் வழக்கினை கோகுல்ராஜ் தாய் சித்ரா தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், நாமக்கல் நீதிமன்றத்திலிருந்து, மதுரை மாவட்ட வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டதன் படி கடந்த இரண்டாண்டுகளாக
வழக்கு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த வழக்கில் நீதிபதி சம்பத்குமாா் இன்று தீர்ப்பு வழங்கினார் அப்போது யுவராஜ் உள்ளிட்ட 15 பேரும் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்களான தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது சகோதரர்கள் அருண், குமார் மற்றும் சதிஸ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர் ஆகிய 10 பேர் குற்றவாளியாகவும், சங்கர் , அருள்செந்தில், செல்வகுமார் தங்கதுரை , சுரேஷ் ஆகிய 5 பேர் விடுதலை செய்வதாககுற்றவாளிகள் 10 பேருக்குமான தண்டனை விபரம் மார்ச் 8ஆம் தேதி அறிவிக்கப்படுமெனவும் உத்தரவு வழங்கப்பட்டது.
வழக்கு விசாரணை நடைபெற்றுவந்த காலத்தில் வழக்கில் தொடர்புடைய ஜோதிமணி என்ற பெண் உயிரிழந்த நிலையில், தலைமறைவாகயிருந்த அமுதரசு என்பவரின் மீதான வழக்கு நாமக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த அரசு வழக்கறிஞர் மோகன், “இந்த வழக்கில் அரசு தரப்பில் 106 சாட்சிகள் மற்றும் நீதிமன்ற தரப்பில் இரு சாட்சியங்களென 108 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, 500 க்கும் மேற்பட்ட ஆவணங்கள் குறியீடு செய்துள்ள நிலையில்
அதில் சிசிடிவி உட்பட 100 க்கும் மேற்பட்ட ஆவணப் பொருட்கள் சமர்பிக்கப்பட்டது. பிறழ்சாட்சியம் அளிக்கப்பட்ட இந்த வழக்கில் 10 பேர் குற்றவாளியாக கண்டறியும் வகையில் வாதாடியுள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்