தமிழ்நாடு அரசுப் பணிகளில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குருப் 2 மற்றும் குருப் 2 ஏ பணியிடங்களில் காலியான 5 ஆயிரத்து 413 இடங்களுக்கு, நேற்று வரை 11 லட்சம் பேர் விண்ணப்பம் செய்தனர். 2021 ஆம் ஆண்டை விட இது 60 சதவீதம் அதிகம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பணிகளுக்கான குருப் 2 தேர்வு நேர்காணல் பணியிடங்களில் 116 ம், நேர்காணல் இல்லாத குருப் 2 ஏ பணியிடங்கள் 5 ஆயிரத்து 413 ஐயும் நிரப்ப பிப்ரவரி 23 ஆம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டதற்கான போட்டித் தேர்வுகள் மே மாதம் 21 ஆம் தேதி முதல் நிலைத் தேர்வும்
பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதியிலிருந்து, மார்ச் மாதம் 23 ஆம் தேதி வரை https://www.tnpsc.gov.in/ எனும் இணையதளத்தில் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாமென அறிவிக்கப்பட்டதில் நேற்று பகல் வரை 10 லட்சத்து 52 ஆயிரத்து 839 பேர் விண்ணப்பம் செய்த நிலையில், இறுதி எண்ணிக்கை 11 லட்சத்தைத் தாண்டியதாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தகவல்
முதல்நிலைத் தேர்வுகளில் 200 வினாக்களுக்கு, 300 மதிப்பெண்கள் கொள்குறிவகையில் 3 மணி நேரம் நடக்கும் தேர்வானது 11 லட்சம் பட்டதாரிகள் எழுத உள்ள நிலையில் அதிக மதிப்பெண் பெற்ற நபர்கள் மட்டுமே இட ஒதுக்கீடுகள் மூலம் முன்னுரிமை பெற முடியும் என்பது தான் தற்போது நிலை.
கருத்துகள்