சென்னை விமான நிலையத்தில் 114.71 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2.366 கிலோ கிராம் தங்கம் பறிமுதல்
வெளிநாட்டிலிருந்து சட்ட விரோதமாக மார்ச் 25, 26 ஆம் தேதிகளில் கடத்தி வரப்பட்ட தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றியிருப்பதுடன், இது தொடர்பாக இரண்டு பேரை கைது செய்துள்ளனர். நேற்று (25.03.2022) துபாயிலிருந்து சென்னை வந்த கேரளாவைச் சேர்ந்த பயணி ஒருவரை சோதனையிட்டதில், அவரது உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த 72.20 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1.486 கிலோகிராம் எடையிலான தங்கம் கைப்பற்றப்பட்டது.
அதே போன்று இன்று (26.03.2022) ஷார்ஜாவில் இருந்து சென்னை வந்த மற்றொரு பயணி கடத்தி வந்த 42.51 லட்சம் ரூபாய் மதிப்பிலான 880 கிராம் எடையிலான தங்கமும் கைப்பற்றப்பட்டது.
இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பி்ல் தெரிவிக்கப்பட்டுள்ளது
கருத்துகள்