காரிப் பருவத்தில் மார்ச் 27 வரை 741.62 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: பயனடைந்த தமிழக விவசாயிகளின் எண்ணிக்கை
2021-22 காரிப் சந்தைப்படுத்தல் பருவத்தில் விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் நெல் கொள்முதல் முந்தைய ஆண்டுகளில் செய்யப்பட்டது போல் சீராக நடந்து வருகிறது.
சண்டிகர், குஜராத், அசாம், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், ஜார்கண்ட், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், தெலங்கானா, ராஜஸ்தான், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, மேற்கு வங்காளம், வடகிழக்கு (திரிபுரா), பீகார், ஒடிசா, மகாராஷ்டிரா, புதுச்சேரி, சத்தீஸ்கர், ஆந்திரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 2021-2022 கரீப் பருவத்தில் 27.03.2022 வரை 741.62 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 105.14 லட்சம் விவசாயிகள் ரூ 1,45,358.13 கோடி மதிப்பிலான குறைந்தபட்ச ஆதரவு விலையால் பலனடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 2814138 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, ரூ 5515.71 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலையினால் 409088 விவசாயிகள் பலனடைந்துள்ளனர்.
கருத்துகள்