முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அனந்தபூரில் உள்ள சுங்க அகாடமி கட்டுமானப் பணிகளுக்கு நிர்மலா சீதாராமன் மார்ச் 5-ம் தேதி பூமி பூஜை

அனந்தபூரில் உள்ள சுங்க அகாடமி கட்டுமானப் பணிகளுக்கு நிர்மலா சீதாராமன் மார்ச் 5-ம் தேதி பூமி பூஜை போடுகிறார்.


மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் இரண்டாவது தேசிய சுங்கம், மறைமுக வரிகள் மற்றும் போதைப்பொருள் அகாடமி (NACIN) கட்டுமானத்திற்காக ரூ 730 கோடியை அனுமதித்துள்ளார். மேலும்  அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள பாலசமுத்திரத்தில் மார்ச் 5 ஆம் தேதி அந்த அகாடமிக்கான  பூமி பூஜை போடுகிறார்.

பாலசமுத்திரம் குளத்தின் வடக்குப் பகுதியில் உள்ள 35 ஏக்கர் நிலத்தில்   நடைபெறும் NACIN ‘பூமி பூஜை’யில் முதலமைச்சர்  ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட வாக்குறுதிகளின் ஒரு பகுதியாக 2014 இல் இந்த அகாடமி அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது . அதனை அடுத்து மற்றும் அப்போதைய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஏப்ரல் 11, 2015 அன்று இதற்கு அடிக்கல் நாட்டினார்.

NACIN ஆனது, 80 இந்திய வருவாய் சேவை (IRS) அதிகாரிகள், 1,000க்கும் மேற்பட்ட குரூப்-A அல்லது ஆந்திரப் பிரதேசம் மற்றும் பிற மாநிலங்களின் குரூப்-I அதிகாரிகளுக்கு அரசாங்கத்தின் சரக்கு மற்றும் சேவை வரிப் பிரிவில் பணிபுரியப் பயிற்சி அளிக்கும்.

மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் (CBIC) தலைவர் விவேக் ஜோரி, நிர்வாக உறுப்பினர் சங்கீதா சர்மா, கர்நாடக சுங்கத்துறை  தலைமை ஆணையர் எம். ஸ்ரீனிவாஸ், கூடுதல் தலைமை இயக்குனர்  மற்றும் NACIN திட்டப் பொறுப்பாளர் ஜி. நாராயணசாமி ஆகியோர் சனிக்கிழமை  இந்த இடத்தில்   பூமி பூஜைக்கான  ஏற்பாடுகளைப் பார்வையிட்டனர்.

கப்பல்கள் மற்றும் கொள்கலன்கள் மூலம் வரும் கடத்தல் பொருட்கள் மற்றும் போதைப்பொருட்களை ஸ்கேன் செய்வதற்கான கடல்சார் பயிற்சி மையமாக எதிர்காலத்தில் இந்த அகாடமி பயன்படுத்தப்படும். பாலசமுத்திரத்தில், 92,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட உள்ள இந்த அகடெமிக் கட்டிடத்திற்கான ,  டெண்டர் திங்கள்கிழமை விடப்பட்டது. இந்த அகாடெமி வகுப்பறைகள் மற்றும் பயிற்சி மையங்களுக்கு கூடுதலாக, பயிற்சி பெறுபவர்களுக்கான விடுதிகள், அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கான குடியிருப்புகள்  , மற்றும் வெளிஊர் அல்லது வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் ஆசிரியர்கள் மற்றும் நிபுணர்களுக்கான விருந்தினர் அறைகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

சுங்கம், வரி போன்றவற்றில் தனது அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க சார்க் நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. வருவாய் புலனாய்வு இயக்குனரகம் (டிஆர்ஐ) அதிகாரிகளுக்கும்  இங்கு பயிற்சி அளிக்கப்படும், அத்துடன், அவர்களுக்கு நிகழ்நேர போதைப்பொருள்  ஸ்கேனிங் பயிற்சிக்காக  போலி விமான நிலையம் மற்றும் கடல் கொள்கலன் தரையிறங்கும் இடம் ஆகியவை உருவாக்கப்படும் என்று  அனந்தபூர் சுங்கத்துறை கண்காணிப்பாளர் எம். ஸ்ரீகாந்த் ரெட்டி கூறினார்.

இந்த அகாடெமி செயல்படும் போது வரிவிதிப்பு மற்றும் சுங்கப் பிரதிநிதிகள், , அங்கீகரிக்கப்பட்ட ஜிஎஸ்டி பயிற்சியாளர்கள், சுங்க அலுவலக முகவர்கள் உரிமம் பெறுவதற்கும், ஏஜென்ட்களுக்கு உரிமம் வழங்கவும்  முகவர்களுக்கு சிறப்பு சான்று அளிப்பதற்குமான பயிற்சி வழங்கும். மேலும் வணிக வரித்துறையில் நியமிக்கப்பட்டுள்ள மாநில அரசின் அனைத்து குரூப்-1 அதிகாரிகளுக்கும் இங்கு பயிற்சி அளிக்கப்படும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...