அனந்தபூரில் உள்ள சுங்க அகாடமி கட்டுமானப் பணிகளுக்கு நிர்மலா சீதாராமன் மார்ச் 5-ம் தேதி பூமி பூஜை போடுகிறார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் இரண்டாவது தேசிய சுங்கம், மறைமுக வரிகள் மற்றும் போதைப்பொருள் அகாடமி (NACIN) கட்டுமானத்திற்காக ரூ 730 கோடியை அனுமதித்துள்ளார். மேலும் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள பாலசமுத்திரத்தில் மார்ச் 5 ஆம் தேதி அந்த அகாடமிக்கான பூமி பூஜை போடுகிறார்.
பாலசமுத்திரம் குளத்தின் வடக்குப் பகுதியில் உள்ள 35 ஏக்கர் நிலத்தில் நடைபெறும் NACIN ‘பூமி பூஜை’யில் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட வாக்குறுதிகளின் ஒரு பகுதியாக 2014 இல் இந்த அகாடமி அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது . அதனை அடுத்து மற்றும் அப்போதைய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஏப்ரல் 11, 2015 அன்று இதற்கு அடிக்கல் நாட்டினார்.
NACIN ஆனது, 80 இந்திய வருவாய் சேவை (IRS) அதிகாரிகள், 1,000க்கும் மேற்பட்ட குரூப்-A அல்லது ஆந்திரப் பிரதேசம் மற்றும் பிற மாநிலங்களின் குரூப்-I அதிகாரிகளுக்கு அரசாங்கத்தின் சரக்கு மற்றும் சேவை வரிப் பிரிவில் பணிபுரியப் பயிற்சி அளிக்கும்.
மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் (CBIC) தலைவர் விவேக் ஜோரி, நிர்வாக உறுப்பினர் சங்கீதா சர்மா, கர்நாடக சுங்கத்துறை தலைமை ஆணையர் எம். ஸ்ரீனிவாஸ், கூடுதல் தலைமை இயக்குனர் மற்றும் NACIN திட்டப் பொறுப்பாளர் ஜி. நாராயணசாமி ஆகியோர் சனிக்கிழமை இந்த இடத்தில் பூமி பூஜைக்கான ஏற்பாடுகளைப் பார்வையிட்டனர்.
கப்பல்கள் மற்றும் கொள்கலன்கள் மூலம் வரும் கடத்தல் பொருட்கள் மற்றும் போதைப்பொருட்களை ஸ்கேன் செய்வதற்கான கடல்சார் பயிற்சி மையமாக எதிர்காலத்தில் இந்த அகாடமி பயன்படுத்தப்படும். பாலசமுத்திரத்தில், 92,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட உள்ள இந்த அகடெமிக் கட்டிடத்திற்கான , டெண்டர் திங்கள்கிழமை விடப்பட்டது. இந்த அகாடெமி வகுப்பறைகள் மற்றும் பயிற்சி மையங்களுக்கு கூடுதலாக, பயிற்சி பெறுபவர்களுக்கான விடுதிகள், அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கான குடியிருப்புகள் , மற்றும் வெளிஊர் அல்லது வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் ஆசிரியர்கள் மற்றும் நிபுணர்களுக்கான விருந்தினர் அறைகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
சுங்கம், வரி போன்றவற்றில் தனது அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க சார்க் நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. வருவாய் புலனாய்வு இயக்குனரகம் (டிஆர்ஐ) அதிகாரிகளுக்கும் இங்கு பயிற்சி அளிக்கப்படும், அத்துடன், அவர்களுக்கு நிகழ்நேர போதைப்பொருள் ஸ்கேனிங் பயிற்சிக்காக போலி விமான நிலையம் மற்றும் கடல் கொள்கலன் தரையிறங்கும் இடம் ஆகியவை உருவாக்கப்படும் என்று அனந்தபூர் சுங்கத்துறை கண்காணிப்பாளர் எம். ஸ்ரீகாந்த் ரெட்டி கூறினார்.
இந்த அகாடெமி செயல்படும் போது வரிவிதிப்பு மற்றும் சுங்கப் பிரதிநிதிகள், , அங்கீகரிக்கப்பட்ட ஜிஎஸ்டி பயிற்சியாளர்கள், சுங்க அலுவலக முகவர்கள் உரிமம் பெறுவதற்கும், ஏஜென்ட்களுக்கு உரிமம் வழங்கவும் முகவர்களுக்கு சிறப்பு சான்று அளிப்பதற்குமான பயிற்சி வழங்கும். மேலும் வணிக வரித்துறையில் நியமிக்கப்பட்டுள்ள மாநில அரசின் அனைத்து குரூப்-1 அதிகாரிகளுக்கும் இங்கு பயிற்சி அளிக்கப்படும்
கருத்துகள்