மின்வாரியத்தில் விடுபட்டுப் போன 5493 கேங்மேன் பணியாளர்களை பணிநியமனம் செய்திட ஆய்வுக்குழு அமைத்த தமிழக அரசு
தமிழக மின்வாரியத்தில் விடுபட்டுப் போன 5493 கேங்மேன் பணியாளர்களை பணிநியமனம் செய்திட ஆய்வுக்குழு அமைத்த தமிழக அரசு
தமிழ்நாடு மின்வாரியத்தில் 2019 ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட கேங்மேன் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு மற்றும் உடல்தகுதித் தேர்வில் 90,000 பேர் கலந்துகொண்ட 14956 நபர்கள் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. பல வழக்குகளைக் கடந்து தொழிற்சங்கம் முயற்சி காரணமாக 22.02.2021 அன்று 9613 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.
அதில் பணிநியமனம் செய்யப்படாமல் விடுபட்ட 5493 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட பல தொழிற்சங்கம் தொடர்ச்சியாக முயற்சி எடுத்த நிலையில் தமிழக மின்துறை அமைச்சருக்கு கோரிக்கையைப் பரிசீலிக்கும்படி கடிதம் அனுப்பினார்கள். சட்டமன்றத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில், நமது சட்டமன்ற உறுப்பினர்கள் இதுகுறித்துப் பேசினார்கள். மின்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்கள்
. 07.09.2021 அன்று மின்துறை மானியக்கோரிக்கைக்கு பதிலுரை வழங்கிய மின்துறை அமைச்சர் விடுபட்ட கேங்மேன் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் கோரிக்கைகள் பரிசீலனை செய்து நிறைவேற்றப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்ட. நிலையில்
தொழிலாளர்களது உணர்வுகளை புரிந்துகொண்டு, விடுபட்ட கேங்மேன் குறித்து ஆய்வு செய்து ஒருமாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க. தமிழக மின்வாரியம். அதன் செயலாளர் தலைமையில், மேலும் மூன்று தலைமைபொறியாளர்களைக் கொண்ட ஒரு குழுவை வாரிய ஆணை எண்: 56 நாள் 19.03.2022 அன்று அமைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
கருத்துகள்